நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
நிகழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மார்ச், 2015

The Invisible Other - தமிழ் சினிமாவில் சாதி - ஆவணப்படம்



நேத்து ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.என்னால முடிஞ்சளவுக்கு என் நண்பர்களையும் வரச்சொல்லியிருந்தேன்.Catalyst Study Circle அமைப்பு ஏற்பாடு செஞ்சிருந்த 'The Invisible Other: Caste in Tamil Cinema' ன்னு ஒரு ஆவணப்பட திரையிடலுக்காக தான் இந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் ரஞ்சித் பேசுறதாகவும் சொல்லியிருந்தாங்க.

ஆவணப்படம் பேசுற விஷயங்கள்...
  • ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவுல சாதியின் தாக்கம் எந்தளவு இருக்கு ? 
  • பல்வேறு சாதிகள் திரைப்படம்ங்குற ஒரு கலை வடிவத்தை எப்படி தங்களுடைய சாதிகளை glorify பண்ணி பெருமையடிச்சுக்கறதுக்காக பயன்படுத்தியிருக்காங்க ?
  • இது சமூகத்துல பல்வேறு நிலையில இருக்குற மக்களை எப்படி போய் சேருது ? அதனால ஏற்பட்ற தாக்கம் என்ன ?
  • சாதி தொடர்பான விஷயங்களை திரைப்படங்கள்ல புகுத்துறதுக்கும் பேசுறதுக்கும் சென்சார் போர்ட் என்ன மாதிரியான பாரபட்சமான கெடுபிடிகளைக் கையாளுது ? 
  • அங்க இருக்கிற அதிகாரிகளுடைய அரசியல் பார்வை என்ன ? கொள்கை என்ன ?
  • தேவர்மகன் திரைப்படம் தொடங்கி இதுவரைக்கும் வெளிவந்த சாதி சார்ந்த விஷயங்களைத் தூக்கிப்பிடிக்குற திரைப்படங்கள் சொல்ல வர்ர விஷயம் என்ன?






நான் ஒரு வாரம் முன்னாடி தான் யூட்யூப்ல படத்தப் பாத்திருந்தேன்.இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த மாதிரியான ஒரு ஆவணப்படம் ரொம்பவே அவசியம்னு தோணுச்சு.படம் சொன்ன விஷயங்கள் போக, இயக்குனர் ரஞ்சித் பேசுனது எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள். அவர் பேசுனதுல எனக்கு ஞாபகமிருக்குறது கொஞ்சம்,

 “தலித் அப்டிங்குற வார்த்தையையே சினிமாவுல பயன்படுத்த முடியாது,அதுக்கே அவ்வளவு கெடுபிடிகள் இருக்கு.ஆனா மத்த இடைநிலை சாதிகள் பெயரை படத்துல சொல்றதுக்கோ அல்லது அவங்கவங்க சாதிகளைப் பத்தி பெருமையா பேசுறதுக்கோ எந்தத் தடையுமில்ல.அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.”

”அதேமாதிரி ஒரு மதத்துல கல்வி மறுக்கப்படுற ஒருத்தனுக்கு, அந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்தையும் வேற மதம் குடுக்குதுன்னா அத அவன் மேல வரதுக்கான ஒரு வாய்ப்பா தான் பாக்குறான்.அந்த மதத்தை தேர்ந்தெடுத்துக்குறதுக்கான எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு.அதை தப்பா பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கு?”

”ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்களைப் பார்த்து தயவு செஞ்சு பரிதாபப்படாதீங்க.அதே மாதிரி அவங்களுக்கான பிரச்சனையை நீங்க அவங்ககிட்ட தான் பேசனும்னு இல்ல,அவங்களுக்கு அவங்க பிரச்சன என்னன்னு நல்லாவே தெரியும்.அதுக்கான தீர்வுகளை ஒரு அமைப்புக்குள்ள இருக்க நீங்க தான் கொண்டுவர முடியும்.”

"தமிழ் திரை உலகத்துல ஒரு iconic ஸ்டேட்டஸை அடைஞ்சிட்டதா சொல்லப்பட்ற இயக்குனர்கள் பெரும்பாலானவங்க அவங்க படங்களை அப்பட்டமான ஒரு சாதிமத சார்போட தான் எடுக்குறாங்க.தங்களுடைய சாதிப்பெருமையை நேரடியாவே தங்களுடைய படங்கள் மூலமா பேசுறாங்க.அவங்களை எந்த ஊடகமோ பத்திரிக்கையோ எந்தக் கேள்வியும் கேக்குறதில்ல.என்ன மாதிரி இருக்குறவங்க கிட்ட தான் தேடி வந்து கேப்பாங்க. ”

இன்னும் நிறைய முக்கியமான விஷயங்களைப் பேசுனாரு. ’நான் மகான் அல்ல’ படம் வெளிவந்தப்போ கருந்தேள் ராஜேஷ் எழுதுன விமர்சனத்தைப் படிச்சுட்டு அதுக்காக இயக்குனர் சுசீந்திரனுக்கு தான் எழுதுன கடித்தை ராஜேஷுக்கு அனுப்பியதையும் , அதை  ராஜேஷ் அவருடைய தளத்துல வெளியிட்டப்போ அதுக்கு வந்த எதிர்வினைகளையும் பத்தி குறிப்பிட்டு சொன்னாரு.பெரும்பாலானவங்க ‘நீங்க தலித்தா இருக்குறதனால எல்லாத்தையும் அதே கண்ணோட்டத்துல பாக்குறீங்க’ன்னு குறை சொன்னதாக சொன்னாரு.

நேரம் கிடைச்சா அந்த ஆவணப்படத்தை யூட்யூப்ல பாத்துடுங்க. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இயக்குனர் ஜனநாதன், நடிகர் நாசர், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், சில பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள்னு பல்வேறு தரப்பு மக்களுடைய கருத்துகள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுடைய விவாதம், தமிழ் திரைப்படங்கள்ல இதுவரைக்கும் வந்த சாதி தொடர்பான க்ளிப்பிங்க்குகள்னு நிறைய தகவல்களை கோர்வையா சொல்லியிருக்காரு இந்த ஆவணப்படத்தை இயக்கிய சுரேஷ். அவருடைய வலைத்தளம் இங்கே.
Catalyst Study Circle அமைப்புடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

'The Invisible Other: Caste in Tamil Cinema'




செவ்வாய், 24 டிசம்பர், 2013

படிப்பது சுகமே - தமிழ் ஸ்டூடியோவின் புத்தக அறிமுக நிகழ்வு




கடந்த ஞாயிறு (22/12/2013) மாலையை தமிழ் ஸ்டுடியோவில் ரொம்பவே பயனுள்ளதாகவே கடத்தினேன். புத்தகத் திருவிழா நெருங்குவதையொட்டி, என்ன மாதிரி புத்தகங்களைப் படிக்கலாம் ? என்பது தொடர்பான சிறிய அறிமுகப்படுத்தலுக்கான நிகழ்வு. வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தங்களுக்கு பிடித்தமான, கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி பேசினார்கள்.

1.முதலில் பேசிய சண்முகானந்தம் (Wildlife Photographer) அவர்கள் சுற்றுச்சூழல்/இயற்கை/பறவை நோக்குதல் தொடர்பான ஒரு பெரிய புத்தக பரிந்துரை பட்டியலையே வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.(நேரமிருந்தால் ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறேன்).அவர் பேசும்பொழுது குறிப்பிட்டு சொன்ன சில எழுத்தாளர்களும் புத்தகங்களும் கீழே...

ம.கிருஷ்ணன் - சுற்றுச்சூழல் இலக்கியம், சலீம் அலி - ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, முகம்மது அலி - வட்டமிடும் கழுகு, முனைவர்.அப்துல் ரகுமான் - பீகிள் கடற்பயணம் (மொழிபெயர்ப்பு), மேலும் ஆதி வள்ளியப்பன், தியோடர் பாஸ்கரன், கோவை சதாசிவம் உள்ளிட்ட எழுத்தாளர்களின் எல்லா புத்தகங்களும்.

2. அடுத்ததாக ஆங்கில புத்தகங்கள் பற்றி பேசியவர் Frontline இதழின் ஆசிரியர் Vijayasankar Ramachandran அவர்கள். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் பேசியவர் பரிந்துரைத்த அரசியல்/மார்க்ஸியம் தொடர்பான ஆங்கில புத்தகங்களின் பட்டியல் கீழே

Imperialism, the highest stage of capitalism - Lenin
The rise and fall of the third Reich - William L.Shirer
The Age of Revolution, The Age of Capital , The Age of Empire, The Age of Extremes (4 books) - Eric Hobsbawm
A People's History of the United States - Howard Zinn
Open veins of Latin America - Eduardo Galeano
Glimpses of World History - Jawaharlal Nehru
Manufacturing Consent: The Political Economy of the Mass Media - Noam Chomsky, Edward S. Herman
Fidel and Religion - Frei Betto
The Story of Philosophy - Will Durant
The History of India - Romila Thapar
Culture, Ideology, Hegemony - K.M.Panikkar
Indian Atheism - Debiprasad Chattopadhyaya
The economy: an interpretive introduction - C.T.Kurien
An Uncertain Glory: India and Its Contradictions - Jean Dreze and Amartya Sen
Communalism in Modern India - Bipin Chandra
The Kashmir Dispute - A G Noorani
The Image trap - M.S.S.Pandian
பெரியாரின் குடியரசு கட்டுரைகளின் தொகுப்பு - ஈ.வெ.இராமசாமி ஆகிய நான்

3.புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன் அவர்கள் குறிப்பிட்ட சில நாவல்களைப் பரிந்துரைத்தார்

அஞ்ஞாடி - பூமணி (தலித்திய பின்னணி - காலமாற்றம் சொல்லும் கதை - ஏகப்பட்ட தகவல்கள்)
செடல் - இமையம்
தனிமைத் தளிர் - ஆர்.சூடாமணி
(கதை சொல்லும் நடைக்காகவும், வார்த்தைப் பயன்பாட்டிற்காகவும் மட்டும்)
உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் (மத்திய சென்னையைப் பின்னணியாகக் கொண்டது, அந்த மக்களின் வாழ்வியல்/இன்பதுன்பம், புனித பிம்பங்களை போற்றுபவர்களுக்கானதல்ல )
முதல் மனிதன் - ஆல்பெர்ட் கேம்யு (Albert Camus) மொழிபெயர்ப்பு

4.பூவுலகின் நண்பர்கள் சார்பாக கலந்து கொண்ட நவீன் அவர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வியலின் அழகு பற்றி நிறைய பேசிவிட்டு இரண்டு புத்தகங்களை மட்டும் பரிந்துரைத்தார்.

ஒற்றை வைக்கோல் புரட்சி (மொழிபெயர்ப்பு) - பூவுலகின் நண்பர்கள்
சாதியை ஒழிக்கும் வழி - அம்பேத்கர்
புதினங்கள் -சிறுகதைகள் தொடர்பான புத்தகங்களைப் பற்றிப் பேச எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களும், சினிமா தொடர்பான புத்தகங்கள் பற்றி பேச இயக்குநர்.அம்ஷன் குமார் அவர்களும் கடைசி நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. 

புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வு என்று சொன்னாலும் உள்ளார்ந்து பார்த்தால் ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்த து இந்த நிகழ்வு...!!

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் அருண்..!!!
Related Posts Plugin for WordPress, Blogger...