நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மருத்துவக்காப்பீடு - இந்தியாவுக்கு சரி வருமா


சமீபத்தில் எனது பணி நிமித்தமாக அமெரிக்க மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் பற்றியும், தனி நபர் மருத்துவக்காப்பீட்டின் செயல்பாடுகளையும், அது தொடர்பான
அமெரிக்க அரசின் சட்டங்களையும் பற்றி படிக்க நேர்ந்தது....

  ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு மருத்துவக்காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் காப்பீடு  செய்யப்பட்டிருக்கின்றார்கள்.ஆக நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்கின்றது.அங்கு அவர்கள் மருத்துவர்களை அணுகும் முறையும் வித்தியாசமானது.

 நம் நாட்டைப்போல் உடல் நிலை சரி இல்லை  என்றால் நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற முடியாது. PCP (Primary Care Physician) எனப்படும் முதன்மை மருத்துவ ஆலோசகரிடம் சென்று தங்கள் தற்போதைய உடல் கோளாறை பரிசோதித்து, அவரின் பரிந்துரையின்படியே மேற்கொண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் செல்வதா அல்லது நேரடியாக சிகிச்சை பெற்றால் மட்டும் போதுமா என முடிவு செய்யப்படுகிறது.

இதில் முதலில் நோயாளி சந்திக்கின்ற PCP - இடம்  மட்டும் ஒரு பொதுவான Consulting Fees ஐ செலுத்துகின்றார்கள். மேற்கொண்டு செய்யப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவினை இவர்கள் காப்பீடு  செய்திருக்கின்ற திட்டத்தின் கீழ் (நிபந்தனைகளுக்கு உட்பட்டு) காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.இப்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் எப்படி முழு சிகிச்சைக்கு ஆகும் செலவினை பெறுவார். நோயாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி செலவான தொகையை திரும்பப்பெறுகிறார் (Re-Imbursement)

. இந்த முறைக்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்களும், அரசு நிபந்தனைகளும் உள்ளன.அவற்றுள் முக்கியமானது HIPAA எனப்படும் Health Insurance Portability and Accountability Act. சாதாரண குடிமக்கள் அன்றி ஆதரவற்றோர், முதியோர்,பெற்றோரில்லாத பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள் ஆகிய சிலருக்கான  மாத தவணைத்தொகையை (Premium) அரசாங்கம் செலுத்துகின்றது.இந்த முழு இயக்கத்தையும் படித்த பிறகு என்னுள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன.நம் நாட்டில் இப்போதுதான் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்திருக்கும் திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும்.(இன்னொரு சந்தேகம் தமிழ் நாட்டில் செயல்படத்தொடங்கியிருக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மத்திய அரசுடையதா அல்லது மாநில அரசின் திட்டமா..? தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்)

 அப்படி நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டால் வறுமைக்கோட்டிற்கு கீழ் (சராசரி ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக உள்ள) மக்களுக்கான தவணைத்தொகையை அரசாங்கம் செலுத்துமா? அவர்கள் இலவச மருத்துவ உதவி பெறுவதற்கான வழி செய்யுமா? ஒருவேளை அவ்வாறு நாட்டின் மொத்த மக்கள் தொகையும் தனியார் நிறுவனங்களினால் காப்பீடு செய்யப்படுவதால் ஒட்டுமொத்த அரசாங்கமும், நாட்டின் பொருளாதாரமும் தனியார் நிறுவனகளின் பிடிக்குள் போய் விடாதா? இப்படி அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குவதன்மூலம் தனியார் நிறுவனங்கள் அடையும் ஆதாயங்கள் என்னென்ன...? இனி பதிவுலக விவாதங்களில் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்குமென நம்புகின்றேன்...

மறக்காமல் உங்கள் கருத்துகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்...
நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...