நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடவுள் - சுஜாதா





உலகிலேயே இன்றளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்று அல்லது ஒருவர் அல்லது ஒரு கருத்து இந்த ’கடவுள்’ என்பதாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் கடவுள் என்பது அவனது நம்பிக்கையின் அடிப்படையில் மாறுபடுகின்றது. இந்த நம்பிக்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்டதாக இருக்கலாம். அல்லது நாமே வளர்த்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.மேலும் பலருக்கு இந்தகடவுள்என்ற நம்பிக்கை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் இருக்கலாம்.
  • உண்மையாகவே ‘கடவுள்என்றால் என்ன ?
  • எது கடவுள் என்று நம்பப்படுகின்றது ?
  • இன்ன மதத்திற்கு இன்ன கடவுளென்று நிர்ணயித்தது யார் ?
  • கடவுளுக்கு உருவம் உண்டா ? இல்லையா?
  • இந்த பிரபஞ்சம் தோன்றி, இயங்கிக் கொண்டிருப்பதற்கு கடவுள் தான் காரணமா ?
  • உயிர்களைப் படைத்தது கடவுளா ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தத்துவரீதியாகவோ அல்லது அறிவியல்ரீதியாகவோ ஒரு முழுமையான விடையை யாரும் அளித்துவிடக்கூடுமா என்ன ??

நிச்சயமாக முடியாது..!!


முடிந்தவரையில், நம்மிடமுள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஒரு புறமும் அனுமானங்களை மற்றொரு புறமும் வைத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கலாமேயன்றி இன்னது கடவுளென்று வரையறுப்பது கடினமே.

சரி… கடவுள் இருப்பதாகவே வைத்துக் கொண்டால் மனிதர்களாகிய நமக்கு அதனால் என்ன பலன் ?

பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் மனதளவில் மென்மையானவர்கள். என்னதான் தேர்வுக்கு விடிய விடிய படித்தாலும் வீட்டை விட்டுக் கிளம்புமுன் கும்பிடு போட்டு வேண்டிக்கொண்டு செல்ல ஒரு கடவுள் தேவைப்படுகின்றார். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று தெரிந்தாலும் “எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்என்று கடவுள் மீது பாரத்தைப் போடுகிறவர்கள் நாம்.

”நமக்கும் மேலே சக்தி படைத்த ஏதோ ஒன்று/ ஒருவர் இருக்கின்றார்.அவர் நம்மை வழிநடத்துவார்” என்கிற நம்பிக்கை ஏதோவொரு வகையில் ஒவ்வொருவருக்கும் தேவையாயிருக்கின்றது.நமது பொறுப்புகளையும் மனச்சுமையையும் குறைத்துக்கொள்ள இந்த நம்பிக்கை உதவுகின்றது.

நிற்க…

இப்படி எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம்மென்றும்… அவரை மீறி இங்கு எதுவுமில்லை என்றும் மனிதகுலம் கண்மூடித்தனமாக நம்பியிருந்தால் அறிவியல்ரீதியான இந்த முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்காது அல்லவா ?

நமக்குத்தான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்லித் தந்திருக்கிறார்களே…! முன்பே சொன்னது போல் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து… கேள்விகளை எழுப்பினால் நமக்கு குத்துமதிப்பாய் தெளிவு (என்ன ஒரு முரண்..!!)  பிறக்கலாம்.
விஷயத்துக்கு வருகின்றேன்…

என்னைப் பொருத்தவரையில் 2013-ம் ஆண்டில் நான் படித்த புத்தகங்களிலேயே ஆகச்சிறந்ததாக சுஜாதாவின் ‘கடவுள்தொகுப்பைச் சொல்லுவேன். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வார/மாத இதழ்களில் வெளியான கடவுள், மதம், பிரபஞ்சம், உயிரின் தோற்றம்.. ஆகியவை தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். ஒட்டுமொத்தமாய் ஒரே மூச்சில் படித்து முடிப்பது கொஞ்சம் கடினம் தான்.

ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அறிவியல் விரும்பியாய்.. கேள்விப் பிசாசாய் இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கு செம்ம ட்ரீட்…!! நிச்சயமாக நவீன அறிவியலின் கோணத்தில் கடவுள்...மதம்…பிரபஞ்சம் ஆகியவை குறித்த ஒரு பருந்துப் பார்வை கிடைக்கும்.

முடிவாக - ‘உளன் எனில் உளன் அவன் எனில் அவன்’..!!

கடவுள் – சுஜாதா,
உயிர்மை பதிப்பகம்
272 பக்கங்கள் – விலை ரு.200/-

ஆன்லைனில் வாங்க: இங்கு செல்லவும்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

The Man from Earth (2007) - யார் கடவுள் ???


ஒரு விடுமுறை நாளின் காலை நேரம். உங்களோடு பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த சக பணியாளர் / நண்பர் (பெயர் ஜான் என்று வைத்துக்கொள்வோம்) யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென ஊரை விட்டு கிளம்புவதாகத் தெரிகின்றது. நீங்களும் இன்னபிற நண்பர்களும் பரிசுப் பொருட்களோடு அவர் வீட்டை நோக்கி செல்கின்றீர்கள். அந்த நண்பர் ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர். முனைவர் பட்டம் பெற்றவர்.

அவரைப் போலவே நீங்களும் சக நண்பர்கள் அத்தனை பேருமே வெவ்வேறு துறைகளில் (Biology, Anthropology, Archaeology, Psychology, Biblical expertise) முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள். சுருங்கச் சொன்னால் தத்தமது துறை சார்ந்த அறிவில் வல்லுநர்கள். ஜான் ஒரு அறிவாளி. திறமையான வேலைக்காரன். அவன் இப்படி சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டுச் செல்வதில் யாருக்கும் விருப்பமில்லை. காரணம் கேட்டு அவனைத் துருவத் தொடங்குகின்றார்கள் எல்லோரும். மேலும், பத்து வருடங்களாக இளமையாகவே இருப்பதன் இரகசியம் என்ன எனவும் கேலியாகக் கேட்கின்றார்கள்.

முதலில் மழுப்பி சமாளிக்கும் ஜான் பின்பு பேச்சை திசை திருப்புகின்றான். கற்காலத்துக்கும் முன்பாக வாழ்ந்த மனிதன் ஒருவன் இன்றும் உயிரோடிருப்பதற்கான சாத்தியம் என்ன என்று கேட்க… ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சொல்கின்றார்கள்.
  • அவனுக்கு எந்த நோய் தாக்கத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய எதிர்ப்புசக்தி இருந்திருக்க வேண்டும்.
  • காலத்தை மீறிய அறிவை அவன் கொண்டிருக்க முடியாது.
  •  உலகம் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ளும்போது தான் அவனும் கற்றுக் கொண்டிருப்பான்.
  • அவனுடைய தற்போதைய வயது கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகள் இருக்கும்

இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வருபவர்கள்… ஜானிடம், “ நீ ஏதும் புத்தகம் எழுதப் போகின்றாயா…அப்படியென்றால் நிச்சயம் எங்களிடம் காட்டு…” என பலவாறாக பேசிக்கொண்டிருக்க.. திடீரென ஜான் அந்த விஷயத்தைச் சொல்கின்றான்.

அந்த 14,000 வயது மனிதன் தான் தானென்று….!!

அதற்குப் பிறகு…!!!!???
கட்…!!


ஐந்து அல்லது ஆறு டாக்ரேட்டுகள் (ஒரு பெண் உட்பட)… ஒரு இளம் மாணவி… ஒரு நடுத்தர வயது பேராசிரியை….! இவர்களனைவரும் ஒரு வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, மனிதனின் தோற்றம் பற்றியும்…பரிணாம வளர்ச்சி பற்றியும்… மதங்களின் வரலாற்றையும்… உலகின் தோற்றத்தை பற்றியும்… வெறுமனே பேசிக் கொண்டேயிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்…!!

கிட்டத்தட்ட 90 நிமிடங்களில் கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் அட்டகாசமான..நேர்த்தியான திரைக்கதையோடு..பெரிய ஜிகினா வேலைகள் எதுவுமில்லாமல் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைப்படமே சாட்சி…!! நான் பார்த்தவரையில் 12 Angry Men-க்கு பிறகு பட்டாசான ஒரு conversation movie…!!

If you are fascinated by facts, then please don’t miss to watch this movie..!!!

இந்த படம் பற்றி நண்பர் கருந்தேள் ராஜேஷின் சுவையான அறிமுகத்தைப் படிக்க: இங்கு செல்லவும்

ஜெரோம் பிக்ஸ்பி-யின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: இங்கு

மேலும் திரைப்படம் பற்றிய உருப்படியான ஒரு விவாதம் : இங்கு

படத்தின் ட்ரெய்லர் :


செவ்வாய், 24 டிசம்பர், 2013

படிப்பது சுகமே - தமிழ் ஸ்டூடியோவின் புத்தக அறிமுக நிகழ்வு




கடந்த ஞாயிறு (22/12/2013) மாலையை தமிழ் ஸ்டுடியோவில் ரொம்பவே பயனுள்ளதாகவே கடத்தினேன். புத்தகத் திருவிழா நெருங்குவதையொட்டி, என்ன மாதிரி புத்தகங்களைப் படிக்கலாம் ? என்பது தொடர்பான சிறிய அறிமுகப்படுத்தலுக்கான நிகழ்வு. வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தங்களுக்கு பிடித்தமான, கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி பேசினார்கள்.

1.முதலில் பேசிய சண்முகானந்தம் (Wildlife Photographer) அவர்கள் சுற்றுச்சூழல்/இயற்கை/பறவை நோக்குதல் தொடர்பான ஒரு பெரிய புத்தக பரிந்துரை பட்டியலையே வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.(நேரமிருந்தால் ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறேன்).அவர் பேசும்பொழுது குறிப்பிட்டு சொன்ன சில எழுத்தாளர்களும் புத்தகங்களும் கீழே...

ம.கிருஷ்ணன் - சுற்றுச்சூழல் இலக்கியம், சலீம் அலி - ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, முகம்மது அலி - வட்டமிடும் கழுகு, முனைவர்.அப்துல் ரகுமான் - பீகிள் கடற்பயணம் (மொழிபெயர்ப்பு), மேலும் ஆதி வள்ளியப்பன், தியோடர் பாஸ்கரன், கோவை சதாசிவம் உள்ளிட்ட எழுத்தாளர்களின் எல்லா புத்தகங்களும்.

2. அடுத்ததாக ஆங்கில புத்தகங்கள் பற்றி பேசியவர் Frontline இதழின் ஆசிரியர் Vijayasankar Ramachandran அவர்கள். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் பேசியவர் பரிந்துரைத்த அரசியல்/மார்க்ஸியம் தொடர்பான ஆங்கில புத்தகங்களின் பட்டியல் கீழே

Imperialism, the highest stage of capitalism - Lenin
The rise and fall of the third Reich - William L.Shirer
The Age of Revolution, The Age of Capital , The Age of Empire, The Age of Extremes (4 books) - Eric Hobsbawm
A People's History of the United States - Howard Zinn
Open veins of Latin America - Eduardo Galeano
Glimpses of World History - Jawaharlal Nehru
Manufacturing Consent: The Political Economy of the Mass Media - Noam Chomsky, Edward S. Herman
Fidel and Religion - Frei Betto
The Story of Philosophy - Will Durant
The History of India - Romila Thapar
Culture, Ideology, Hegemony - K.M.Panikkar
Indian Atheism - Debiprasad Chattopadhyaya
The economy: an interpretive introduction - C.T.Kurien
An Uncertain Glory: India and Its Contradictions - Jean Dreze and Amartya Sen
Communalism in Modern India - Bipin Chandra
The Kashmir Dispute - A G Noorani
The Image trap - M.S.S.Pandian
பெரியாரின் குடியரசு கட்டுரைகளின் தொகுப்பு - ஈ.வெ.இராமசாமி ஆகிய நான்

3.புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன் அவர்கள் குறிப்பிட்ட சில நாவல்களைப் பரிந்துரைத்தார்

அஞ்ஞாடி - பூமணி (தலித்திய பின்னணி - காலமாற்றம் சொல்லும் கதை - ஏகப்பட்ட தகவல்கள்)
செடல் - இமையம்
தனிமைத் தளிர் - ஆர்.சூடாமணி
(கதை சொல்லும் நடைக்காகவும், வார்த்தைப் பயன்பாட்டிற்காகவும் மட்டும்)
உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் (மத்திய சென்னையைப் பின்னணியாகக் கொண்டது, அந்த மக்களின் வாழ்வியல்/இன்பதுன்பம், புனித பிம்பங்களை போற்றுபவர்களுக்கானதல்ல )
முதல் மனிதன் - ஆல்பெர்ட் கேம்யு (Albert Camus) மொழிபெயர்ப்பு

4.பூவுலகின் நண்பர்கள் சார்பாக கலந்து கொண்ட நவீன் அவர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வியலின் அழகு பற்றி நிறைய பேசிவிட்டு இரண்டு புத்தகங்களை மட்டும் பரிந்துரைத்தார்.

ஒற்றை வைக்கோல் புரட்சி (மொழிபெயர்ப்பு) - பூவுலகின் நண்பர்கள்
சாதியை ஒழிக்கும் வழி - அம்பேத்கர்
புதினங்கள் -சிறுகதைகள் தொடர்பான புத்தகங்களைப் பற்றிப் பேச எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களும், சினிமா தொடர்பான புத்தகங்கள் பற்றி பேச இயக்குநர்.அம்ஷன் குமார் அவர்களும் கடைசி நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. 

புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வு என்று சொன்னாலும் உள்ளார்ந்து பார்த்தால் ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்த து இந்த நிகழ்வு...!!

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் அருண்..!!!
Related Posts Plugin for WordPress, Blogger...