நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 4 மே, 2014

Here Comes The Boom (2012) - இது ‘மான் கராத்தே’ அல்ல

நம்ம படத்தோட ஹீரோ ஒரு அப்பாவி.பாக்சிங் மாதிரியான சண்டைகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமா ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டை போட்டில கலந்துக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுது.எதிராளி ஒரு professional fighter. தோல்விங்குற விஷயத்த கேள்வியேபடாத Killer அவரு. நம்மாள் அதுநாள் வரைக்கும் காமெடியான opponents கூடவே மோதி ஜெயிச்சவரு.இந்த மிகப்பெரிய போட்டில எதிராளி அவ்ளோ டெர்ரர் பார்ட்டின்னு தெரிஞ்சதும் நம்ம ஹீரோவுடைய சுற்றமும் நட்பும் இவர சண்ட போட வேணாம்னு தடுக்குறாங்க.ஆனா நம்ம ஹீரோ வெறியோட போட்டில கலந்துக்குறாரு.முதல் ரவுண்ட்லேயே சாவடி வாங்குறாரு. எப்படியோ தாகுப்பிடிச்சு கடைசில.. ஹீரோ ஜெயிச்சாரா... இல்லையா...?? க்ளைமாக்ஸ்.... 

Wait... இந்தக் கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு உங்களுக்கு டவுட் வருமே…??! ஆங்.. நம்ப future perfect continuous சூப்பரு இசுடாரு சினா.கானா ’நடிச்ச’ டுபாக்கூர் கராத்தேங்குற காமெடி (!) காவியம் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்ல.ஏன்னா இது அது இல்ல.இது வேற படம். ஒரு ‘நிஜமான’ ஸ்போர்ட்ஸ் காமெடி படம்.


காமெடி படத்துக்கெல்லாம் எதுக்கு சார் லாஜிக்னு கேக்குறவங்க தயவுசெஞ்சு இந்த படத்த ஒரு தபா பாத்துடுங்க.கதைப்படி ஹீரோ  ஒரு பயாலஜி வாத்தியார். எப்பவோ சின்ன வயசுல ஸ்கூல் மல்யுத்த டீம்ல இருந்துருக்காரு. அவ்ளோதான் அவருக்கும் சண்டைக்கும் இருக்குற தொடர்பு.சரி இவருக்கு ஏன் இந்த  அடிதடியெல்லாம்.காதல்..கீதல்னு எதுலயாவது உழுந்து... காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்காக குத்துச்சண்டைக்கு போறாரா..?? ஒரு புடலங்காயும் இல்ல.

அவரு வேல செய்யுற ஸ்கூல்ல அரசாங்க ஸ்பான்சர்ல ஒரு இசைப்பயிற்சி வகுப்பு நடந்துட்டிருக்கு. அத ஒரு (அல்மோஸ்ட்) வயசான ம்யூசிக் வாத்தியார் தான் நடத்துறாரு. திடீர்னு அரசாங்கம் அந்த இசை வகுப்புகளுக்கான நிதியை கட் பண்ணிடறதனால பள்ளி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையை காரணமா காட்டி இசை பயிற்சி வகுப்புகளுக்கு கத்தரி போடப்போறதா சொல்றாங்க. அப்புடி நிறுத்துனா obviously நம்ப வயசான வாத்தியாரையும் வூட்டுக்கு அனுப்பிடுவாங்க. அவரு குடும்பஸ்தரு. அவருடைய குடும்பத்துக்கு ஒரு புது ஆள் வேற ‘ஆன் தி வே’.

இந்த நெலமைல அவருக்கு வேல போயிட்டா என்ன பண்ணுவார்னு பாவப்பட்டு அதுக்கு நிதி திரட்டத்தான் நம்ப ஹீரோ சின்ன லெவல் சண்டைப்போட்டிகள்ல கலந்துக்க யோசிக்கிறாரு. சின்ன லெவல் போட்டியா இருந்தாலும் பயிற்சி இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுங்குறதுனால அவரு பார்ட் டைமா பாடம் நடத்துற immigrants கூட்டத்துலேர்ந்து ஒரு மெக்சிகன் ‘முன்னாள்’ குத்துச்சண்டையாளன தேர்ந்தெடுத்து அவன்கிட்ட உதவி கேக்குறாரு. அவரும் சாதாரணமா ஒத்துக்கல...எப்டியோ அவர கன்வின்ஸ் பண்ணி பயிற்சியெடுக்க ஆரம்பிச்சு சின்ன சின்ன போட்டிகளா ஜெயிக்க ஆரம்பிக்குறாரு. அதுல   வர்ர பணத்தையெல்லாம் அவங்க ஸ்கூல் அக்கவுண்டண்ட் கிட்ட கொடுத்து வைக்குறாரு (இத ஞாபகம் வெச்சுக்கோங்க..கடைசில இத வெச்சு தான் ட்விஸ்ட்..)

நம்ப ஹீரொவுடைய சண்டைகள பாக்குற UFC (Ultimate Fighting Championship) ஆளுங்க அவருக்கு UFCல ஒரு ஃபைட் பண்ண ஒரு சான்ஸ் தராங்க.
அதுக்கப்புறம்….

முதல் பத்திய படிச்சுக்கோங்க…!!

செம்ம டைம்பாஸ் படம்… சிரிப்புக்கு நான் உத்திரவாதம் J J ஜாலியா பாக்கலாம்.

கொசுறு: இந்த படத்துல வர்ரது exact-ஆ பாக்சிங் இல்ல. ஒரு மாதிரி எல்லா சண்டையும் கலந்த Mixed Martial Arts(MMA). இதே MMA வெச்சு வெளிவந்த ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தைப் பத்தி இங்கே க்ளிக் பண்ணி படிக்கலாம்.
Images Courtesy: Original Uploaders

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தனிமைத் திணை


நீ களவாடிச் செல்லும் என்னுடைமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது..!


என் இரவுகள்... 


என் தனிமை.. 


என உறக்கம்... 


என் கனவுகள்...

காணக் காத்திருத்தலின் சுகத்தை மட்டும் மிச்சமாய் விட்டுவிட்டு...


தனிமையும் தனிமையின் நிமித்தமுமாய் ஆன ஒரு புதுத் திணையில் என்னை இருத்திவிட்டு...


உனக்கும் எனக்குமான இடைவெளியை மட்டும் அதிகமாக்கி..


எங்கோ ஓடி மறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றாய் நீ.


சலிக்காமல் களைக்காமல் தேடியோடி வந்து கொண்டிருக்கின்றேன் நான்.

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1. சாமானியனின் முகம் – சுகா – வம்சி பதிப்பகம் – ரூ.170

2. பீக்கதைகள் – பெருமாள் முருகன் – அடையாளம் பதிப்பகம் – ரூ.60

3. அனுபிஸ் மர்மம் – சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.30

4. நெப்போலியனின் கடிதம் - சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.50

5. ’குடி’யின்றி அமையா உலகு… - முத்தையா வெள்ளையன் (தொகுப்பு) – புலம் – ரூ.120

6. என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா ப்ரூஸ் – விருட்சம் – ரூ.100

7. வளையல்கள் அடித்த லூட்டி – விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

8. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

9. மாகடிகாரம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.30

10. டாலும் ழீயும் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

11. மலர் அல்ஜீப்ரா – ‘ஆயிஷா’ இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் - ரூ.30

12. புனைவின் நிழல் – மனோஜ் – உயிர்மை – ரூ.70

13. பட்டு – அலெசான்ட்ரோ பாரிக்கோ (சுகுமாரன்) – காலச்சுவடு – ரூ.95

14. எப்படி ஜெயித்தேன் – எம்.ஜி.ஆர் – நாதன் பதிப்பகம் – ரூ.50

15. ஆதிமங்கலத்து விசேஷங்கள் – க.சீ.சிவகுமார் – விகடன் பிரசுரம் – ரூ.50

16. உலக இலக்கிய பேருரைகள் – ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் –   
 எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60

17. அணுவின் உள்ளே – ஐஸக் அஸிமோவ் (என்.ராமதுரை) – தையல் வெளியீடு – ரூ.70

18. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன் – காலச்சுவடு

19. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா – உயிர்மை – ரூ.175

20. கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை – ரூ.70

21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – விசா பப்ளிகேஷன்ஸ்

22. விவாதங்கள் விமர்சனங்கள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

23. தோரணத்து மாவிலைகள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

24. நேனோ-ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன் – தமிழினி – ரூ.75

25. ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் ஞானப்பறவை – ரிச்சர்ட் பாக் – விஜயா 
பதிப்பகம் – ரூ.35

26. இராசராசன் துணுக்குகள் நூறு – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

27. லிண்ட்சே லோஹன் – w/o மாரியப்பன் – வா.மணிகண்டன் – யாவரும்.காம் – ரூ.90

28. 6174 – சுதாகர் கஸ்தூரி – வம்சி பதிப்பகம் – ரூ.300


புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் நண்பர்களையும் ஆதர்சங்களையும் சந்திப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்காகத்தான் ஓவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது குதூகலாமாய் போய் வருவது. இந்த முறையும் ஏகப்பட்ட நண்பர்களை சந்தித்தேன்.புதிய நட்புகள் கிடைக்கப் பெற்றேன். இதுவரையில் நேரில் பார்த்திராத ஆதர்சங்கள் பலரையும் பார்த்துப் பேசியதில் மகிழ்ச்சி.

பட்டியலில் சில பல புத்தகங்கள் நண்பர்கள் பரிசளித்தவை. பரிசல் அண்ணனின் திடீர் பரிசு தான் ஜி.நாகராஜனின் புத்தகம். ரொம்ப மகிழ்ச்சியளித்தது J J. சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தும் என் மாமா வாங்கித் தந்தவை. ரொம்பவே எதிர்பார்த்து புத்தகத் திருவிழா நிறைவடையும் வரையில் வெளிவராத புத்தகங்கள் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு (உயிர்மை), அருண் நரசிம்மனின் அறிவியல் கட்டுரைகள் (தமிழினி, அமிர்தா) ஆகியவை. ஏகப்பட்ட புதினங்களை நண்பன் வேதாளம் வாங்கிக் குவித்திருப்பதால் ‘டேய் நீ எதுவும் வாங்கிடாத…என்கிட்ட கேட்டுட்டு வாங்கு’ என மிரட்டல் விடுத்திருந்தான்.

அதனால் முடிந்தவரையில் புனைவல்லாதவையில் அறிவியல் கட்டுரைகள், பிற கட்டுரை தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், வரலாறு தொடர்பான புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். வாங்குறது முக்கியமில்ல படிக்குறது தான் முக்கியம் என்று யாரவது கமெண்ட் பண்ணும் அபாயமிருப்பதால் நிச்சயம் எல்லா புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன் என முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? - ராஜ் சிவா


காலம்: 5054A.D 
மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது. ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகனங்கள் சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. பரிணாம வளர்ச்சியினால் மனிதர்களாகிய நமது உருவமும் மொழியும் உருமாறிவிட்டிருக்கின்றன. காலவெளியில் பயணம் செய்யக்கூடியடைம் மெஷினைகூட உருவாக்கிவிட்டோம்அப்போது மனித இனத்துக்கு ஒரு விபரீத ஆசை வருகின்றது. அது தம்முடைய மூதாதையர்களை, காலத்தில் பின்னோக்கி பயணம் செய்து சந்திக்கவேண்டுமென்பதே. ‘டைம் மெஷினில்வார்ம் ஹோல் ஒன்றை உருவாக்கி 3000 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கின்றார்கள். 1… 2… 3… @#$@#%#$%^$^*&^* ஸூம்…!!!!! 

காலம்: 2014 A.D 
ஏதோவொரு நாட்டின் ஏதோவொரு கிராமம். திடீரெனத் தோன்றும் ஒளிவெள்ளத்திலிருந்து இறங்குகின்றது ஒரு வித்தியாசமான விண்கலம். அதிலிருந்து இறங்கிவரும் பரிணாமவளர்ச்சியில் முற்றிலும் வேறுபட்ட எதிர்காலத்தின் மனிதர்களைச் சமகால மனிதர்களாகிய நம்மால் நம்மவர்களாக நம்பமுடியவில்லைஅவர்களின் உருவத்தையும் பேசும் மொழியும் கண்டு திகைக்கின்றோம். தொழில்நுட்பத்தில் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்ற அவர்கள் நிச்சயம் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடுமென முடிவுசெய்கின்றோம. நம்முடன் பேசி எதையும் புரியவைக்கமுடியாத அவர்கள் தாங்கள் வந்துவிட்டு சென்றதற்கான அடையாளமாக எதையாவது செய்துவிட்டுச் செல்வோம் எனமுடிவு செய்து பூமியில் ஆங்காங்கே மிகப்பெரிய அடையாளங்களை ஏற்படுத்திவிட்டு தங்களின் காலத்துக்குத் திரும்பிச் செல்கின்றார்கள்

கட்…!! 


vமேலே நீங்கள் படித்த நிகழ்வு ஏதோ அறிவியல் புனைகதை போலத் தோன்றியதா உங்களுக்கு…?? 
v  இப்படி ஒரு நிகழ்வு உண்மையில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன…?? 
v ஒருவேளை அப்படி உண்மையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததற்கான அடையாளங்களைக் கண்டால் இதெல்லாம் உண்மை என்று ஒப்புக்கொள்வீர்களா…?? 
vஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி நிறையக் கதைகளை வாசித்திருக்கின்றோம்நிறையத் திரைப்படங்கள் பார்த்திருக்கின்றோம்.அதெல்லாம் நிஜமா ?? 
vஉண்மையாகவே இந்தப் பேரண்டத்தில் மனிதர்களான நம்மை விட அறிவிலுயர்ந்தவர்களாக எங்கேனும் ஒளியாண்டுகள் தொலைவுக்கப்பாலுள்ள ஒரு கோளில்உயிரினங்கள் வாழ்கின்றனவா…?? 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? 

சரி.. கீழே இருக்கின்ற படங்களைப் பாருங்கள்…!! 



அற்புதமான கலைப் படைப்படைப்புகளாகத் தோன்றும் இந்தச் சித்திரங்களெல்லாம் யாரால்.. எங்கு.. எப்பொழுது வரையப்பட்டவை…??? என்ற கேள்வி எழுகிறதல்லவாஇவையெல்லாமே பயிர்வட்டங்கள் (Crop Circles) என்று அழைக்கப்படுகிற, வயல்வெளிகளில் சிலமணி நேரங்களில் அதிசயமான முறையில், ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகளால் வரையப்பட்டதாகச் சொல்லப்படும் சித்திரங்கள். (முதலிரண்டு பத்திகளில் படித்த கற்பனையின் க்ளைமேக்ஸ் நினைவுக்கு வருகின்றதா…???ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் இந்தப் பயிர்வட்டங்கள் பற்றிய தகவலோடு தான் தொடங்குகின்றதுராஜ் சிவாஅவர்கள் எழுதி உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும்               
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ கட்டுரைத் தொகுப்பு

இந்த மாதிரியான பயிர் வட்டங்களை வரைவதற்கு தேவைப்படும் அசாத்தியமான மனித உழைப்பும், இவைகளின் அளவீடுகள் கொண்டிருக்கும் வடிவியல் துல்லியத் தன்மையும் (Geometric Accuracy), இவைகள் உருவாக/உருவாக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் ஆகியவையே இந்த பயிர்வட்டங்கள் மனிதர்களால் வரையப்பட்டவையல்ல என்று ஆராய்ச்சியாளார்கள் உறுதியாகச் சொல்வதற்கான காரணங்கள்.  இந்த முதல் தகவல் அளிக்கின்ற ஆச்சரியத்தில் அசந்து போகும் நம்மை, மேலும் மேலும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளாலும் சான்றுகளாலும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றார் ‘ராஜ் சிவா’. 

தகவல்களைப் பொருத்தமட்டிலும் UFO, ஏலியன்கள் பூமிக்கு வந்த நிகழ்வுகள், ரோஸ்வெல் அதிசயம், காலப்பயணம், பிரபஞ்சத்தின் தோற்றம், Parallel Universe, SETI, அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ஏரியா-51’ பகுதி,  ஏலியன்களோடு பேரம் பேசிய அமெரிக்க பிரதமர், காலவெளிப் பயணம் மேற்கொண்ட பெண் ஆஸ்ட்ரானட், ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம், String Theory, M Theory, ஏலியன் அனுப்பிய ரேடியோ சிக்னல்கள்...என ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. இத்தனை தகவல்களையும் மிகவும் நேர்த்தியாகவும் வாசிப்பவனுக்கு எந்த குழப்பமுமில்லாமலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய விதத்திலேயே எழுத்தாளர் வெற்றி பெற்றுவிட்டார். 



பொதுவாக ஏலியன்கள் மாதிரியான மர்மான விஷயங்களைப் பற்றிய தகவல்களை எழுதுகிறவர்களோ பேசுகிறவர்களோ அந்த விஷயத்தின் நம்பகத்தன்மை குறித்த ஓர் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வது மிகக் கடினம். எழுதப்பட்ட/சொல்லப்பட்ட தகவல்களைப் படிக்கும் வாசகனின் அறியாமை அல்லது அறிவுக்கூர்மையைப் பொருத்து சொல்லப்படும் விஷயங்களை, முழுமையாக நம்பவோ அல்லது முழுமையாக மறுக்கவோ வாய்ப்பிருக்கின்றது

இங்கே கட்டுரையாசிரியர் அல்லது எழுத்தாளரின் பணி கயிற்றின் மேல் நடப்பது போலாகிவிடுகிறது (வேற உதாரணம் கெடைக்கல.. க்ளிஷே தான்..மன்னிச்சுடுங்க) அறிவியலின் பக்கமும் நம்பிக்கையின் பக்கமும் சரிசமமாகத்தான் எந்தக் கருத்தையும் வாசகனிடம் முன்வைக்க வேண்டியிருக்கின்றது. இன்னது தான் உண்மை...இதுதான் சரி... என்கிற முடிவெடுக்கும் உரிமையையும் வாசகனுக்கே அளித்துவிடுகின்றார். அதுவே அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் அறிவியலுக்கு செய்கின்ற மிகப்பெரிய நியாயமுமாகும். அந்தவகையில் அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏலியன் முதலிய விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கு ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ புத்தகம் ஒரு மறக்கமுடியாத பரிசு. ’ராஜ் சிவா’ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....!!

புத்தாண்டன்று நடைபெற்ற உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசிய ‘கிழக்கு’ பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அறிமுகக்  கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...