நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2024

The random urge and the trip down the musical rabbit hole


என்றைக்கும் இல்லாமல் திடீரென ஒரு நாள், தூங்கி எழுந்ததும் காலை ஒரு மாதிரி வெறுமையாக இருக்கும். வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பேன். தூக்கம் தெளிந்தும் தெளியாமல் இருக்கும். அப்படியே பல்துலக்கி விட்டு முகம் கழுவிவிட்டு, ஒரு காப்பி போட்டுக் கொண்டு, லேப்டாப்பைத் திறந்து ஏதாவது ஒரு பாடலைத் தேடுவேன். அது எப்போதோ கேட்ட அல்லது யாரோ சொன்ன ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டேயிருக்கிற பாடலாக இருக்கலாம். அல்லது இதுவரை கேட்டேயிராத ஆனால் அப்போதைய மன அலைக்கழிப்பை ஆற்றுப் படுத்துகிற ஒரு பாடலாக/ இசைத்துணுக்காக இருக்கலாம். 
 
அந்தப் பாடலைக் கேட்டதும் , இவர்களைப் பற்றி நம் நட்புவட்டத்தில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிப் பார்ப்பதுண்டு. எப்படியும் ஓரிருவர் எழுதியிருப்பார்கள். அதிலிருந்து மற்றுமொரு திறப்பு கிட்டும். வேறொரு பாடல்; வேறொரு இசைக்கலைஞர் ; வேறொரு பரிமாணம் வேறொரு உலகம். ஒன்றை அடியொற்றி மற்றொன்றென நம்மை சுற்றியிருக்கிற உலகை மறந்து, வேலை நாளின் பரபரப்பை மறந்து, ஒரு இசைச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருப்பேன். பின்பு ஏதோவொரு புள்ளியில் மனம் அடங்கியதும் ஒரு மாதிரி புத்துணர்வுடன் இந்த புற உலகிற்கு மீண்டு வருவேன். 
 
இம்மாதிரி musical rabbit holeல் விழுவதும் தேடுவதும் கேட்டிராத புது இசையைக் கண்டடைவதும் அண்மையில் (கடந்த ஒரு சில ஆண்டுகளில்) வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்க்கைச் சூழல், பணி , பொறுப்புகள், தேவைகள், சோம்பேறித்தனம், மன அயற்சி, என பல காரணிகள் உண்டு. கேட்ட பாடல்களையே கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதியான சொகுசு உண்டு. பழகிவிட்ட மனமும் அதனைத் தாண்டி வேறெங்கும் செல்ல அனுமதியாது. அத்தனையையும் தாண்டி ஒரு நாள் இந்த தேடலில் இறங்கினால் கிடைக்கிற அத்தனையும் புதையல்களாக இருக்கும். இன்றைய நாள் அப்படியொரு நாள்.
  
 
 
 முதலில் கேட்டது Glass beams - Mahal . ஆஸ்த்ரேலிய இசைக்குழுவானாலும் ஒரு மாதிரி துருக்கிய வாடையுடனான இசையாகத் தோன்றியது. மத்திய கிழக்கும் இந்தியாவும் மேற்கத்திய இசையில் சந்திக்கிற புள்ளி போல. தொடர்ந்து அவர்களைப் பற்றி தேடிப் படித்து மற்ற பாடல்களையும் கேட்கத்துவங்கினேன். Such a trip it was ❤ Mahal தொடங்கி rattlesnake, mirage, taurus என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் ஒரு அனுபவம். இவர்களைப் பற்றி தேடியதில் ரெட்டிட்டின் r/Khruangbin குழுமத்தில் இவர்களுடைய காணொலியைப் பகிர்ந்து பாராட்டி பேசியிருந்தார்கள். அதில் ஒரு கமெண்ட் 'They sound like middle eastern khruangbin' என்றிருந்தது. உடனே khruangbin பற்றித் தேட.. voila மற்றுமொரு கதவு திறந்தது. And yes , I discovered Khruangbin , only now. க்ஹ்ராங்பின் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேட Srinivasan Rம் , Ravi kiranம் பகிர்ந்திருந்த இவர்களுடைய பாடல்கள் கண்ணில் பட்டன. 
 
மாஸ்டர் சரவண கணேஷின் மற்றுமொரு கட்டுரையும் கிடைத்தது. அவர் பகிர்ந்திருந்த பாடல் க்ஹ்ராங்பின்னுடையதாக இருந்தாலும் கட்டுரை மற்றுமொரு ஆஸ்த்ரேலிய funk இசைக்குழுவான Hiatus Kaiyote பற்றியது. அதுவரையில் இவர்களையும் கேட்டதில்லை. Laputa, Jekyll, Shaolin monk motherfunk என இது ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணம். இறுதியாக toumani diabate ல் வந்து நின்றிருக்கிறேன். What a wonderful experience and what a ride it has been. எல்லா பாடல்களின் இணைப்புகளையும் கமெண்ட்ல போட்றேன். 
❤
 
 

 
//...have no idea to this day what those two Italian ladies were singing about. Truth is, I don't want to know. Some things are best left unsaid. I'd like to think they were singing about something so beautiful, it can't be expressed in words, and makes your heart ache because of it. I tell you, those voices soared higher and farther than anybody in a gray place dares to dream. It was like some beautiful bird flapped into our drab little cage and made those walls dissolve away, and for the briefest of moments, every last man in Shawshank felt free. - Red (Shawshank redemption) //


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கர்ணன் - கிடாக்குழி மாரியம்மாள் - கண்டா வரச்சொல்லுங்க

இந்தப் பாட்டப் பத்தி ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி தங்களுடைய கருத்துகளை சொல்லிட்டு இருக்காங்க. சிலருக்கு இது அடி மனசத் தொட்டு பல நினைவுகள கிளறி விடுது..சிலருக்கு தெக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களுடைய ஐயப்பன் பாட்டத் தாண்டி வர முடியல.. இன்னும் சிலருக்கு ரொம்ப சாதாரணமான பாட்டா தோணலாம்.. நேத்து இன்னொரு நண்பர் ஒருத்தர் Black Panther படத்துல வர்ர Baaba Maal பாடுன Wakanda theme இசைய ஞாபகப்படுத்துதுன்னு எழுதிருந்தாரு...! (what a fantastic comparison this one is) ஆக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கம் இருந்துருக்கு....! 

இப்போதைய internet eraவுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்கள்/பாடகர்கள்னு தமிழ்நாடு முழுக்க பரவலா அறியப்பட்ட முகங்கள் ஒரு சிலர் தான். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதியர், புஷ்பவனம் குப்புசாமி மாதிரியானவர்களைத் தவிர்த்து ஒரு பெரிய கூட்டமே வெளிய தெரியாம இயங்கிட்டுதான் இருந்துருக்கு.

மதுரை சந்திரன், ஆந்தக்குடி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மாள் , சின்னபொண்ணு, இப்படி இவங்களோட பாடல்கள் ஊர் பக்கம் ரொம்ப பிரபலம். கேசட்டுகளாகட்டும், அல்லது திருவிழா பாட்டுக் கச்சேரிகளாகட்டும். எல்லா இடத்திலும் இவர்களுடைய பாடல்கள் உண்டு. எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். சின்னப்பொண்ணு அவர்கள் பாடி பிரபலமான ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ பாட்டை நீங்க கண்டிப்பா எங்கேயாவது கேட்டிருக்கவும் யூட்யூப்ல பாத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அத எழுதுனது கவிஞர் திருவுடையான், ஆனா மதுரை சந்திரன் பாடி அவரோட கேசட்ல தான் நான் அந்தப் பாட்ட முதன்முதல்ல கேட்டது. விடுதியில தங்கிப்படிக்கிற ஏழ்மையான சிறுமி அவங்க அம்மாவ நலம் விசாரிச்சு எழுதுற மாதிரி இருக்க அந்தப் பாட்டை எப்போ யார் பாடிக் கேட்டாலும் கண்டிப்பா அழுகை வரும்.

அதே மாதிரி இன்னொரு பாட்டு உண்டு. நான் அந்தப் பாட்டை முதன்முதல்ல கேட்டது பல கல்லூரிகள் கலந்துகிட்ட பல்கலைக்கழக அளவிலான ஒரு போட்டியிலதான். ‘அப்படா என் மகனே என் அருணாசல கண்மணியே’ ன்னு தொடங்குற அந்தப் பாடல், மகனைப் படிக்க வைக்க ஆசைப்பட்ட அம்மா. குடும்பக் கஷ்டத்துக்காக அத வேண்டாம்னு சொல்லிட்டு வேலைக்கு போற பையன், போன இடத்துல அவனுக்கு ஏதோ ஆகிடும். அதப்பத்தி அந்த அம்மா புலம்பி பாடுற மாதிரியான பாட்டு. அன்னைக்கு அந்தப்பாட்டப் பாடுனது ஒரு பையன். வாத்தியம் தப்புல ஒரே ஒரு ஒத்தக்கொட்டு தான்..அவன் பாடி முடிக்கிற வரை மயான அமைதி. அவன் முடிச்ச அடுத்த நொடி அந்த அரங்கமே ரெண்டாகுற மாதிரி கைத்தட்டலும் விசிலும் கேட்டுச்சு. எனக்கெல்லாம் கண்ணு கலங்கி அருவியா அழுதுட்டு இருந்தேன். 

ரொம்ப தேடித்தான் அந்தப் பாட்டு இருந்த கேசட்ட கண்டுபுடிச்சேன். இன்னேரம் கணிச்சுருப்பீங்க யாரு பாடிருந்தாங்கன்னு… ஆமா ‘கர்ணன்’ல கண்டா வரச்சொல்லுங்க பாடுன அதே கிடாக்குழி மாரியம்மாள் தான்….! இன்னைக்கு இத்தன வருஷம் கழிச்சு அதே குரல கேக்கும்போது, பாட்டோட தொடக்கத்துல வர்ர அந்த ஓலமும் பின்னாடி சேர்ர தப்பும் ஒன்னா சேர்ந்து தர்ர உணர்வெழுச்சி இருக்கே..அதெல்லாம் சத்தியமா என்னால வார்த்தைகள்ல சொல்ல முடியாது. கடைசியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சில செந்தில் கணேஷ் ‘அங்கே இடி முழங்குது’ பாடி நவநீதகிருஷ்ணன் ஐயா எழுந்து ஆடுனப்போ இதே மாதிரி சிலிர்த்துப்போனேன். 

 படத்தோட கதை என்ன , என்ன contextல இந்தப் பாட்டு வரப்போகுது, காட்சிப்படுத்தல் எப்புடி இருக்கும்..எதையுமே நான் யோசிக்கல… இந்த நொடி இந்தப் பாட்டக்கேட்டா மனசு ஒரு மாதிரி விறுவிறுங்குதுல்ல…சிலிர்த்துப் போகுதுல்ல… இத மாறாம, முழுசா அனுபவிச்சா மட்டும் போதும்.<3சந்தோஷ் நாராயணுக்கும், மாரி செல்வராஜுக்கும், தனுஷுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...! <3 🙏

சனி, 15 அக்டோபர், 2016

இசைசூழ் தனிமை - Playlist#4 - Melancholy ?!


இன்னதுதான்னு பகுத்தறியமுடியாத உணர்வை சில பாடல்கள் தரும் (unfortunately சினிமாப் பாடல்கள்லேயே திருப்திப்பட்டுக்குற ஜென்மம் நான்) .இசையமைச்சது ஒரே இசையமைப்பாளரா இல்லாம இருக்கலாம், ஒரே மாதிரியான ராகமா இருக்காது, arrangements வேற வேற மாதிரியானதா இருக்கலாம்.. ஆனா கேக்கும்போது அந்தப் பாடல்கள் தர்ற உணர்வு இருக்கே, அது இந்த எல்லாப் பாடல்களையும் ஒரு புள்ளியில இணைக்குற ரொம்ப மெல்லிசான ஒரு இழை. இந்த பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட பாசம், காதல், ஏக்கம்,பிரிவு, நினைவுகள், அமைதி... இந்த வகைகளுக்குள்ள அடக்கிடலாம். அப்புடி நினைவு தெரிஞ்சு மொதல்ல ரசிச்ச பாடல்
பாடல்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி
இசை: யுவன்
அசலை எழுதி இசையமைத்தவர்: N.S.சிதம்பரம்
படம்: கண்டநாள் முதல்
பாடியவர்கள் : சுபிக்‌ஷா, பூஜா

அதுக்கப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரியான feel கெடைச்ச இன்னொரு பாட்டு.துக்கம், சோகம்... ஏக்கம் எல்லாமே...கலந்த உணர்வு மொத வாட்டி கேட்டுட்டு அழுதுட்டேன்.
பாடல்: மஞ்சள் முகமே... மங்கள விளக்கே
இசை: இமான்
எழுதியவர்: சரவண சுப்பைய்யா
படம்: ABCD
பாடியவர்: சைந்தவி (இவங்க மேல பயங்கரமான லவ்வோட சுத்திட்டு இருந்தேன் அப்போ)

தலைவனுக்காக காத்திருக்குற தலைவியோட உணர்வுகள் வகைப் பாடலா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டலும் மகிழ்ச்சியும் கலந்து இருக்குற இந்தப் பாட்டும் இந்த பட்டியல்ல வரும். தனிப்பட்ட முறைல இந்தப் பட்டியல்லேயே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு இதான். (இதுக்குப் பின்னால ஒரு கத இருக்கு)
பாடல்: எங்கிருந்து வந்தாயடா
இசை: ஸ்ரீராம் பரசுராம் (பாடகி அனுராதா ஸ்ரீராமோட ஊட்டுக்காரர் தான்)
எழுதியவர்: தாமரை
படம்: ஃபைவ்ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா

கொஞ்சம் தாலாட்டு சாயல்ல இருந்தாலும் ரொம்ப ரொம்ப அழகான பாட்டு. ஊர்ல இருந்தப்ப இத காரைக்கால் வானொலில கேட்டுட்டு தேடியலஞ்சு ப்ரவ்சிங் செண்டர்ல ஒருவழியா கண்டுபிடிச்சு டவுன்லோட் பண்ணி சிடில காப்பி பண்ணிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கேட்டுட்டே இருந்தேன்.
பாடல்: என்னம்மா தோழி பொம்மைய காணோம்
இசை: சதிஷ் ராமலிங்கம்
எழுதியவர்: சசிக்குமார்
படம்: காலைப்பனி
பாடியவர்: (RJ) சுலபா

இது ஒரு அம்மா-மகன் பாட்டு தான். கிட்டத்தட்ட மேல பாத்த பாடல்கள பாடுனவங்களோட voice timbre தான் இந்த பாடகிக்கும். மொதல்ல கேட்டப்போ சாதாரணமா இருந்து அப்புறமா this one grew on me..!! Lovely song..! கவிஞர் தாமரையோட வரிகள்ல இருக்குற உயிர்ப்பே தனி தான்.
பாடல்: கண்கள் நீயே
இசை: ஜி.வி.பிரகாஷ்
எழுதியவர்: தாமரை
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்தாரா

இதுவும் அம்மா-மகன் பாட்டு தான். பிரிவுத் துயரம் ஊடாடுற வரிகள்... வைக்கம் விஜயலக்ஷ்மி தமிழ்ல பாடுன முதல் பாட்டு.கலங்கடிச்ச பாட்டு...!
பாடல்: புதிய உலகை புதிய உலகை
இசை: இமான்
எழுதியவர்: மதன் கார்க்கி
படம்: என்னமோ ஏதோ
பாடியவர்: வைக்கம் விஜயலக்ஷ்மி



கடைசியா இப்டி ஒரு லிஸ்ட் போடுறதுக்கு காரணமான பாட்டு. இந்தப் படத்துக்கு வந்து சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணாலும் ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான். மறுபடியும் இமான்... நாதஸ்வர preludeஓட ஆரம்பிக்கிற பாட்டு..அந்த dense voiceக்காகவே எத்தன வாட்டி வேணாலும் கேக்கலாம்..!!! <3 span=""> <3 span=""> <3 span="">நந்தினி ஸ்ரீகர் குரல்ல யுகபாரதியின் வரிகள் அவ்ளோ அழகு..!
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
இசை: இமான்
எழுதியவர்: யுகபாரதி
படம்: ரெக்க
பாடியவர்: நந்தினி ஸ்ரீகர்

ஞாயிறு, 8 மார்ச், 2015

இசை சூழ் தனிமை - Playlist#2



இதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1

ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட தொடரலாமேன்னு... இப்போ மறுபடியும்.

4.இந்த பாட்டும் ஒரு random accidentல கெடச்சது தான்.ரொம்ப பொழுது போகலன்னா சவுண்ட்க்ளவ்ட்ல எதையாவது ரேண்டமா தேடி எடுத்து கேட்டுட்டு இருப்பேன்.அப்போ எதேச்சையா இந்த பாட்டுடைய ஒரு சின்ன ஆடியோ க்ளிப்ப கேட்டேன். கேட்டவுடனே ரொம்பவும் பிடிச்சுப் போய் அந்த ஹிந்தி வரிகள்ல எனக்கு புரிஞ்சளவுக்கு எதோ tune meri jaana.. kabhi nahi jaana ன்னு ரெண்டு வரிய மட்டும் கூகுள்ல தேட ஆரம்பிச்சு ஒரு வழியா பாட்டைக் கண்டு பிடிச்சேன். ஆல்பம் பேரு ‘Emptiness'... பாடுனவரு கஜேந்திர வர்மா. பாதி லிரிக்ஸ் இங்க்லீஷ்லயும் மீதி ஹிந்திலையுமா... ரொம்ப அழகான பாட்டு. விஷுவலாவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்.வட இந்திய இளைஞர்கள் மத்தியில ரொம்பவே பிரபலம் இந்தப் பாட்டு. காதல் பாட்டு தான்.ஹிந்தி லிரிக்ஸுக்கு மீனிங் இங்க பாத்துக்கோங்க.


Oh! Love of mine

With a song and a wine

You're harsh and divine

Like truth and a lie
But the tale ends not here
I've nothing to fear
For my love is yellow forgiving & hollow
And the bright emptiness
In a room full of heads
Is the cruel mistress... wo ho..
I feel this unrest
That nests a hollowness
For I have no where to go
And I am cold
And I feel so lonely yea..
There's a better place then this, emptiness
And I'm so lonely yea...
There's a better place then this emptiness...
Yei yei yei ye....


Read more: http://www.lyricsmint.com/2011/03/tune-mere-jaana-emptiness-lyrics-rohan.html#ixzz3Tit8Yv8k

இந்தப் பாட்டுக்கு ஒரு reprise வெர்ஷனும் இருக்கு.அதுவும் அட்டகாசமா தான் இருக்கும்.அதையும் கேட்டுடுங்க.

5.இதுவரைக்கும் சொன்ன பாடல்கள் எல்லாமே வரிகள், அது தர்ர உணர்வு, பாடலுடைய mood, காட்சிப்படுத்துன விதம்.... இதெல்லாம் தான் மேலோங்கி இருக்கும். Arrangement wise பாத்தா நான் ரொம்பவே ரசிச்ச, துள்ளலான ஒரு ஆல்பம் பாடல் இது.பெப்பு.. பெப்பு...ன்னு சொல்வாங்கள்ல அத நம்மள அறியாம நமக்குத்தரும்.செம்ம டைனமிக்கான vocals....!! பாட்டுடைய தீம்.. வழக்கம் போல காதல் தான்.நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்கள்ல.. ’என்னத்தவிர உன்ன வேற எவனும் நல்லா பாத்துக்க முடியாது’ன்னு..கிட்டத்தட்ட அந்த மாதிரி தான்.பாதி ஹிந்தி.. பாதி இங்க்லீஷ். பெங்ளூர்வாசியான ரகு திக்‌ஸித் தான் எழுதியது.. பாடியது.. எல்லாமே...இவர் புகழ் BBC வரைக்கும் பரவியிருக்கு...!!



வீடியோ வெர்ஷன் கொஞ்சம் சவ சவன்னு இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா இங்க soundcloudல தெறிக்கிற க்வாலிட்டியோட இருக்கு..இதே பாட்டு... அதக் கேட்டுப் பாருங்க.
               

No man will ever love you, like I do

Ever since this wandering heart of mine, met you
I dismissed the time when we were strangers,
and made you mine on this journey I began My love!

I am a lost cloud in the blue sky
I hum, thunder and shower rain
Infatuated by you My Love
Amidst the stars, on the moon, on the earth and in the sky
My aspirations echo My Love
No man will ever love you, like I do


6.என்னடா ஹிந்தியாவே போய்ட்டு இருக்கேன்னு யோசிக்காதீங்க.ஒரு சேஞ்சுக்கு ஒரு மலையாள ஆல்பத்துல வந்த பாட்டு. நான் காலேஜ் படிக்கும்போது தான் மொத மொதல்ல கேட்டது. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டி ரெஃபர் பண்ண பாட்டு.மலையாளமா இருந்தாலும் கிட்டத்தட்ட நமக்கு அர்த்தம் புரியும்னு வைங்க. கொஞ்சம் ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ பாட்ட ஞாபகப் படுத்துனா நான் பொறுப்பில்ல.ஆல்பம் பாடல்களுக்கே உரிய அந்த பாட்டுக்குள்ள கத சொல்ற டெக்னிக் ரொம்பவே பொருந்தியிருக்கும்.
அந்த ‘வெள்ளிக் கொலுசிட்ட காலச்சம் கேக்க...காத்திருக்கும் எண்டே ஹ்ருதயமே’ வரியை அப்புடி ரசிச்சேன் நான். இப்பவும் தான் :) :)

தொடரும்...!!

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா


ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மிதிலைக்குள் நுழையும்போது சீதையும் இராமனும் ஒருத்தருக்கொருத்தர் முதல் முறை பாத்துக்குறாங்க.அப்புறம் வேற என்ன ‘கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு.. காதல் வந்து ஒட்டிக்கிச்சு…’ தான்.

இராமாயணத்துலயும் most romantic பாடல்கள் இந்த பகுதிகள்ல தான் வருது. நமக்கு பிடிச்ச ஏரியாங்குறதால நானும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச ‘அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்’ வரியும் இங்கதான்.

அழகோட எல்லை இதுதான்னு மனசால நினைக்கமுடியாத அளவுக்கு அழகுடைய சீதை… அரண்மனை மாடத்துல நின்னுட்டு இருக்கும்போது வீதியில நடந்து போற இராமனை பாக்குறாங்க… அதே நேரத்துல இராமனும் சீதைய பாக்குறாரு (எப்டின்னெல்லாம் கேக்காதீங்க..அதெல்லாம் வசூல்ராஜால வர மாதிரி ஃபீலிங்க்ஸ்… ;) ) அவங்க ரெண்டு பேரோட பார்வையும் ஒன்னை ஒன்னு அப்படியே கவ்விடுச்சாம். அவங்க ரெண்டுபேருடைய மனசும் அதனதன் இடத்துல நிக்காம அப்படியே அலைஞ்சு திரிஞ்சு ஒன்னா கலந்துடுச்சு.

’எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’


தமிழ் சினிமாவின் தலையாய கச்சாப்பொருளான காதல்ல அதிக முறை பயன்படுத்தப்பட்டது இந்த ‘கண்ணும் கண்ணும்’ சந்திச்சுக்குற scenario தான்.அதனைத் தொடர்ந்து மெளனமாய் பேசுறது… கண்ணாலேயே பேசுறதுன்னு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு…

எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால இந்த themeல வந்த பாடல்களையெல்லாம் சொல்றேன்…

”கண்ணாலே பேசிப் பேசி… கொல்லாதே” – படம்: அடுத்த வீட்டுப் பெண்

” மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்” - படம்: காதலிக்க நேரமில்லை

”பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே ! ” -படம்: யார் நீ

இதுக்கு அடுத்து இன்னொரு கம்பராமாயண பாட்டு…இதே படலத்துல.. அதுவும் சாதாரணம் இல்ல…

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.

வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.

இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.

அதாவது இராமனும் சீதையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த (அழகை ரசித்துப் பருகிய ) பார்வை, கயிறு மாதிரி அவங்க ரெண்டு பேரின் உள்ளத்தையும் இணைச்சதனால… அவங்க மனசு இங்கயும்..இவர் மனசு அங்கயும் இடம் மாறி குடியமர்ந்துடுச்சு…. எப்புடீ…??!! :) :)

இந்த பாட்டை படிச்சதும் எனக்கு நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல்
”விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே”

வேற எதாவது ரெஃபரன்ஸ் இருக்கான்னு தேடுனா.. திருவள்ளுவர் ஏற்கனவே ரெண்டு மூனு சிக்ஸர் அடிச்சு வெச்சுருக்காரு…

”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில”

கண்ணும் கண்ணும் பேசிக்கும்போது அங்க வார்த்தைக்கு (மொழிக்கும்) என்னடா வேலை…?!! :)

”நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து”

நான் பார்த்தவள் பதிலுக்கு என்னைப் பார்க்கும்போது அந்த பார்வை எப்படி இருந்துச்சுன்னா… ஒரு பெரிய படையையே கொண்டுவந்து தாக்குன மாதிரி இருந்துச்சாம். இதுல ’தாக்கணங்கு’ங்குற வார்த்தை அழகால மத்தவங்கள மயக்குற மோகினி மாதிரியானவளைக் குறிக்கும். வெறும் அழகாலேயே நம்மை தோற்கடிக்கக்கூடியவள் ஒரு படையோட வந்து மோதினதுக்கு சமம்.. அந்த ஒற்றைப் பார்வை…!!

இதையே நம்ம பாவேந்தர் இப்படி சொல்லிருக்காரு….!!

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்”

சரி… பார்வை மட்டுந்தானா… வேற ஒன்னுமில்லையா… இந்த சிரிப்பு இருக்கே (புன்)சிரிப்பு… அதையும் கம்பர் எழுதிருக்காரு… ஆனா ஒரு மாறுதலுக்கு பையனோட சிரிப்ப பாத்து பொண்ணு மயங்குறதை சொல்லிருக்காரு.

”இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்;

சுந்தர மணி வரைத் தோளுமே அல;

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே!”

( ரொம்ப இழுக்காம நம்ம ஸ்லாங்ல சொல்றேன்) சீதை சொல்றாங்க… ”இராமனுடைய ஹேர்ஸ்டைல பாத்தோ…அவனுடைய ஃபேஸ்கட்ட பாத்தோ… இல்ல அவனுடைய ஸ்ட்ராங்கான ஆர்ம்ஸைப் பாத்தோ நான் மயங்கல… அவனுடைய அந்த புன்சிரிப்பு இருக்கே..அது.. அது தான் அப்புடியே வந்து என் உசுரை அள்ளிட்டு போய்டுச்சு..”

பட்டாசுல்ல… :) :) :)

பி.கு: மேற்கண்ட சிச்சுவேஷன்கள் எல்லாத்துக்கும் பொருந்துகிற மாதிரியான திரையிசைப்பாடல்கள்.. அது பத்தின தகவல்கள்.... உங்களுக்கு தெரிஞ்சத..பிடிச்சத சொல்லுங்க…! :) :)

Images courtesy:Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...