நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 30 ஜூன், 2015

புல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2




இந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ கேள்விப்பட்டிருப்பீங்க.நிஜத்துல அந்த காந்தளூர் எங்க இருக்குன்னா  மூனாருக்கு 23 கிலோமீட்டருக்கு முன்னாடி மறையூர் அப்டிங்குற ஊர்லேர்ந்து 16 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.V11 RERC ஜனவரி மாசம் போயிட்டு வந்த கொடைக்கானல் ட்ரிப்புக்கு அப்புறம் லாங் ரைட்ஸ் எதுவும் போகவேயில்ல. அரை நாள் ட்ரிப்பா ECRல இருக்க சத்ராஸ் ஃபோர்ட்டுக்கு மட்டும் போய்ட்டு வந்தோம்.திரும்ப வரும்போது மாமல்லா ரிஸார்ட்ல காலை உணவு.அப்போதான் அடுத்த ட்ரிப் காந்தளூர் போகலாம்னு கிருஷ்ணன் சார் சொன்னாரு.



உடுமலைப்பேட்டைலேர்ந்து மூனாறு போற வழில மறையூர்லேர்ந்து இடது பக்கம் திரும்பி 15 கிலோமீட்டர் போனா காந்தளூர். ரொம்ப அழகான அமைதியான ஊர்.இடுக்கி மாவட்டத்துக்கு கீழ வருது. வழக்கம் போல போக வேண்டிய ரூட்டெல்லாம் முன்னாடியே பேசி முடிவு பண்ணாங்க.
ஏப்ரல் மாசம் 11ஆந் தேதி சனிக்கெழம காலைல 4.30க்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ் ஷோரும்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அப்டி இப்டின்னு மொத்தம் 17 புல்லட் வந்து சேந்துச்சு அதுல ஒரு வண்டி எங்க புது மாடல் வண்டிக்கெல்லாம் பாட்டன். 1972 மாடல்; Cast Iron இஞ்சின்.வலதுகால் பக்கம் கியர் பாக்ஸ்.இடது கால் பக்கம் ப்ரேக்குன்னு... டிபிக்கல் ரெட்ரோ. புதுசா பெயிண்டிங்கெல்லாம் பண்ணி சும்மா மின்னிக்கிட்டு வந்துச்சு.காலைல 5.00 மணிக்கு சொல்லி வெச்சபடி கெளம்புனோம். கிருஷ்ணகிரி கிட்ட பள்ளிகொண்டாவுல ப்ரேக்ஃபஸ்ட் சாப்புட்றதா ப்ளான். வழக்கம் போல வெயில் வரதுக்கு முன்னாடி எவ்ளோ தூரம் போக முடியுமோ போயிடனும்கிறதுதான் திட்டம். சொல்லிருந்த மாதிரியே கரெக்ட்டா 7.30க்கெல்லாம் பள்ளிகொண்டா வந்தாச்சு. அங்க ஒரு ரோட்சைட் ஹோட்டல்ல ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கெளம்புனோம். இதுக்கு நடுல 72 மாடல் வண்டி ஏதோ பிரச்சனையால சென்னைக்கு திரும்பிப் போச்சு.




மத்தியான சாப்பாட்டுக்கு கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துல இருக்குற ஒரு கடைல சாப்புட்றதா முடிவு பண்ணோம்.தர்மபுரி. சேலம் வழியா கோபிச்செட்டிப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு 40கிலோ மீட்டர் ஸ்டேட் ஹைவேஸ்ல  உள்ள போகவேண்டியதா இருந்துச்சு.ஆனா அந்த சாப்பாட்டுக்கு இந்த ட்ராவல் வொர்த்து.’மைவிழி’ உணவகம்னு கடை பேரு. 300 ரூபாய்க்கு அன்லிமிட்டட் அசைவ பஃபே சாப்பாடுஅதுவும் வீட்டு சாப்பாடு மாதிரி. எல்லாரும் சும்மா புகுந்து விளையாடுனோம். சைவ சாப்பாடும் உண்டு.. ஆனா அது கொஞ்சம் விலை குறைவு.சாப்ட்டு முடிச்சு எல்லாரும் வெளில கீற்று கொட்டகைல ஆளுக்கொரு பக்கம் சாஞ்சிட்டோம்.அடுத்து தாராபுரம்..உடுமலைப் பேட்டை வழியா போய் மலை மேல ஏறுறதுதான் திட்டம். அப்பவே மணி நாலு ஆயிடுச்சு. அப்போ தான் வெங்கட் வண்டியில பெட்ரோல் டேங்க் ஓட்டையாகி லீக் ஆனது தெரிஞ்சுது. அப்புறம் டேங்க்கை கழட்டி, காலி பண்ணி, கழுவி, வெல்ட் பண்ணி திரும்ப வரும்போது மணி 5.30க்கு மேல ஆகிடுச்சு. ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு மலை ரோடு மேல ஏறுறதா முடிவு பண்ணி கெளம்புனோம்.



உடுமலைப்பேட்டைல வழக்கம் போல சில பேர் வேற ரூட்ல கொஞ்ச தூரம் போயிட்டதனால அவங்க வரதுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு.கடைசியா கேரளா செக்போஸ்ட்ல வண்டி நம்பர் குடுத்துட்டு பேரெழுதிட்டு கெளம்பும்போது மணி 8.30க்கு மேல ஆச்சு. ஃபார்ஸ்ட் ஆஃபிஸர்ஸ் முன்னாடியே சொல்லிதான் அனுப்புனாங்க.வழில வண்டிய எங்கேயும் நிறுத்தக்கூடாது , அனிமல்ஸ் வெளில வரும்னு. நாங்களும் எல்லாரும் மொத்தமா போனா சத்தம் ரொம்ப அதிகமா இருக்கும்னு கொஞ்சம் இடைவெளிவிட்டு போக ஆரம்பிச்சோம்.மலை ஏற ஏற செம்ம இருட்டு.நம்ம வண்டி ஹெட்லைட் தவிர  வேற எந்த வெளிச்சமும் இல்ல.கொஞ்சம் பதட்டத்தோட தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்.என் வண்டிக்கு 50 அடி முன்னாடியும் பின்னாடியும் வேற வண்டி எதுவும் இல்ல.
ரோட்டோட ரெண்டு பக்கமும் அவ்வளவு அடர்த்தியா மரங்கள்.  என் வண்டியுடைய இஞ்சின் சத்தமும் காட்டுக்குள்ளிருந்த வந்த விநோத சப்தங்களையும் தாண்டி வேறெதுவும் கேக்கல.

கொஞ்ச தூரம் தள்ளி ரோட்டோட இடது பக்கம் ஒரு பெரிய மரக்கிளை ஆடிட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 600 மீட்டர் இடைவெளில. இது என்னடா எல்லா மரமும் அசையாம இது மட்டும் அசையுதேன்னு வண்டிய கொஞ்சம் லெஃப்ட்ல ஓரங்கட்டி ஹை பீம் போட்டா...!! யானை....!!! சாதுவா கிளைய இழுத்து என்னவோ சாப்டுட்டு இருந்துச்சு. எனக்கு செம்ம பதட்டம். சுத்தியும் வேற யாரும் வரல. என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு தார் ரோட்லேர்ந்து இறங்கி வலது பக்கம் கொஞ்சம் கரடு முரடான் மண் தரைல வண்டிய ஓட்டிட்டு போய்ட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு திட்டம்போட்டு வண்டிய ரைட்ல ஓரம் கட்னேன். பொறுமையா முன்னாடி போக ஆரம்பிச்சேன். ஒரு 200 மீட்டர் போனப்புறம் மறுபடியும் வலது பக்கம் ஏதோ அசைவு.என்னடா இது சோதனைன்னு மறுபடியும் ஹைபீம் போட்டா... ஒரு குட்டியானை...!! ரைட்டுடா... ரெண்டு பக்கமும் ஃபேமிலியோட நின்னுட்டு இருக்கே..என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு வண்டிய ஆஃப் பண்ணிட்டேன். அப்புறம் நடுவுல ஒரு சின்ன கேப் இருந்துச்சு அதுலயே போயிடலாம்னு முடிவு பண்ணி ஹெட்லைட்ட ஆஃப் பண்ணிட்டு டைகர் லேம்ப்னு ஒரு சின்ன லைட் இருக்கும் ஹெட்லைட் பக்கத்துல..அத மட்டும் ஆன் பண்ணிட்டு பொறுமையா வண்டிய உருட்டிகிட்டே பக்கத்துல போனேன். ரெண்டு பக்கமும் யானை பக்கத்துல வந்த ஒரு நொடி இருக்கே..யப்பா... யானைய தாண்டிட்டேன்னு தெரிஞ்சதும் லை ஆன் பண்ணி ஒரே திருவு தான் ரெண்டரை கிலோ மீட்டர் தள்ளிப் போய் தான் ஸ்லோ பண்ணேன். செம்ம அனுபவம். மறையூருக்கு முன்னால ஒரு டீக்கடைல எல்லாரும் அசெம்பிள் ஆனோம். இந்த இடைப்பட்ட கேப்ல திரும்பிப்போன அந்த 72 மாடல் வண்டிய சரி பண்ணி திரும்பவும் எங்க கூட அந்த டீக்கடை கிட்ட வந்து சேந்துகிட்டாங்க.


மறையூர் தான் செண்டர் பாயிண்ட். அங்கிருந்து நேராப் போனா மூணாறு.இடது பக்கம் திரும்பி 18 கிலோமீட்டர் போனா காந்தளூர். நாங்க எங்கெங்கேயோ தப்பான வழில கொஞ்ச நேரம் சுத்திட்டு ஒருவழியா நாங்க தங்க வேண்டிய ரிஸார்ட்டுக்கு வந்து சேந்தோம்.கொஞ்ச நேரத்துலேயே எல்லாரும் ரெஃப்ரஷ் ஆய்ட்டு கேம்ப் ஃபயர் சுத்தி உக்காந்து சப்பாத்தி சிக்கன் கறி...அது இதுன்னு வெளுத்துக் கட்டிட்டுப் போய்ப் படுத்தாச்சு. அடுத்த நாள் காலைல நாங்க தங்கியிருந்த ரிஸார்ட்டுக்கு எதிர் பக்கம் கொஞ்ச தூரத்துல ஒரு அருவி இருக்குறதா சொன்னாங்க. அதனால மொத்தமா கெளம்புனோம். ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்து போனதுக்கு அப்புறம் அட்டகாசமான ஒரு அருவி வந்துச்சு.ஒரு மணி நேரத்துக்கு மேல செம்ம குளியல் செம்ம ஆட்டம். திரும்பி மேல ஏறி வரும்போது பெண்டு கழண்டுபோச்சு. வந்து கேரளா ஸ்டைல் காலை டிஃபன் புட்டு, தேங்காய்ப் பால், ஆப்பம், கடலை கறி, சிக்கன் கொழம்புன்னு செம்ம மெனு. வெளுத்துக் கட்டிட்டு அப்புறம் மறுபடியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் டீ அடிச்சுட்டு ஸ்ட்ராபெரி தோட்டம் , கும்க்கி படத்துல வர ஒரு ஸ்பாட்னு ரெண்டு மூனு எடம் சைட் சீயிங் எல்லாம் முடிச்சு 7.00 மணி வாக்குல ரூமுக்கு வந்து சேந்தோம்.




அன்னைக்கு நைட் கேம்ப் ஃபயரோட சிக்கன் பார்பெக்யூவும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. முதல் நாள் பயணக்களைப்பால தூங்கப் போனவங்க எல்லாருமே அன்னைக்கு உற்சாகமா காத்துட்டு இருந்தாங்க. ரைடர்ஸ் எல்லாரும் தங்கள அறிமுகம் செஞ்சுகிட்டு அப்டியே பாட்டு ஆட்டம்னு நடு ராத்திரி வரைக்கும் கொண்டாட்டமாவே போச்சு.அடுத்த நாள் காலைல கொஞ்சம் சீக்கிரம் கெளம்பி மூனாறு வழியா தேனி, போடிநாயக்கனூர் மதுரை வரைக்கும் போறதா திட்டம். ஆனா சதீஷ் அண்ணன் வண்டி பஞ்சர் ஆனதால கொஞ்ச டிலே ஆகி ஒரு வழி 7.00 மணி கிட்ட கெளம்புனோம். மூனாறுல தான் காலை டிஃபன். அதுக்கப்புறம் அங்கிருந்து தேனி போடிநாயக்கனூர் வழியா மதுரைக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப ரொம்ப அழகான மலைப் பாதைப் பயணாம் அது. டீ எஸ்டேட்டுகளுடைய பசுமைக்கு நடுவுல... கொஞ்சம் குளிர்.. கொஞ்சம் வெயில்...ரெண்டையும் மாத்தி மாத்தி அனுபவிச்சபடி... ஒரு மாதிரி வெளிர் ஊதா நிற பூக்கள் ரெண்டுபக்கமும் கொட்டிக்கிடந்த ஈரமான சாலைகள்ல வண்டியோட்டுன அனுபவம் இருக்கே.....!! அடடா... கண்டிப்பா வாழ்க்கைல ஒரு முறையாவது அத அனுபவிச்சே தீரனும்.


அங்கிருந்து இறங்கி மதுரைக்கு வெளில மத்தவங்க வர்ரதுக்காக காத்திருக்கும்போது லேசா மழை தூர ஆரம்பிச்சுது.அப்டியே நனைஞ்சபடியே வண்டியோட்டுனோம்.மத்தியான சாப்பாடு திண்டுக்கல் பொன்ராம்ல .ஹரி அவருடை இன்ஃப்ளூயன்ஸ பயன்படுத்தி எங்களுக்காக பிரியாணி ப்ளாக் பண்ணி வெச்சுருந்தாரு. ஒருவழியா சாயந்திரம் 4.30க்கு தான் அங்க வந்து சாப்புடவே ஆரம்பிச்சோம்.சாப்ட்டு முடிச்சு அங்கிருந்து கெளம்பி அப்டியே NH45 பிடிச்சாச்சு. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை தான்.அங்கங்க டீ சாப்புட நிறுத்திப்போம். திருச்சிக்கு உள்ள போனா ட்ராஃபிக்ல் மாட்டிப்போம்னு முன்னாடியே மனப்பாறைல ஒரு ஸ்டேட் ஹைவேல திரும்புனோம். பொதுவா ஸ்டேட் ஹைவேஸ்னாலே எதிர்பக்க ட்ராஃபிக், மோசமான ரோடுன்னு கடுப்பேத்துற விஷயங்கள் இருக்கும் ஆனா இந்த ரோடு ஏதோ நந்தவனத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி ரெண்டுபக்கமும் அடர்த்தியா மரங்களோட ஏதோ கே.கே நகர் நிழல்சாலை மாதிரி இருந்துச்சு. ஒரே ஸ்ட்ரெட்ச்ல மறுபடியும் NH வந்து சேந்தோம். அங்க ஊருக்கு வெளில ஒரு டீ ப்ரேக் எடுத்துகிட்டு கிளம்புனோம். இங்க தான் எங்க லீட் பிரசாத் ஒரு ட்ரிக் ப்ளான் போட்டாரு.”அடுத்து நாம் செங்குறிச்சி டோல் ப்ளாசா தாண்டி தான் நிக்க போறோம்.இங்கிருந்து அது 80 கிலோ மீட்டர். இது நான் ஸ்டாப் லெக்” அப்டின்னு எலார்கிட்டயும் சொல்லிட்டாரு. ஆனா நெஜம்மா அங்கிருந்து 110 கிலோமீட்டருக்கு அப்புறம் தான் செங்குறிச்சி. நான் சும்மா வெரட்டு வெரட்டுன்னு போய்க்கிட்டே இருந்தேன்.வாழ்க்கைல முதல் முறையா 100 கிலோமீட்டருக்கு மேல நான்ஸ்டாப் ரைட் போனது அப்போ தான். மத்த 350 cc வண்டிக்கு முன்னாலயே வந்து சேந்தேன். கொஞ்ச நேரம் மத்தவங்களுக்காக காத்திருந்தோம். அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற A2Bல டின்னர் முடிச்சு கரெக்ட்டா கெளம்புற நேரத்துல செம்ம மழை. என்கிட்ட ரெய்ன் கோட் இருந்துச்சு.. டக்குன்னு எடுத்து மாட்டிகிட்டேன். எல்லாரையும் போலாம் போலாம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்ச பேருக்குத் தயக்கம். எனக்கும் உள்ளுக்குள்ள மழைல வண்டியோட்ட பயந்தான். ஆனாலும் ஒரு ஆசை.

ஒரு வழியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கிளம்பும்போது மணி 10.30க்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சென்னைக்கு 273 கிலோ மீட்டர் இருந்துச்சு. மழையினால யாரும் வேகமா போறதில்லன்னும் பொறுமையாவே போய்க்கலாம்னும் பேசி முடிவு பண்ணிகிட்டோம். மழை விட்டு விட்டு தூத்தல் போட்டபடியே இருந்துச்சு. ஹெல்மெட் வைசர்ல தண்ணி ஓடிகிட்டே இருக்கும். எதிர்பக்கத்துல வர்ர வாகனங்களுடைய வெளிச்சம், நம்மள தாண்டி போற பெரிய வாகனங்கள் வாரியிறைக்குற அழுக்கு தண்ணி, சரியான பிடிமான இல்லாம வழுக்க தயாரா இருக்குற சாலைன்னு, ஹெல்மெட் வழியா பின் கழுத்துல இறங்கி உள்ளாடை வரைக்கும் நனைக்குற மழை தண்ணின்னு இத்தனையையும் சமாளிச்சு தான் வண்டியோட்னோம்.மழைக்கு முன்னாடி வரைக்கும் பேயோட்டு ஓட்டிக்கிட்டிருந்த நான் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பம்ம ஆரம்பிச்சேன். எந்த லாரியையும் ஓவர்டேக் பண்ணி முன்னாடி போறதுக்கே பயமா இருந்துச்சு. ஹரிஷ் மணி அண்ணாத்த இத கவனிச்சுட்டாரு. என் பக்கத்துல வந்துட்டு என்ன guide பண்ண ஆரம்பிச்சார். ஒவ்வொரு லாரியை ஓவர் டேக் பண்ணும்போதும் பக்கத்துலயே அவரும் வருவார். தாண்டுன உடனே ஒரு thumbs up காட்டுவாரு. இப்டியே பொறுமையா ஒட்டிகிட்டு வந்தோம். மழை கொஞ்சம் விட்டவுடனே பழையபடி விரட்ட ஆரம்பிச்சோம். வண்டி டயர்லயும் கொஞ்சம் பிடிமானம் கிடைக்க ஆரம்பிச்சுது.

ஒருவழியா அதிகாலை 2.30 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து சேர்ந்தோம். அங்க ஒரு வண்டிக்கு சின்னதா ஒரு fall.அதனால காஃபி ப்ரேக், வண்டி ரெடி பண்ற நேரம், ஈர சட்டைய மாத்திக்கிற நேரம்னு எல்லாம் சேர்த்து ஒரு நேரத்துக்கு மேல ஆச்சு. மழை சுத்தமா விட்டுடுச்சு.ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணி போல கடைசியா எல்லாரும் மதுரவாயல் டோல் கேட்கிட்ட அசெம்பிள் ஆனோம். ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிட்டு கைகுலுக்கி பிரியாவிடை சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். V11 ஷோரூம் உடைய மேனேஜிங் பார்ட்னர்ஸ் பிரபுவும், ஹரியும் அவங்க கார்ல எங்ககூட வந்திருந்தாங்க. அவங்களும் கடைசிவரைக்கும் இருந்து எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு தான் கெளம்புனாங்க. நான் கே.கே நகர் வந்து சேரும்போது மணி 5.30. நிறைய களைப்போடவும் அட்டகாசமான அனுபவங்களோடவும் கிட்டத்தட்ட 1400+ கிலோ மீட்டர் பயணம் செஞ்சுட்டு வீட்டுக்கு வரும்போது மனசுல ஒரு இனம்புரியாத அமைதி. அடுத்த ட்ரிப்பை எதிர்ப்பார்த்தபடி வண்டிய ஏத்தி போட்டுட்டு வந்து படுக்கைல விழுந்தேன்.


அடுத்த ட்ரிப்ல சந்திப்போம்....!!

மேலும் படங்கள் இங்கே

திங்கள், 29 ஜூன், 2015

இசை சூழ் தனிமை - 3


இந்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ (அது ஒரு மொக்க படம்னாலும்) படத்துல வர பாட்டு எல்லாம் கேட்ருப்பீங்க. ’யாரோ இவள் யாரோ இவள்’ பாட்டு ஆரம்பிக்கும்போது கிஜ்மாஜாரே ராக்கோஓஓஒ ந்னு ஏதோ புரியாத பாஷைல ஒரு சின்ன ஹம்மிங் பிட் வரும்... நான் போன வாரம் ‘நீலாகாசம் பச்சக்கடல்.. சுவண்ணபூமி’ன்னு துல்கர் சல்மான் நடிச்ச ஒரு மலையாளப் படம் பாத்துட்டு இருந்தேன். கேரளாலேர்ந்து அவருடைய காதலியைத் தேடி நாகலாந்து வரைக்கும் போவாரு...! அப்போ கொல்கத்தாவுக்கு முன்னாடி ஒரு ஊர்ல இவங்க தங்கிருக்கும் போது ஒரு குழப்பமான மனநிலைல ஹீரோ வெளில வருவாரு. அங்க கேம்ப் ஃபயர் போட்டுட்டு ஒரு நாடோடிகள் கூட்டம்.. கஞ்சா புகைத்தபடி... ஏக்தாராவை (நயன்தாரா மாதிரி நடிகை அல்ல, இசைக்கருவி) வாசித்தபடி.. இந்த பாட்டை பாடுவார்கள்... ‘அமி ஹ்ரித் மாஜ்ஹாரே ராக்ஹ் போ.. ச்ஹேரே தெப்ஹோ னா’ அப்டின்னு...!அந்த பாட்டு தர அந்த உணர்வு இருக்கே..அத வார்த்தைல சொல்றது ரொம்பக் கஷ்டம்.

இந்த வீடியோவுல கரெக்டா 6.36 ல நான் சொன்ன அந்த பாட்டு வரும் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பாட்டு வரிய கூகிள் பண்ணதுல.. அது ஒரு வங்காள மொழி நாட்டுப்புறப் பாடல்னு தெரிஞ்சுது. அப்டியே இந்த மாதிரி பாடல்களைப் பாடித்திரிகிற ‘பவுல்’ (Baul) என்கிற ஒரு குழுவினர் பத்தியும் தெரிஞ்சுது. இந்த பவுல் துறவிகள் எல்லாம் கிட்டத்தட்ட சூஃபிகள் மாதிரி இசை+ஆன்மிகம்னு திரியுறவங்க. இந்து மதம், புத்த மதம், சூஃபியிஸம், எல்லாத்தோட தாக்கமும் இருந்தாலும் இவங்க குறிப்பிட்ட எந்த மதத்தோடவும் தங்களை அடையாளப் படுத்திக்கிறது இல்ல.அதுல ஒருத்தர், லக்கன் தாஸ் பவுல் (Lakhan das baul) அமெரிக்காவுல போய் பாடுன இதே பாட்டுடைய வெர்ஷனை மறக்காம கேட்டுப் பாருங்க.ரொம்ப ரொம்ப soulful singing..!! 

இந்த பவுல்களுடைய தோற்றம்னு பார்த்தா.. வங்கதேசமும்... இந்தியால மேற்கு வங்க மாநிலமும் தான். இன்னைக்கு உலகம் பூரா பரவி இருக்காங்க.இன்னொரு அழகான பவுல் பாடல் ஜும்ப்பா லஹிரியுடைய (Jhumpa lahiri) 'The Namesake’ நாவலுடைய திரை வடிவத்துல வர மோன் தோலே (Mon dole). அதையும் கேட்டுடுங்க.இதுவும் லக்கான் தாஸ் பாடுனது தான்.

பவுல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரை இங்கே:

இன்னும் கொஞ்சம் விரிவான ஆய்வுக் கட்டுரை:

அந்த 'ஹ்ரித் மஜாரே' பாடலுடைய வரிகள் இங்கே:

சனி, 2 மே, 2015

வால்ட் டிஸ்னியின் மேரி பாப்பின்ஸ்



Courtesy: http://tweethope.com/
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு புதிய படைப்பை உருவாக்கும் போது முழு சுதந்திரத்துடனும் தாங்கள் விரும்பியதை உயிர்ப்பிக்கின்ற உரிமையுடன் தான் செயல்படுகிறார்கள்.தான் வரைகின்ற கேன்வாஸில் இன்ன இடத்தில் இந்த பொருள் அல்லது இந்த நிறம் தான் இருக்கப் போகிறதென தீர்மானிப்பது அந்த ஓவியரின் விருப்பம்.அது அவரது உரிமையும் கூட.ஒரு சிறுகதை அல்லது நாவல் எழுதுகிற எழுத்தாளருக்கும்,ஒரு கவிஞனுக்கும்,ஒரு திரைப்படத்தை எழுதி இயக்குகிற இயக்குநருக்கும் கூட இது பொருந்தும்.

இதில் ஒரு படைப்பை வேறொடு படைப்பாளி எடுத்தாளும்போது நேர்கிற சிக்கல்கள் சாதாரணமானவையல்ல. உதாரணம் ஒரு நாவல் அல்லது சிறுகதை அல்லது நாடகம் திரைப்படமாக்கப் படும்போது வருகிற  கருத்து வேறுபாடுகள் அல்லது ஒரு மொழியில் எடுக்கப்படுகிற திரைப்படத்தை வேறு மொழியில் மறுவுருவாக்கம் செய்யும்போது நேர்கிற மோதல்கள் ஆகியவை.
என்னதான் மோதல்கள் இருந்தாலும் இறுதியாக ஒரு சிறந்த படைப்பின் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது ஒரு சிறந்த படைப்பின் சிதைந்த வடிவமும் கிடைக்கலாம்.

இப்போது...
Courtesy: http://schmoesknow.com/

கதை 1

வால்ட் டிஸ்னி... கனவுகளுக்கு உயிரூட்டி வண்ணம் தீட்டி உயிரோடு உலவவிட்ட creative monster/master. தன்னுடைய இரு செல்ல மகள்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு கதையினை குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார். அந்த கதை 'மேரி பாப்பின்ஸ்' என்கிற 1934ல் இருந்து வெளிவந்த கதை வரிசை. எழுதியவர் ஆஸ்த்ரேலியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் P.L.ட்ராவர்ஸ். (P.L.Travers) Strict and mean lady. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாத பெண்மணி. அவரிடம் பேசி சம்மதம் வாங்கி உரிமை பெற்றால்தான் படமாக எடுக்க முடியும். வால்ட் டிஸ்னியின் சமூக அந்தஸ்த்துக்கு இது சாதாரண விஷயமாக நமக்குத் தோணலாம். ஆனால் இதனை சாதிக்க அவருக்கு 20 வருடங்கள் பிடித்தன. 

20 வருட வற்புறுத்தலுக்குப் பின் ட்ராவர்ஸ் தனது படைப்பின் உரிமையைத் தர முன் வருகிறார் ஆனால் கீழ்கண்ட நிபந்தனைகளை விதிக்கிறார்.
1. 100,000 டாலர்கள் அட்வான்ஸ்
2. திரைக்கதையை படித்துப் பார்த்து ஒப்புதல் அளிக்கிற உரிமை
3. அனிமேஷன் கூடாது
4. கதையின் உணர்வுகளை நீர்த்துப்போகச் செய்கிற மாதிரியான இசை கூடாது.

இப்படியான கண்டிப்புகளுக்கிடையே ட்ராவர்ஸின் மேற்பார்வையிலேயே படம் உருவாகின்றது. டிஸ்னி ஒவ்வொரு சின்ன விஷயத்துக்காகவும் போராட வேண்டி வருகிறது. ஒரு வழியாக படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது.

Courtesy: https://getnutmegged.files.wordpress.com

கதை-2

Courtesy: http://cdn.screenrant.com/


1900 களின் தொடக்கம்...
வங்கி ஊழியர் காஃப் (Goff) அவரது மனைவி மற்றும் மகள்களோடு தனது சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்குக் குடி பெயர்கிறார். எப்போதும் கொஞ்சம் போதையிலும் நிறைய கனவுகளிலும் மிதக்கிறவன். தனது மகள்களை தேவதை போல... ராஜகுமாரி போல நடத்த விரும்புகிறவன். குறிப்பாக அவனுடைய மூத்த மகள் ஹெலன் மீது அதீத பாசம் கொண்டவன்.அவளும் தந்தையைப் போலவே கற்பனை உலகில் மிதப்பவள். காஃபின் மனைவிக்கு இவர்களின் இந்த போக்கு பிடிப்பதில்லை. இதற்கிடையில் காஃபின் வேலை பறிபோகிறது. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிறான். ஒரு நாள் இறந்தும் போகிறான்.குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகிறது. ஹெலனின் தாய் தற்கொலைக்கு முயன்று பின் தன் மனதை மாற்றிக்கொள்கிறாள். இந்நிலையில் ஹெலனின் தூரத்து உறவான ஒரு பெண் இவர்களை கவனித்துக் கொள்ளும் பொருட்டு வந்து சேர்கிறார். அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடியவளென ஹெலன் நம்புகிறாள். இந்த அத்தனை நிகழ்வுகளும் சிறுமி ஹெலன் மனதில் ஆழமாக பதிகின்றன.

இந்த இரண்டு கதைகளுக்கான காட்சிகளின் கோர்வையும் இரண்டுக்குமான தொடர்பும் தான் டாம் ஹாங்க்ஸ், காலின் ஃபேரல், எம்மா தாம்ஸன் ஆகியோர் நடித்த 'Saving Mr.Banks' திரைப்படம். ரொம்பவும் எளிமையான அழகான ஒரு feelgood திரைப்படம். ஒரு கதையை திரைப்படமாக்கியதைக் கூட எப்படி சுவாரஸ்யமான திரைப்படமாக்கலாமென்கிற டிஸ்னிகாரர்கள் திறமைக்கு இது ஒரு உதாரணம். நிச்சயம் பாருங்கள்.
   
மேலதிக triviaக்களுக்கு:

http://mentalfloss.com/article/51926/story-behind-saving-mr-banks-starring-tom-hanks-walt-disney
http://www.theguardian.com/books/2013/dec/07/pl-travers-saving-mr-banks-original-mary-poppins

வியாழன், 23 ஏப்ரல், 2015

புல்லட் டைரி - முதல் பயணம் - 1


முன்னறிவிப்பு: இது ஜனவரி மாசம் நான் போய்ட்டு வந்த என் முதல் ரோட் ட்ரிப் பத்தின போஸ்ட்டாக்கும்.



ஏற்கனவே வண்டி வாங்குன கதையப் பத்தி மாங்கு மாங்குன்னு எழுதியாச்சு.வாங்குன வண்டிய நாலு எடத்துக்கு எடுத்துட்டு போனா தான அதுக்கொரு மரியாத. அதனால வண்டில ஊர் சுத்துறதுக்காக ஒரு க்ரூப்பைத் தேடிக் கண்டுபிடிச்சேன். 'V11 Royal Enfield Riders Club' - வேலவன் மோட்டார்ஸ் கூட சேந்து இன்னபிற புல்லட் காதலர்கள் தொடங்குன க்ரூப் தான் இது. அந்த குழுவுடைய மூன்றாவது வருட நிறைவு நாள் ஜனவரி 26 அன்னைக்கு. அதே நாள் V11 குழுவுடைய Core member ஹரிக்கு மதுரைல கல்யாணம். இது எல்லாத்தையும் கனெக்ட் பண்ற மாதிரி ஒரு ரோட் ட்ரிப் ப்ளான் பண்ணாங்க, எங்க ரைடர்ஸ் க்ளப்போட வாட்சப் க்ரூப்ல அறிவிப்புகள் வெளியாச்சு. எப்படா ஊர் சுத்த சான்ஸ் கெடைக்கும்னு காத்திருந்த நான் உடனே வரேன்னு பெயர் குடுத்துட்டேன். ஆனா இது ஒரு long distance ride ங்குறதுனால Full faced helmet, Gloves, Knee Pad, Padded Jacket, ஆகிய பாதுகாப்பு கவசங்கள்லாம் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாங்க.



அதுக்கப்புறம் ஒன்னொன்னா வாங்க ஆரம்பிச்சேன்.ஒருவழியா அந்த பர்சேஸ் முடிஞ்சுது. எப்பவுமே இந்த மாதிரி ரோட் ட்ரிப்புகளுக்கான வழியை முன்னாடியே பேசி முடிவு பண்ணிடுவாங்க. வெறும் நேஷனல் ஹைவே மட்டும் இருந்தா போர் அடிச்சுடும்னு கொஞ்ச தூரம் ஸ்டேட் ஹைவேஸ்; அப்புறம் கொஞ்சம் கிராமங்கள் வழியா போற மாதிரி கரடுமுரடு சாலைகள்; ஒரு வேளை நாம போறது மலைவாச ஸ்தலமா இருந்தா மலை சாலைகள்; இப்டி எல்லாமே கலந்துகட்டி இருக்குற மாதிரியா பாதையை தான் தேர்ந்தெடுப்பாங்க. போகும் பாதை எப்பவுமே தூரமானதா கொஞ்சம் சுத்துவழியா தான் இருக்கும்.ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது எல்லாருக்குமே ரொம்ப களைப்பா இருக்கும்ங்குறதுனால நேர் வழியா, ஒரே நேஷனல் ஹைவேல வர மாதிரி இருக்கும்.


இதையெல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. 23ஆம் தேதி காலைல 5.00 மணிக்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அதுக்கப்புறம் அப்படியே போரூர் சிக்னல் வழியா பூந்தமல்லி பைப்பாஸ பிடிச்சு போறதுதான் ப்ளான்.அங்க tollgate பக்கத்துல சின்னதா ஒரு gathering.அவ்ளோதான்.

இந்த இடத்துல இன்னொரு தகவல்.இந்த மாதிரி பைக் ட்ரிப்புல மொத்த குழுவையும் வழிநடத்திட்டு முன்னாடி போறவங்கள 'Lead'னு சொல்லுவோம்.எந்த வழியா போறோம்.. எங்க ப்ரேக் எடுக்குறோம்.. எந்த ஸ்பீட்ல போகனும்னு எல்லாத்தையும் லீட் தான் மத்த ரைடர்ஸ்கூட பேசி முடிவு பண்ணுவாங்க.பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் தான் லீடா இருப்பாங்க. அதே மாதிரி எல்லா ரைடர்ஸையும் பத்திரமா அனுப்பி வெச்சுட்டு பின்னாடி கடைசியா வரவங்களுக்கு 'Sweeper'னு பேரு. இந்த ஸ்வீப்பரா வரவங்க பெரும்பாலும் மெக்கானிக்கா தான் இருப்பாங்க. அவங்கிட்ட கொஞ்சம் ஸ்பேர்ஸ், இஞ்சின் ஆயில், பெட்ரோல் கொஞ்சம், எல்லாமே இருக்கும். இது ஏதும் வண்டி breakdown ஆனா அதுக்கான safety backup.


இப்போ  back to எங்க ட்ரிப். என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு வண்டி.ராஜா தான் இந்த ட்ரிப்புக்கு லீட். ஸ்வீப்பர் வேலவன் மோட்டார்ஸ் டெக்னீஷியன் கார்த்திக்.வெயிலுக்கு முன்னால எவ்ளோ தூரம் கவர் பண்ண முடியுமோ பண்ணிடலாம்னு சொன்னாங்க. தட தடன்னு கெளம்புனோம். அதுக்கப்புறம் அங்கங்க டீ ப்ரேக், ரீஸஸ் ப்ரேக்லாம் எடுத்தாலும் காலை உணவுக்கு திருவண்ணாமலை போய் சேர்ந்தாச்சு.9.00 மணி வாக்குல போய் சேர்ந்தாச்சு.அது முடிஞ்சு 11.00 மணி ஆகும்போது கள்ளக்குறிச்சி. டீ குடிக்க நிறுத்துனோம். செம்ம மழை ஆரம்பிச்சுது. பின்னாடி கட்டியிருந்த பேகுக்கு ஒரு பாலித்தீன் கவரப்போட்டு கவர் பண்ணிட்டு மழை விட்டதும் வண்டிய கெளப்புனோம். மதியம் சாப்பாட்டுக்கு சேலம் செல்வி மெஸ் போயிட்றதா திட்டம். வெற்றிகரமா 2.00 மணி கிட்ட போய் சேர்ந்தோம். சாப்ட்டு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையை புடிச்சு ராசிபுரம் திருச்செங்கோடு வழியா வத்தலகுண்டு போய் சேர்ரதுதான் தான் ப்ளான். அப்பவே மழை பெய்ய ஆரம்பிச்சு எங்க வேகம் குறைஞ்சிடுச்சு.நடுவுல நேஷனல் ஹைவேலேர்ந்து பிரிஞ்சு ஸ்டேட் ஹைவேஸ்ல போக வேண்டிய சூழ்நிலை. Opposite traffic வேற கடுப்பேத்துது.இத்தனைக்கும் நடுவுல ஒரு வழிய 8.00 மணிக்கு கரெக்ட்டா வத்தலகுண்டு வந்து சேரும்போது என் க்ளட்ச் கேபிள் கட் ஆயிடுச்சு.

அப்புறம் அத மாத்திகிட்டு அங்கிருந்து கெளம்பும்போது மணி 9.00க்கு மேல.இன்னும் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் மலைப் பாதைல வண்டியோட்டனும். எனக்கு நார்மல் ரோடே பயங்காட்டும். Ghat ரோடு இன்னும் பிரமாதம். Two way traffic வேற. சக ரைடர்கள் குடுத்த தைரியத்துல மலை ஏற ஆரம்பிச்சேன். 40-50 லயே வண்டிய உருட்டிட்டுப் போய் ஒருவழியா 11.00 மணிக்கு நாங்க புக் பண்ணிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.அடுத்த நாள் முழுக்கு ரெஸ்ட் எடுக்குறது தான் திட்டம்.ஆனாலும் பகல் 11.00 மணிக்கு மேல போரடிக்க ஆரம்பிச்சதுனால நாங்க நாலு பேர் மட்டும் லோக்கல் sight seeingக்கு கெளம்பி போனோம்.



 ஊர சுத்தி முடிச்சு சாயந்திரம் வந்து ரூமடைஞ்சாச்சு.அடுத்த நாள் காலைல மதுரை கிளம்புறதா முடிவாச்சு.ஆனா வழக்கமான பாதை இல்லாம வேற வழியில போலாம்னு உள்ளூர் மக்கள் கிட்ட  விசாரிச்சு தாண்டிக்குடி வழியா கீழ இறங்க முடிவாச்சு.








வழக்கமான ghat roads மாதிரி இல்லாம இது கொஞ்சம் கரடு முரடான ரோடு.ஒவ்வொரு வளைவும் சும்மா 180 டிகிரிக்கு நம்மள சுத்தியடிக்கும்.ரொம்பக்  குறுகலான சாலை.ஒரு பக்கம் பகீர் பள்ளத்தாக்கு. கொஞ்ச தூரம் போன இடது பக்கம் ஏதாவது நீர்நிலை இருக்கும்.திடீர்னு ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு இருக்கும்.இப்படியாக mother nature kept surprising us with her fantastic creations. 1.00 மணி ஆகும்போது ஒட்டன்சத்திரம் வந்து சேந்தோம்.அம்மா மெஸ்ல மத்தியான சாப்பாடு.அடுத்தது வேடசந்தூர், தாடிக்கொம்பு, பேகம்பூர் வழியா மதுரைக்கு போய் சேர்றதுன்னு முடிவாச்சு.



சாயந்திரம் இருட்டுறதுக்கு முன்னாடியே மதுரைக்கு போய் சேந்தாச்சு. அப்புறம் கல்யாண வீட்டுகாரங்க புக் பண்ணி வெச்சிருந்த சர்வீஸ்டு அப்பார்ட்மென்ட்க்கு போய்  refresh ஆய்ட்டு கல்யாண reception க்கு போய்ட்டு வந்தோம்.





அடுத்த நாள் காலைல கல்யாணத்த அட்டெண்ட் பண்னிட்டு உடனே சென்னை கிளம்பறதா இருந்ததனால நான் riding gears எல்லாம் போட்டுட்டே தான் மேடையேறுனேன். ஒரு வழியா சாப்பாடெல்லாம் முடிஞ்சப்புறம் NH45 பிடிச்சோம்.அங்கங்க re-fuel பண்ண வண்டிய நிறுத்துனதோட சரி.100 கிலோமீட்டருக்கு மேல தான் ப்ரேக் எல்லாம். கடைசியா சாயந்திரம் 99km கடைல காஃபிய குடிச்சுட்டு அடுத்த ஸ்டாப் சென்னைன்னு சொல்லிகிட்டு பிரிஞ்சோம். சிட்டி கிட்ட வந்தப்புறம் மறைமலை நகர்ல ஒரு மெகா நற்செய்திக் கூட்ட மாநாடு. செம்ம ட்ராஃபிக் ஜாம். எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருந்த எங்களுக்கெல்லாம் செம்ம கடுப்பு. ரோட்ட விட்டு சைட்ல வண்டிய எறக்கி ஓட்ட ஆரம்பிச்சோம். அப்டி இப்டின்னு கத்திப்பாரா கிட்ட வந்து சேரும்போது நைட்டு 10.00 மணி ஆயிடுச்சு.வெற்றிகரமா என்னுடைய முதல் லாங் ரைட் முடிச்சுட்டு வீட்டுக்கு  வந்து சேந்தேன்.

ஒட்டுமொத்தமாவே இது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நெடுந்தூர பயணம் நிஜம்மாவே இவ்வளவு விஷ்யங்கள் கத்துக் கொடுக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது.வெவ்வேற வானிலைல... வேற வேற மாதிரி சாலைகள்ல.. வித்தியாசமான சூழல்ல எல்லாம் பயணப்பட்டு கடைசியா நாம சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேரும்போது ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கையையே வாழ்ந்த மாதிரி உணருவோம். பயணத்தைத் தவிர வேறெதுவும் இந்த உணர்வைத் தருமான்னு தெரியல.
- தொடரும்


Related Posts Plugin for WordPress, Blogger...