நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இசை சூழ் தனிமை - Playlist #1

Courtesy: http://www.hdwallpapers-3d.com

திரையிசைப் பாடல்களல்லாத பிற ஆல்பங்களைக் கேட்கிற ட்ரெண்ட் காலங்காலமாக நம்மிடையே இருந்து தான் வந்திருக்கின்றது. ஆங்கிலமோ, ஹிந்தியோ, கஸல் பாடல்களோ...அல்லது வேறேதும் இசைக்குழுக்களின் தனி ஆல்பங்களோ...இசைக்கோவைகளோ...ஏதோவொன்று மக்களை வந்தடைந்து அவர்களின் மனதைக் கவர்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன ஒன்று.. முன்பு கேசட்களின் காலத்தில் இந்த தேடலும் அடைதலும் கொஞ்சம் கடினம்.90களுக்குப் பின்னான சி.டி யுகத்தில் பெருநகரங்களில் இந்த மாதிரி தனி ஆல்பங்களைத் தேடிப்பிடிப்பதென்பது அத்தனை கடினமாகவெல்லாம் இல்லை.இன்றைக்கு உலகின் எந்த மூலையில் இருக்கிற இசைக்குழுக்களின் பாடல்களைக் கூட யூட்யூபிலேயே கேட்க முடியும்.

சரி...சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.

நண்பர்கள் மூலமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ அல்லது வேறெந்த வகையிலோ எனக்குப் பரிச்சயமாகி மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட பாடல்களைப் பற்றி இந்த மாதிரி பட்டியல் போட்டு பகிரலாம் என்றிருக்கின்றேன்.என்னுடைய மனநிலைக்கு தகுந்தாற்போல ஏதோவொரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுக் கொண்டிருத்தல் ஒரு ரசனையான அனுபவம்.அதை உங்களுக்கும் கடத்திவிட முடியுமென்று நம்புகின்றேன்.

முதலில்

1. 2008ம் வருடம் சூப்பர் சிங்கரின் இரண்டாவது எடிஷன்.ரவி, ரேணு, அஜீஷ், பிரசன்னா,விஜய்  என எல்லாருமே அட்டகாசமான பாடகர்கள்.போட்டியின் இறுதிக்கட்டங்களில் ஒரு மெட்லி ரவுண்ட்.ஏதாவதொரு ராகத்தை எடுத்துக் கொண்டு அந்த ராகத்தில் அமைந்த வெவ்வேறு பாடல்களை இணைத்துப் பாடவேண்டும்.என்னுடைய favorite பாடகர் ரவி தேர்ந்தெடுத்தது சாருகேசி ராகம். ஒரு ஆலாபனையில் தொடங்கிய அவர் முதலில் பாடியது ‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல்.அதிலிருந்து ’ஆடல் கலையே தேவன் தந்தது’.இடையில் ஒரு ஹிந்தி கஸல் பாடலின் சரணம்.இறுதியாக ‘உதயா உதயா’ பாடலில் முடித்தார்.அட்டகாசமான ஒரு அனுபவம்.இந்த கலவையில் என்னைக் கவர்ந்ததென்னவோ அந்த ஹிந்தி கஸல் தான்.உடனே அவர் பாடிய வார்த்தைகளை நான் புரிந்து கொண்டவரையில்  ஆங்கிலத்தில் டைப் செய்து கூகிளில் தேடத் தொடங்கினேன். (jiz ta rab jaaye) ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் அந்த ஒரிஜினல் பாடலைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை,இந்தத் தேடல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் போய்க்கொண்டிருந்தது.என்ன பாடல் கேட்டாலும் என்ன வேலை செய்தாலும் உள்ளுக்குள் இது ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு யூட்யூப் கமென்டிலேயே தான் என் தேடலுக்கான விடை கிடைத்தது.


அந்த பாடல் ஹரிஹரன் அவர்களுடைய ’ஹாஸிர்’ (Hazir) கஸல் ஆல்பத்தில் வந்த 'ஷெஹர் தர் ஷெஹர்' (shehar dar shahar).ஹரிஹரனுடைய குரலே பட்டையைக் கிளப்பும்.இதில் உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் தபேலாவும் சேர்ந்தால் the song goes to an entirely different level.எத்தனை முறை கேட்டிருப்பேனென்றே நினைவிலில்லை.So addictive...!தவறாமல் கேளுங்கள்


2.அடுத்ததாக கைலாஷ் கெர் (Kailash Kher).தமிழில் இவருடைய குரலை நிறைய கேட்டிருக்கலாம் (வெயிலோடு விளையாடி, ரங்கு ரங்கம்மா - பீமா, ஒரே ஒரு - அபியும் நானும்..இன்னும் ஏராளமான பாடல்கள்).வித்தியாசமான, Folk பாடல்களுக்கான பிரத்தியேகமான ஹைபிட்ச் குரல்.கைலாஷ் கெரின் அறிமுகம் M Tvயில் அடிக்கடி ஒளிபரப்பான Tauba Tauba பாடலின் மூலம்தான்.ஹிந்தி பாடல்களில் கொஞ்சம் ஆர்வம் வந்த பின்பு என்னுடைய வழக்கமான ஆ.கோ வினால் இவர் பாடிய எல்லா பாடல்களையும் தேடித்தேடிக் கேட்க ஆரம்பித்தேன்.(ஹிந்தி டாப்-10 திரைப்பாடல்களை கடைசியில் சொல்கிறேன்) அப்படி எதேச்சையாக யூட்யூபில் பார்த்தது தான் 'Tu kya Jaane'.

வழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் இந்த பாடல் ஒரு விஷுவல் கவிதை.எனக்கு ஹிந்தி தெரியாததால் இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை கூகிளில் தேடிப் பி(ப)டித்துத் தெரிந்து கொண்டேன்.
tu kya jaane
tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane
mere jee ki baat tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane

bhooli nahi abhi chandni raatein
bhooli nahi teri pyaari baatein
tujh bin ye din nahi bhaate
kya batayen hum

wohi khile khile sapne salone
bas gaye hon jo kone kone
ban gaye jazbaat khilone
dil tadpe par tu kya jaane
what do you know
what do you know
you are without heart and feelings, god knows..
what do you know about what's happening in my heart
you are without heart and feelings, god knows..

the moonlit nights aren't yet forgotten,
your lovely talks aren't yet forgotten,
without you I don't like these days,
what should I tell..

those blossoming beautiful dreams,
which lived in every corner,
the feelings became toys,
the heart is in agony but what do you know
செம்ம லிரிக்ஸ்... செம்ம ஃபீலிங்.. மொத்த பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே

அப்புறம் M.Tv யின் கோக் ஸ்டூடியோ நிகழ்ச்சியில் வந்த இந்த பாடல்.அட்டகாசமான மிக்ஸ்.பாடகி தஞ்சாவூர் சின்னப்பொண்ணு கைலாஷ் கெர் கூட சேர்ந்து பட்டையை கிளப்பியிருப்பார்,.செம்ம  கொண்டாட்டமான பாட்டு.இதையும் கேட்டுடுங்க.




3.அடுத்தது 'Da Saz' என்கிற தில்லியைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவின் பாடல்.இந்த இசைக்குழு பற்றியும் இவர்களின் ’Jet Lag' ஆல்பம் பற்றியும் தெரிந்துகொண்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘கலகம்.. காதல்..இசை..’ புத்தகம் வாயிலாக.வழக்கம் போல கூகிள் தேடல் தான்.பாடல் வரிகள் நேரடியான ஹிந்தி அல்ல.பஞ்சாபி என நினைக்கிறேன்.ரொம்ப அர்த்தமுள்ள ஆழமான வரிகள்.அமைதியான சூழலில் கண்களை மூடி கேட்டால் தியானம் செய்த உணர்வு.Please..don't miss it.An awesome sufi rendition...!! 'Hindu'வில் வெளிவந்த Da Saz குழுவின் பேட்டியை படிக்க இங்கு க்ளிக்கவும்.


(எவ்வளவு தேடியும் வரிகளோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்போ கிடைக்கவில்லை.)

இந்தப் பட்டியல் தொடரும் (நேரம் கிடைக்கும் போது)...

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

6174 - க.சுதாகர் - கனிதம், லெமூரியா, க்ரிஸ்டல்லோக்ராஃபி மற்றும் பல

6174 is known as Kaprekar's constant after the Indian mathematician D. R. Kaprekar. This number is notable for the following property:
  1. Take any four-digit number, using at least two different digits. (Leading zeros are allowed.)
  2. Arrange the digits in descending and then in ascending order to get two four-digit numbers, adding leading zeros if necessary.
  3. Subtract the smaller number from the bigger number.
  4. Go back to step 2.
The above process, known as Kaprekar's routine, will always reach its fixed point, 6174, in at most 7 iterations. Once 6174 is reached, the process will continue yielding 7641 – 1467 = 6174
-Wikipedia

சாதாரணமான வாழ்வியல் அனுபவங்களை வைத்து எழுதப்படுகின்ற புதினங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வெவ்வேறு கதைக்களங்களில் எழுதப்படுகிற புனைவுகளில் எனக்கு எப்போதுமே தனி ஆர்வமுண்டு.அதுவும் அறிவியல் புனைவென்றால் அது ரொம்பவே ஸ்பெஷல்.அந்த வகையில் சென்ற புத்தகக் கண்காட்சியில் நிறைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சுதாகர் அவ்ரகளின் 6174 நாவலை வாங்கினேன்.

பொத்தாம் பொதுவாக Science fiction என்று சொல்லவிடமுடியாது. கனிதம், Geometry, Crystallography, Anthropology, கோலங்கள்,  அப்புறம் சங்கத் தமிழ் வெண்பாக்கள் அத்தனையும் உண்டு.
உள்ளடக்கத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரு விருந்து.

நிகழ்வு 1: கதை லெமூரியர்களின் காலத்தில் துவங்குகின்றது.அவர்களின் சக்தி பீடமாகிய ஒரு பிரமிட் (Transformers திரைப்படத்தில் காட்டப்படுகிற Tesseract மாதிரி ) பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் தோன்றப்போகும் மனிதர்களின் கைகளில் கிடைத்தால் உலகில் பேரழிவு நிகழுமென அதை அழித்துவிட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

நிகழ்வு 2: கொரிய, ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுபோகின்றன.இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்புகின்றது.நாடுகளுக்கிடையே போர்மூளும் அபாயத்தையும் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது.

நிகழ்வு 3: பூமியின் புவிவட்டப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு மிகப்பெரிய விண் கற்கள் பூமியை எந்நேரமும் தாக்கிவிடக்கூடிய ஆபத்தில் விண்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன.

நிகழ்வு 4: சர்வதேச தீவிரவாத கும்பல் ஒன்று உலகத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தேடலோடு வெவ்வேறு நாடுகளில் முனைப்போடு இயங்கத்தொடங்குகின்றனர்.

நிகழ்வு 5:இஸ்ரோவின் விஞ்ஞானியான சடகோபன் பல வருடங்களுக்கு முன்பு தன் மாணவர்களாக இருந்த ஜானகி, ஆனந்த் இருவரையும் ஒரு முக்கியமான விஷயமாக தொடர்பு கொண்டு வரவழைக்கின்றார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தொடங்குகின்ற இவர்களின் தேடல் பயணம் ஒடிஷா, மணிப்பூர், மியான்மர், தாய்லாந்து என நீள்கின்றது.

இந்த நிகழ்வுகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி ஒரு 400 பக்க நாவல் என யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.அதிலும் ஏகப்பட்ட தகவல்கள்.முன்பே சொன்னது போல வடிவக் கனிதத்தில் தொடங்கி...கோலங்கள் தொடர்பான தகவல்கள்.. சீலகந்த் மீன்..யமுனையாற்றின் டால்ஃபின்கள்.. பர்மாவின் பகோடா கோவில்கள்.. தமிழர்களின் வரலாறு... எண் கனித புதிர் வெண்பாக்கள் வரை அத்தனை தகவல்கள்.. அத்தனை hard work.

எனக்கு கணக்கே ஆகாது.நானே ஏகப்பட்ட கனிதப் புதிர்களையும் விநோத எண்களையும் கூகிள் பண்ண வேண்டியதாகிவிட்டது.அதுமட்டுமல்லாமல் கதையில் வருகிற தகவல்கள் வெவ்வேறு துறை சார்ந்த துணுக்குகள் எல்லாவற்றையும் கூகிளில் தேடி பின்னணியைத் தெரிந்து கொண்டேன்.புத்தகத்தின் முடிவில் சுதாகர் அவர்கள் தந்திருக்கின்ற referenceகளைப் பார்த்தாலே தகவல்களின் துல்லியத்தன்மை தெரிகின்றது

அவருக்கு சப்ஜெக்டின் மேல் இருக்கிற காதலாலோ என்னவோ தெரியவில்லை நாவல் முக்கியக்கட்டத்தை நெருங்க நெருங்க கதை சொல்லும் நடை ஒரு அறிவியல் விரிவுரையாளரை ஒத்ததாக மாறிவிடுகின்றது.இது என் போன்ற கனிதம் பிடிக்காத பார்ட்டிகளுக்கு கொஞ்சம் வேகத்தடை போட்டது போலாகலாம்.வடிவக் கனித விளக்கங்களை பல முறை படித்த பிறகே புரிந்து கொள்ள முடிந்தது.அவை கொஞ்சமே கொஞ்சம் எளிமையாகவும்..கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்காத வகையிலும் இருந்திருக்கலாமென்பதே என் ஒரே ஆதங்கம்.

மற்றபடி...

சொன்னால் கொஞ்சம் மிகையாகவோ க்ளிஷேவாகவோ இருக்கலாம்.ஆனாலும்... தமிழின் டான் ப்ரவுன் என்று சொல்லக்கூடிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கின்றார் சுதாகர் அவர்கள். My hearty congrats sir...!! Eagerly looking forward for your next novel..!!


திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஐ.டி - வேலையுள்ள பட்டதாரி



இன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப முடிச்சு வெளில வராங்க.அதுல எத்தன பேருக்கு வேல கெடைக்குது...?? பெரும்பாலானவர்கள் சைபர் கூலிகள் தான்.அடிமைத்தனமா ஐ.டி யுடைய மேல்மட்ட வேலைகள்ள சேந்துக்குறாங்க…எதையும் புதுசா உருவாக்கல…” அப்டி இப்டின்னு பேத்திகிட்டே.. ச்சை.. பேசிகிட்டே போனாரு.

 இப்பொ ட்ரெண்ட் இதான் போல.பொறியியல் படிச்சு முடிச்சவன் தன்னுடைய core (mechanical/electrical/civil) துறைல வேலைக்குச் சேர்ந்தான்னா ஆரம்பகால சம்பளம் அவ்வளவு சிலாக்கியமில்ல.அடிமட்ட ட்ரெய்னியா வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வேலையக் கத்துக்கிட்டு மேல வர்ரதுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகலாம்.எடுத்த உடனே காசு பார்க்க முடியாது. பெத்தவங்களும் அத விரும்புரதில்ல... அவங்களுக்குத் தேவையானதெல்லாம் ready cash..US Visa..கல்யாணம்… கார்..வீடு.. எட்செட்ரா. Peer pressure வேற. So பசங்க ஐ.டி ய தேர்ந்தெடுக்குறாங்க.அதிக உடல் உழைப்பு தேவையில்ல (ஆனா அதீத மன உளைச்சல் பைத்தியம் பிடிக்க வெச்சுடும்) முதல் நிலையிலேயே ஓரளவு convincingஆன சம்பளம் (12000-14000னு வெச்சுக்கோங்க).அப்புறம் அந்த sophistication அவங்கள வெளில வர விடாது.And it goes on...!!

இப்போ BPO க்கு வரேன்.இங்க கதையே வேற.குறைந்த பட்சம் 7000-8000ல தொடங்கி திறமைக்கும்/அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி  படிப்படியா சம்பள உயர்வு கிடைக்கும்.(ரொம்ப யோசிக்காதீங்க..நாலு வருஷம் கழிச்சு 15000 சம்பாதிச்சா பெருசு) ஐ.டி கம்பெனி இண்ட்ர்வ்யூல கழிச்சு கட்டுனவங்களும்… குறைவான சதவீதம் மதிப்பெண் வாங்குனவங்களும்...அரியர்ல Man of the series வாங்குனவங்களும்… ஊர்ப்பக்கத்துலேர்ந்து இங்க வர்ர B.Sc\B.Com\B.C.A பட்டதாரிகளும் தான்.இவங்களுக்கெல்லாம் பெரும்பாலும் வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும்.ஏதோ ஒரு நிர்ப்பந்தமிருக்கும். (டைம் பாஸ்க்கு வேலைக்கு வர்ர பணக்கார சொட்டவாளக்குட்டிகள் விதிவிலக்கு) ஏன் BPOல ஜாயின் பண்ணேன்னு கேட்டா ஐ.டி ல கெடைக்கல அதான் communication இம்ப்ரூவ் பண்ணிக்கலாமேன்னு சேர்ந்தேன்னு சொல்லுவாங்க. தொடர்ச்சியான நைட் ஷிஃப்ட்...இடத்த விட்டு நகர முடியாத அளவு பணிச்சுமை...செய்ற வேலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊதியம்னு..எல்லாம் சேர்ந்து அவங்க உடல் இயக்கத்தையே தலைகீழா மாத்திப் போட்டுடும்.ஒரு மூனு நாலு வருஷம் BPO ல வேலை செஞ்சவங்கள்ட்ட பேசுனீங்கன்னா அவங்களோட அதிபட்ச கோரிக்கை “Day shiftல எதாவது ப்ராஜெக்ட் கெடைச்சா பரவால்ல பாஸுங்குறது தான்.

எதுவுமே செய்யாம இருக்குறதுக்கு எதாவது ஒரு வேலை செய்வோமேங்குறது தான் பெரும்பாலான பசங்களோட எண்ணம். அதுக்கும் மேல, வேற பெரிய கனவுகளோட... ஐடியாக்களோட..சொந்தமா எதாவது தொழில் பண்ணனும்..மார்கெட்ல இல்லாதத புதுசா யோசிக்கனும்னு..யாரவது திரிஞ்சாங்கன்னா இன்னும் சுத்தம்..அவங்க வீடு சுற்றம் தொடங்கி போற வர்ரவனெல்லாம் அவனுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.”Practicalஆ யோசி..இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயஙகள்னு பேசி அவனோ கனவெல்லாத்தையும் போட்டு நசுக்கிட வேண்டியது.அப்புறம் அவனா தக்கி முக்கி எதையாவது பண்ணி மேல வர்ரதுக்கு முயற்சி செஞ்சு..சறுக்கிட்டான்னா…
அவ்ளோதான்..மொத்தமா வந்துடுவாங்க..”பாத்தியா..நான் அப்பவே சொன்னேன்ல..உனக்கேன் இந்த வேண்டாத வேலைன்னு. Entrepreneurship ங்குறது இந்தியாவுல ஒரு சபிக்கப்பட்ட விஷயம். You can never create entrepreneurs just by graduating them with an MBA from premier institutions.

இதுவரைக்கும் சொன்ன எல்லா விஷயமும் அபார திறமையும் அறிவும் உள்ள, அதுக்கேத்த வசதி வாய்ப்பும், தரமான கல்வியும் கிடைக்குற இளைஞர்களுக்கு இல்ல. எல்லாத்துலயுமே mediocreஆ இருக்குற தன்னுடைய survivalக்காக ஓடிகிட்டே இருக்குற பெரும்பான்மையான இளைஞர்களுக்கானது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள்ள வேல பாக்குற எல்லாரும் என்னமோ திட்டம்போட்டு அமெரிக்காவுக்கும் இன்னபிற வெளிநாடுகளுக்கும் அடிமை வேல பாக்கப் போன மாதிரியும்..லட்ச லட்மா பணத்துல குளிக்கிற மாதிரியும் ஒரு பிம்பத்த, சினிமாவும்..பிற ஊடகங்களும் உருவாக்கி வெச்சுருக்கு.மக்களோட பொது புத்தியிலயும் அது பதிஞ்சு போச்சு.பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவத் தொறந்து விட்ட அரசை எதிர்த்து யாரும் மூச்சு கூட விட மாட்டாங்க.சரியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்காம..இருக்குற வேலைகளுக்குத் தகுதியான பட்டதாரிகளையும் உருவாக்காம… அவனவன் சொந்தக் கஷ்டத்துக்கு ஏதோ கெடைச்ச வேலைக்குப் போறவனப் புடிச்சு நீ அடிமை..நீ கூலி… அது இதுன்னு வறுத்தெடுக்குறது எந்த வகைல நியாயம் ??? 


ஞாயிறு, 6 ஜூலை, 2014

Green Street Hooligans (2005) - Football வெறியர்கள்




                   மக்களுக்கு நாடி நரம்பெல்லாம் ஃபுட் பால் வெறி ஏறிப்போயிருக்க இந்த சீஸன்ல ஒரு ஃபுட்பால் படம் பத்தி எழுதலாம்னு நெனச்சேன்.இது நேரடியான கால் பந்தாட்டம் பற்றிய படமா இல்லன்னாலும் விளையாட்டுக்கு பின்னாடி இருக்குற மனுஷங்கள பத்தின கதை தான்.ஏதாவதொரு விளையாட்டு எல்லா நாட்லயும் அந்தந்த நாட்டுடைய கலாச்சாரத்துல ஒரு பகுதியா காலம் காலமா இருந்துட்டு இருக்கு.அமெரிக்காவுக்கு NFL,Baseball..இந்தியாவுக்கு க்ரிக்கெட்... இங்கிலாந்துக்கு ஃபுட்பால், க்ரிக்கெட்...!! இப்படி

பொதுவா விளையாட்டுப் போட்டிங்குறது அதுல விளையாடற வீரர்களுக்கு (அவங்களுடைய sportsmanshipஐ பொருத்து) just another game-ஆ இருக்கலாம். ஆனா ரசிகர்களுக்கு இது அவங்க ego சம்பந்தப்பட்ட விஷயம்.தன்னுடைய அணி தான் ஜெயிக்கனும்னு நெனைக்குற ஒரு தீவிரமான போட்டி மனப்பான்மை இருக்கும்.சில சமயம் இந்த தீவிரத்தன்மை, தனி மனிதர்களின் மன வன்மத்துக்கும் வன்முறைக்கும் காரணமா அமைஞ்சுடும்.நம்ம நாட்ல அதிக viewership இருக்குறது க்ரிக்கெட்டுக்கு தான்.இந்திய ரசிகர்களும் IPL மாதிரியான போட்டிகளின் போது social networking sitesல மற்ற மாநில ரசிகர்களோட நாயா பேயா அடிச்சிகிட்டாலும் நெஜத்துல அவங்களுக்குள்ள அடிச்சிகிற சம்பவங்கள் ரொம்ப குறைவு (இல்லவே இல்லன்னு கூட சொல்லலாம்).அப்படியே வன்முறைல இறங்குனாலும் வீரர்கள் வீட்ல கல் எறியிறது... கொடும்பாவி கொளுத்துறதுன்னு public nuisance தான்.

ஆனா இங்கிலாந்துல கதையே வேற.அங்க Football அவங்க ரத்ததுல கலந்த விஷயம்.கால்பந்தாட்டத்துக்கு கிட்டத்தட்ட 150 வருஷ வரலாறு உண்டு.19ஆம் நூற்றாண்டுல தொடங்கி படிப்படியா பரிணாம வளர்ச்சி அடைஞ்சு இன்னைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்காண ரசிகர்களால விளையாடப்படுகிற பார்க்கப்படுகிற ஒரு விளையாட்டு.209 நாடுகள் அதிகாரப்பூர்வமா FIFAனு சொல்லப்படுற பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புல உறுப்பினர்களா இருக்காங்க. இங்கிலாந்தைப் பொருத்தவரைக்கும் ஒரு ஊருக்கு ரெண்டு டீம்னு வெச்சா கூட கிட்டத்தட்ட 7000 ஃபுட்பால் க்ளப்புகள் பலதரப்பட்ட டிவிஷன்கள் கீழ வரும்.

ஓவ்வொரு ஃபுட்பால் க்ளப்புக்கும் ஒரு ரசிகர் படையே இருக்கும்.Manchester United மாதிரி பெரிய க்ளப்பா இருந்தாலும் சரி...ஏதோவொரு சின்ன ஊரைச் சேர்ந்த க்ளப்பா இருந்தாலும் சரி.கண்டிப்பா இந்த Fan following இருக்கும்.இவங்க ஓவ்வொரு க்ரூப்புக்கும் ஒரு பேரு இருக்கும்..தனி ட்ரெஸ் கோட் இருக்கும்..ஏதாவ்து ஒரு தீம் சாங் வெச்சுப்பாங்க.தங்களை gangனோ gangsters னோ சொல்றது இவங்களுக்கு பிடிக்காது.தங்களுடைய க்ருப்ப 'Firm'னு சொல்லிப்பாங்க.இந்த ரசிகவெறியர்களோட வேலையே அவங்க டீம் மேட்ச் எங்க நடந்தாலும் அந்த க்ரவுண்டுக்கு போய் அவங்க டீமுக்கு சப்போர்ட் பண்றது தான்.அத மட்டும் பண்ணா பரவால்லயே.. எதிர் டீம் ரசிகர் படையோட சண்ட போடுறதுதான் இவங்களுடைய முக்கிய அஜெண்டா.சாதாரணமான சண்டை இல்ல...கலவரம். இந்த மாதிரி கால்பந்தாட்ட வெறியர்கள் விளையாட்டோட பேர்ல பண்ற ரவுடியிஸத்துக்கு தான் Hooliganismனு பேரு.


இந்த படம் West Ham United மற்றும் Millwall ஆகிய ரெண்டு டீம்களின் Firmsக்கு (Green Street Elites, Millwall Bushwackers)  இடையேயான (நிஜமான) பகைமையை அடிப்படையாக கொண்ட கதைதான்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல ஜர்னலிஸம் படிக்கிற Matt சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா expel ஆயிட்றான்.அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்னு லண்டன்ல இருக்க அவங்க அக்கா ஷானன் வீட்டுக்கு கெளம்பிப் போறான்.அவங்க அக்கா கிட்ட விஷயத்த சொல்லி அங்க தங்க வேண்டிய நிர்பந்தத்தையும் சொல்றான். அக்காவுடைய கணவன் Steve ,Mattஐ தன் தம்பி Peteகூட ஃபுட்பால் மேட்ச் பாக்க அனுப்பி வைக்குறான். Pete கொஞ்சம் ரவுடிப்பையன்...ஆரம்பத்துல கொஞ்சம் பிகு பண்ணாலும் சரி போனா போகுதுன்னு Mattஅ கூட கூட்டிட்டு போறான்.அவனோட நண்பர்கள் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்குறான்.ஆரம்பத்துல அவன் ஒரு அமெரிக்கன்ங்குறதால அதிகமா ஒட்டாத Pete உடைய நண்பர்கள் கொஞ்ச நாள் போகப்போக நல்ல பழக ஆரம்பிக்குறாங்க. Bovverங்குற ஒரே ஒருத்தனத் தவிர.காரணம் Bovverக்கு அமெரிக்கர்கள்னாலே ஒரு வெறுப்பு.தங்களுடைய க்ரூப்புல ஒரு அமெரிக்கன் இருக்குறது அவனுக்கு பிடிக்கல.இருந்தாலும் Peteக்காக பொறுத்துக்குறான்.


எப்பவும் அவங்க கூட வெளில சுத்த தொடங்குறான் Matt. ஒரு நாள் ரோட்ல வேற ஒரு க்ரூப் இவங்கள அடிக்கத் தொரத்தும்போது தான் Mattக்கு West Ham United டீமுடைய ரசிகர் படையான Green Steet Elite (GSE) பத்தி தெரிய வருது.Pete தான் அந்த firmக்கு தலைவன்.2அந்த Firm ஒருகாலத்துல தொடங்கி வெச்ச 'The Major'ங்குற ஒரு கெத்து பார்ட்டி பத்தியும் தெரிய வருது.

அநியாயத்துக்கு பழமா..நல்லவனா இருக்க Matt, Pete கூட சேர்ந்து எல்லா தெரு சண்டைக்கும் போக ஆரம்பிக்கிறான். இத கேள்விப்பட்டு செம்ம கடுப்பாகுற Steve இவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு வெளில அனுப்பிடுறான்.இது எல்லாத்துக்கும் நடுவுல GSE அவங்களுடைய அதி தீவிர எதிரி க்ருப்பான  பக்கத்து ஊரு Milwal டீமுக்கும் தங்களுடைய டீமுக்கும் பல வருஷம் கழிச்சு நடக்க போற மேட்ச்ல பெரிய அளவுல சண்டை போட திட்டம் போடுறாங்க.அந்த சண்டைக்கு போகப் போறவங்கள்ல Mattஐயும் Pete தேர்ந்தெடுத்தது Bovverக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.அதனால எதிரி க்ருப்புக்கு இந்த ப்ளான் பத்தி உளவு சொல்லிடுறான். Milwal Bushwackers க்ரூபோட தலைவன் Tommy ஏற்கனவே GSE மேல கொல வெறில இருக்கான். (காரணம் தன்னுடைய மகனை GSE உடனான ஒரு பழைய கலவரத்தின்போது இழந்ததுனால).GSE-இன் பழைய தல 'The Major'ம் இந்த சண்டைக்கு வரப்போறதா தகவல் வந்ததால டாமி Major ஐயும் Pete ஐயும் போட்டுத் தள்ள ப்ளான் பண்றான்.

இது இல்லாம Mattஐ பார்க்க லண்டன் வர்ர அவங்கப்பா (சர்வதேச பத்திரிகையாளர்) அவன Time பத்திரிகையுடைய அலுவலகத்துக்கு கூட்டிட்டு போய் தன் நண்பர்கள் கிட்ட அறிமுகப்படுத்தி வைக்குறாரு. இத தூரத்துலேர்ந்து பாக்குற Bovver தன் நண்பர்கள்கிட்ட வந்து Matt ஒரு பத்திரிகைக்காரன்னும் நம்மளப் பத்தி தகவல் தெரிஞ்சுகிட்டு பத்திரிக்கைல எழுதுறதுக்காக தான் நம்ம கூட சுத்திட்டு இருக்கான்னும் சொல்றான்.அவன் தினமும் எழுதுற டைரில நம்மளப் பத்தி நோட் பண்ணி வெச்சுக்குறான்னும் சொல்றான்.இது மறுபடி ஒரு பெரிய பிரச்சனைய கெளப்புது.இந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க 'Major' அவரே நேர்ல வர்ராரு.

கடசில..அந்த சண்ட நடந்துச்சா...?? Pete,Matt எல்லாரும் என்ன ஆனாங்க...??, 'The Major' யாரு...டாமி சொன்னபடி எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டானா..?? இதெல்லாம் நேரமும் ஆர்வமும் இருந்தா... படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.

Extra: கடைசியா இந்த ரெண்டு க்ரூப்புக்கும் நடந்த ரத்தக்களரிய பத்தி படிக்க இங்கு க்ளிக்கவும்

Related Posts Plugin for WordPress, Blogger...