நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 30 நவம்பர், 2017

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி - SURGE - Sushila Ravindranath


பொதுவாக இந்தியாவில் தொழில்முனைவோர் / தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா/பிர்லா (வழக்கொழிந்த தேய்வழக்கு) தொடங்கி அம்பானி அதானி வரையிலும் வடநாட்டு உதாரணங்களே முன்னிறுத்தப்படுவதுண்டு. தாராளமயமாக்கலுக்கும் முன்னும் சரி பின்னும் சரி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. உலகலவில் புகழ் பெற்ற பலர் உருவானதும் கோடிகளில் புரளும் வர்த்தகங்கள் உருவானதும் இங்கேயே நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு கொஞ்சமும் சளைக்காதவை உருத்தெரியாமல் போனவர்களின் தோல்விக்கதைகள்.

சுசிலா ரவிந்திரன் எழுதிய 'Surge: Tamil Nadu's Growth Story' என்ற புத்தகம் இப்படியான கதைகளைத் தான் வருடங்கள் வாரியாக தரவுகளோடு பேசுகின்றது. சுதந்திரத்துக்குப்பின் 50களில் தொடங்கி 60கள் வரையிலான பெரிய தொழிற்சாலைகள்; சிம்சன்ஸ் (அமால்கமேஷன் குழுமம்), T.I சைக்கிள்ஸ் (முருகப்பா குழுமம்), TVS மாதிரியான பெரும் குழுமங்களின் / குடும்பங்களின் ஆதிக்கத்திலேயே இருந்துவந்திருக்கின்றன. இவர்கள் தங்களின் வியாபாரத்தை தகவமைத்துக் கொண்ட முறையும், காலத்துக்கேற்றார் போல பரந்துபட்டு முதலீடுகளை மேற்கொண்ட விதமும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை தந்ததும் (பெரும்பாலும் வெளிநாடுகளில் படித்தவர்கள்) என ஏராளமான தகவல்கள் உண்மையிலேயே வியப்பூட்டின.


ஒவ்வொரு குழுமத்தின் கதையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், என்னைக் மிகவும் கவர்ந்தது இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் MRF நிறுவனத்தின் கதை தான். அதன் நிறுவனர் மேமன் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட ரப்பர் தோட்டங்கள் சொந்தம். அதனால் அவர் முதன்முதலில் உற்பத்தியில் முதலீடு செய்ய முடிவெடுத்த பொருள் – பலூன். ஆம் பலூன்களே தான்; 10,000 ரூபாய் முதலீட்டில் சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலை தொடங்கி, பின்பு தரமில்லாத ஆனால் விலை குறைவான சீன பலூன்களின் போட்டி காரணமாக (அப்போதே சீனாவின் போட்டி) பலூன்கள் தயாரிக்கிற முடிவை விட்டுவிட்டு பொறியியல் உபகரணங்கள், லேட்டக்ஸ் பொருட்கள் என பாதையை மாற்றி treading rubber என்கிற வாகனங்களின் சக்கரங்களுக்குத் தேவைப்படுகிற ரப்பர் ஷீட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்து, பின் ஜெர்மானிய/ஐரோப்பிய/அமெரிக்க நிறுவனங்களோடான வர்த்தக ஒப்பந்தம்; அவர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து இங்கேயே டயர் உற்பத்தி; விளம்பரங்கள், விளையாட்டுத் துறையில் முதலீடு (சச்சின் பேட், கார் பந்தயங்கள், சென்னையின் பேஸ் ஃபவுண்டேஷன்); என வளர்ந்து இன்று இந்திய சந்தையில் 25% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கின்றது MRF.

1960-களின் இறுதியில் தொடங்கி 70களின் மத்தியில் வரையிலும் வங்கிகளின் தேசியமயமாக்கம், MRTP (Monopolies & Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியவற்றால் தனியார் தொழில்துறை மொத்தமாக முடங்கிப்போகின்றது. 80களில் கொஞ்சமாய் மாற ஆரம்பித்த இந்த பொருளாதார/தொழில்துறை மந்தநிலை உலகமயமாக்கலுக்குப் பின் பல கதவுகளைத் திறந்துவிட்டு எண்ணிலடங்கா வாய்ப்புகளையும் உருவாக்கியது. இந்த நேரத்தில் சந்தையில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றி நிறைய பேசுகிறார் சுஷிலா. நிதி நிறுவனங்கள் (ஸ்ரீராம் குழுமம்), மருத்துவத்துறை (அப்பல்லோ குழுமம்), பெட்ரோலிய ரசாயனத் துறை (SPIC) ஆகியவை இவற்றுள் அடக்கம். 

90களுக்குப் பின் தகவல் தொழில்நுட்பம் / தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தில் உருவான நிறுவனங்களாகிய சிஃபி (சத்யம் குழுமம்), சன் குழுமம் (மாறன் சகோதரர்கள் - ஊரறிந்த கதை), TCS, Polaris, Cognizant, Ramco ஆகியவற்றின் தொடக்ககால கதைகள் மட்டுமின்றி, செஷல்ஸ் சிவசங்கரன் (டுபாக்கூர் போலி முதலீட்டாளர்களின் முன்னோடி), முதலீட்டாளர் P.ராஜரத்தினம் (பாடாவதி நிறுவனங்களாய்ப் பார்த்து பார்த்து கையகப்படுத்துவதிலும் எங்கிருந்து முதலீடு வந்ததென்பதை அதீத இரகசியமாக வைத்திருப்பதிலும் பெயர் ‘போனவர்’; சிறைவாசம் அனுபவித்து மீண்டும் வந்து ஒரு சுற்று ஆடி பின்பு மர்மாகிவிட்டார்) என பலரையும்/பலதையும் பற்றிப் பேசிச் செல்கிறார் சுஷிலா. 

தமிழகத் தொழில்துறை வளர்ச்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பெரும்பங்கு பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. அதில் முதன் முதலாக தென் கொரியர்கள் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ஹ்யூண்டாய்,  தமிழக அரசு மற்றும் TIDCOவின் பெரு முயற்சிக்குப் பின் இங்கு வந்த ஃபோர்ட் நிறுவனம் (அவர்களுடைய ஆயிரெத்தெட்டு அபூர்வ நிபந்தனைகள்..!!), ஜப்பானிய-ஃப்ரென்ச் கூட்டுத்தயாரிப்பான ரெனோ-நிஸான் நிறுவனம், டஃபே ட்ராக்டர்கள், பழம்பெரும் அஷோக் லேலாண்ட், ராயல் என்ஃபீல்டு என அத்தனை நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டிருக்கின்றது.

மொத்த புத்தகத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற நகரங்களில்/ஊர்களில் உருவான industrial clusters பற்றிய தகவல்கள் தான். கோவையில் மட்டுமே நூற்பாலைகள் (PSG குழுமம், பன்னாரி அம்மன் குழுமம்), பம்ப் தொழிற்சாலைகள் (CRI பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ்), ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், நூற்பாலை இயந்திர பாகங்கள், பிற மோட்டார்(கள்) உற்பத்தி என வகை வகையாக ஏகப்பட்ட தொழிற்சாலைகள். இது போக திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் (ஏற்றுமதி / இறக்குமதி தனிக்கதை), சங்ககிரி/திருச்செங்கோடு பகுதிகளில் போர்வெல் ரிக் லாரிகள் (எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4000க்கும் மேல்), சிவகாசியில் தீப்பெட்டி - பட்டாசுகள் - அச்சு, நாமக்கல்லில் கோழி/முட்டை பண்ணைகள், வட ஆற்காடு மாவட்டங்களான வேலூர்/ஆம்பூர்/வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. 


இது போக ஈரோடு (சக்தி மசாலா); சேலம் (K.P.நடராஜன் - KPN ட்ராவல்ஸ்); திருச்சி (லயன் டேட்ஸ்); ராம்ராஜ் வேஷ்டிகள்; சாஷே பாக்கெட்டுகளால் நுகர்வோருக்கான சில்லறை விற்பனை சந்தையில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்திய கவின்கேர் குழுமம்; பால் சார்ந்த தயாரிப்புகளில் பட்டையைக் கிளப்பும் ஹேட்சன் குழுமம் (ஆரோக்யா பால், ஐபாகோ ஐஸ் க்ரீம்); இப்படி ஒவ்வொரு நிறுவனமும் உருவான விதமும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் நிச்சயம் உங்களை அசரடிக்கக் கூடும். இறுதியாக தமிழகத்தின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரான ஸ்ரீதர் வேம்பு (Zoho corp), கிரீஷ் மாத்ருபூதம் (Freshdesk), சுரேஷ் சம்பந்தன் (OrangeScape), கிரீஷ் ராமதாஸ் (Magzter) போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு.

தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், பெருமுதலாளிகள் (காம்ரேடுகள் மன்னிக்க) பற்றிய கதைகள் மீது எப்போதுமே எனக்கு அதீத ஆர்வமுண்டு. இவர்கள் தங்களுடைய பயணத்தை எங்கே தொடங்கியிருப்பார்கள் ? தங்களுடைய பாதை இதுதானென எப்படி முடிவு செய்திருப்பார்கள் ? பரம்பரை பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காலத்தை மீறிய கனவைச் சுமந்தபடி பெரும் யோசனைகளோடு ஏதோவொரு புள்ளியில் அத்தனை எண்ணங்களையும் செயல்வடிவமாக்கி வெற்றிக்கதைகளோடு வலம் வருபவர்களாக இருப்பார்கள். அல்லது எழவே முடியாமல் தடம் தெரியாமல் வீழ்ந்திருப்பார்கள். 

என்னைப் போலவே உங்களுக்கும் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார மாற்றங்களினால் விளைந்த நிகழ்வுகள், வெற்றி/தோல்வி கதைகள் குறித்து அதீத ஆர்வம் இருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகம் உங்களுக்கு செம்மை தீனி...! கட்டாயம் படிக்கவும்

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’பாயும் தமிழகம்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அதை வாங்க இங்கு: க்ளிக்கவும்







செவ்வாய், 21 நவம்பர், 2017

ஆஃபிஸ் 1st anniversary function - ப்ளானிங் பரிதாபங்கள் - கற்றதும் பெற்றதும்



Well…ரொம்ப பெருசா எதையோ சாதிச்சு முடிச்ச மாதிரியான மனநிலைலதான் இந்த போஸ்ட்ட எழுத ஆரம்பிக்கிறேன். இப்போ நான் வேலை செய்ற ஆஃபிஸ்ல சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. வழக்கமான captive அதே brand பெயர்ல ஆரம்பிக்காம ஒரு funded startupஆ ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்குள்ள நல்ல வளர்ச்சியும் அடைஞ்சுருக்கு.

எனக்கு எப்பவுமே ரெண்டு விஷயங்கள் ரொம்ப பயம். பொறுப்பெடுத்துக்குறது, திட்டம் போட்றது இது ரெண்டும் தான் அது. எந்த விஷயத்துக்கா இருந்தாலும் being held responsible for something and planning for something is always a pain in the ass. அதே மாதிரி ஒரு எடத்துல ஒரு விஷயத்துக்கு ஆள் இருக்காங்கன்னா வீம்பா அத பண்ணமாட்டேன். அதான் இதப்பண்றதுக்கு ஆள் இருக்காங்கள்ல அப்றம் நாம வேற என்னத்த புதுசா பண்ணி கிழிச்சுடப்போறோம்னு ஒரு மெதப்பு. சோம்பேறித்தனமும் ஒரு காரணம்.

இதுக்கு என்ன பண்ணலாம். நம்மளோட manufacturing defect எப்டி re-engineering பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தப்ப தான் ஜூலை மாசக் கடைசில ஆஃபிஸ் மொத்தத்துக்கும் சீட் ப்ளான் ரெடி பண்ற வேலை வந்து என் தலைல விழுந்துச்சு. Business Analystக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா ஒரு ஆணியும் இல்லதான். ஆனாலும் நாமதான் நம்மள திருத்திக்க ஒரு வாய்ப்பு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோமே. அதனால ஒரு சவாலாதான் இத எடுத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 600 பேருக்கு அவங்கவங்க ப்ராஜெக்ட்\டீம் அடிப்படைல சீட் ப்ளான் பண்ணி அந்தந்த மேனேஜர்கள், டீம் லீடர்கள் கிட்ட எல்லாம் பேசி. இத எப்புடி செயல் படுத்தப் போறோம்னு விளக்கம் சொல்லி , இதுக்கு மேல support function teams (IT, Admin, HR, Maintenance) எல்லார்கிட்டயும் பேசி, கிட்டத்தட்ட ரெண்டு மாசம் மெனக்கெட்டு ஒரு weekendல காலைல ஏழு மணிலேர்ந்து நைட்டு பதினோரு மணி வரைக்கும் ஓடி ஓடி coordinate பண்ணி வெற்றிகரமா செஞ்சு முடிச்சேன்.

சக்ஸஸ்…!

இதுக்கு நடுவுல அடுத்த அசைன்மெண்ட். CEO கூப்ட்டு அனுப்புனார் அவர் கேபின்ல மீட்டிங்க்னு HR ஒரு நாள் வந்து கூட்டிட்டு போனாங்க. இன்னும் ஒன்றரை மாசத்துல நம்ம கம்பெனியோட 1st anniversary வருது. நீங்க fun committee சேர்ந்து என்ன பண்ணலாம்னு ப்ளான் பண்ணுங்கன்னு சொன்னார். அப்போ கூட கொஞ்சம் பேர் volunteers இருந்தாங்க. இது செப்டம்பர் மாசம் ரெண்டாவது வாரம் வாக்குல நடந்துச்சு. திட்டம் போட ஆரம்பிக்கும்போது ஆஃபிஸ்ல ஒரு நாள் மட்டும் நடத்த வேண்டிய விழாவா இருந்தத திடீர்னு ரெண்டு தனித்தனி விழாவா மாத்த சொன்னாங்க. ஒரு வீக்கெண்ட் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு விழா அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சு ஆஃபிஸ்ல ஒரு நிகழ்ச்சி.

Event management குழுக்கள் கூடப் பேசி அவங்க கிட்ட கொட்டேஷன் கேட்டு என்னென்ன performance வேணும் எப்புடி நிகழ்ச்சிகள ப்ளான் பண்ணலாம்னு ஆரம்பிச்சு, ஹோட்டல்கள் ஒரு நாலஞ்சு எடத்துல விசாரிச்சு தேதி முடிவு பண்ணி estimates வாங்கி இடத்த போய் பாத்து , இதுலேர்ந்து கடைசியா ஒரு event management குழுவையும், ஒரு ஹோட்டலையும் முடிவு பண்ணி அவங்க கூட அடுத்தக் கட்ட உரையாடல்கள், photo op, employee engagement activities, mailers, internal competitions, lucky draw, creative designing, printing, stage design, Audio Visual, performances, ஹோட்டல்ல மெனு, decoration, எல்லாத்துக்கும் மேல 600சொச்சம் emplyees எல்லாரையும் எப்புடி விழாவுக்கு வரவைக்குறதுன்னு ஏகப்பட்ட டென்ஷன்.

எல்லாருக்கும் transport வேற ஏற்பாடு பண்ண வேண்டியிருந்துச்சு. என்னதான் பத்து பேரு எங்க க்ரூப்ல இருந்தாலும் ஒரே ஒருத்தன் மட்டும் தான் செம்ம pro-active என்னோட counterpart மாதிரி இருந்தான்.ஓடி ஓடி வேலை செஞ்சான். மத்தவங்க எல்லாருமே on and off தான். (கடைசி நேரத்துல transportக்கு வாலண்டியரா வந்த கார்த்தி / ராம் சூர்யா ரெண்டு பேருக்கும் கோவில் கட்டி கும்புடனும்) சரியான ஆளுங்க கெடச்சாதான் அவங்ககிட்ட வேலைய delegate பண்றதுல ஒரு அர்த்தம் இருக்கும். இல்லன்னா எத்தன பேர் இருந்தாலும் வேஸ்ட்தான். வேலைய assign பண்ணிட்டு கூடவே தொறத்தி தொறத்தி follow-up பண்ணி கடைசில நாமளே செய்ய வேண்டியதாயிடும்.

ஒரு கட்டத்துல எங்க கம்பெனியோட CFO / CHRO கூட தினமும் மீட்டிங் வெச்சு பேச வேண்டியதா இருந்துச்சு. அதுபோக CEO வாராவாரம் அப்டேட் கேப்பாரு. பெரும்பாலும் நான் மட்டும் நேரடியா பேச வேண்டியதிருக்கும் இல்லன்னா என் தளபதி மாதிரி இருந்த சரண் பேசுவான். நான் வேற ஏதாவது coordinate பண்ணிட்டு இருப்பேன். நாள் நெருங்க நெருங்க டென்ஷன் கூடிட்டே போச்சு. ப்ளான் பண்ண விஷயங்கள எல்லாம் திடீர்னு திடீர்னு மாத்த ஆரம்பிச்சாங்க லீடர்ஷிப் மக்கள். ஏகப்பட்ட மாற்றங்கள். இதுக்கு நடுவுல வெளிலேர்ந்து ஆஃபிஸ்க்கு மெட்டிரியல்ஸ் எடுக்க வேலைக்காக வர vendors கூடவும் பேசி அவங்க வேலைய மேற்பார்வை பண்ணி ஒருங்கிணைக்கனும்.

ஸ்கூல் காலேஜ்லேர்ந்தே இன்னொரு பிரச்சனை இருக்கு. நாம இந்த extra-curricular activitiesல கலந்துகிட்டாலே உடனே நாம சும்மா வந்துட்டுப் போற மாதிரியும் படிக்கவே படிக்காத மாதிரியும் சில ஆசிரியர்களும் கூடப் படிக்கிற பக்கிகளும் நெனச்சுப்பாங்க/பேசுவாங்க. அதே மாதிரி ஆஃபிஸ்லயும் சில கிறுக்கு கும்பல் இருக்கும். நாம கூடுதலா பொறுப்பெடுத்துகிட்டு ஏதும் வேலை செஞ்சா எதோ நமக்கு வேற வேலை இல்லாத மாதிரி நெனச்சுப் பேசுவாங்க. இவங்கள சமாளிக்குறதுக்காக யோசிக்கிறத விட்டுட்டு மயிராச்சேன்னு கண்டுக்காம விட்டுடலாம். நான் அப்டிதான் விட்டுட்டேன். உண்மைல சொல்லனும்னா இந்த இதர வேலைகளோட சேத்து என்னோட day-to-day deliverables எதையுமே தவறாம பண்ணிட்டு தான் இருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா ராத்திரி வீட்டுக்கு வர ரெண்டு மூனு மணி ஆய்டும். வாரயிறுதில கூட ஏதாவது வேலை இருந்தபடியேதான் இருந்துச்சு.

இப்படியாக பல போராட்டங்களுக்கிடையில 12ஆம் தேதி off-site eventஅ வெற்றிகரமா நடத்தி முடிச்சோம். அதுக்கப்புறம் 16ஆம் தேதி நிகழ்ச்சி எங்க ஆஃபிஸ்லயே. அதுவும் நல்லவிதமா முடியனும்னு மனசு பதட்டத்துலயே இருந்துச்சு. அன்னைக்கு என்னையே MC பண்ண வேற சொல்லிட்டாங்க. அதுக்கு முந்தின நாள் ராத்திரி வரைக்கும் எதுக்கும் சரியான தகவல்கள் இல்ல. Stage setup எல்லாம் மேற்பார்வை பாத்துமுடிச்சு வீட்டுக்குப் போகவே ராத்திரி 1.30 மணி ஆச்சு. மறுபடி 7.30 மணிக்கெல்லாம் ஆஃபிஸ் வந்து தான் பல விஷயங்கள தயாரிக்க ஆரம்பிச்சேன். அதுலயும் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் தாமதமாகி, பத்து தடவைக்கு மேல நிகழ்ச்சியுடைய வரிசைய மாத்தி நடுவுல நடுவுல கூடுதலா தகவல் சொல்லி ஒரு வழியா அதையும் வெற்றிகரமா முடிச்சாச்சு. மாத்தி மாத்தி ஏகப்பட்ட ‘Good job’.. ‘You guys have put up a great show’ ‘ Well done guys’…!! கைத்தட்டல்கள்…!

இந்த மூனு நாலு மாசத்துல கத்துக்கிட்டது எவ்வளவோ விஷயங்கள் . Finance, Planning, Budget, Purchase Order, Procurement, Vendor Management, Quotation, Negotiation, Production, Transport, Security, Bill to Company, Hospitality, Food and Beverages, Guest Management, Branding, Resource Management, Employee Engagement, Administration இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இதுக்கும் மேல CEO / CFO / CHRO / COO மாதிரி executive leadership மக்களோடான day-to-day interaction. அவங்க சொல்ற விஷயங்கள் . அவங்களோட பார்வைல எப்படி யோசிக்கிறாங்க…What matters to them..! இப்படியாகக் கற்றுக்கொண்டவைகளைத் தாண்டி என்னை நானே re-invent பண்றதுக்கு இது ஒரு அட்டகாசமான வாய்ப்பா அமைஞ்சுது. நம்மளால என்ன முடியும் என்ன முடியாதுன்னு தெரிஞ்சுது. இவ்வளவு நாளா எப்பவுமே எதையாவது யோசிச்சபடியே pre-occupied இருந்த மனசு அப்டியே அமைதியா தெளிவா இருக்கு. ரெண்டு மூனு நாளா தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கேன்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தேடலின் முடிவு அல்லது அடைதலின் தொடக்கம் - Ineffable Epiphany

Caption: https://minimograph.files.wordpress.com/2013/10/mg_roach1.jpg
பேரன்பின் பார்ட்னருக்கு,

ஓவ்வொருமுறை உனக்கு கடிதமெழுதும் போதும் ஒரு காரணத்தை யோசிப்பது பெரும் அயற்சியைத் தருகிறது பார்ட்னர். இப்போதும் அன்றி இனியெப்போதும் உனக்கு கடிதமெழுத நேர்ந்தால், ஒரு போதும் அதற்கான காரணம் சொல்லப்போவதில்லை நான்.

ஆங்கிலத்தில் 'Hopeless Romantic' என்றொரு சொற்றொடர் உண்டு. பகல் கனவு காண்பவர்களாகவும், எப்போதும் காதல் பற்றிய நினைப்பிலேயே மூழ்கியிருப்பவர்களாகவும், கனவுலாவிகளாகவும், கவிஞர்களாகவும் திரிகிறவர்களை அப்படிச் சொல்வார்களாம் . என்னைப் பற்றிக் கேட்போரிடத்தில் நானும் இப்படிச் சொல்லிக்கொள்ளலாமோ என யோசித்திருக்கிறேன். காதலும், தனிமையும், வலியும் அன்றி கவிதைகள் ஏது பார்ட்னர் ?

அவ்வப்போது ஏதேனும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு அன்பால் நிறைந்துகிடக்கிற மனத்தினின்று ஒரு போதும் துயரம் தோய்ந்த வார்த்தைகள் வந்து விழுவதில்லை பார்ட்னர்.  அத்தனையும் வடிந்தபின்னான தனிமைசூழ் இரவுகள் தாம் ஆகக் கொடுமையானவை. காதலற்ற வெற்றிடத்தில் ஆழ்மனத்திலிருந்து வார்த்தைகள் தோண்டியெடுக்கப்படுகிற பின்னிரவுகள். வார்த்தைகளின் பாரத்தில் சிக்கி உறக்கமிழந்து மூச்சு திணறத் திணற மெல்ல மெல்லக் கடக்கிற பின்னிரவுகள். கொஞ்ச காலமாய் இந்த வெற்றிடத்தை அவ்வப்போது  ரூமியின் கவிதை கொண்டு இட்டுநிரப்பிக்கொள்ளுகிறேன் பார்ட்னர்.

ஓர் தனிமைசூழ் இரவில் பெய்கிற பெருமழை, ஒன்றுபோல அற்புதமானதாகவும் அதீதமான வலிதரக்கூடியதாகவும் அமைந்துவிடுகின்றது பார்ட்னர்.அப்படியான சூறைக்காற்றோடு பெருமழை பெய்த ஒரு பின்னிரவில் ரூமியின் கவிதைப் புத்தகத்தைக் கையிலேந்தியபடி வீட்டு மாடத்தில் நின்று இந்தக் கவிதையை உரக்கப் படித்தேன் .

’மிதத்தல்’

காதல்
எனது பழக்கங்களைப் பறித்துக்கொண்டு
கவிதையால் 
என்னை நிரம்பிவழியச் செய்தது

’நீயன்றி வேறெந்த பலமும் இல்லை’ 
என மீண்டும் மீண்டும் முனக முயன்றேன்
ஆனால் முடியவில்லை

கைகொட்டிப் பாடவேண்டிய 
நிர்பந்தத்திற்கு ஆளானேன் நான்
கெளரவமாகவும் ஒழுக்கம் தவறாதும்
மனவுறுதியோடும்தான்
இதுவரை இருந்துவந்தேன்
ஆனால் இந்த சூறைக்காற்றில் 
நின்றுகொண்டு
அவற்றையெல்லாம் எவரால்
நினைவூட்டிக்கொள்ள இயலும்?

ஒரு மலை தனது அடியாழத்தினுள்
ஒரு பேரொலியைத் தக்கவைத்திருக்கிறது.
உனது குரலை நான் வசப்படுத்தி வைத்திருப்பதும் 
அவ்வாறே
....

இப்படியாகத் தொடற்கிற அந்தக் கவிதையை வாசித்தபின், தொடர்ந்து மழை பெய்த அந்த இரவில் நான் கொஞ்சமும்  உறங்கவே இல்லை பார்ட்னர்.
இத்தனை ஆண்டுகளில் நான் கடந்து வந்து விட்டதாய் நினைத்த மனங்கள் எதையுமே நான் கடக்கவேயில்லை என உணர்கிறேன் . நான் அவ்விடத்திலேயே தான் நின்று கொண்டிருக்கிறேன். நான் கடந்ததாய் நினைத்த அத்தனை மனங்களும் என்னைக் கடந்து சென்றுவிட்டிருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன்; நான் அப்படியே அவ்விடத்திலேயேதான் நின்றுகொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

அவ்வப்போது என் கூட்டிலிருந்து வெளியே வந்து சக உயிர்களிடத்தே பேச முயற்சி செய்கிறேன் பார்ட்னர். இரவும் பகலும் தேயத் தேய எவ்வளவு பேசினாலும் தீராத அளவு கதைகள் இருந்தாலும், மனம் முழுக்க பாடல்களும் கவிதைகளுமாய் நிறைந்து கிடந்தாலும் , ஏனோ மனமடங்கி  ஒரு புன்முறுவலோடு விடைபெற்று என் கூட்டிற்கே திரும்பிவிடுகிறேன் நான்.
தனிமையென்பது விதிக்கப்பட்டதில்லை பார்ட்னர்... பழக்கப்பட்டது... அவ்வளவே..!அடங்கலும் அலைதலுமாய் மனம் திரிகிறபோதெல்லாம் வாலாட்டியபடி என்னைப் பின் தொடர எனக்கொரு நாய்க்குட்டி இருந்திருக்கலாமெனத் தோன்றும். அல்லது நானே ஒரு நாய்க்குட்டியாய் இருந்திருக்கலாமெனத் தோன்றும்.

இந்தப் பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கிற இந்த இரவில் மீண்டுமொரு அசுர மழை. இந்தக் கடிதத்தை நான் எழுதத்தொடங்கியதும் இதே மாதிரியான ஒரு மழைநாளின் இரவில் தான் பார்ட்னர். சக பதர்களை விட்டு விலகி சலனமற்று  உயரப்பறக்கும் ஒற்றைப்பறவைகளுக்கென தனித்துவமாய்ப் படைக்கப்பட்டவை இந்த மழையிரவுகள் . வாதைகளினின்று மீள வார்த்தைகளைத் துணைக்கழைத்துக் கொள்ளுகிற  அற்ப கவிப்பயல்களுக்கானவை இவ்விரவுகள். போய்ச் சேருமிடத்தையோ போகிற வழியையோ முடிவு செய்யாமல் மனம்போலப் பயணிக்கிற ஒரு நாடோடியைப் போல, எந்த முடிவுகளுமின்றி தெளிவுகளுமின்றி வாழ்வைக் கடத்துகிறவனின் கடிதங்களும் அப்படியே மனம்போன போக்கில் தானே இருக்கும்.

உனக்காய் நான் எழுதிய முதல் கடிதம் அன்றி மற்ற அத்தனையும் நான் எனக்காய் எழுதியவை பார்ட்னர். நித்ய பயணியாய் இருந்தவன் சற்றே நின்று நிதானித்து யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.என்னால் எழுதப்படுகின்ற அத்தனைக் கடிதங்களும் எதனை அல்லது யாரை முன்வைத்து எழுதப்படுகின்றன ? நீயெனும் நீ நிஜத்தில் இல்லையெனக் கொண்டால் யார் வாசிக்கும்பொருட்டு நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ?

உலகின் எங்கோ ஒரு மூலையில் புதையல் நிறைந்துகிடக்கிற ஏதோவொரு குகையை திறந்துவிடும் மந்திரத்தை எப்படியோ கற்றுக் கொண்ட ஒரு சிறுவன், தான் கடந்து போகிற பாதையிலுள்ள அத்தனை மலைக் குகைகளின் முன்பும் அந்த மந்திரத்தைச் சொல்லி திறக்க முயற்சிப்பது மாதிரியானது என் செயல். எண்ணக் குமைச்சலின் எழுத்துக் குவியல்களை கடிதக் கற்றைகளாய் கைகளில் சுமந்தபடி, எதிர்படுகிற அத்தனை பேரிடமும் படிக்கச் சொல்லி, ஏதேனும் புரிகிறதாவெனக் கேட்டு முகம் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறேன் பார்ட்னர். கண்களில் தேடலும், நாவில் பாடல்களும், மனதில் கவிதைகளும், கைகளில் கடிதங்களும், கால்களில் சோர்வும் கொண்டு நான் தொடர்ந்த/தொடர்கிற என் தனிப்பயணம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாய் உணர்கிறேன் பார்ட்னர்.

ஆம். அந்தக் கடைசி வரியை எழுதும்போது இடது கண்ணிலிருந்து உருண்ட ஒற்றைக் கண்ணீர்த் துளியைச் இடதுகை ஆட்காட்டிவிரலால் சுண்டிவிட்டபடி மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன் பார்ட்னர்.

ஆனாலும்... இன்னும் முடிவாய் ஏதும் சொல்லாமலேயே விடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவே செய்தி .

மகிழ்ந்திரு...!

தேடல் தீர்ந்ததென முடிவுசெய்யும் தருவாயில்,
நான்...!

வியாழன், 8 ஜூன், 2017

இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று


ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் தோன்றுகிற பதிலை கடைசியில் சொல்கிறேன்.

பொதுவாகவே படைப்பாளிகளுக்குத் தன் படைப்புகளின் மீது அதீதமான பெருமையும்/உரிமையும் இருக்கும். அத்தகைய உயர்ந்த படைப்பை உருவாக்கிய ஒரு கவிஞன், தன் படைப்பை, தன் மகத்தானதொரு கவிதையை ”இது இனி என்னுடையதல்ல. எனக்குரியதல்ல…இது வேறொருவருக்குச் சொந்தமானது” என்று சொன்னவரையும் , சொல்லவைத்தவரையும் பற்றிய கதை இது.

நூர் ஜெஹான் - பிரிவினைக்கு முந்தைய இந்தி(ய) திரையுலகின் பிரபலமான பாடகி/நடிகை. பாகிஸ்தான் பிரிந்தபின் “நான் எங்கே பிறந்தேனோ அங்கேயே செல்ல விரும்புகிறேன்” என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு பாகிஸ்தான் சென்றவர். அந்நாட்டு மக்களால் ’மேடம்’ நூர்ஜெஹான் என அன்போடு அழைக்கப்பட்டவர்...! பாகிஸ்தானின் உருது திரைப்படங்களில் அற்புதமான பல பாடல்களைப் பாடியவர்.


ஃபைஸ் அகமது ஃபைஸ் - . தீவிரமான மார்க்சிய-இடதுசாரி சிந்தனையாளர்; எழுத்தாளர்; உருதுக்கவிஞர். ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தில் இந்தியாவுக்காக இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றவர்,1947க்குப்பின் ராணுவத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு லாஹூருக்குச் சென்றபின் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.பாகிஸ்தான் டைம்ஸ் என்க்ற இடதுசாரி ஆங்கில பத்திரிகையிலும், வேறு சில உருதுப் பத்திரிக்கைகளிலும் பணிபுரியத் தொடங்கினார்.இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகள் உச்சக்கட்டதிலிருந்த காலத்திலேயே காந்தி கொல்லப்பட்டபோது லாஹூரிலிருந்து டெல்லிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவர். பாகிஸ்தானின் இடதுசாரி தலைவர்களோடான நட்பும், கம்யூனிச சித்தாந்தப்பிடிப்பும்,இவரை பாகிஸ்தான் அரசாங்கத்தால் சிறையில் தள்ளப்படுமளவு கொண்டுபோனது.
நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ஃபைஸை வரவேற்க கவிஞர்களும், கலைஞர்களும் சிறைவாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நூர்ஜெஹானும்.

 ஃபைஸ் வந்ததும் அவருடைய புகழ்பெற்ற கவிதைகளில் (Nazm) ஒன்றான ’முஜ்சே பெஹ்லி சி ’  (Mujhse pehli si mohabbat mere mehboob na mang) யை தானே மெட்டமைத்து பாடுகிறார் நூர்ஜெஹான்.சுற்றியிருந்த அத்தனை பேரும் அவருடைய குரலில் கட்டுண்டதுபோகிறார்கள். நூர்ஜெஹான் பாடிய விதத்தில் நெகிழ்ந்து போன ஃபைஸ் “இதை விட சிறப்பாக இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியாது. இந்தக் கவிதை இனி உன்னுடையது” என்று சொல்லி அந்தப் பாடலையே அவருக்கு பரிசாக வழங்கிவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் 1962ஆம் வருடம் ‘கைதி’ திரைப்படத்தில் நூர்ஜெஹான் இந்தப் பாடலைப் பாட , பாடல் சூப்பர்ஹிட்டாகிறது. அதன் பின் பல தருணங்களில் பல் மேடைகளிலும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார் நூர்ஜெஹான். பின்னாட்களில் ஃபைஸிடம் இந்தக் கவிதை குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் அவர் சொன்ன பதில், “ அந்தப் பாடல் என்னுடையதல்ல. என்றோ நூர்ஜெஹானுடையதாகிவிட்டது...!”

நான் இந்தப்பாடலை முதன் முதலில் கேட்டது 'Ae dil hai mushkil' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தான். பின்பு அந்தப் பாடல்வரிகளை வைத்துக் கொண்டு தேடப்போக அதன் பின் இப்படியொரு நெகிழ்ச்சியான வரலாறு இருப்பது தெரியவந்தது. எதற்காக இந்தப் பாடல் இப்படி கொண்டாடப் பட்டது என்பதற்கான காரணம் அந்தப் பாடல்வரிகளின் பொருளைத் தெரிந்து கொண்டபோது புரிந்தது. 


Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat
Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai

Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye
Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism
Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Mujh se pehli si muhabbat mere mehboob na maang


My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;
so my love, do not ask from me
the love we shared once before.


இந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் கதையையும்,  உயிர்தந்து காற்றில் மிதக்கவிட்ட பாடகியின் கதையையும் தாண்டி, ஏதோவொன்று நம்மை அலைக்கழிக்கின்றது. வரிகளில் பொதிந்து கிடக்கிற தனிமையும் துயரமும் மகிழ்ச்சியும் ஒருங்கே உறக்கம் கெடுக்கின்றன. There's something about this song. Something mystic and spiritual at the same time.

இது கைதி திரைப்படத்தில் அவர் பாடிய version :
(In a soft and sharp voice tone) 


இது unplugged version. ஃபைஸின் முன்பு முதன்முதலில் பாடப்பட்ட பாடலின் பதிவு என்றும் சொல்லப்படுகின்றது: 
(Bass/dense voice tone) 


பின்னொரு நாளில் BBCன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடியது:


ஃபைஸின் குரலிலேயே கேட்க:


நான் கேட்டதிலேயே அட்டகாசமான வெர்ஷன்  ஸோரா செகல்’ன் recital (டைட்டன் விளம்பர பாட்டி) 


If at all you're interested to dig up more on F.A.Faiz and Noor Jehan...below are the external references:

1. https://scroll.in/article/678792/someday-i-might-end-up-as-a-poet-prison-letters-from-faiz-ahmed-faiz-to-his-wife

2. https://scroll.in/article/805932/how-faiz-ahmed-faizs-most-famous-poem-came-to-be-written

3. https://thereel.scroll.in/927/how-noor-jehan-took-mujh-se-pehli-si-mohabbat-mere-mehboob-na-maang-away-from-poet-faiz-ahmed-faiz

4. https://scroll.in/article/756301/indias-loss-pakistans-gain-the-journey-of-singing-great-noor-jehan-after-1947

5. http://lithub.com/why-we-need-revolutionary-poet-faiz-ahmed-faiz-more-than-ever/

ஞாயிறு, 4 ஜூன், 2017

உறவு, பிரிவு மற்றும் பல - Rhetoric of a Solivagant

Courtesy: Psychedelic Drawing by Japanese Artist Lutamesta - Pinterest

பேரன்பின் பார்ட்னருக்கு,

என் உலகத்து நிகழ்வுகள் குறித்தான விவரனைகளோடும் அயற்சியோடும் நான் எழுதத்தொடங்கிய.. எழுதுகிற கடிதங்கள் இப்படி தொடர்கதையாகுமென ஒருபோதும் நினைத்ததில்லை பார்ட்னர். மனிதக்கூட்டத்தோடிருக்கையில் தனிமையையும் தனிமையில் இருக்கையில் மனிதர்களையும் தேடுகிற வித்தியாசப் பிறவியாய் மாறி வருகிறேன். புத்தகங்களுள் உறைந்துலாவல் வேறு மாதிரியான தற்காலிக தப்பித்தல். அவ்வப்போது அவ்வுலகிலும் திரிந்து திரும்புகிறேன். இலக்கில்லாத பயணியாயினும் திரும்பி வர வீடில்லாது போனால் அத்தனையும் அற்றுப்போகுமல்லவா. அது போல, எத்தனை முகங்கள் கண்டு, எத்தனை குரல்கள் கேட்டு, எத்தனை சிரிப்புகளைக் கடந்து வந்தாலும் திரும்பி வந்து தஞ்சமடைந்து இளைப்பாற எனக்கென ஒரு மனம் காத்திருக்காத இரவுகள் மிக நீளமானவை பார்ட்னர்.

மனங்களின் அருகாமையை விரும்புகிற மனது மனிதர்களை விட்டு விலகி நடக்கின்றது. திடீரென எனக்காய் யாரேனுமோ அல்லது யாருக்கேனும் நானோ ஒரு பாட்டுப் பாடினால் நன்றாயிருக்குமெனத் தோன்றுகிற பின்னிரவுகளின் போதேல்லாம் உன் இன்மையை உணர்கிறேன் பார்ட்னர். அன்பைச் சொல்ல ஆயிரம் வழிகளுண்டு. இந்தப் பாழும் பிரிவை வெற்று வார்த்தைகளன்றி வேறு எப்படித்தான் சொல்லித் தொலைவதாம். கண்டு கேட்டுணர்ந்த கதைகளை உரையாடல்களின் பொழுது கொட்டித்தீர்த்துவிடும் பொருட்டு, மனதுள் சூல் கொண்ட வார்த்தைகள் சூழ்ந்தழுத்திச் சுழல்கின்றன.

பிரிவுகளைக் குறித்து எழுதுகிற பெருங்கவிகளைப் பற்றி நான் கொண்டிருக்கிற அதீத மனச்சித்திரங்களைப் போலவே நானும் மனந்திரிந்து கொண்டிருக்கின்றேனோ என்கிற கேள்வி அடிக்கடி எழுகின்றது பார்ட்னர். முழுவதுமாய் பிறழ்ந்துவிடாத ஆனால் இரட்டை நிலையைக் கொண்டிருக்கிற ஒரு மனநிலை எனக்கு.ஆனாலும் உறங்கி விழிக்கிற ஒவ்வொரு நாளும் எதிர்படுகிற அத்தனை மனங்களையும் புன்னகையோடும் ஆரவாரத்தோடுமே எதிர்கொள்கிறேன். ஒவ்வொரு நொடியையும் கொண்டாடிக் கடக்கிறேன்.நெடியதொரு தேடலுக்கிடையேயான கொண்டாட்டங்களா அல்லது மிக நீண்ட காத்திருத்தலுக்கு முன்பான கொண்டாட்டங்களாவெனத் தெரியாமலேயே, தெரிந்துகொள்ள விரும்பாமலேயே அனுபவித்துக் கடந்துகொண்டிருக்கின்றேன்.

சமீபத்திய தனிப் பயணம் நீண்ட நாட்களுக்குப் பிறகான பெரும் ஆறுதல். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வு குறித்த பெரும் கவலைகளோடும் , அதீத உயிர்பயத்தின் காரணமாகவும், ஒவ்வொரு கொண்டையூசி வளைவிலும் காலூன்றி மெல்ல முன்நகர்ந்து மேலேறிய மலைப்பாதைகளில், எவ்வித அச்சமோ கவலையோ இன்றி மலைப்பாதையின் ஒவ்வொரு வளைவிலும் இரும்புக்குதிரையின் குளம்புகள் உரச உரச காடதிரச் சிரித்தபடி மேலேறினேன். காடும் , இரவும், குளிரும் இன்ஜின் உறுமலும், வெப்பமும் பின் நானும் ஒரு புள்ளியில் கலந்துவிட்ட இரவது. வாழ்க்கையையும் இப்படியே ஒரு மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத இரவுப்பயணம் போலவே எதிர்கொள்ள விரும்புகின்றேன்.

உயிரறுக்கிற பிரிவுகளின் மீது தீராக் கோபம் உண்டெனக்கு. ஆனாலும் பிரிவுகளைப் போல் மகத்தானவை வேறேதும் இல்லையென்பேன் பார்ட்னர். ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணம். ஒவ்வொரு முதல் சந்திப்பும் ஒரு மறுபிறப்பு. உறவுக்கும் பிரிவுக்கும் இடையே ஊடாடி மாண்டு மீள்கிற அற்பனுக்கு, வாழ்நாளைக்கும் நினைத்து அசைபோடவும், பொருத்தமில்லாத தருணங்களில் தனக்குத்தானே ஒற்றைச் சிரிப்பு சிரித்துக் கொள்ளவும், வார்த்தை தீரக் கடிதமெழுதவும், சுற்றம் முற்றும் மறக்கவும், தீராக் காதலை எதிர்கொள்ளவும், இன்னும் யாருக்கும் வாய்க்காத ஏதேதோ விஷயங்களைக் கைக்கொள்ளவும், கதைகளையும், கனவுகளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்வதே அந்த உறவுக்கும் பிரிவுக்குமிடையேயான சுழற்சி தான் இல்லையா ?  ஆதலால் பிரிவுகள் எப்போதும் மகத்தானவை பார்ட்னர்.

நாட்கணக்காய் நான் எழுதிக்கொண்டேயிருக்க, நீண்டுகொண்டே செல்கிற இந்தக் கடிதம் போல, இரவுகளுக்கும் பகலுக்குமான தூரம் நீண்டபடியே செல்கிறது. பகல் ஒன்றேதான். மாறுவதும் நீண்டு தேய்வதும் இந்த பாழும் இரவுகள் தான் பார்ட்னர். பல்லாண்டுகளாய் பற்றித் திரிந்த உறவுக் கயிற்றின் கடைசி ஒற்றை இழையும் இப்போது  அறுந்துவிட்டதாய் உணர்கிறேன். உறவுகள் குறித்தான கேள்விகளுக்கு எப்போதுமே தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தவனில்லை நான். முடிவான முடிவை வார்த்தைகளில் சொல்ல யத்தனித்து இறுதியில் மென்று விழுங்கி, ஏதும் சொல்லாமல் காலமெனும் பெருந்திரையின் பின்னே ஓடியொளிந்து கொள்கிற அற்பன். எப்போது திரும்பினாலும் விட்ட இடத்திலேயே நின்று, தொடங்கித் துரத்துகின்றன கேள்விகள். தப்பியோடலும் வீடுதிரும்பலுமாய் நிகழ்கிற இந்த காலச்சுழல் எப்போதுதான் முற்றுப்பெறுமோ தெரியாது பார்ட்னர். எல்லோருடைய கதைகளுக்கும் கனவுகளுக்கும் எப்போதுமே செவிமடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறவனுடைய கதைகளை யார்தான் கேட்கப் போகிறார்கள் ?

கேட்க யாருமில்லாமல் போனால் அர்த்தமற்றுப் போகிற உரையாடல்களைப் போலல்லாது ,ஒரு கடிதம் எக்காலத்திலும், யாருக்கும், எப்போதும், பொருள்படக்கூடியதாய் இருக்கும் என்பதனாலேயே நிறைய கடிதங்கள் எழுத விரும்புகிறேன் பார்ட்னர். சமீபத்தில் ஓர் உறக்கமற்ற இரவினை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட பாடலின் வரிகளை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் பார்ட்னர்.

Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat

Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai
Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye

Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism

Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?

Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Mujh se pehli si muhabbat mere mehboob na maang


**************************************************

My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;

so my love, do not ask from me
the love we shared once before.


நூர்ஜஹான் பாடிய  ஃபைஸ் அஹமதின் கவிதை வரிகளை, உலகம் முழுவதும் விலகிச்செல்கிற அத்தனை இதயங்களுக்காகவும்  சமர்ப்பித்தபடி என் தேடலையும் பயணத்தையும் தொடர்கிறேன் பார்ட்னர்.

மகிழ்ந்திரு...!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்...!!

சனி, 6 மே, 2017

மரணமெனும் பெருவாழ்வு - When Breath Becomes Air - Dr.Paul Kalanithi

Courtesy: http://stanmed.stanford.edu


Don’t think I ever spent a minute of any day wondering why I did this work, or whether it was worth it. The call to protect life—and not merely life but another’s identity; it is perhaps not too much to say another’s soul—was obvious in its sacredness. Before operating on a patient’s brain, I realized, I must first understand his mind: his identity, his values, what makes his life worth living, and what devastation makes it reasonable to let that life end. The cost of my dedication to succeed was high, and the ineluctable failures brought me nearly unbearable guilt. Those burdens are what make medicine holy and wholly impossible: in taking up another’s cross, one must sometimes get crushed by the weight.

என் அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு விஷயம் இது. ”நமக்கு ஒரு விஷயம் புதுசா தெரியுது அல்லது கத்துக்க வேண்டி வருதுன்னா வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல நமக்கோ இல்ல நம்மால யாரோ ஒருத்தருக்கோ அது பயன்படப்போகுதுன்னு அர்த்தம். எதுவும் யாருக்கும் சும்மா வந்துட்றதில்ல... காரணமில்லாம காரியமில்ல...! “

எப்போதும் நமக்குள்ளிருக்கிற தேடல் ஒரு கட்டத்தில் நம்மை வழிநடத்திச்செல்லத் தொடங்கும். மெல்லமாக ஒரு புரிதலில் தொடங்கி, நாம் தேடுகிற விஷயங்களே நம்மைத் தேடி வந்தடைய ஆரம்பிக்கும். இசை, இலக்கியம், நட்பு, காதல், வாழ்க்கை, அமைதி, ஆன்மிகம் என அத்தனைக்கும் இது பொருந்தும்.

அப்படியான தேடலில், நம்மை திடீரென சூழ்ந்து கொள்கிற கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்முடைய உறக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். எதிர்காலம் குறித்த அச்சமும், நாம் இதுவரை வந்த பாதையும் இனிமேல் செல்கிற பாதையும் சரியானவைதானா என்ற சந்தேகமும், தேவையில்லாத கேள்விகளை உருவாக்கி நம்மை கலக்கமுறச் செய்யும். வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் இப்படியான தேடலையும் கேள்விகளையும் கொண்டிருந்த ஒருவர் அதற்கான விடையை தன் வழியாகவே உணர்ந்துகொள்ள நேர்கிற இறுதிக் காலமும், அவர் உணர்ந்தவற்றை இந்த உலகுக்கு சொல்வதும் தான் இந்தப் புத்தகம்.


The throwaway assumption that the mind was simply the operation of the brain [was] an idea that struck me with force; it startled my naïve understanding of the world. Of course, it must be true — what were our brains doing, otherwise? Though we had free will, we were also biological organisms — the brain was an organ, subject to all the laws of physics, too! Literature provided a rich account of human meaning; the brain, then, was the machinery that somehow enabled it. It seemed like magic. That night, in my room, I opened up my red Stanford course catalog, which I had read through dozens of times, and grabbed a highlighter. In addition to all the literature classes I had marked, I began looking in biology and neuroscience as well.

பால் கலாநிதி ஒரு வித்தியாசமான நரம்பியல் அறுவை சிகிச்சை (Neuro-Surgeon) நிபுணர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் குடியேறிய தமிழ்க் குடும்பம் இவருடையது. இளமையில் புத்தகங்கள் மேல் கொண்ட காதல் ஆங்கில இலக்கியம் படிக்க உந்தித் தள்ளினாலும் எதேச்சையாக தோழி ஒருத்தி தந்த ’Satan: His Psychotherapy and Cure by the Unfortunate’ புத்தகத்தைப் படித்ததும் உயிரியலும் படிக்க முடிவு செய்கிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரியலும் படித்த ஒருவர் எந்தமாதிரியான ஒரு சிந்தனையையும் கருத்தாக்கத்தையும் கொண்டிருந்திருப்பார். மொழியும், அறிவியலும், மனமும், தத்துவங்களும் சந்திக்கிற புள்ளியல்லவா இது. இவையத்தனையையும் சாத்தியப் படுத்துகிற மனித மூளையின் பக்கம் அவருடைய கவனம் திரும்புகின்றது.


I had come to see language as an almost supernatural force, existing between people, bringing our brains, shielded in centimeter-thick skulls, into communion. A word meant something only between people, and life’s meaning, its virtue, had something to do with the depth of the relationships we form. It was the relational aspect of humans — i.e., “human relationality” — that undergirded meaning. Yet somehow, this process existed in brains and bodies, subject to their own physiologic imperatives, prone to breaking and failing. There must be a way, I thought, that the language of life as experienced — of passion, of hunger, of love — bore some relationship, however convoluted, to the language of neurons, digestive tracts, and heartbeats. For my thesis, I studied the work of Walt Whitman, a poet who, a century before, was possessed by the same questions that haunted me, who wanted to find a way to understand and describe what he termed “the Physiological-Spiritual Man.”

மொழியின் வழியாக மனித மனத்தையும் வாழ்க்கையையும் அறிந்துகொள்ள நினைத்தவருக்கு மொழி, மனம், எண்ணம், சொல், செயல் அத்தனையுமே உடலியக்கமும் மூளைச் செயல்பாடும் உருவாக்குகிற கூட்டுவிளைவுதான் என்று புரியத்தொடங்கியதும், யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க முடிவு செய்கிறார். கேள்விகளும் தேடல்களும் நிறைந்த அவருடைய கொண்டாட்டமான கல்லூரிக்காலம் பற்றியும் , தான் படித்த அற்புதமான உலக இலக்கியங்கள் பற்றியும் , மருத்துவம் பயிலும்போது தான் எதிர்கொண்ட நோயாளிகள் பற்றியும்  நிறைய பேசுகிறார் பால்.
  • மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை அகற்றும் பொருட்டு சிகிச்சைக்கு வருகிறான் ஒரு எட்டு வயது சிறுவன். கட்டியை நீக்கிவிட்டால் அவனை காப்பாற்றி விட முடியும். ஆனால் பசி, தூக்கம், தாகம், உள்ளிட்ட உணர்வுகளைக் கட்டுபடுத்துகிற ஹைப்போதாலமஸ் கொஞ்சம் சேதமடையும். அந்தச் சிறுவன் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அறுவை சிகிச்சை நடந்து அவன் மேற்சொன்னபடி காப்பாற்றவும் படுகின்றான். 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு பிரச்சனைக்காக மீண்டும் மருத்துவனைக்கு வருகின்றான். ஆனால் பசியைக் கட்டுப்படுத்தமுடியாமல் எப்போதும் தின்று கொண்டே இருந்ததனால் அதீதமாக உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றான். மென்மையான சிறுவனாக இருந்தவன் இப்போது ஐந்து மடங்கு உடல் எடை அதிகரித்து அதீத வன்முறைக் குணம் கொண்டவனாக மனநலமருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு மாறிப்போகிறான். அவனுடைய பெற்றோரோ மருத்துவர்களோ யாருமே எதிர்பார்க்காத திருப்பம் இது. 
  • வெர்னிக் (Wernicke) மற்றும் ப்ரோக்கா (Broca)ஆகியவை மூளையின் முக்கியப் பகுதிகள். ஒரு  மனிதனின் மொழித்திறன், புரிந்து கொள்ளுதல், பேச்சுத்திறன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் இவை. ப்ரோக்கா பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் நோயாளியால் ஒரு மொழியை பேசவோ எழுதவோ முடியாமல் போகலாம். ஆனால் மொழியைப்புரிந்து கொள்ளமுடியும். இதுவே வெர்னிக் பகுதியில் சேதமேற்பட்டால் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் ஆனா பேசவோ எழுதவோ முடியாது. கோர்வையில்லாமல்,அர்த்தமில்லாத  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வார்த்தைகளால் தான் பேச முடியும். அப்படி மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக வெர்னிக் பகுதி பாதிப்படைந்த முதியவர் பற்றிச் சொல்கிறார் பால். மருத்துவர்களோ மற்றவர்களோ எந்தக் கேள்வி கேட்டாலும் அந்த முதியவர் சொல்கிற பதில் வெறும் எண்களாகத்தான் இருக்கும் உதாரணம் "How are you feeling today ?" என்கிற மருத்துவர்களின் கேள்விக்கு “Four six one eight nineteen" என பதில் கிடைக்கும் அவரிடமிருந்து. எல்லா கேள்விகளுக்கும் எண்கள் தான் பதில். இறக்கும் தருவாயில் அவர் ஒரே எண்ணை திரும்பத்திரும்பச் சொல்லியபடி இறந்துபோயிருக்கிறார். அவர் சொல்லவந்த விஷயம் யாருக்குமே சொல்லப்படாமல் அவரோடே  புதைந்துபோனது.
இது போல் இன்னும் ஏகப்பட்ட உதாரணங்கள்...கதைகள்..!!
நோயுற்றவர்களின் கதைகளைக் கேட்கும்போதெல்லாம் நாம் எந்தமாதிரியான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமென யோசிக்கத் தோன்றும். மூளையின் இயக்கம் குறித்தும் இந்த உடலெனும் அற்புதம் குறித்தும் நாம் கொண்டிருக்கிற அத்தனை அலட்சிய எண்ணங்களும் மாறிவிடக்கூடும்.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான உழைப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட அவருடைய கல்விக்காலம்/ஆராய்ச்சிக்காலம் முடிவடைந்து பட்டம் பெறப்போகிற நேரத்தில்தான் பால் கடுமையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிகிறார். உடைந்து போகிறார்கள் பாலும் அவரது குடும்பத்தினரும். ஆனாலும் அடுத்தடுத்து ஆக வேண்டியவை பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடங்கும் முன்னர்  பாலும் அவரது காதல் மனைவி லூசியும் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

புத்தகம் எழுதவேண்டும் என்கிற தனது நீண்டகால ஆசையை இப்போது நிறைவேற்ற முடிவு செய்கிறார் பால்.

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரை எந்தளவு பலவீனமாக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்களுக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். உடல் உழைப்பும், பணிச்சுமையும் ஏற்படுத்துகிற மன அழுத்தமும் ,சோர்வும் பல மருத்துவர்களை தற்கொலை மாதிரியான விபரீத முடிவை எடுக்குமளவு தள்ளியிருக்கின்றன. எத்தனையோ மரணங்களை எதிர்கொண்ட ஒரு மருத்துவர் தன் மரணத்தையே நிதானமாக எதிர்கொள்கிற மனநிலை கிட்டத்தட்ட ஒரு ஞானியின் மனநிலைக்கு ஈடானது . 


I began to realize that coming in such close contact with my own mortality had changed both nothing and everything. Before my cancer was diagnosed, I knew that someday I would die, but I didn’t know when. After the diagnosis, I knew that someday I would die, but I didn’t know when. But now I knew it acutely. The problem wasn’t really a scientific one. The fact of death is unsettling. Yet there is no other way to live.

புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல்  கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்துக்குப் பின் இவ்வுலகிலிருந்து விடைபெறுகிறார் பால். பிறந்து எட்டே மாதங்களான தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்கிறார் .


There is perhaps only one thing to say to this infant, who is all future, overlapping briefly with me, whose life, barring the improbable, is all but past.

That message is simple:

When you come to one of the many moments in life where you must give an account of yourself, provide a ledger of what you have been, and done, and meant to the world, do not, I pray, discount that you filled a dying man’s days with a sated joy, a joy unknown to me in all my prior years, a joy that does not hunger for more and more but rests, satisfied. In this time, right now, that is an enormous thing.

கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். வாழ்வு குறித்தும் உடலின் இயக்கம் குறித்தும் மரணம் குறித்தும் நாம் கொண்டிருக்கிற மதிப்பீடுகள் நிச்சயம் மாறலாம்.

When Breath Becomes Air - Dr.Paul Kalanithi - Penguin Randomhouse UK - Rs.590

ஆன்லைனில் வாங்க : லின்க் இங்கு
Kindle பதிப்பு வாங்க: லின்க் இங்கு (விலை: ரூ.350)

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

புல்லட் டைரி - ’வட்டக்கனல்’ - பறவையே எங்கு இருக்கிறாய் ?




இந்த வாட்டி தமிழ் புத்தாண்டோட சேத்து எனக்கு நாலு நாட்கள் லீவு இருந்துச்சு. கண்டிப்பா எங்கேயாவது ரைட் போயே ஆகனும்னு நெறைய நண்பர்கள்கிட்ட கேட்டுப் பாத்தேன். எல்லாரும் ஏதோ ஒரு கமிட்மெண்ட்ல இருந்ததால நாம இந்தவாட்டி தனியாவே போய்டுவோம்னு முடிவு பண்ணேன். இதுக்கு முன்னாடி திருவாரூர், கடலூர், பாண்டி, வடலூர், பண்ருட்டின்னு பல ஊர்களுக்கு solo ride போயிருந்தாலும் மலைப்பாதைகள் இருக்கிற இடங்கள் எதுக்கும் தனியா போனதில்ல.


வட்டக்கனல் பத்தி என் மச்சான் ஒருத்தன் ரெண்டு மூனு வருஷம் முன்னாடி நெறைய சொல்லிருக்கான். அப்பவே போகனும்னு நெனச்சிட்டே இருந்தேன். இப்பதான் வாய்ப்பு கெடைச்சுது. கொடைக்கானலுக்கு உள்ள ஒரு 7 கிலோமீட்டர்ல இருக்கு வட்டக்கனல். சென்னைலேர்ந்து 14ஆந்தேதி சாயந்திரம் நாலு மணிக்கு தான் கெளம்புனேன். திருச்சி-திண்டுக்கல் ரூட்ல போறதாதான் திட்டம். ஆனா திருச்சி தாண்டும்போது மனசு மாறி மதுர போய் போவோம்னு முடிவு பண்ணேன். போற வழில விராலிமலைல நிறுத்தி பரோட்டா சாப்டுட்டு அப்டியே மதுர டவுன தொட்டு அடுத்ததா வத்தலகுண்டு போய்ச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து மணி. அதுக்குள்ள ஃபேஸ்புக்ல போட்ட போஸ்ட்ட பாத்துட்டு சக ரைடர் ஒருத்தர் ஃபோன் பண்ணி “எதுக்கு ப்ரோ தனியா போறீங்க. நம்ம பசங்க கொஞ்சம் பேர் கொடைக்கானல் தான் போயிருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்க”ன்னு சொன்னாரு. நானும் அவங்க கூட போய் தங்கிக்கலாம்னு யோசிச்சு ஃபோன் பண்ணா, அவங்க பண்ணைக்காடுங்குற ஊர்ல தங்கிருக்குறதா சொன்னாங்க.  (நைட்டு மலைப்பாதைகள்ல வண்டியோட்ற த்ரில் பத்தியெல்லாம் ஏற்கனவே நெறைய பேசிருக்குறதனால இப்போ அதப்பத்தி எதுவும் சொல்லப்போறதில்ல)

கொடைக்கானலுக்கு 28 கிலோமீட்டர் முன்னாடி இருக்கு அந்த ஊர். அங்க போய் சேரும்போது மணி கிட்டத்தட்ட 12.00 மணி. ஊர்ல ஏதோ திருவிழா போல. சீரிய்ல் செட்டு, சாமி ஊர்வலம்னு ஜெகஜ்ஜோதியா இருந்துச்சு ஊரே. என்னோட நண்பர்கள் ஒரு கல்யாண மண்டபத்துல ரூம் எடுத்து தங்கிருந்தாங்க. அவங்க கூடவே தங்கிட்டேன். நைட்டு குளிர் தாங்க முடியாம உடம்பு தூக்கித் தூக்கி போட ஆரம்பிச்சுது.  அப்டியொரு நடுக்கம். கால்ல சாக்ஸ மாட்டிகிட்டு, முகத்த ரெண்டு balaclava போட்டு மூடிகிட்டு, ரைடிங் ஜாக்கெட்டோட தெர்மல் லைனர எடுத்து போட்டுட்டு அதுக்கு மேல கம்பளியால போத்திகிட்டு தூங்க முயற்சி பண்ணேன். பயங்கரமா பித்தம் தலைக்கேறி தலவலி, பிரட்டல், இருமல்னு கஷ்டப்பட்டு சுத்தி இருந்தவங்களையும் கஷ்டப்படுத்தி ஒருவழியா ரெண்டு மூனு மணிக்கு என்ன அறியாம தூங்கிட்டேன். காலைல ஊர்ல ஸ்பீக்கர் கிழிச்ச கிழில 7.30க்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு. சட்டு புட்டுன்னு குளிச்சு கெளம்பி, பக்கத்துல இருந்த ஒரு சின்ன கடைல காலை உணவ முடிச்சு, gear-up பண்ணி ரெடி ஆனேன். நண்பர்கள்ல சொல்லிகிட்டு வட்டக்கனல் நோக்கிய பயணத்த ஆரம்பிச்சேன். நெஜம்மா அங்க தங்குற எண்ணமெல்லாம் இல்ல. இடமும் எதுவும் முன்னாடி புக் பண்ணி வைக்கல. சும்மா அங்க என்னதான் இருக்குன்னு பாப்போமேன்னு ஒரு ஆர்வம். அவ்ளோதான். 

கொடைக்கானல்ல இது சீசன். போதாக்குறைக்கு long weekend வேற. கேக்கவே வேணாம். சீனிவாசபுரத்துல ஆரம்பிச்சு உள்ள லேக் வரைக்கும் கார்,பஸ், வேன் எல்லாம் வரிசகட்டி நின்னுச்சு. ஒருவழியா ஊடால புகுந்து புகுந்து போய் 11.00 மணி வாக்குல வட்டக்கனல் போய்ச்சேர்ந்தேன். சரி மொதல்ல டால்ஃபின் நோஸ் பாயிண்ட்டுக்கு போய்ட்டு வந்து அப்புறம் எங்க போறதுன்னு முடிவுபண்ணிக்கலாம்னு பைக்க பார்க் பண்ணிட்டு டேங்க் பேக். ட்ரைபாட், எல்லாத்தையும் தூக்கிகிட்டு ரைடிங் கியர்ஸோட இறங்கி நடக்க ஆரம்பிச்சேன். முழுக்க முழுக்க கடினமான பாறைகளாலும் மர வேர்களாலும் நெறைஞ்ச ஒரு பாதை அது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இறங்குனேன்.
முதல் view point வந்ததும் இதோட நிறுத்திக்குவோம்னு முடிவு பண்ணி அங்க கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் தூக்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன்.

Wheezing ரொம்ப டார்ச்சர் பண்ணுச்சு. கொஞ்ச தூரம் போனதுக்கே முடியல. மூச்சிரைக்க அப்டியே உக்காந்து உக்காந்து தான் போனேன். மேல ஏற இன்னும் கொஞ்ச தூரம் இருந்தப்ப தான் ஒரு பாறைல உக்காந்தேன். அப்போ தான் எதிர்ல இருந்த ஒருத்தர் என்னப் பாத்து பேச ஆரம்பிச்சாரு. "Are you a biker ? I see that you are with your riding gears. What are you riding ? " அப்டின்னு கேட்டுகிட்டே ” கமான் மச்சா, சிட் வித் அஸ்” ன்னு கூப்டதும் போய் பக்கத்துல உக்காந்தேன்.கூட இன்னொரு வெளிநாட்டுக்காரரும் இருந்தாரு.  என்ன கூப்பிட்டு பேசுனவன் தன்னை ஜித்தின்னு அறிமுகப்படுத்திகிட்டான். மத்தியப் பிரதேசத்துல செட்டிலான மலையாளின்னு சொன்னான். அப்புறம் பேச்சு முழுக்க முழுக்க கார்கள்,பைக்குகள் பக்கம் திரும்புச்சு. ஜெர்மன்காரன்  ஃபெலிக்ஸ் ஜெர்மனியோட ஆட்டோபான் ரோடுகள் பத்தியும் அங்க அதிகபட்ச வேக அளவுகள் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சான். ஸ்போர்ட்ஸ் பைக்குகள வாடகைக்கு எடுத்துகிட்டு ஆட்டோபான்ல் ட்ரிப் போறதப் பத்தி பேசுனான்
கொஞ்ச நேரத்துக்கப்புறம் ஜித்தின் “What's you itinerary dude ? Where are you staying ?" னு கேட்டதும், எனக்கு எந்த திட்டமும் இல்ல; இப்போதைக்கு எங்கேயும் தங்கல; இந்த ட்ரெக்கிங் முடிச்சுட்டு அப்டியே மன்னவனூர், பூண்டின்னு சுத்தலாம்னு ப்ளான் பண்ணிருக்குறத சொன்னேன்.

"If you don't have a place to stay, you can stay in our accommodation. Its very closer"ன்னான். சரின்னு வண்டிய கீழ பார்க் பண்ணிட்டு saddle bag, tank bag , tripod, helmet எல்லாத்தையும் கைல தூக்குனா அப்போதான் ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான் ஜித்தின். அவங்க தங்கியிருந்த accommodationக்கு போறதுக்கு கிட்டத்தட்ட ஒரு நூறு படி மலை மேல ஏற வேண்டியிருந்தது. நான் கைல லக்கேஜோட பெக்க பெக்கன்னு முழிக்கிறதப் பாத்த ஃபெலிக்ஸ் "I'm a back packer. I can carry all your stuff. I see that you are struggling to breath"னு சொல்லிட்டு டபடபன்னு என் கைல இருந்து எல்லாத்தையும் வாங்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சான். ஜித்தினும் அவன் பங்குக்கு helmet, tripod, knee guard எல்லாத்தையும் வாங்கிகிட்டு "you walk freely macha.."அப்டின்னு அவனும் படியேற ஆரம்பிச்சேன். நான் இருந்த நெலைமல அவங்க ரெண்டு பேரும் தெய்வம் மாதிரி தெரிஞ்சாங்க.

இந்த இடத்துல வட்டக்கனல் பத்தி ஒரு trivia. மேஜிக் மஷ்ரூம்னு ஒரு சமாச்சாரம் கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியல. பச்சையா சொன்னா போதைக் காளான். வட்டக்கனல்ல முக்காவாசி வெளிநாட்டு ஆளுங்கதான். பெரும்பாலும் backpackers. ஐடி ப்ரூஃப், அது இதுன்னு எந்த தொல்லையும் இல்லாததுனால அவங்க இங்க தங்குறதை விரும்புறாங்க. ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகையே 300 ரூபா தான். Off-seasonனா இன்னும் கம்மி. ஆங்..அந்த மேஜிக் மஷ்ரூம் பத்தி சொன்னேன்ல, அதோட availability இங்க ரொம்ப அதிகம். சமீபத்துல இந்த மஷ்ரூம் ரொம்ப ஓவரா சாப்ட்டு போதையாகி நெறைய ஃபாரினர்ல் மலைல குதிச்சு செத்துப் போனதால போலிஸ் கெடுபிடி ரொம்ப அதிகமாயிட்டதா உள்ளூர்க்காரங்க சொல்றாங்க.

ஒரு வழியா நின்னு நின்னு படியேறி மேல போய்ச் சேர்ந்தேன். ஆச்சரியமான விஷயம் கீழ தெரிஞ்ச வெய்யில் மேல இல்ல. மத்தியானத்துக்கே ஜில்லுன்னு இருந்துச்சு. நான் ட்ரெஸ் மாத்திட்டு ரூம் வாசல்ல வந்து உக்காந்தேன். பக்கத்து ரூம்ல ஒரு பெங்களூர் பையனும் டார்ஜிலிங் பொண்ணும் தங்கியிருந்தாங்க. அவங்களும் வெளில சேர் போட்டு உக்காந்ததும் பேச ஆரம்பிச்சோம்.அவங்க நாலு பேருக்கு மத்தியில ஒரு ஜாயிண்ட் சுத்தி வர ஆரம்பிச்சுது. ஃபெலிக்ஸ் இதுவரைக்கும் 20 நாடுகளுக்கு மேல பயணம் பண்ணியிருக்குறதப் பத்தியும் எல்லா இடத்துலயும் மக்கள அரசாங்கம் எப்படியெல்லாம் exploit பண்ணுதுங்குறதப் பத்தியும் பேசுனான். தன்னுடைய உடம்புல இருக்குற ஒவ்வொரு டாட்டூவுக்கும் ஒரு விளக்கம் தந்தான்.

ஃபெலிக்ஸ் ஜெர்மனில தேசிய அளவிலான ஸ்கேட்போர்டிங் சேம்பியன். சில பல நிறுனங்களுக்கு brand ambassador. அதுல கெடைக்கிற பணத்த வெச்சு தான் உலகம் பூரா சுத்துறதா சொன்னான்.. பெரும்பாலும் ஐரோப்பிய ஆஃப்ரிக்க நாடுகள்ல தான் சுத்தியிருக்கான். இந்தியா வர்ரதுக்கு முன்னாடி கானா (Ghana)வுலயும் இன்ன பிற ஆஃப்ரிக்க நாடுகள்லயும் தங்கியிருந்ததப் பத்தி நெறைய பேசுனான். LGBT சமூகத்தினரை கடவுளுக்கு எதிரான சாத்தானின் தூதுவர்களா பாக்குறதா சொன்னான். சட்டப்படியும் அங்கே ஓரினச்சேர்க்கை குற்றம் தானாம், அங்க இருக்குற ரேசிஸம் வேற மாதிரியானது. அவங்கள பொறுத்தவரைக்கும் வெள்ளையர்கள் எல்லாருமே பணக்காரங்க. கைல எப்பவும் காச வெச்சுகிட்டே திரியுறவங்க. யாராவது ஒரு Ghana குடிமகன் ரோட்ல ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரர பாத்தாங்கன்னா ”Hey Oburoni (வெள்ளைத் தோல்காரா),you have so much money. Why don't you buy me a car ?"னு கேட்டபடி பின்னாடியே நடந்து வருவாங்களாம். ஆனா ஒருபோதும் டூரிஸ்ட்டுங்க மேல, அதும் white டூரிஸ்ட் மேல கண்டிப்பா வன்முறைய கையாளவே மாட்டாங்களாம். டூரிஸ்ட்டுங்கள அடிச்சிட்டா எங்க தங்களோட நாட்டு மேல மத்த நாடுகள் போர் தொடுத்துடுமோன்னு ஒரு பயம் தான் காரணமாம்.

ஒரு வாட்டி ஃபெலிக்ஸ அன்பா கட்டிப்பிடிச்ச ஒரு கானா காரர் பர்ஸ உருவிட்டாராம். இவன் டக்குன்னு நோட் பண்ணி அவரோட கைய பிடிச்சிருக்கான். அவரு தப்பிக்க முயற்சி பண்ணாம பர்ஸ தரமாட்டேன்னு அடம்பிடிச்சிருக்காரு. போலிஸ் சுத்தமா செயல்படாதுங்குறத தெரிஞ்சதனால இவன் என்ன பண்றதுன்னு தெரியாம "thief..thief.. "னு கத்தியிருக்கான். உடனே உள்ளூர் ஆட்கள் கொஞ்சம் பேரு ஓடி வந்து அந்த பிக்பாக்கெட்ட அடிச்சு ஒதச்சுட்டு பர்ஸ மீட்டு இவன்கிட்ட குடுத்துட்டு திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டாங்களாம். அந்த பிக்பாக்கெட்டும் கடைசில சாரி சொல்லிட்டு போனானாம்.

அப்புறம் பேச்சு weed பக்கம் திரும்புச்சு.  மூளைக்குள்ள இருக்குற டோப்பமைன் சேமிப்பிலிருந்து அப்பப்ப கொஞ்சமா release ஆகி அதுல கெடைக்குற சந்தோஷம், உற்சாகம்லாம் பத்தாம மொத்த டோப்பமைனையும் ஒரே நேரத்துல மூளைக்குள்ள drain பண்ணி (இதப்பத்தி கொழந்த ஒரு கட்டுரைல செமத்தியா விளக்கியிருக்காரு) ஒரு மாதிரி sustained excitementக்கு கொண்டு போறது Marijuana தான்னு சொல்லிட்டு கடைசியா ஒரு இழுப்பு இழுத்து முடிச்சான். பேச்சு மறுபடியும் சர்வதேச அரசியல் பத்தியும் சமூக நீதி பத்தியும் திரும்புச்சு. மக்களுக்கு நியாயம் கெடைக்குறதுக்காக உருவாக்கப்பட்ட நீதி அமைப்புகள் உலகம் பூராவுமே ஒழுங்கா செயல்படாம மக்களுடைய நிம்மதியைக் குலைக்கிறதப் பத்தி ரொம்ப ஆதங்கப்பட்டான் (கைல ஒரு நீதிதேவதை டாட்டூ இருந்துச்சு) கால்ல ஒரு டாட்டூ 'Fick die Polizei' (Fuck the police) ன்னு சொல்லுச்சு. அதுக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சான்.

முன்னாடியெல்லாம் ஜெர்மனில போலிஸ் ஆகுறது ரொம்ப கஷ்டம். வருஷக்கணக்காகும் selection,training எல்லாம் முடிய. தகுதியான ஆஃபிசர்ஸ் மட்டும் தான் வெளில வருவாங்க. ஆனா இப்போ மூனு மாசத்துலயே போலிஸ் ஆகிடலாம். இவங்களுக்கு சட்டமும் தெரியல ஒரு மண்ணும் தெரியல. ஏதாவது சின்னதா ஒரு demonstration (போராட்டம்) பொது இடத்துல நடந்தா இவங்களுக்கு எப்படி கையாளனும்னு தெரியாம உடனே கண்ணீர்புகை , அது இதுன்னு வன்முறைல இறங்கிடுறாங்கன்னு கோவப்பட்டு பேசுனான். என் கைல இருக்க ஸ்டீல் வளையத்தப் பாத்துட்டு இதுக்கு பின்னாடி ஏதாவது கதை இருக்கான்னு கேட்டான். ஏண்டான்னு கேட்டா, ஜெர்மனில முதலாளித்துவத்தை வெறுக்கிறவங்க நெறைய பேர் இருக்காங்க. அவங்க யாரவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பாத்தா உடனே கடுப்பாகி அந்த லோகோவ உடைச்சிடுவாங்க. அந்த ஸ்டார உடைச்சு தூக்கிப்போட்டுட்டு வளையத்த பெருமையா ("See, I fucked a Mercedes") கைல மாட்டிட்டு சுத்துவாங்கன்னு ஒரு தகவல சொன்னான்.


இப்படியாக பேச்சு எங்கெங்கேயோ சுத்துனபடி இருந்துச்சு. அப்புறம் ஜித்தின் அவனுடைய UK அனுபவங்கள் பத்தி கொஞ்சம் பகிர்ந்துகிட்டான். அவன் ஒரு பல் மருத்துவன்னு அப்போதான் தெரியவந்துச்சு. சாய்ந்திரம் ஃபெலிக்ஸுக்கு கொடைக்கானல்ல பஸ். அங்கிருந்து பழனி-கொச்சின் போய்ட்டு அடுத்த நாள் நேபாளத்துக்கு ஃப்ளைட் ஏறுறதா திட்டம் வெச்சுருந்தான். ஜித்தினும் நானும் மன்னவனூர்/பூம்பாறை ஏரியாவெல்லாம் கொஞ்சம் சுத்தலாம்னு முடிவுபண்ணோம். ரூமை பூட்டிகிட்டு ஒரு ஃபெலிக்ஸ் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு கீழ எறங்குனோம். வண்டில ட்ரிபிள்ஸ் போய் ஃபெலிக்ஸ பஸ் ஸ்டாண்ட்ல எறக்கி விட்டுட்டு நானும் ஜித்தினும் மன்னவனூர் கெளம்புனோம். அட்டகாசமான பாதை. அவனும் பைக்கர் தான்ங்குறதனால நான் என்னதான் வளைச்சு வளைச்சு ஓட்னாலும் கொஞ்சம் கூட பயமில்லாம இருந்தான். இருட்ட ஆரம்பிச்சதும் நாங்க பூம்பாறை மட்டும் போய்ட்டு திரும்பிடலாம்னு முடிவு பண்ணோம். அதே மாதிரி பூம்பாறை போய்ட்டு கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துட்டு. திரும்ப வர ராத்திரி ஆயிடுச்சு. வந்து கொஞ்ச நேரம் திபெத்தியன் மார்க்கெட்ல சுத்திட்டு, ரூம் போகலாம்னு முடிவு பண்ணோம், ஜித்தின் தன் நண்பன் ஒருத்தன பாத்துட்டு அவன்கூட வரேன்னு சொன்னதால நான் ரூமுக்கு கெளம்புனேன்.

அன்னைக்கு ராத்திரி தூங்குனது ரொம்ப நிம்மதியான தூக்கம். ஜித்தின் 1.00 மணிக்கு மேல தான் ரூமுக்கு வந்தான். நான் காலைல எந்திரிக்கவே மணி 9.00 ஆயிடுச்சு. ஒருவழியா குளிச்சு கெளம்பி gear-up பண்ணி ஜித்தினுக்கு பிரியாவிடை சொல்லி அங்கிருந்து கெளம்புனேன். (திரும்பி வந்த கதையெல்லாம் ஃபேஸ்புக்ல பாத்துருப்பீங்க. அதனால மொக்க போடல)
பொதுவா எந்த திட்டமும் இல்லாத பயணங்கள் தான் நெறைய சுவாரஸ்யமான அனுபவங்களையும் புதுப்புது மனுஷங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த பயணத்த தொடங்கும்போது இருந்த மனநிலை பயணத்தை முடிக்கும்போது மாறியிருக்கும். நிச்சயமா புதுசா எதாவது ஒரு விஷயமாவது கத்துட்டு இருப்போம். இந்தப் பயணமும் இந்த டெம்ப்ளேட் மாறாம தான் முடிஞ்சுது.

பெரும்பாலும் எதாவது லாங் ரைட் போனா, வீட்டுக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணம் பத்தின நினைவுகள அசைபோட்டபடி இந்த பாட்ட கேப்பேன். மனசு ஒரு மாதிரி முழுமையடைஞ்சிட்டதா தோணும்.


I'd rather be a sparrow than a snail
Yes I would, if I could, I surely would
I'd rather be a hammer than a nail
Yes I would, if I only could, I surely would

Away, I'd rather sail away
Like a swan that's here and gone
A man gets tied up to the ground
He gives the world its saddest sound
Its saddest sound

I'd rather be a forest than a street
Yes I would, if I could, I surely would
I'd rather feel the earth beneath my feet
Yes I would, if I only could, I surely would



பயணங்கள் முடிவதில்லை...
Related Posts Plugin for WordPress, Blogger...