நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 28 டிசம்பர், 2016

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்


சம்பந்தமில்லாத குரல் 1:

ஸ்கூல் படிக்கும்போது செம்மையான ஹாக்கி ப்ளேயரா இருந்த ஒரு பையன் , ஸ்கூல் பீப்பிள் லீடராவும் இருந்தவன், பெருசா படிக்க மாட்டான் ஆனாலும் அப்படியொரு கண்ட்ரோலிங் பவர் அவனுக்கு; அவன் சொன்னா பசங்க கேப்பாங்க. ஸ்கூல்ல சின்ன லெவல்ல சண்டை போட ஆரம்பிச்சு மத்த ஸ்கூல் பசங்களோட நடக்குற பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ணிகிட்டு திரிஞ்சவன். ஒரு நாள் கண்ணு மண்ணு தெரியாத கோவத்துல அவன் பண்ண ஒரு கொலைக்கப்புறம் அவன் வாழ்க்கையே மாறிப் போச்சு.லோக்கல் அரசியல் தொடர்புகள், அடியாள், அப்டி இப்டின்னு இப்ப ஜெயில்ல போய் உக்காந்துருக்கான். இப்போ அவன் மேல பத்துக்கும் மேற்பட்ட கேஸ்கள். வயசு இன்னும் முப்பதைத் தொடல.
------------------------------------------------------------------------------------------------------------------------
சம்பந்தமில்லாத குரல் 2:

ஒரு அண்ணன்.  பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலையில்லாம சுத்திட்டு இருந்தாரு.சத்தம் போட்டுக் கூட பேசமாட்டாரு. வேலை இல்லாததனால ஏரியாவுல ஒரு ’ஒன்றிய’த்தோட ஆபிஸ்/ரூம்ல எடுபிடி வேலை பண்ணிட்டு இருந்தாரு. அப்புறம் அங்கேயே கார் ஓட்டவும் ஆரம்பிச்சாரு. எதிராளி எவனோ அந்த அரசியல்வாதிக்கு போட்ட ஸ்கெட்ச்சுல வண்டில இருந்த அத்தன பேரும் எஸ்கேப்பாகிட இவர் மாட்டிகிட்டாரு. கொத்திப் போட்டுட்டானுங்க. அப்போ அவருக்கு வயசு 28.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையோட குரல்:

வாழ்க்கைல ஒருத்தர் என்னமாதிரி மாற்றத்துக்கு உள்ளாகுறாங்கன்றத தீர்மானிக்கிறது அவங்களோட இளமைக்காலம் தான். குடும்பத்துல என்ன மாதிரியான சூழல்ல வளர்ராங்க, வெளில யார்கூட பழகுறாங்க, சுத்தி இருக்குற இடங்கள்ல என்ன நடக்குது, தனிப்பட்ட முறைல ஒருத்தரோட குணாதிசயம் என்ன, இதெல்லாம் சேந்தது தான் ஒரு மனுஷன். அப்டியே டமால்னு ஆகாயத்துலேர்ந்து குதிச்சு ஒருத்தன் நல்லவனாவோ கெட்டவனாவோ மாறிடுறதில்ல.அது ஒரு நீளமான ப்ராசஸ்.பல சம்பவங்களோட தொகுப்பு. இந்த ப்ராசஸ் அவங்க ஆசப்பட்டதுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அல்லது அவங்களோட குணாதிசயத்துக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு வாழ்க்கைமுறைல கொண்டுபோய் தள்ளும். சில சமயங்கள்ல அவங்க வாழாமலே கூட போறதுண்டு.  ரவுடியாகவோ, வன்முறையாளனாகவோ, இருக்கிற ஒருத்தனோட கடந்த காலத்தைப் பாத்தீங்கன்னா நிச்சயம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கும். Form ஆகுறதுன்னு சொல்வாங்கள்ல, அந்த மாதிரி.

தஞ்சாவூர் குரல்:

தஞ்சாவூரைக் களமாகக் கொண்ட நாவல்னு கேள்விப்பட்டவுடனே ரொம்ப ஆவலா காத்திருந்தேன். நான் தஞ்சாவூர்க்காரனில்ல. பெரிய கோவில், சோழர்களின் தலைநகரம், காவிரியோட கடைமடைத் தண்ணி, இசைப் பாரம்பரியம், இப்படியா எங்க ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ஏகப்பட்ட ஒத்துமைகள் இருக்கு.அந்த தஞ்சாவூர்ல இருக்குற சுந்தர், கதிரவன். இந்த ரெண்டு பசங்களோட வாழ்க்கைல நடக்குற சம்பவங்களோட தொகுப்பு தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’.

சுந்தரின் குரல்:

சுந்தர் ஸ்கூல் பையன்; காரணமேயில்லாம தன்மேல வன்மத்தோட அடிக்கிற வாத்தியார திருப்பி அடிச்சுடுற அளவுக்குக் கோபமும் முரட்டுத்தனமுமான பையன். கொஞ்சமும் அவனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணாத, வரட்டு கெளரவத்தப் புடிச்சுத் தொங்குற அவனோட அப்பா. இந்தக் குடும்பத்தை விட்டுட்டு தன் நண்பன் கருவாயனோட  நிம்மதியா எங்கேயாவது போய் சந்தோஷமா இருக்கனும்ங்குறது தான் வாழ்க்கை லட்சியம். ரயில் இஞ்சின் டிரைவரா இருக்குற ரவி அண்ணன் தான் மனசப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆளு. மேட்டுத்தெருவுல இருக்குறவங்களோட வாழ்க்கை மாதிரி தன் வாழ்க்கை ஏன் இல்லன்னு மனசுக்குள்ள கேள்வி.என்ன ஆச்சு ?

கதிரவன் குரல்:

அப்பாவைப் பிரிஞ்ச அம்மா தப்பான ஒரு உறவுல இருக்கான்னு தெரிஞ்சதும் வீட்ட விட்டு வெளிய வந்துடுடத் துடிக்கிற கதிரவன். சோறு போட்டு ஆதரிச்சு உள்ளூர் ரவுடி அப்பள கனேசன் கிட்ட சேத்துவிட்ட நண்பன் ராஜா, காதலிச்சதுக்கே அறுவா வெட்டு வாங்குற அளவுக்குப் போனாலும் மனசுலேர்ந்து அழிக்க முடியாத கோமதி . இவன் தன்னோட வழிகாட்டியா நெனைக்குற தியேட்டர் ஆப்பரேட்டர்; ஒருகட்டத்துல வாழ்க்கைய நகர்த்துறதுக்காக வன்முறையைத் தேர்ந்தெடுக்குற கதிரவன் என்னதான் ஆனான் ?

என் குரல்:

வன்முறையையும் காமத்தையும் justify பண்ணவுமில்லாம glorify பண்ணவுமில்லாம ஒரு கதை சொல்லல். கதையோட ஓட்டத்துலயே ஊரோட geographyய சொல்ற விதமும் (ஆத்துப்பாலம் தொடங்கி தெருக்கள், சேரி, சாலைகள், பழைய கட்டிடங்கள்), பேரடைஸ் தியேட்டர் - நதியா கட் அவுட் - தஞ்சாவூர் வெட்டு - ஸ்போக்ஸ் கம்பி மீன் குத்தல்னு எல்லாத்துலயும் இருக்குற டீட்டெய்லிங்கும் அட்டகாசம்.

கடைசியா : செகண்ட் பார்ட் வருமோன்னு யோசிக்க வைக்குற நாவலோட abrupt முடிவு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்னு தோணுச்சு. அந்த விவரனைகளுக்காகவும் காட்சிப்படுத்தலுக்காகவுமே கட்டாயம் படிக்கலாம்

வாழ்த்துகள் பிரபு மாம்ஸ்...!

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்
உயிர்மை பதிப்பகம்
ISBN: 978-93-85104-71-8
விலை: ரூ.120
128 பக்கங்கள்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

திங்கள், 26 டிசம்பர், 2016

அஜ்வா - சரவணன் சந்திரன் - மீட்பனின் மீட்சி


 'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது.  ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.  

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய  பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை  அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான். 

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.  வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான். 

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய்  டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை. 

நீங்களும், நானும், நம்மைச் சுற்றியிருக்கிற உயிருள்ள எல்லாமும், தன்னைத்தானே அழித்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிற செல்களாலானவை தானே. ஒரு முடிவில்தான் மற்றுமொரு தொடக்கம்;அழிபவையெல்லாம் மீண்டும் பிறக்கவும் துளிர்க்கவும் செய்யும் என்கிற நம்பிக்கைக் கீற்று தான் ‘அஜ்வா’.

நிச்சயமாகப் படிக்கலாம்.!! 

வாழ்த்துகள் சரவணன் அண்ணா..!! 

’அஜ்வா’
உயிமை பதிப்பக வெளியீடு
விலை: ரூ.130
ISBN: 978-93-85104688

ஆன்லைனில் வாங்க: இங்கு சொடுக்கவும்

’அஜ்வா’ நாவலின் டீசர் : இங்கு

வியாழன், 22 டிசம்பர், 2016

டாப் 10 - ஃபேஸ்புக் பதிவுகள் - 2016


எல்லாரும் மாத்தி மாத்தி பட்டியல் போடுற இந்த நேரத்துல, நாமளும் ஒரு லிஸ்ட்ட போடுவோம்னு யோசிச்சேன். 2007 வாக்குல தான் ப்லாக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சது. இன்னதுன்னு வரைமுறை இல்லாம சினிமா தொடங்கி ,அறிவியல், பயணம், அரசியல், டெக்னாலஜி, கவிதை, சுயசொறிதல் உள்ளிட்ட எல்லாவகையான content எழுதுறதுக்கும் ஆளுங்க இருந்தாங்க. இப்ப ஃபேஸ்புக்லயும்,ட்விட்டர்லயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலயும் எழுதுறவங்கள்ள முக்கியமானவங்க எல்லாரையும் ப்லாக் வழியா தான் எனக்குத் தெரியும். இந்த evolutionல Google Reader காணாமலே போச்சு (இன்னமும் feedly வெச்சு ப்லாக் போஸ்ட் படிக்கிற ஜீவன் நானு).நமக்கு மூளைல அரைக்க இந்த மாதிரியான content தேவை. இப்போ ஃபேஸ்புக்ல அதே மாதிரி அட்டகாசமான content எழுதுறவங்க நெறைய பேர தேடிப்பிடிச்சு/தேடிப்படிச்சு சேத்து வெச்சுருக்கேன். அப்புடி படிச்சதுல randomஆ மனசுக்குப் புடிச்சத சேவ் அல்லது evernoteல clip பண்ணி வெச்சுருக்கேன். அதுல சிலத இங்க பகிர்ந்துக்கலாம்னு...!!
இதுல சிலர் முழுநேர எழுத்தாளர்களாகவும்/கவிஞர்களாகவும் இருந்தாலும்..ஃபேஸ்புக்ல அவங்க எழுதுனதுல எனக்கு ரொம்பப் பிடிச்சத மட்டும் இங்க போட்டு வெச்சுருக்கேன்.
***************************************************************************
மொதல்ல Karundhel Rajesh எழுதுன இந்த போஸ்ட். ராஜேஷ் அவரோட சைட்ல நெறைய எழுதுனாலும் அப்பப்ப fbல நச்சுன்னு சில போஸ்ட்ஸ் போடுவாரு. அப்டி ஒன்னுதான் இது.
https://www.facebook.com/rajesh.scorpi/posts/10153901617955987
***************************************************************************
அடுத்தது Bogan Sankar எழுதுன ’அப்பாக்களின் நாட்கள்’ங்குற போஸ்ட். கொஞ்சம் உணர்வுப்பூர்வமானதா இருந்தாலும் we need something to feel emotional every now and then... Isn't it ?
****************************************************************************
இந்த வருஷத்துல அதிகமா சேவ் பண்ணி வெச்சது Vijay Bhaskarvijay எழுதுன பதிவுகளா தான் இருக்கும். அறிவியல், கணிதம்,இலக்கியம், சொந்த அனுபவங்கள்னு கலந்துகட்டி ரொம்ப விவரமா எழுதுவாரு. புதுசா எதாவது புத்தகங்கள் பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம். கணக்கு நமக்கு பீதியக் கெளப்புற ஒரு சப்ஜெக்ட்,.ஆனாலும் அத ரசிக்கிற மாதிரி எளிமையா எழுதுவார். விஜயுடைய பதிவுகள்ள சேவ் பண்ணி வெச்ச சிலது இங்க..!
தமிழிலக்கியம்- வெஸ்டர்ன் ஃபிலாசஃபி
https://www.facebook.com/meevijay8/posts/637526713006341
கணித மேதை ராமானுஜன் - கொள்கை/அரசியல்
https://www.facebook.com/meevijay8/posts/1029872007105141
******************************************************************************
Shan Shylesh
ஆளு நம்ம செட்டுன்னு நெனைக்க வைக்கிற ஆள். சென்னைலதான் இருந்தாலும் இன்னும் சந்திக்காத நண்பன்.சமகால அரசியல், relationships, பெண்கள் (Yes...!) பத்தி இவர் எழுதுற பல விஷயங்கள் ரொம்ப ரொம்ப sensibleஆ தோணும் எனக்கு. நெறைய எழுதுறதில்ல இப்போ. ஆனாலும் சின்னச்சின்னதா blurb மாதிரி தன்னுடைய கருத்துகள சொல்லிட்டே இருப்பாரு. அதுல எனக்குப் பிடிச்ச ஒரு போஸ்ட்.
The delusion of choice : பெண்ணியமும் நுண்ணடிமைத்தனமும்
https://www.facebook.com/iKoothaadi/posts/1283233528356528
இறைவி படம் பத்தி
https://www.facebook.com/iKoothaadi/posts/1207730729240142
எளிமைவாதம் : ஏன் வாசிப்பதில்லை நாம்.
https://www.facebook.com/iKoothaadi/posts/1210646458948569
********************************************************************************
Karl Max Ganapathy
மாக்ஸுக்கு நான் சர்டிஃபிகேட் தர வேண்டியதில்ல. அவருடைய அரசியல் கட்டுரைகளுடைய தீவிரத்தன்மையும் தெளிவும் பத்தி எல்லாருக்கும் தெரியும். அவரு எழுதி மொதல்ல நான் படிச்ச போஸ்ட் இது
பூவரசி பிரச்சனையும் அது சார்ந்த விளக்கங்களும்
https://www.facebook.com/gkarlmax/posts/1235980709768783
********************************************************************************
Sam Nathan
ஓஷோவைப் பத்திக் கேள்விப்பட்டாலோ/படிச்சாலோ இவர் ஞாபகம் வர அளவுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரு.
அதுமட்டுமில்ல..ஏகப்பட்ட விவாதங்கள்.. எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துறது..அது இதுன்னு இன்னும் நெறைய...!
கொண்டாட்டமான personality..!!
இது அவரு போன வருஷம் எழுதுன போஸ்ட் தான். ஆனாலும்..பட்டாசான போஸ்ட்
தஞ்சை பிரகாஷ் - பாலியல் - சமகால இலக்கியம்
https://www.facebook.com/sam.nathan.18/posts/1188276434524315
சாம் இப்படியும் எழுதுவாரான்னு ஆச்சரியப்பட வெச்ச (கொஞ்சம் எமோஷனல்) போஸ்ட்..!
https://www.facebook.com/sam.nathan.18/posts/1222223987796226
கடைசியா இந்த லெட்டர்...! இது புனைவா இல்ல நிஜமான்னு எல்லாரும் கேள்வி கேக்குறதுலயே எந்தளவு பாதிப்பு இருந்திருக்கும்னு புரியுது. ரொம்ப அழகான கடிதம்..!!
இந்த இரவை என்னுடன் கழித்தவனுக்கு
https://www.facebook.com/sam.nathan.18/posts/1482567748428514
*************************************************************************
மாம்ஸ் Lakshmi Saravanakumar எழுதுன இந்த போஸ்ட்..!
Enough said..!
”பிறக்க இருக்கும் என் மகளுக்காக”
https://www.facebook.com/saravanakumar.lakshmi/posts/1244146252262210
*********************************************************************************
வாசுகி பாஸ்கர்
வருஷக்கடைசில தான் இவருடைய பதிவுகள தொடர ஆரம்பிச்சேன். சமூகநீதி,அறம் சார்ந்து முன்வைக்கிற கருத்துகள், அந்த தெளிவு simply amazing.
நான் படிச்ச அவருடைய முதல் போஸ்ட்
போராட்டங்களையும் போராடுபவர்களையும் கேலிக்குள்ளாக்குகிறவர்கள் பற்றி
இடஒதுக்கீடு பற்றிய பொதுபுத்தி
https://www.facebook.com/photo.php?fbid=10210525581791526&set=a.10202327954975979.1073741837.1104997241&type=3&theater
*****************************************************************************
Madhu Sridharan
இவரை தொடர்பவர்களுக்கு நிச்சயம் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். சின்ன பகவதி, சின்னம்மா வரிசைல சின்ன சுஜாதா ங்குற பட்டத்துக்கும் பயங்கரமான போட்டி வரும் பட்சத்துல he is one tough contender...!
அறிவியல்-ஆன்மிகம்-இலக்கியம் காம்போ ல இப்போதைக்கு read-worthy contents (எனக்கு) நெறைய கெடச்சது இவரோட எழுத்துலதான்
இவருடைய facebook பதிவுகள Random Thoughtsனு pdfஆகவே தொகுத்து வெச்சுருக்கார் (கேட்டு வாங்கிக்கங்க - worthy of your time)
சாம்பிளுக்கு அவருடைய போஸ்ட்ஸ் சில
https://www.facebook.com/madhu.sridharan.14/posts/1532475430103024
********************************************************************************
இவரு என்ன எழுதுனாலும் படிப்பேன். புதுசா கத்துக்க ஏதாவது இருக்கும்னு நெனைக்கிற இன்னொருத்தர் கவிஞர் Raja Sundararajan அவர்கள்.
உதாரணத்துக்கு ஒரு ரெண்டு போஸ்ட் மட்டும் கீழ
’அருவி’ங்குற ஒத்த வார்த்தைய வெச்சு ஆடுன ஆட்டம்
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1364780540222448
World Diabetes Day அன்னைக்கு எழுதுனது
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1350682208298948
*********************************************************************************
Saravanan Chandran அண்ணனோட எல்லா பதிவுகளுமே ஒரு கத சொல்லும். விளையாட்டு, உடல் உறுதி, இன்னும் நிறைய விஷயங்கள் பத்தி அடிக்கடி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருப்பாரு. அதுல ஒரு ஸ்டேட்டஸோட லின்க் கீழ
அப்புறம் இந்த ‘கஞ்சா’ போஸ்ட் ;)
https://www.facebook.com/saravanan.chandran.77/posts/1090816541026593
அஜ்வாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்ண்ணே...!!
************************************************************************************
Venba Geethayan எழுதுற கிருஷ்ணார்ப்பணம் சீரிஸ் :) மொதல்ல ஜெயமோகன் வெண்முரசுல எழுதுனத ஷேர் பண்ணிருக்காங்களோன்னு தான் நெனச்சேன் அப்புறம்தான் அது அவங்களோட எழுத்துன்னு தெரிஞ்சுது. மொழிநடை செம்ம <3 span=""> <3 span=""> <3 span="">
நான் படிச்ச மொதல் கிருஷ்ணார்ப்பணம் போஸ்ட்
https://www.facebook.com/venba.geethayan/posts/534540606670812
************************************************************************************
Vidhya Vijayaraghavan நிறைய long reads எதுவும் எழுதறதில்ல. ஆனாலும் நான் படிச்ச முதல் போஸ்ட்
Sharp, sarcastic அண்ட் கலாய் queen ( Digital India..?? Ole da சாம்பிள் :D :D :D )
பெண்களுடைய tolerance பத்தி
https://www.facebook.com/vidhya.vijay.911/posts/10205983878270621
************************************************************************************
Bavachelladurai Bava அவர்கள் எழுதுன வைக்கம் முகமது பஷீர் பத்தின இந்த போஸ்ட். <3 span=""> <3 span="">
அந்த பேப்பூர் சுல்தானை போய் பாக்கனும்னு தோணவெச்ச எழுத்து
************************************************************************************
காடோடி நாவலை எழுதுன நக்கீரன் நக்கீரன் அவர்கள் குறைய நாட்களுக்கு முந்தைய சென்னை புயலினால் ஏற்பட்ட மரச்சேதங்கள் குறித்து எழுதியிருந்த இந்த போஸ்ட்
ஷேர் பண்ண என் மச்சானுக்கும் Vedha Arjun சேத்து நன்றிகள்
************************************************************************************
த.ராஜன் இந்த ஆல்பத்துல தான் படிச்ச புத்தகங்கள் பத்தி எழுதியிருக்கிற எல்லாமே பிடிச்சது தான். சில அற்புதமான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது இதன் வழியாதான்.
************************************************************************************
Lekha Ramasubramanian இவங்க புத்தகங்கள், சினிமா பத்தி எழுதுற எல்லாமுமே செம்ம போஸ்ட்கள். அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச சில
ராணியுடன் ஒரு தேநீர் விருந்து
https://www.facebook.com/lekha.ramasubramanian/posts/10153309732968039
எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"
https://www.facebook.com/photo.php?fbid=10153461385083039&set=a.439473748038.215838.685783038&type=3&theater
************************************************************************************
கட்டக்கடைசியா ரொம்ப சமீபத்துல படிச்ச Akhil Kumar எழுதுன இந்த போஸ்ட். நம்மளமாதிரி யாருக்காக எழுதுறோம் எதுக்காக எழுதுறோம்னு கேள்வி எழுப்பி அதுக்கான பதிலையும் எழுதியிருக்காரு.
எழுத்தெனப்படுவது:
https://www.facebook.com/Ksrakhil/posts/1154825611270125
***********************************************************************************
பிற்சேர்க்கை:
’டாப் டென்’ னு தலைப்பு வெச்சுட்டு இஷ்ட சிகைக்கு போட்டுத் தள்ளியிருக்கியே ஏண்டான்னு கேட்டீங்கன்னா.. அது ஒரு click bait..கவர்ச்சிக்காக வெச்ச டைட்டில். ’படித்ததில் பிடித்தது’ மாதிரியான ரசவடைய விட ‘டாப் 10’ நறுக்குன்னு இருக்கு.
புரியாத தன்னிலை விளக்கம்:
புதுசா ஒருத்தரை சந்திக்கிறோம்..பழகி புரிஞ்சு நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்குறோம். அதுக்கப்புறம் அவங்களுடைய அரசியலோ, கொள்கையோ, ரசனையோ நம்மளவிட மாறுபட்டு இருந்தா..அது நமக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சா விலகுறதுதான் பெஸ்ட் ஆப்ஷன்னு நெனப்போம். அப்படி விலகிட்டா அவங்களோட பக்கத்து நியாயங்களை /பார்வையை நம்மளால தெரிஞ்சுக்கவே முடியாம போய்டும். It is equally important to listen to the other side. வாதம் பண்ணி புரியவைக்க சொல்லல. குறைந்தபட்சம் காதுகொடுத்து கேக்குறதுக்காவது பக்குவமில்லைன்னா எவ்வளவுதான் தேடித் தேடி இலக்கியம் படிச்சாலும் அதால எதுவும் பயனில்லைங்குறது என்னுடைய தாழ்மையான கருத்து.Difference of opinionங்குற ஸ்கேல கைல எடுத்துட்டா இந்த இன்னொரு perspectiveங்குற விஷயத்தை கடைசி வரைக்கும் பாக்கவே முடியாமப் போயிடும்ங்குறதனால..புதுசா கத்துக்குற/தெரிஞ்சுக்குற விஷயங்கள்ல எந்தவிதமான முன் முடிவும் இல்லாம தான் அனுகுறேன்/வேன்...!!
மத்தபடி பத்தி பத்தியா எழுதித்தள்ளுன எல்லாருக்கும்
எல்லையில்லா அன்பு...!! <3 span=""> <3 span=""> <3 span=""> நிறைய எழுதுங்க..! என்ன மாதிரி எவனோ ஒரு கிறுக்கன் தேடிப் படிச்சுட்டு இருப்பான்..!! :);)

சனி, 10 டிசம்பர், 2016

பிரிவன்றிப் பெரிதாய் பிறிதொன்றும் உண்டோ


போகத் திசையற்று
வாய்பேச வக்கற்று
காண வழியற்று
உறுபசியோ டுலவித்திரிந்தபடி
விழுந்தரற்றிப் புரண்டழுது
தன் குருதி தான் கண்டு
வலிமிகுந்து வலிமறத்து
என் செய்து தேற்றுவன்
இந்த பொல்லா புல் மனத்தை
ஆற்றாரும் உண்டோ
தேற்றாரும் உண்டோ
வேறாறும் உண்டோ
பிரிவன்றிப் பெரிதாய்ப் பிறிதொன்றும் உண்டோ...!!?
Related Posts Plugin for WordPress, Blogger...