நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஐ.டி - வேலையுள்ள பட்டதாரி



இன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப முடிச்சு வெளில வராங்க.அதுல எத்தன பேருக்கு வேல கெடைக்குது...?? பெரும்பாலானவர்கள் சைபர் கூலிகள் தான்.அடிமைத்தனமா ஐ.டி யுடைய மேல்மட்ட வேலைகள்ள சேந்துக்குறாங்க…எதையும் புதுசா உருவாக்கல…” அப்டி இப்டின்னு பேத்திகிட்டே.. ச்சை.. பேசிகிட்டே போனாரு.

 இப்பொ ட்ரெண்ட் இதான் போல.பொறியியல் படிச்சு முடிச்சவன் தன்னுடைய core (mechanical/electrical/civil) துறைல வேலைக்குச் சேர்ந்தான்னா ஆரம்பகால சம்பளம் அவ்வளவு சிலாக்கியமில்ல.அடிமட்ட ட்ரெய்னியா வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வேலையக் கத்துக்கிட்டு மேல வர்ரதுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகலாம்.எடுத்த உடனே காசு பார்க்க முடியாது. பெத்தவங்களும் அத விரும்புரதில்ல... அவங்களுக்குத் தேவையானதெல்லாம் ready cash..US Visa..கல்யாணம்… கார்..வீடு.. எட்செட்ரா. Peer pressure வேற. So பசங்க ஐ.டி ய தேர்ந்தெடுக்குறாங்க.அதிக உடல் உழைப்பு தேவையில்ல (ஆனா அதீத மன உளைச்சல் பைத்தியம் பிடிக்க வெச்சுடும்) முதல் நிலையிலேயே ஓரளவு convincingஆன சம்பளம் (12000-14000னு வெச்சுக்கோங்க).அப்புறம் அந்த sophistication அவங்கள வெளில வர விடாது.And it goes on...!!

இப்போ BPO க்கு வரேன்.இங்க கதையே வேற.குறைந்த பட்சம் 7000-8000ல தொடங்கி திறமைக்கும்/அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி  படிப்படியா சம்பள உயர்வு கிடைக்கும்.(ரொம்ப யோசிக்காதீங்க..நாலு வருஷம் கழிச்சு 15000 சம்பாதிச்சா பெருசு) ஐ.டி கம்பெனி இண்ட்ர்வ்யூல கழிச்சு கட்டுனவங்களும்… குறைவான சதவீதம் மதிப்பெண் வாங்குனவங்களும்...அரியர்ல Man of the series வாங்குனவங்களும்… ஊர்ப்பக்கத்துலேர்ந்து இங்க வர்ர B.Sc\B.Com\B.C.A பட்டதாரிகளும் தான்.இவங்களுக்கெல்லாம் பெரும்பாலும் வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும்.ஏதோ ஒரு நிர்ப்பந்தமிருக்கும். (டைம் பாஸ்க்கு வேலைக்கு வர்ர பணக்கார சொட்டவாளக்குட்டிகள் விதிவிலக்கு) ஏன் BPOல ஜாயின் பண்ணேன்னு கேட்டா ஐ.டி ல கெடைக்கல அதான் communication இம்ப்ரூவ் பண்ணிக்கலாமேன்னு சேர்ந்தேன்னு சொல்லுவாங்க. தொடர்ச்சியான நைட் ஷிஃப்ட்...இடத்த விட்டு நகர முடியாத அளவு பணிச்சுமை...செய்ற வேலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊதியம்னு..எல்லாம் சேர்ந்து அவங்க உடல் இயக்கத்தையே தலைகீழா மாத்திப் போட்டுடும்.ஒரு மூனு நாலு வருஷம் BPO ல வேலை செஞ்சவங்கள்ட்ட பேசுனீங்கன்னா அவங்களோட அதிபட்ச கோரிக்கை “Day shiftல எதாவது ப்ராஜெக்ட் கெடைச்சா பரவால்ல பாஸுங்குறது தான்.

எதுவுமே செய்யாம இருக்குறதுக்கு எதாவது ஒரு வேலை செய்வோமேங்குறது தான் பெரும்பாலான பசங்களோட எண்ணம். அதுக்கும் மேல, வேற பெரிய கனவுகளோட... ஐடியாக்களோட..சொந்தமா எதாவது தொழில் பண்ணனும்..மார்கெட்ல இல்லாதத புதுசா யோசிக்கனும்னு..யாரவது திரிஞ்சாங்கன்னா இன்னும் சுத்தம்..அவங்க வீடு சுற்றம் தொடங்கி போற வர்ரவனெல்லாம் அவனுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.”Practicalஆ யோசி..இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயஙகள்னு பேசி அவனோ கனவெல்லாத்தையும் போட்டு நசுக்கிட வேண்டியது.அப்புறம் அவனா தக்கி முக்கி எதையாவது பண்ணி மேல வர்ரதுக்கு முயற்சி செஞ்சு..சறுக்கிட்டான்னா…
அவ்ளோதான்..மொத்தமா வந்துடுவாங்க..”பாத்தியா..நான் அப்பவே சொன்னேன்ல..உனக்கேன் இந்த வேண்டாத வேலைன்னு. Entrepreneurship ங்குறது இந்தியாவுல ஒரு சபிக்கப்பட்ட விஷயம். You can never create entrepreneurs just by graduating them with an MBA from premier institutions.

இதுவரைக்கும் சொன்ன எல்லா விஷயமும் அபார திறமையும் அறிவும் உள்ள, அதுக்கேத்த வசதி வாய்ப்பும், தரமான கல்வியும் கிடைக்குற இளைஞர்களுக்கு இல்ல. எல்லாத்துலயுமே mediocreஆ இருக்குற தன்னுடைய survivalக்காக ஓடிகிட்டே இருக்குற பெரும்பான்மையான இளைஞர்களுக்கானது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள்ள வேல பாக்குற எல்லாரும் என்னமோ திட்டம்போட்டு அமெரிக்காவுக்கும் இன்னபிற வெளிநாடுகளுக்கும் அடிமை வேல பாக்கப் போன மாதிரியும்..லட்ச லட்மா பணத்துல குளிக்கிற மாதிரியும் ஒரு பிம்பத்த, சினிமாவும்..பிற ஊடகங்களும் உருவாக்கி வெச்சுருக்கு.மக்களோட பொது புத்தியிலயும் அது பதிஞ்சு போச்சு.பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவத் தொறந்து விட்ட அரசை எதிர்த்து யாரும் மூச்சு கூட விட மாட்டாங்க.சரியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்காம..இருக்குற வேலைகளுக்குத் தகுதியான பட்டதாரிகளையும் உருவாக்காம… அவனவன் சொந்தக் கஷ்டத்துக்கு ஏதோ கெடைச்ச வேலைக்குப் போறவனப் புடிச்சு நீ அடிமை..நீ கூலி… அது இதுன்னு வறுத்தெடுக்குறது எந்த வகைல நியாயம் ??? 


ஞாயிறு, 6 ஜூலை, 2014

Green Street Hooligans (2005) - Football வெறியர்கள்




                   மக்களுக்கு நாடி நரம்பெல்லாம் ஃபுட் பால் வெறி ஏறிப்போயிருக்க இந்த சீஸன்ல ஒரு ஃபுட்பால் படம் பத்தி எழுதலாம்னு நெனச்சேன்.இது நேரடியான கால் பந்தாட்டம் பற்றிய படமா இல்லன்னாலும் விளையாட்டுக்கு பின்னாடி இருக்குற மனுஷங்கள பத்தின கதை தான்.ஏதாவதொரு விளையாட்டு எல்லா நாட்லயும் அந்தந்த நாட்டுடைய கலாச்சாரத்துல ஒரு பகுதியா காலம் காலமா இருந்துட்டு இருக்கு.அமெரிக்காவுக்கு NFL,Baseball..இந்தியாவுக்கு க்ரிக்கெட்... இங்கிலாந்துக்கு ஃபுட்பால், க்ரிக்கெட்...!! இப்படி

பொதுவா விளையாட்டுப் போட்டிங்குறது அதுல விளையாடற வீரர்களுக்கு (அவங்களுடைய sportsmanshipஐ பொருத்து) just another game-ஆ இருக்கலாம். ஆனா ரசிகர்களுக்கு இது அவங்க ego சம்பந்தப்பட்ட விஷயம்.தன்னுடைய அணி தான் ஜெயிக்கனும்னு நெனைக்குற ஒரு தீவிரமான போட்டி மனப்பான்மை இருக்கும்.சில சமயம் இந்த தீவிரத்தன்மை, தனி மனிதர்களின் மன வன்மத்துக்கும் வன்முறைக்கும் காரணமா அமைஞ்சுடும்.நம்ம நாட்ல அதிக viewership இருக்குறது க்ரிக்கெட்டுக்கு தான்.இந்திய ரசிகர்களும் IPL மாதிரியான போட்டிகளின் போது social networking sitesல மற்ற மாநில ரசிகர்களோட நாயா பேயா அடிச்சிகிட்டாலும் நெஜத்துல அவங்களுக்குள்ள அடிச்சிகிற சம்பவங்கள் ரொம்ப குறைவு (இல்லவே இல்லன்னு கூட சொல்லலாம்).அப்படியே வன்முறைல இறங்குனாலும் வீரர்கள் வீட்ல கல் எறியிறது... கொடும்பாவி கொளுத்துறதுன்னு public nuisance தான்.

ஆனா இங்கிலாந்துல கதையே வேற.அங்க Football அவங்க ரத்ததுல கலந்த விஷயம்.கால்பந்தாட்டத்துக்கு கிட்டத்தட்ட 150 வருஷ வரலாறு உண்டு.19ஆம் நூற்றாண்டுல தொடங்கி படிப்படியா பரிணாம வளர்ச்சி அடைஞ்சு இன்னைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்காண ரசிகர்களால விளையாடப்படுகிற பார்க்கப்படுகிற ஒரு விளையாட்டு.209 நாடுகள் அதிகாரப்பூர்வமா FIFAனு சொல்லப்படுற பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புல உறுப்பினர்களா இருக்காங்க. இங்கிலாந்தைப் பொருத்தவரைக்கும் ஒரு ஊருக்கு ரெண்டு டீம்னு வெச்சா கூட கிட்டத்தட்ட 7000 ஃபுட்பால் க்ளப்புகள் பலதரப்பட்ட டிவிஷன்கள் கீழ வரும்.

ஓவ்வொரு ஃபுட்பால் க்ளப்புக்கும் ஒரு ரசிகர் படையே இருக்கும்.Manchester United மாதிரி பெரிய க்ளப்பா இருந்தாலும் சரி...ஏதோவொரு சின்ன ஊரைச் சேர்ந்த க்ளப்பா இருந்தாலும் சரி.கண்டிப்பா இந்த Fan following இருக்கும்.இவங்க ஓவ்வொரு க்ரூப்புக்கும் ஒரு பேரு இருக்கும்..தனி ட்ரெஸ் கோட் இருக்கும்..ஏதாவ்து ஒரு தீம் சாங் வெச்சுப்பாங்க.தங்களை gangனோ gangsters னோ சொல்றது இவங்களுக்கு பிடிக்காது.தங்களுடைய க்ருப்ப 'Firm'னு சொல்லிப்பாங்க.இந்த ரசிகவெறியர்களோட வேலையே அவங்க டீம் மேட்ச் எங்க நடந்தாலும் அந்த க்ரவுண்டுக்கு போய் அவங்க டீமுக்கு சப்போர்ட் பண்றது தான்.அத மட்டும் பண்ணா பரவால்லயே.. எதிர் டீம் ரசிகர் படையோட சண்ட போடுறதுதான் இவங்களுடைய முக்கிய அஜெண்டா.சாதாரணமான சண்டை இல்ல...கலவரம். இந்த மாதிரி கால்பந்தாட்ட வெறியர்கள் விளையாட்டோட பேர்ல பண்ற ரவுடியிஸத்துக்கு தான் Hooliganismனு பேரு.


இந்த படம் West Ham United மற்றும் Millwall ஆகிய ரெண்டு டீம்களின் Firmsக்கு (Green Street Elites, Millwall Bushwackers)  இடையேயான (நிஜமான) பகைமையை அடிப்படையாக கொண்ட கதைதான்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல ஜர்னலிஸம் படிக்கிற Matt சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா expel ஆயிட்றான்.அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்னு லண்டன்ல இருக்க அவங்க அக்கா ஷானன் வீட்டுக்கு கெளம்பிப் போறான்.அவங்க அக்கா கிட்ட விஷயத்த சொல்லி அங்க தங்க வேண்டிய நிர்பந்தத்தையும் சொல்றான். அக்காவுடைய கணவன் Steve ,Mattஐ தன் தம்பி Peteகூட ஃபுட்பால் மேட்ச் பாக்க அனுப்பி வைக்குறான். Pete கொஞ்சம் ரவுடிப்பையன்...ஆரம்பத்துல கொஞ்சம் பிகு பண்ணாலும் சரி போனா போகுதுன்னு Mattஅ கூட கூட்டிட்டு போறான்.அவனோட நண்பர்கள் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்குறான்.ஆரம்பத்துல அவன் ஒரு அமெரிக்கன்ங்குறதால அதிகமா ஒட்டாத Pete உடைய நண்பர்கள் கொஞ்ச நாள் போகப்போக நல்ல பழக ஆரம்பிக்குறாங்க. Bovverங்குற ஒரே ஒருத்தனத் தவிர.காரணம் Bovverக்கு அமெரிக்கர்கள்னாலே ஒரு வெறுப்பு.தங்களுடைய க்ரூப்புல ஒரு அமெரிக்கன் இருக்குறது அவனுக்கு பிடிக்கல.இருந்தாலும் Peteக்காக பொறுத்துக்குறான்.


எப்பவும் அவங்க கூட வெளில சுத்த தொடங்குறான் Matt. ஒரு நாள் ரோட்ல வேற ஒரு க்ரூப் இவங்கள அடிக்கத் தொரத்தும்போது தான் Mattக்கு West Ham United டீமுடைய ரசிகர் படையான Green Steet Elite (GSE) பத்தி தெரிய வருது.Pete தான் அந்த firmக்கு தலைவன்.2அந்த Firm ஒருகாலத்துல தொடங்கி வெச்ச 'The Major'ங்குற ஒரு கெத்து பார்ட்டி பத்தியும் தெரிய வருது.

அநியாயத்துக்கு பழமா..நல்லவனா இருக்க Matt, Pete கூட சேர்ந்து எல்லா தெரு சண்டைக்கும் போக ஆரம்பிக்கிறான். இத கேள்விப்பட்டு செம்ம கடுப்பாகுற Steve இவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு வெளில அனுப்பிடுறான்.இது எல்லாத்துக்கும் நடுவுல GSE அவங்களுடைய அதி தீவிர எதிரி க்ருப்பான  பக்கத்து ஊரு Milwal டீமுக்கும் தங்களுடைய டீமுக்கும் பல வருஷம் கழிச்சு நடக்க போற மேட்ச்ல பெரிய அளவுல சண்டை போட திட்டம் போடுறாங்க.அந்த சண்டைக்கு போகப் போறவங்கள்ல Mattஐயும் Pete தேர்ந்தெடுத்தது Bovverக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.அதனால எதிரி க்ருப்புக்கு இந்த ப்ளான் பத்தி உளவு சொல்லிடுறான். Milwal Bushwackers க்ரூபோட தலைவன் Tommy ஏற்கனவே GSE மேல கொல வெறில இருக்கான். (காரணம் தன்னுடைய மகனை GSE உடனான ஒரு பழைய கலவரத்தின்போது இழந்ததுனால).GSE-இன் பழைய தல 'The Major'ம் இந்த சண்டைக்கு வரப்போறதா தகவல் வந்ததால டாமி Major ஐயும் Pete ஐயும் போட்டுத் தள்ள ப்ளான் பண்றான்.

இது இல்லாம Mattஐ பார்க்க லண்டன் வர்ர அவங்கப்பா (சர்வதேச பத்திரிகையாளர்) அவன Time பத்திரிகையுடைய அலுவலகத்துக்கு கூட்டிட்டு போய் தன் நண்பர்கள் கிட்ட அறிமுகப்படுத்தி வைக்குறாரு. இத தூரத்துலேர்ந்து பாக்குற Bovver தன் நண்பர்கள்கிட்ட வந்து Matt ஒரு பத்திரிகைக்காரன்னும் நம்மளப் பத்தி தகவல் தெரிஞ்சுகிட்டு பத்திரிக்கைல எழுதுறதுக்காக தான் நம்ம கூட சுத்திட்டு இருக்கான்னும் சொல்றான்.அவன் தினமும் எழுதுற டைரில நம்மளப் பத்தி நோட் பண்ணி வெச்சுக்குறான்னும் சொல்றான்.இது மறுபடி ஒரு பெரிய பிரச்சனைய கெளப்புது.இந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க 'Major' அவரே நேர்ல வர்ராரு.

கடசில..அந்த சண்ட நடந்துச்சா...?? Pete,Matt எல்லாரும் என்ன ஆனாங்க...??, 'The Major' யாரு...டாமி சொன்னபடி எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டானா..?? இதெல்லாம் நேரமும் ஆர்வமும் இருந்தா... படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.

Extra: கடைசியா இந்த ரெண்டு க்ரூப்புக்கும் நடந்த ரத்தக்களரிய பத்தி படிக்க இங்கு க்ளிக்கவும்

சனி, 10 மே, 2014

புனைவின் நிழல் - மனோஜ்

izquotes.com
பொதுவாவே படிக்கிறது ஜாலியான விஷயம்… இன்னது தான்னு இல்லாம கண்டதையும் படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பகுத்து பார்த்து ரசிக்கக் கத்துக்குறதெல்லாம் வேற கத. ஆனாலும் வாசிக்கிறது சுகம் தான்… புனைவுகள்.. கட்டுரைகள்.. சுய(சொறிதல்)சரிதை… அறிவியல்… கவிதை… எல்லாமே வெவ்வேற உலகம். நம்ம கண்ணைக் கட்டி காலத்துக்கு நடுவுல கடத்திட்டுப் போகக்கூடிய வல்லமை புனைவிலக்கியத்துக்கு இருக்கு. ஒரு சிறுகதைன்னு எடுத்துகிட்டா அதுல வர பாத்திரங்கள் (சட்டி பானைய சொல்லல).. கதை நிகழ்கிற இடம்.. சூழல்… தனிமனிதர்களின் நியாயங்கள்.. அவங்க கொடுக்குற தீர்வுன்னு பல விஷயங்கள் இருக்கு. ஒரு சிறுகதையையோ நாவலையோ அல்லது எந்தவொரு புனைவிலக்கியத்த நாம வாசிக்கும்போதும் ஒரு வெள்ளை கேன்வாஸ்ல கோட்டோவியத்துல தொடங்குற மாதிரி ஆரம்பிச்சு கடைசில அந்த கதை முடிவை அடையும்போது ஒரு அழகான (சில சமயம் சொதப்பலான/மொன்னையான) ஓவியமா நம்ம கற்பனைல நிறைவடையுது.


ஃபேண்டஸின்னு (fantasy) தனியா ஒன்னும் கெடையாதுங்குறது என்னுடைய எண்ணம். ஃபிக்‌ஷன் எல்லாமே ஃபேண்டஸி தான். உங்க கற்பனைக்குள்ள நீங்க உருவாக்கிக்குற உலகம் தான்.அந்த களத்தை உங்களுக்கு ஒரு எழுத்தாளர் அமைக்குறாரு; அவ்வளவே.ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ திரைப்படமா எடுக்கப்படும்போது மக்கள் பெரும்பாலும் புத்தகத்துக்கு நிகரா படம் இல்லன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா உங்க மனசு ரொம்பவே பெரிய கேன்வாஸ்..எல்லைகள் கிடையாது.. அந்த உலகத்துல உலவுறவங்க எப்படி இருப்பாங்கன்றத நீங்கதான் தீர்மானிக்கிறீங்க. தங்களுடைய தனிப்பட்ட கற்பனைய வேறொரு வரையறைக்குள்ள அடைச்சு காட்சிப்படுத்துறத பெரும்பாலாவர்கள் விரும்புரதில்ல. ஆனாலும் காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற இடம் தான் புனைவின் உச்சம். அங்கதான் எழுத்தாளர் ஜெயிக்கிறார்.


எதுக்கு இவ்ளோ பீடிகைன்னு கேட்டீங்கன்னா அதுக்குக் காரணம் ஒரு புத்தகம் தான். ஒரு (அ)சாதாரணமான சிறுகதைத் தொகுப்பு.சத்தியமா இந்த மாதிரி ஒரு அனுபவத்தை எதிர்பார்த்து நான் இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கல.’புனைவின் நிழல் ’ மனோஜ் எழுதுனது. மொத்தம் 15 சிறுகதைகள். Versatilityன்னு ஒரு வார்த்தை இருக்குல்ல… அதுக்கு சரியான உதாரணம் இந்த தொகுப்பு தான். ஒன்னு ரெண்டு கதைகள் மட்டும் கொஞ்சம் வெகுஜன இதழ் பாணி ‘கடைசி வரி பன்ச்’ கதைகள். மத்ததெல்லாமே ஒவ்வொன்னும் ஒரு உலகம்… ஒரு டைம் மெஷின்… ஒரு Black Hole… எப்புடி வேணாலும் சொல்லிக்கலாம். 

‘அட்சர ஆழி’ – முதல் பால் சிக்ஸர். நான் ரெண்டாவது பத்தியோட முடிவுல சொன்ன மாதிரி //காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற // வித்தைக்கு ஒரு சின்ன உதாரணம். கதையே ‘எப்படி விளங்கவைப்பது என்பதுதான் எனக்குள்ள பிரச்சனையே’ இப்படித்தான் தொடங்குது. J

ஏவாளின் விலா எலும்பு, 857, மஹல்… இந்த மூன்று கதைகளையும் வரலாறு அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்து புனைகதைகள்னு சொல்லலாம். Trust me… கண்டிப்பா அசந்து போவீங்க. ஆதாம் ஏவாள் காலத்துக் கதையாகட்டும்… மொகலாய மன்னர்கள் கதையாகட்டும் வர்ணனைகளும் வார்த்தைகளும் உங்களைக் கட்டிப்போடும்.

றெக்கை.. பால்… சர்ப்பவாசனை.. இந்த கதைகளெல்லாம் ஒரு மாதிரி trance ஃபீலிங் தந்துச்சு எனக்கு. வாசனையையும்...வெம்மையும்… வெறுமையையும்.. தனிமையையும்… வார்த்தைகளில் கடத்திவிட முடியுமா என்ன..?? வாவ்…!!! எனக்கு ரொம்ப நாளாவே இந்த ‘பின்நவீனத்துவம்’னா என்னன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ராஜேஷ் அட்டகாசமா ஒரு விளக்கம் (மினி தொடர்) எழுதிருந்தாரு (கட்டுரை இங்கே). கொஞ்சமா புரிஞ்சாலும் அதை படிச்சப்புறமும் என்னால சரியா ரிலேட் பண்ணிக்க முடியல. மனோஜின் கதைகள் postmodernismனா என்னன்னு ஓரளவுக்கு உணர்த்துச்சு.

இந்தத் தொகுப்புலேயே என்னுடைய personal favorite-னா அது ‘கச்சை’ சிறுகதை தான். அதிலிருக்குற அமானுஷ்யமும்… அழகும்… ஊடுபாவாக சொல்லப்படுற சாதீய/சமூகக் கொடுமைகள பத்தின தகவல்களும்… நிச்சயமா இதுவொரு க்ளாசிக்னு சொல்லலாம். ‘அச்சாவோட சிச்சாமணி’ன்னு ஒரு கதை இருக்கு பன்னிரெண்டாவதா இருந்தாலும் நீங்க இத கடைசியிலேயே படிக்கலாம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் மனோஜ் தந்த ஸ்வீட் பீடா. நெஜம்மாவே விழுந்து பொரண்டு சிரிச்சேன்.

மொத்தத்துல புனைவு விரும்பிகளுக்கு/சிறுகதை ரசிகர்களுக்கு இது ஒரு செம்ம வெரைட்டியான விருந்து. கண்டிப்பா படிச்சுடுங்க.

புனைவின் நிழல்
ஆசிரியர்-மனோஜ்
உயிர்மை பதிப்பகம்
விலை – ரூ.70
ISBN:81-89912-00-3


ஆன்லைனில் வாங்க : இங்கு க்ளிக்கவும்

ஞாயிறு, 4 மே, 2014

Here Comes The Boom (2012) - இது ‘மான் கராத்தே’ அல்ல

நம்ம படத்தோட ஹீரோ ஒரு அப்பாவி.பாக்சிங் மாதிரியான சண்டைகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமா ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டை போட்டில கலந்துக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுது.எதிராளி ஒரு professional fighter. தோல்விங்குற விஷயத்த கேள்வியேபடாத Killer அவரு. நம்மாள் அதுநாள் வரைக்கும் காமெடியான opponents கூடவே மோதி ஜெயிச்சவரு.இந்த மிகப்பெரிய போட்டில எதிராளி அவ்ளோ டெர்ரர் பார்ட்டின்னு தெரிஞ்சதும் நம்ம ஹீரோவுடைய சுற்றமும் நட்பும் இவர சண்ட போட வேணாம்னு தடுக்குறாங்க.ஆனா நம்ம ஹீரோ வெறியோட போட்டில கலந்துக்குறாரு.முதல் ரவுண்ட்லேயே சாவடி வாங்குறாரு. எப்படியோ தாகுப்பிடிச்சு கடைசில.. ஹீரோ ஜெயிச்சாரா... இல்லையா...?? க்ளைமாக்ஸ்.... 

Wait... இந்தக் கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு உங்களுக்கு டவுட் வருமே…??! ஆங்.. நம்ப future perfect continuous சூப்பரு இசுடாரு சினா.கானா ’நடிச்ச’ டுபாக்கூர் கராத்தேங்குற காமெடி (!) காவியம் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்ல.ஏன்னா இது அது இல்ல.இது வேற படம். ஒரு ‘நிஜமான’ ஸ்போர்ட்ஸ் காமெடி படம்.


காமெடி படத்துக்கெல்லாம் எதுக்கு சார் லாஜிக்னு கேக்குறவங்க தயவுசெஞ்சு இந்த படத்த ஒரு தபா பாத்துடுங்க.கதைப்படி ஹீரோ  ஒரு பயாலஜி வாத்தியார். எப்பவோ சின்ன வயசுல ஸ்கூல் மல்யுத்த டீம்ல இருந்துருக்காரு. அவ்ளோதான் அவருக்கும் சண்டைக்கும் இருக்குற தொடர்பு.சரி இவருக்கு ஏன் இந்த  அடிதடியெல்லாம்.காதல்..கீதல்னு எதுலயாவது உழுந்து... காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்காக குத்துச்சண்டைக்கு போறாரா..?? ஒரு புடலங்காயும் இல்ல.

அவரு வேல செய்யுற ஸ்கூல்ல அரசாங்க ஸ்பான்சர்ல ஒரு இசைப்பயிற்சி வகுப்பு நடந்துட்டிருக்கு. அத ஒரு (அல்மோஸ்ட்) வயசான ம்யூசிக் வாத்தியார் தான் நடத்துறாரு. திடீர்னு அரசாங்கம் அந்த இசை வகுப்புகளுக்கான நிதியை கட் பண்ணிடறதனால பள்ளி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையை காரணமா காட்டி இசை பயிற்சி வகுப்புகளுக்கு கத்தரி போடப்போறதா சொல்றாங்க. அப்புடி நிறுத்துனா obviously நம்ப வயசான வாத்தியாரையும் வூட்டுக்கு அனுப்பிடுவாங்க. அவரு குடும்பஸ்தரு. அவருடைய குடும்பத்துக்கு ஒரு புது ஆள் வேற ‘ஆன் தி வே’.

இந்த நெலமைல அவருக்கு வேல போயிட்டா என்ன பண்ணுவார்னு பாவப்பட்டு அதுக்கு நிதி திரட்டத்தான் நம்ப ஹீரோ சின்ன லெவல் சண்டைப்போட்டிகள்ல கலந்துக்க யோசிக்கிறாரு. சின்ன லெவல் போட்டியா இருந்தாலும் பயிற்சி இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுங்குறதுனால அவரு பார்ட் டைமா பாடம் நடத்துற immigrants கூட்டத்துலேர்ந்து ஒரு மெக்சிகன் ‘முன்னாள்’ குத்துச்சண்டையாளன தேர்ந்தெடுத்து அவன்கிட்ட உதவி கேக்குறாரு. அவரும் சாதாரணமா ஒத்துக்கல...எப்டியோ அவர கன்வின்ஸ் பண்ணி பயிற்சியெடுக்க ஆரம்பிச்சு சின்ன சின்ன போட்டிகளா ஜெயிக்க ஆரம்பிக்குறாரு. அதுல   வர்ர பணத்தையெல்லாம் அவங்க ஸ்கூல் அக்கவுண்டண்ட் கிட்ட கொடுத்து வைக்குறாரு (இத ஞாபகம் வெச்சுக்கோங்க..கடைசில இத வெச்சு தான் ட்விஸ்ட்..)

நம்ப ஹீரொவுடைய சண்டைகள பாக்குற UFC (Ultimate Fighting Championship) ஆளுங்க அவருக்கு UFCல ஒரு ஃபைட் பண்ண ஒரு சான்ஸ் தராங்க.
அதுக்கப்புறம்….

முதல் பத்திய படிச்சுக்கோங்க…!!

செம்ம டைம்பாஸ் படம்… சிரிப்புக்கு நான் உத்திரவாதம் J J ஜாலியா பாக்கலாம்.

கொசுறு: இந்த படத்துல வர்ரது exact-ஆ பாக்சிங் இல்ல. ஒரு மாதிரி எல்லா சண்டையும் கலந்த Mixed Martial Arts(MMA). இதே MMA வெச்சு வெளிவந்த ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தைப் பத்தி இங்கே க்ளிக் பண்ணி படிக்கலாம்.
Images Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...