நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வீரா, தாரா & யாழினி - Absurd Love

பேரன்பின் வீராவுக்கு,

மிகத் தாமதமானதொரு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிவிடும் பொருட்டே உனக்காக இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன் நான். எல்லோரும் எல்லோரிடத்தும் சொல்லிக் கொள்கிற சம்பிரதாயமான ‘வாழ்த்துகள்’ என்கிற சொல்லோடு நான் சொல்லிக் கடந்துவிடக்கூடியவளல்ல நீ. சாலைகளோடி, ஊர்த்தேடி திரியும்பொருட்டே பிழைத்து வாழ்கிற, என் போலான சக நாடோடிப் பறவையன்றோ நீ.

நான் உட்பட சுற்றியுள்ள யாவரிடத்தும் நிறைய பேச முயற்சி செய்தபடியே இருக்கிறாய் நீ. உன் அழுகைக்கான காரணத்தையும் கூட நீ சொல்கிறாய். யாரும் எந்த விளக்கமும் கேட்பதில்லை உன்னை. எப்போதும் மலையுச்சிகளை நோக்கியே இருக்கிறது உன் மனம். எந்த பயணமும் முடிவுற விரும்புவதில்லை நீ. ”இன்னும் கொஞ்ச தூரம் ”... “இன்னும் கொஞ்ச தூரம்” என்றபடி காலத்தை நீட்டிக்க முயல்கிறாய்.


Kahaan hoon main ab..
Aahein, darr, khushi, raaste
Kachchi baatein, sachche vaaste
Kahin pe in sab mein
Kahaan hoon.. main ?
என சுக துக்கங்களிலும், உறவுகளிலும், பயணங்களிலும் உன்னைத் தேடியபடியே இருப்பவள் நீ.

Main ekaaki de daya ki bheekh rajaKya tujhe aabhaas bhi mera.. என உன்னை நொந்தபடி பெயர் தெரியாத ஊரில் இருளில் ஓடும்போதும் சரி,

Heera para bajaar mein
Raha chhaar laptaaye
keetehi moorakh pachhe mohe
Koi Parakhi Liya Uthaaye
என சந்தையில் கிடக்கும் வைரமான உன்னை தேடிக் கண்டடையும் ஒருவனுக்கான நம்பிக்கையை சொல்லும்போதும் சரி,

உன்னை... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதலிக்கத் தோன்றுகிறது.



 எத்தனை தூரம் பயணித்திருப்பாயோ ? எந்த ஊர் கடல்களில் கால் நனைத்திருப்பாயோ? எந்தெந்த மலைகளின் மீது மேகம் தொட்டிருப்பாயோ ? எந்தெந்த காடுகளின் சுனை பருகியிருப்பாயோ ? அறிந்தேனில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. நான் சேருமிடம் முந்துமோ... நீ சேருமிடம் முந்துமோ.. யாரிருக்க யார் கடப்பாரோ அறியேன். இந்த இரவின் கடுங்குளிரையும் , இன்னும் சில இரவுகளின் நட்சத்திரங்களையும் , நாளைய விடியலையும் , வெண்பனி மலைகளினூடாய் இன்னும் சில விடியல்களையும்... நாம் கைகோர்த்தபடி, நீ என் மீது சாய்ந்தபடி, நாம் ஒன்றாய் நடந்தபடி... கடக்க வாய்த்திருக்கலாம்.ஆனாலும் இந்தப் பயணத்தின் இந்தத் தருணத்தில் நானுந்தன் சக பயணி.


வெவ்வேறு பயணங்களில் வெவ்வேறு உலகங்களில் நீயும் நானும் வெவ்வேறு பெயர்களில் சந்தித்திருக்கக்கூடும்.  ’தாரா’வாக நீயிருந்த மற்றோர் உலகிலும் உன்னோடு பயணித்திருக்கிறேன் நான். வீராவைக் காட்டிலும் தாரா கொஞ்சம் தெளிவானவள் எனத் தோன்றுமெனக்கு.  எங்கோ ஒரு ஊரில் அடையாளங்களைத் துறந்து கவலைகள் மறந்து பெயர்களற்று போலியான சுயமில்லாது ஆடித் திரிந்திருக்கின்றோம்.பின்பு
கனவுலாவியான நான், இவ்வுலகில் பிழைத்தலின் பொருட்டு சிலகாலம் அணிந்து கொண்ட ’சராசரி ஆள்’ எனும் முகமூடியை அத்தனை ரசிக்கவில்லை நீ.எனது போலி முகமூடியை அடையாளங்கண்டு கிழித்தெறிந்து மீண்டும் என்னைக் கதைசொல்லியாக மாற்றியவள் நீ. 

’இதுவே நான்’ என இவ்வுலகை நம்ப வைத்த விம்பத்தை அத்தனை இலகுவாய் நீ அடித்து நொறுக்கியதை கொஞ்சமும் தாங்க முடியாமல், எனது கையறு நிலையை கோபம் வன்மமுமான வார்த்தைகளால் உன் மீது கொட்டிவிட்டு ஓட முயன்றேன்.
அப்போதும்

pal bhar Theher jaao
dil ye sambhal jaaye
kaise tumhe roka karoon
meri taraf aata
har gham phisal jaaye
aankhon mein tumko bharoon,
bin bole baatein tumse karoon,
gar tum saath ho,
agar tum saath ho..


என என்னோடு பேசி என்னை நிறுத்த முயன்றாய். எனக்கு உன்னோடு போராட எதுவுமேயில்லை. மொத்தமும் என்னோடுதான்...என்னுள்ளேதான். 

wo jise DhoonDha zamaane mein
mujhi mein tha
wo mere saare jawaabon ka
safarnaama..

நமது இந்தப் பயணம் உன்னில் தொடங்கி உன்னில் முடிந்து உன்னோடே தொடர்ந்தது.

Ho.. safarnaama..
sawaalon ka safarnaama
shuru tumse, khatam tumpe
safarnaama

You fell in love with my weirdest self and you only wanted that version of me. 



வேறோர் உலகில்...யாழினியாக உனக்கு இத்தனை குழப்பங்களும் வலிகளும் இல்லை.எளிமையான முடிவுகளையே கொண்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் நிறைந்தது உன் வாழ்க்கை. 'எனக்கு சில குறிக்கோள் இருக்கு..ஆனா உங்களுக்கு சொன்னா புரியாது ‘ என்றோ ‘உங்கள பாத்தா எனக்கு பயம் வரல’ என்றபடி ஒரு சிறிய அணைப்பிலோ, ‘சும்மா...ஜாலியா’ என்றபடி தலையிலடித்துக் கொள்ளும்போதோ, நீ பேசுவதும், பேசாத மற்றேனையும் இலகுவாய்ப் புரிந்து கொள்வேன். அசட்டுத்தனங்களும் அசட்டுத்தனமான துணிவும் இல்லாத வாழ்க்கை ஏது ? எல்லாவற்றையும் சிறு புன்னகையோடு கடந்துவிட இது மட்டுமே போதுமல்லவா ?

இனி இந்த உலகின் இந்தப் பயணத்தை நீ யாழினியாகவே தொடர விரும்புகிறேன்...!

//
கனவில் நின்னேனே
நான் நான் நானாய் ஆனேனே
மின்மினிப் பூ ஆனேனே

விண்மீன் துள்ளும் அருவியாய் போனேனே
வான் மேகம் பூச்செண்டாய் மாறக் கண்டேனே
கண் காணா பூட்டு ஒன்னு ஒடச்சு வந்தேனே...!

ஏன்னா ராணி நான்
தேன்னா தேனீ நான்...!! //

போ...பற...தீராமல் வாழ்ந்து தீர்,
காதலுடன்,
நான் <3 nbsp="" p="">


Related Posts Plugin for WordPress, Blogger...