நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

Gran Torino (2008)

                  பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களையும், Adam Sandler வகையறா நகைச்சுவை படங்களையே நான் விரும்பி பார்த்தாலும் அவ்வப்போது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில நல்ல படங்களையும் பார்த்துவிடுவதுண்டு.அப்படியொரு படமாக நான் கருதுவது தான் முரட்டு தாத்தா Clint Eastwood இயக்கி நடித்த ‘Gran Torino’.

    வால்ட் கோவால்ஸ்கி ஒரு முன்னாள் ராணுவ வீரர். போரின் போது செய்த கொலைகளுக்காக உள்ளூர குற்ற உணர்ச்சியோடும்வெளியில் வீராப்பும் வீம்புமாய் தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே ராணுவ ஒழுங்கோடு செய்துகொள்கின்ற வயதான ‘Korean War’ Veteran. சமீபத்தில் தனது மனைவியின் மறைவிற்குப்பின்  தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றவர். தன் இரு மகன்களோடும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. அவருடைய கார் தான் படத்தின் பெயரான ‘Gran Torino’. அமெரிக்கர்களின் ‘Muscle’ கார்கள் மீதான மோகம் ஒரு தனிக்கதை. உதாரணம் சொல்வதானால் நம் ஊரில் வெறித்தனமான புல்லட் (Bullet) ரசிகர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு craze தான் இது.

வால்ட் வசிக்கின்ற பகுதி (Neighborhood) பெரும்பங்கு தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுவிட அவர்களின் கலாச்சாரம் பிடிக்காமல் அவர்களோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் வேறு வழியின்றி வசித்துவருகின்றார். வால்ட்-ன் பக்கத்து வீட்டில் ஹ்மாங் (Hmong) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாழ்கின்றார்கள். அந்த வீட்டின் பதின்பருவ விடலை  சிறுவன் டாவ்(Tao) அவனைத் தூண்டிவிட்ட  லோக்கல் கேங்க்ஸ்டர் நண்பர்களிடம் தன்னை நிரூபிக்கும் பொருட்டு வால்ட்-ன் காரை திருட முயற்சி செய்ய சத்தம் கேட்டு துப்பாக்கியோடு வருகின்றார் வால்ட். அவரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிடுகின்றான்.

இப்படியாக வால்ட்-க்கு டாவ்-வின் மீதான ஒரு தவறான பிம்பம் தோன்றுகின்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் டாவ்-வின் சகோதரியை ஒரு ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய ட்ரக்கில் அழைத்துவருகின்றார் வால்ட். அந்த பெண்ணின் பெயர் ஸ்யூ (Sue). அவளின் துடுக்குத்தனமான பேச்சால் கவரப்படும் வால்ட் அவளிடன் டாவ் பற்றி கேட்க, அவன் மிக நல்லவன் ஆனால் சரியான வழிகாட்ட யாருமில்லை எனச் சொல்கின்றாள். அவனும் அவர்களின் இனத்தைச் சார்ந்த மற்ற இளைஞர்கள்போல தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுவானோ என தான் அஞ்சுவதாகவும் கூறுகின்றாள்.

அதன்பின் டாவ்-வுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுகொள்ளுகின்றார் வால்ட். டாவ்-க்கும் வால்ட்டுக்கும் இடையேயான பழக்கம்… இருவரிடமும் ஏற்படும் மனமாற்றம்…லோக்கல் ரவுடிகும்பலால் டாவ்-வின் குடும்பத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்கள்…எல்லா பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவர வால்ட் எடுக்கும் இறுதி முடிவு என்னானது…?? இவையே படத்தின் மீதிக்கதை. படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் நம்மை உணர்வுப்பூர்வமாக இறுதியில் ஒன்றவைப்பது உறுதி. எனக்கு படம் ரொம்பவும் பிடித்திருந்தது.

படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…! பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..! 
Review சுட்டி: http://www.guardian.co.uk/film/2009/feb/20/gran-torino-film-review-clint-eastwood
Images Courtesy: Original Uploader

வெள்ளி, 25 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - 2013 - நான் வாங்கிய புத்தகங்கள்

2013ல் நான் எழுதும் முதல் வலைப்பதிவு இது.அதுவும் புத்தகங்கள் பற்றியே என்பதில் மெத்த மகிழ்ச்சி. அலுவலகத்தின் இடம்/ப்ராஜெக்ட் மாற்றம் காரணமாக நேரமெடுத்து எழுதுவதென்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது.அது போகட்டும்.சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்கள் ரொம்பக் குறைவு. அவையும் பெரும்பாலும் குறுநாவல்களாகவும், புனைவுகளாகவும் (Fiction) அமைந்துவிட்டபடியால் அவற்றை பற்றி பெரிதாய் எழுத விருப்பமில்லை. இருந்தும் என்னை ரொம்பவே கவர்ந்த மூங்கில் மூச்சுசொல்லாததும் உண்மை என ஒன்றிரண்டு புத்தகங்கள் பற்றி மட்டுமே எழுதியிருந்தேன். திரைப்படங்கள் ரொம்ப நிறையவே பார்த்துவிட்டாலும் ஒன்றும் எழுத நேரமில்லை.

இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகமே புத்தகங்கள் வாங்கினேன்.புனைவல்லாத புத்தகங்கள் மட்டுமே அதிகளாவில் வாங்கவேண்டுமென முடிவுசெய்துவிட்டபடியால் நிதானமாய் தேர்ந்தெடுத்து நினைத்தபடி வாங்க முடிந்தது.பட்டியல் கீழே

1. வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - விகடன் பதிப்பகம் - 215
2. விகடன் சுஜாதா மலர் - தொகுப்பு - விகடன் பதிப்பகம் - 165

3. கடவுள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 200
4. கிமு-கிபி - மதன் - கிழக்கு பதிப்பகம் - 130
5. ஓடும் நதி - கலாப்ரியா - அந்திமழை பதிப்பகம் - 135
6. மனுஷா மனுஷா - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம் - 85
7. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - உயிர்மை பதிப்பகம் - 110
8. ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் - 75

9. 60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா -  உயிர்மை பதிப்பகம் - 50
10. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 85
11. உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா - புதிய தலைமுறை - 80
12. கண்டோம் கடவுள் துகளை - த.வி.வெங்கடேஸ்வரன் - அறிவியல் வெளியீடு - 40
13. அறிவாளியா? முட்டாளா? -  த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம் - 10
14. ஆயிஷா - இரா.நடராசன் - பாரதி புத்தகாலயம் - 15
15. கை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
16. மனைவி கிடைத்தாள் - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
17. ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை - 25
18. விளிம்பு - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 25


என்னடா ஒரே ‘சுஜாதா’ மயமாக இருக்கிறது என யாவரும் நினைக்கலாம். என்ன செய்வது இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டியாதலால் வாத்தியாரைத் தவிர மற்ற எவரையும் பெரிதாக வாசித்து பழகவில்லை.புரியாததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் :) கூடிய விரைவில் அடுத்த நிலைக்கு முன்னேறி தீவிர இலக்கிய வெறியனாகவும், கவிதை பித்தனாகவும் மாற என்னை ஆசிர்வதிப்பீர்களாக.


விகடன் பதிப்பகத்தை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புத்தகம் நமது எதிர்பார்ப்பைத் தூண்டும். சென்றாண்டு சுகா அவர்களின் ‘மூங்கில் மூச்சு’, அதற்கு முந்தைய ஆண்டு அண்டன் பிரகாஷ் அவர்களின் ‘வருங்கால தொழில்நுட்பம்’. அவ்வகையில் இந்த வருடம் மிகுந்த எதிர் பார்ப்புடன் வாங்கிய புத்தகம் விகடனில் தொடராக வெளிவந்த ராஜு முருகன் அவர்களின் ’வட்டியும் முதலும்’. வ.மு பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை விகடன் படித்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்... :) :)

இவைகளில் ‘விகடன் சுஜாதா மலர்’ படித்து முடித்தாயிற்று. இந்த புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ‘விகடனில் சுஜாதாவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன... இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், கட்டுரைகள், சிறுகதைகள் இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்.பின் ‘சுஜாதா’ அவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் கலவை. என்னை மாதிரியான அன்னாரின் வெறித்தனமான ரசிகர்கள் கட்டாயம் வாங்கிப்படிக்கலாம். :) :) இப்புத்தகம் பற்றி விரிவாகப் பின்னாளில் எழுதுகின்றேன்.இப்போது ‘கடவுள்’ படித்துக் கொண்டிருக்கின்றேன்.

புத்தகக் கண்காட்சிக்கு மூன்று நாட்கள் சென்று வந்ததில் மனதில் தோன்றிய சில எண்ணங்கள் :) :)

  • தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ‘நீயா நானா’ கோபிநாத், இறையன்பு IAS, சுகி சிவம் அவர்கள், (அவங்க புக் மட்டும் தான் நெறைய விக்குது)
  • சென்னையின் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் புத்தகங்களே படிப்பதில்லை .தமிழே தெரியாதது காரணமாக இருக்கலாம் ( எல்லா பிள்ளைக கையிலேயும் Only English.. அதுசரி அவுக அப்பாம்மா வாங்கி குடுத்தா தான)
  • ரொம்ப தரமான இலக்கிய புத்தகங்கள் யாவும் குறைந்தபட்சம் 150 ரூபாயாவது இருக்கும் (காலக்கொடும... எல்லாம் Hardboundதேன் கொஞ்சம் கூட கட்டுபடியாகல)
  • பதின்பருவத்திலுள்ள 50 சதவிகித மாணவர்கள் IAS ஆக விரும்புகின்றார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர் எல்லா போட்டித் தேர்வுகளிலும், மேற்படிப்பிற்கான தேர்வுகளிலும்  வெற்றி பெற விரும்புகின்றார்கள். (நான் பார்த்தவரை TOEFL, IELTS, GRE, UPSC Prep materials ஜாஸ்தி)
  • புத்தகங்களைவிட சாப்பாட்டு கவுண்டர்களில் விற்பனை பெருமளவு அதிகமாக இருந்திருக்கும். (எவ்வளவு வெரைட்டி... என்னா தீனி)
  • இன்னும் பத்து வருஷமானாலும் சரி... ‘சுஜாதா’ அப்டிங்குற எழுத்தாளரை யாராலும் ஒன்னியும் அசைச்சுக்க முடியாது. வாத்தியார் வாத்தியார் தான்...!! :) :) :)


சனி, 20 அக்டோபர், 2012

பீட்சா - Don't Miss It...!!


’பீட்சா’....

ஏற்கனவே ’நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில பார்த்த இந்த படத்தின் இயக்குனருடைய குறும்படங்கள்...அப்புறம் இந்த படத்துடைய பாடல்களும் ட்ரைலரும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புல தான் முதல் நாளே இந்த படத்த பாத்துடனும்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாது..இயக்குனர் ‘கார்த்திக் சுப்பாராஜ்’ கொஞ்சம் கூட ஏமாத்தல... படம் சும்மா அட்டகாசமா இருக்கு..!
எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....

வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):) 

ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான்  அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட். 

மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)

படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.

சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders

வியாழன், 18 அக்டோபர், 2012

A Millionaire's First Love (2006) - Korean - காதலின் தீபம் ஒன்று...!

முன்குறிப்பு:

உங்களுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காதா…?? காதல் படங்கள் என்றாலே மொக்கை என்பவரா..?? அப்படியானால் இது உங்களுக்கான படமல்ல.மன்னிக்கவும் J

எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் சிலவற்றைப் பற்றி எழுதவேண்டுமென வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.     Blog எழுதாத நேரங்களில் பார்த்த படங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆகையால் இனி ஒவ்வொன்றாக எழுத வேண்டியது தான். எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கொரியன் (Korean) திரைப்படத்தோடு தொடங்குகின்றேன்.


   நான் பார்த்த முதல் கொரிய திரைப்படம் 'A Millionaire's First Love'.இந்த படம் பார்த்து கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் இப்போதும் எனக்கு ஒவ்வொரு காட்சியும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.அப்படி ஒரு அற்புதமான காதல் கதை இது...!!!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத, அலுக்கவே அலுக்காத காதல்...!!


ஜே-க்யூன் (Kang Jae Kyung) ஒரு மகா கோடீஸ்வரரின் பேரன்.அப்பா அம்மா கிடையாது.இவனுடைய கார்டியன் இவனது தாத்தாவால் பணியமர்த்தப்பட்ட இவர்களின் குடும்ப வக்கீல்.சதா அடிதடி, நண்பர்களோடு பார்ட்டி, என கொண்டாட்டமாய் பொறுப்பில்லாமல் திரிபவன் ’ஜே-க்யூன்’. அல்ட்ரா மாடர்ன் பைக், ஃபெராரி கார்,சொந்தமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் என பள்ளிக்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவன்.


அன்று அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாள்..!! நண்பர்களோடு கூத்தும் கும்மாளமுமாய் கொண்டாடி முடித்துவிட்டு தன்னுடைய ஹோட்டலுக்கு திரும்புகின்றான்.மறுநாள் அவர்களின் குடும்ப வக்கீல் அவனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியினை சொல்கின்றார். ஜே-க்யூனின் தாத்தா எழுதி வைத்த உயிலின் படி அவனுடைய பள்ளி மேற்படிப்பை ‘கேங்வாண்டோ’ எனும் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்து தேறினால் தான் தாத்தாவின் சொத்துகள் அவனுக்கு சேரும் இல்லாவிட்டால் மொத்த சொத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என சொல்கின்றார்கள்.

வேறு வழியில்லாமல் ஜே-க்யூன் அங்கு செல்கின்றான்.அங்கு அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவனை முன்பே அறிந்திருப்பதை கண்டு வியக்கும் ’ஜே-க்யூன்’ எப்படியாவது அந்த பள்ளியை விட்டு வெளியேறத் துடிக்கின்றான்.அங்கே அவனது வகுப்பில் படிக்கும் சக தோழியாய் அறிமுகமாகின்றாள் ‘யூ-வான்' (Choi Eun whan).பள்ளியை விட்டு வெளியேற/வெளியேற்றப்பட அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து போகின்றன.
காரணம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே-க்யூனின் தாத்தவுடைய நெருங்கிய நண்பர்.வேறு வழியின்றி படிக்க தொடங்குகின்றான்.

இதற்கிடையில் யூ-வானுக்கும் ஜே-க்யூனுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலரத் தொடங்குகின்றது.ஜே-க்யூனுக்கு அவனுடைய பால்ய பருவம் நினைவில் நிழலாட
சிறு வயதில் அதே ஊரில் யூ-வானோடு விளையாடி சுற்றித்திரிந்தது நினைவுக்கு வருகின்றது.பத்து நாட்களில் திரும்ப வருகின்றேன் என யூ-வானிடம் சத்தியம் செய்துவிட்டு அவனது பெற்றோர்களோடு அந்த ஊரைவிட்டு கிளம்பும் அதே நாளில் ஒரு சாலை விபத்தில் அவனுடைய பெற்றோரை இழக்கும் ஜே அவனது தாத்தாவோடு சென்றுவிடுகின்றான்.கால ஒட்டத்தில் மறந்துபோன இந்த விஷயங்கள் அத்தனையும் நினைவுக்கு வர அவள் மேலான காதல் இன்னும் அதிகமாகின்றது.

இதற்கிடையில் பள்ளி இறுதி நாளன்று நிகழ்த்தும் பொருட்டு ஜே-க்யூனின் வகுப்பு தோழர்கள் அனைவரும் ஒரு நாடகத்தை ஒத்திகை பார்த்தபடி இருக்கின்றார்கள். முதலில் இதில் நடிக்க மறுக்கும் ஜே-க்யூன் பின் யூ-வானுக்காக ஒப்புக்கொள்கின்றான். ஒரு நாள் ஒத்திகையின் போது திடீரென ’யூ-வான்’ மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவளுக்கு இதயம் மிகவும் பலவீனமாய் இருப்பதும் அவள் உயிரோடிருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாட்கள் தான் என்பதும் ஜே-க்யூனுக்கு மிகுந்த மன வருத்ததையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.


அதன் பிறகான அவர்களின் நாட்கள்… அவர்களிடையேயான நிகழ்வுகள்... அத்தனையும் கவிதை... அவ்வளவு அழகான மென்மையான காட்சிகள்.ஜே-க்யூன் பள்ளி உயர்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது தாத்தாவின் சொத்துகளை திரும்பப்பெற்றானா..?? யூ-வான் உடனான அவனது காதல் என்னவானது…?? அவள் பிழைத்தாளா…? இதையெல்லாம் ‘டவுன்லோட்’ பண்ணி படம் பார்த்து தெரிந்து கொள்க.

ஒரு Arrogant-ஆன கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையை நம் கண் முன்னே நிறுத்தும் ‘Hyun Bin'-ன்  நடிப்பு வெகு இயல்பாகவே நம்மை கவர்கின்றது.குறிப்பாக கிராமத்து பள்ளி நண்பர்களோடு  Adapt ஆக சிரமப்படுவதும்,படத்தின் பிற்பாதியில் யூ-வான் உடன் காதல் வயப்பட்டபின் அவளின் நோய் தீர்க்க மருந்து எனச் சொல்லி ஒரு பாட்டில் நிறைய (ஆம்..!!) கவிதை எழுதிய சீட்டுகளை அவளிடம் தருகின்ற காட்சியும்... செம்ம Performance.
   
குட்டிக் கண்களோடும் குய்யா முய்யா பாஷையோடும் உள்ள கதாநாயகி ‘Lee yeon Hee’-ஐ பார்த்தவுடனே பிடிக்காது தான்.ஆனால் முழு படமும் முடிந்த பின் கண்டிப்பாக உங்களால் இந்த பெண்ணை மறக்கவே முடியாது. அவ்வளவு அருமையான உணர்வுப் பூர்வமான நடிப்பு. அந்த சின்னக் கண்களில் அவ்வளவு உணர்ச்சிகள்.

இந்த படத்தின் இசையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.பெரும்பாலான ரொமாண்டிக் படங்களுக்கு அந்த உணர்வதைத் தருவதில் பெரும்பங்கு வகிப்பது பின்னணி இசை தான்.AMFL-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு செம்ம சாஃப்ட் மெலடி...!!


முழுப்படமும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றது.படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்..!!
Disclaimer: கொஞ்சம் ‘தம்பிக்கு எந்த ஊரு + இதயத்தை திருடாதே’ ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. J J
 Pictures & Video Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...