நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 8 ஜூன், 2017

இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று


ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் தோன்றுகிற பதிலை கடைசியில் சொல்கிறேன்.

பொதுவாகவே படைப்பாளிகளுக்குத் தன் படைப்புகளின் மீது அதீதமான பெருமையும்/உரிமையும் இருக்கும். அத்தகைய உயர்ந்த படைப்பை உருவாக்கிய ஒரு கவிஞன், தன் படைப்பை, தன் மகத்தானதொரு கவிதையை ”இது இனி என்னுடையதல்ல. எனக்குரியதல்ல…இது வேறொருவருக்குச் சொந்தமானது” என்று சொன்னவரையும் , சொல்லவைத்தவரையும் பற்றிய கதை இது.

நூர் ஜெஹான் - பிரிவினைக்கு முந்தைய இந்தி(ய) திரையுலகின் பிரபலமான பாடகி/நடிகை. பாகிஸ்தான் பிரிந்தபின் “நான் எங்கே பிறந்தேனோ அங்கேயே செல்ல விரும்புகிறேன்” என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு பாகிஸ்தான் சென்றவர். அந்நாட்டு மக்களால் ’மேடம்’ நூர்ஜெஹான் என அன்போடு அழைக்கப்பட்டவர்...! பாகிஸ்தானின் உருது திரைப்படங்களில் அற்புதமான பல பாடல்களைப் பாடியவர்.


ஃபைஸ் அகமது ஃபைஸ் - . தீவிரமான மார்க்சிய-இடதுசாரி சிந்தனையாளர்; எழுத்தாளர்; உருதுக்கவிஞர். ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தில் இந்தியாவுக்காக இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றவர்,1947க்குப்பின் ராணுவத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு லாஹூருக்குச் சென்றபின் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.பாகிஸ்தான் டைம்ஸ் என்க்ற இடதுசாரி ஆங்கில பத்திரிகையிலும், வேறு சில உருதுப் பத்திரிக்கைகளிலும் பணிபுரியத் தொடங்கினார்.இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகள் உச்சக்கட்டதிலிருந்த காலத்திலேயே காந்தி கொல்லப்பட்டபோது லாஹூரிலிருந்து டெல்லிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவர். பாகிஸ்தானின் இடதுசாரி தலைவர்களோடான நட்பும், கம்யூனிச சித்தாந்தப்பிடிப்பும்,இவரை பாகிஸ்தான் அரசாங்கத்தால் சிறையில் தள்ளப்படுமளவு கொண்டுபோனது.
நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ஃபைஸை வரவேற்க கவிஞர்களும், கலைஞர்களும் சிறைவாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நூர்ஜெஹானும்.

 ஃபைஸ் வந்ததும் அவருடைய புகழ்பெற்ற கவிதைகளில் (Nazm) ஒன்றான ’முஜ்சே பெஹ்லி சி ’  (Mujhse pehli si mohabbat mere mehboob na mang) யை தானே மெட்டமைத்து பாடுகிறார் நூர்ஜெஹான்.சுற்றியிருந்த அத்தனை பேரும் அவருடைய குரலில் கட்டுண்டதுபோகிறார்கள். நூர்ஜெஹான் பாடிய விதத்தில் நெகிழ்ந்து போன ஃபைஸ் “இதை விட சிறப்பாக இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியாது. இந்தக் கவிதை இனி உன்னுடையது” என்று சொல்லி அந்தப் பாடலையே அவருக்கு பரிசாக வழங்கிவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் 1962ஆம் வருடம் ‘கைதி’ திரைப்படத்தில் நூர்ஜெஹான் இந்தப் பாடலைப் பாட , பாடல் சூப்பர்ஹிட்டாகிறது. அதன் பின் பல தருணங்களில் பல் மேடைகளிலும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார் நூர்ஜெஹான். பின்னாட்களில் ஃபைஸிடம் இந்தக் கவிதை குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் அவர் சொன்ன பதில், “ அந்தப் பாடல் என்னுடையதல்ல. என்றோ நூர்ஜெஹானுடையதாகிவிட்டது...!”

நான் இந்தப்பாடலை முதன் முதலில் கேட்டது 'Ae dil hai mushkil' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தான். பின்பு அந்தப் பாடல்வரிகளை வைத்துக் கொண்டு தேடப்போக அதன் பின் இப்படியொரு நெகிழ்ச்சியான வரலாறு இருப்பது தெரியவந்தது. எதற்காக இந்தப் பாடல் இப்படி கொண்டாடப் பட்டது என்பதற்கான காரணம் அந்தப் பாடல்வரிகளின் பொருளைத் தெரிந்து கொண்டபோது புரிந்தது. 


Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat
Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai

Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye
Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism
Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Mujh se pehli si muhabbat mere mehboob na maang


My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;
so my love, do not ask from me
the love we shared once before.


இந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் கதையையும்,  உயிர்தந்து காற்றில் மிதக்கவிட்ட பாடகியின் கதையையும் தாண்டி, ஏதோவொன்று நம்மை அலைக்கழிக்கின்றது. வரிகளில் பொதிந்து கிடக்கிற தனிமையும் துயரமும் மகிழ்ச்சியும் ஒருங்கே உறக்கம் கெடுக்கின்றன. There's something about this song. Something mystic and spiritual at the same time.

இது கைதி திரைப்படத்தில் அவர் பாடிய version :
(In a soft and sharp voice tone) 


இது unplugged version. ஃபைஸின் முன்பு முதன்முதலில் பாடப்பட்ட பாடலின் பதிவு என்றும் சொல்லப்படுகின்றது: 
(Bass/dense voice tone) 


பின்னொரு நாளில் BBCன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடியது:


ஃபைஸின் குரலிலேயே கேட்க:


நான் கேட்டதிலேயே அட்டகாசமான வெர்ஷன்  ஸோரா செகல்’ன் recital (டைட்டன் விளம்பர பாட்டி) 


If at all you're interested to dig up more on F.A.Faiz and Noor Jehan...below are the external references:

1. https://scroll.in/article/678792/someday-i-might-end-up-as-a-poet-prison-letters-from-faiz-ahmed-faiz-to-his-wife

2. https://scroll.in/article/805932/how-faiz-ahmed-faizs-most-famous-poem-came-to-be-written

3. https://thereel.scroll.in/927/how-noor-jehan-took-mujh-se-pehli-si-mohabbat-mere-mehboob-na-maang-away-from-poet-faiz-ahmed-faiz

4. https://scroll.in/article/756301/indias-loss-pakistans-gain-the-journey-of-singing-great-noor-jehan-after-1947

5. http://lithub.com/why-we-need-revolutionary-poet-faiz-ahmed-faiz-more-than-ever/

ஞாயிறு, 4 ஜூன், 2017

உறவு, பிரிவு மற்றும் பல - Rhetoric of a Solivagant

Courtesy: Psychedelic Drawing by Japanese Artist Lutamesta - Pinterest

பேரன்பின் பார்ட்னருக்கு,

என் உலகத்து நிகழ்வுகள் குறித்தான விவரனைகளோடும் அயற்சியோடும் நான் எழுதத்தொடங்கிய.. எழுதுகிற கடிதங்கள் இப்படி தொடர்கதையாகுமென ஒருபோதும் நினைத்ததில்லை பார்ட்னர். மனிதக்கூட்டத்தோடிருக்கையில் தனிமையையும் தனிமையில் இருக்கையில் மனிதர்களையும் தேடுகிற வித்தியாசப் பிறவியாய் மாறி வருகிறேன். புத்தகங்களுள் உறைந்துலாவல் வேறு மாதிரியான தற்காலிக தப்பித்தல். அவ்வப்போது அவ்வுலகிலும் திரிந்து திரும்புகிறேன். இலக்கில்லாத பயணியாயினும் திரும்பி வர வீடில்லாது போனால் அத்தனையும் அற்றுப்போகுமல்லவா. அது போல, எத்தனை முகங்கள் கண்டு, எத்தனை குரல்கள் கேட்டு, எத்தனை சிரிப்புகளைக் கடந்து வந்தாலும் திரும்பி வந்து தஞ்சமடைந்து இளைப்பாற எனக்கென ஒரு மனம் காத்திருக்காத இரவுகள் மிக நீளமானவை பார்ட்னர்.

மனங்களின் அருகாமையை விரும்புகிற மனது மனிதர்களை விட்டு விலகி நடக்கின்றது. திடீரென எனக்காய் யாரேனுமோ அல்லது யாருக்கேனும் நானோ ஒரு பாட்டுப் பாடினால் நன்றாயிருக்குமெனத் தோன்றுகிற பின்னிரவுகளின் போதேல்லாம் உன் இன்மையை உணர்கிறேன் பார்ட்னர். அன்பைச் சொல்ல ஆயிரம் வழிகளுண்டு. இந்தப் பாழும் பிரிவை வெற்று வார்த்தைகளன்றி வேறு எப்படித்தான் சொல்லித் தொலைவதாம். கண்டு கேட்டுணர்ந்த கதைகளை உரையாடல்களின் பொழுது கொட்டித்தீர்த்துவிடும் பொருட்டு, மனதுள் சூல் கொண்ட வார்த்தைகள் சூழ்ந்தழுத்திச் சுழல்கின்றன.

பிரிவுகளைக் குறித்து எழுதுகிற பெருங்கவிகளைப் பற்றி நான் கொண்டிருக்கிற அதீத மனச்சித்திரங்களைப் போலவே நானும் மனந்திரிந்து கொண்டிருக்கின்றேனோ என்கிற கேள்வி அடிக்கடி எழுகின்றது பார்ட்னர். முழுவதுமாய் பிறழ்ந்துவிடாத ஆனால் இரட்டை நிலையைக் கொண்டிருக்கிற ஒரு மனநிலை எனக்கு.ஆனாலும் உறங்கி விழிக்கிற ஒவ்வொரு நாளும் எதிர்படுகிற அத்தனை மனங்களையும் புன்னகையோடும் ஆரவாரத்தோடுமே எதிர்கொள்கிறேன். ஒவ்வொரு நொடியையும் கொண்டாடிக் கடக்கிறேன்.நெடியதொரு தேடலுக்கிடையேயான கொண்டாட்டங்களா அல்லது மிக நீண்ட காத்திருத்தலுக்கு முன்பான கொண்டாட்டங்களாவெனத் தெரியாமலேயே, தெரிந்துகொள்ள விரும்பாமலேயே அனுபவித்துக் கடந்துகொண்டிருக்கின்றேன்.

சமீபத்திய தனிப் பயணம் நீண்ட நாட்களுக்குப் பிறகான பெரும் ஆறுதல். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வு குறித்த பெரும் கவலைகளோடும் , அதீத உயிர்பயத்தின் காரணமாகவும், ஒவ்வொரு கொண்டையூசி வளைவிலும் காலூன்றி மெல்ல முன்நகர்ந்து மேலேறிய மலைப்பாதைகளில், எவ்வித அச்சமோ கவலையோ இன்றி மலைப்பாதையின் ஒவ்வொரு வளைவிலும் இரும்புக்குதிரையின் குளம்புகள் உரச உரச காடதிரச் சிரித்தபடி மேலேறினேன். காடும் , இரவும், குளிரும் இன்ஜின் உறுமலும், வெப்பமும் பின் நானும் ஒரு புள்ளியில் கலந்துவிட்ட இரவது. வாழ்க்கையையும் இப்படியே ஒரு மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத இரவுப்பயணம் போலவே எதிர்கொள்ள விரும்புகின்றேன்.

உயிரறுக்கிற பிரிவுகளின் மீது தீராக் கோபம் உண்டெனக்கு. ஆனாலும் பிரிவுகளைப் போல் மகத்தானவை வேறேதும் இல்லையென்பேன் பார்ட்னர். ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணம். ஒவ்வொரு முதல் சந்திப்பும் ஒரு மறுபிறப்பு. உறவுக்கும் பிரிவுக்கும் இடையே ஊடாடி மாண்டு மீள்கிற அற்பனுக்கு, வாழ்நாளைக்கும் நினைத்து அசைபோடவும், பொருத்தமில்லாத தருணங்களில் தனக்குத்தானே ஒற்றைச் சிரிப்பு சிரித்துக் கொள்ளவும், வார்த்தை தீரக் கடிதமெழுதவும், சுற்றம் முற்றும் மறக்கவும், தீராக் காதலை எதிர்கொள்ளவும், இன்னும் யாருக்கும் வாய்க்காத ஏதேதோ விஷயங்களைக் கைக்கொள்ளவும், கதைகளையும், கனவுகளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்வதே அந்த உறவுக்கும் பிரிவுக்குமிடையேயான சுழற்சி தான் இல்லையா ?  ஆதலால் பிரிவுகள் எப்போதும் மகத்தானவை பார்ட்னர்.

நாட்கணக்காய் நான் எழுதிக்கொண்டேயிருக்க, நீண்டுகொண்டே செல்கிற இந்தக் கடிதம் போல, இரவுகளுக்கும் பகலுக்குமான தூரம் நீண்டபடியே செல்கிறது. பகல் ஒன்றேதான். மாறுவதும் நீண்டு தேய்வதும் இந்த பாழும் இரவுகள் தான் பார்ட்னர். பல்லாண்டுகளாய் பற்றித் திரிந்த உறவுக் கயிற்றின் கடைசி ஒற்றை இழையும் இப்போது  அறுந்துவிட்டதாய் உணர்கிறேன். உறவுகள் குறித்தான கேள்விகளுக்கு எப்போதுமே தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தவனில்லை நான். முடிவான முடிவை வார்த்தைகளில் சொல்ல யத்தனித்து இறுதியில் மென்று விழுங்கி, ஏதும் சொல்லாமல் காலமெனும் பெருந்திரையின் பின்னே ஓடியொளிந்து கொள்கிற அற்பன். எப்போது திரும்பினாலும் விட்ட இடத்திலேயே நின்று, தொடங்கித் துரத்துகின்றன கேள்விகள். தப்பியோடலும் வீடுதிரும்பலுமாய் நிகழ்கிற இந்த காலச்சுழல் எப்போதுதான் முற்றுப்பெறுமோ தெரியாது பார்ட்னர். எல்லோருடைய கதைகளுக்கும் கனவுகளுக்கும் எப்போதுமே செவிமடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறவனுடைய கதைகளை யார்தான் கேட்கப் போகிறார்கள் ?

கேட்க யாருமில்லாமல் போனால் அர்த்தமற்றுப் போகிற உரையாடல்களைப் போலல்லாது ,ஒரு கடிதம் எக்காலத்திலும், யாருக்கும், எப்போதும், பொருள்படக்கூடியதாய் இருக்கும் என்பதனாலேயே நிறைய கடிதங்கள் எழுத விரும்புகிறேன் பார்ட்னர். சமீபத்தில் ஓர் உறக்கமற்ற இரவினை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட பாடலின் வரிகளை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் பார்ட்னர்.

Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat

Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai
Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye

Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism

Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?

Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Mujh se pehli si muhabbat mere mehboob na maang


**************************************************

My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;

so my love, do not ask from me
the love we shared once before.


நூர்ஜஹான் பாடிய  ஃபைஸ் அஹமதின் கவிதை வரிகளை, உலகம் முழுவதும் விலகிச்செல்கிற அத்தனை இதயங்களுக்காகவும்  சமர்ப்பித்தபடி என் தேடலையும் பயணத்தையும் தொடர்கிறேன் பார்ட்னர்.

மகிழ்ந்திரு...!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்...!!
Related Posts Plugin for WordPress, Blogger...