நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 24 டிசம்பர், 2020

அத்தாரோ - சரவணன் சந்திரன்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள ‘Christ the redeemer' சிலையை நிச்சயமாக நீங்கள் ஏதோவொரு செய்தித்தாளிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட அந்த சிலையின் அமைந்திருக்கிற மலை கிராமத்தின் அதே மாதிரியான ஒரு புவியியல் அமைப்பைக் கொண்ட ‘அத்தாரோ’ எனும் மலைத் தீவு தான் கதைக்களம். மேலே மலையும் காடுமாகவும், கீழே அடிவாரத்தைச் சுற்றிலும் கடலுமாய் இருக்கிற இடம். 

ஏடன் என்னும் மூப்பனைப் பற்றிய அறிமுகம் நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த காடும் மலையும் கடலும் அவனுக்கு எவ்வளவு பழக்கப்பட்டவை என அறிந்து கொள்கிறோம்.சரவணன் சந்திரனின் பிற கதைகளைப்போலவே கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லி வேறெங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து அத்தாரோ மலையை வந்தடைந்த விதத்தை சொல்கிறான். அதன்பின் அந்த காட்டுக்கு அவனை ஏடன் பழக்கப்படுத்துவதும், அவன் என்னவாக மாறி எதைக் கற்றுக் கொண்டான் என்பதையுமே மீதிக்கதை எனக் கொள்ளலாம். 

”காடுகளுக்கு பகலும் இரவும் ஒன்றுதான். காடு எப்போதும் தனித்தே இருக்கிறது. அதுதான் காட்டின் இயல்பும்.  பகலும் இரவும்தான் மாறி மாரி வருகின்றன.ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொண்டால், அச்சத்திற்கு இடமேயில்லை”

”எல்லைகளை மட்டும் மறுபடி நினைவூட்டுகிறேன்.இதைச் சத்திய வாக்காகக் கொள். முதலில் உன் எல்லை எது என உணர்ந்து கொள்”

 ஏடன் காடுகளைப் பற்றியும் எல்லைகளைப் பற்றியும் இப்படித்தான் முதலில் சொல்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறான். பின்பு கதைசொல்லியிடம் விலங்குகளைப் பற்றிப் பேசிவிட்டு, “நீ வேட்டை விலங்கா ? சார்பு விலங்கா ?” எனக் கேட்குமிடத்தில் கிட்டத்தட்ட நாம் இதுதான் கதையின் மையமென முடிவு செய்துகொள்ளலாம். 

ஆனால் நிறைய கிளைக்கதைகளையும் வர்ணனைகளையும் என்னால் பொருத்திக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இது கதைசொல்லியின் transformation பற்றிப் பேசும் நாவலா ? அல்லது அவனுடைய survival பற்றிப் பேசும் நாவலா ? அல்லது காடு-மலை-கடல் கொண்ட ஒரு தீவின் கதையா ? இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஏடனும் கதைசொல்லியும் மனிதர்களா அல்லது இரு புலிகளின் கதைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. மேலும் முள்ளங்கிக்காரிகளைப் பற்றிய வர்ணனைகளும், அந்தக் காட்டில் உலவித் திரியும் புலியும், நாய் போல மாற சாபம் வாங்கிய மூதாட்டியின் மகன்களும் எதற்காகவென  இப்போதும் புரியவில்லை.

உண்மையில் ஒரு நூற்றி இருபது பக்க நாவலை (நாற்பது வெற்றுப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு) படிக்க மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சரவணனின் பிற படைப்புக்களைப் போல ஒரு தடையில்லாத கதையோட்டமோ இலகுவான மொழிநடையோ இல்லை என்பது முதல் காரணம். இங்கு அத்தாரோ என்னும் நாவலில் மையம் நிலையான ஒன்றாக இல்லாமல் பல கதைகளையும் தொட்டுச் செல்வதாலும், அனைத்துமே ஒரு மாதிரியான abstract ஆக சொல்லப்பட்டிருப்பதாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்து முடித்தேன்.

இறுதியாக...

”அறிந்து  திகட்டிப் போன ருசியை விட்டு, அறியாத ருசியை நோக்கிப் போ, இந்த மலை பல ருசிகளைக் காட்டிக் கண்கட்டி வித்தை காட்டும். அதில் எது சிறந்தது எனக் கணக்கிடுவதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும்”

ஏடனின் இந்த வாக்கியத்தையே எனக்கானதாகவும் எடுத்துக்கொள்கிறேன். இது நான் அறியாத ருசி. எனக்குப் புரியாத களம். சில காலம் கழித்து இந்த நாவல் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரியலாம். மறுவாசிப்பின் போது வேறொரு கதையை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கும் கூட அப்படியே ஆகலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இணைப்பு இங்கே

புதன், 23 டிசம்பர், 2020

Hestia - நெருப்பின் தேவதைக்கு

 

பேரன்பின் ஹெஸ்டியா,

இந்தக் கடிதத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும் இரவில், உன் நாட்டில் விடியல் வந்திருக்கும்.கடல் கடந்து, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நீ இருந்தாலும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளாய் தொடரும் இந்த உறவின் பொருட்டும் மனதளவில் உணரும் நெருக்கத்தின் பொருட்டுமே, இந்த மின்மடலில் உனக்காக சொற்களைத் தேடித்தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன். 

இவர்கள் நம் வாழ்வில் நிலைத்து நிற்கப் போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லாத மனிதர்களோடு தான், நாம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கிற உறவுகளை உருவாக்கிக் கொள்ளுகிறோம். அப்படியொரு முற்றிலும் எதிர்பாராத உறவு தான் நம்முடையதும். உனக்கு நானும் எனக்கு நீயும் அறிமுகமான போது நாமும் அப்படித்தான் நினைத்திருப்போம். உன் எண்ணம் அறியேன் எனினும், நான் அப்படித்தான் நினைத்தேன். 

சம்பிரதாய அறிமுகத்தின் போது ஒரு புன்னகையுடன் கடந்து போய்விட்டாலும், நான் உன்னிடம் முதன்முதலில் அதிகம் பேசியது உன் கண்கள் கலங்கிய ஒரு தருணத்தில் தான். கண்ணீருக்கான காரணத்தையும் உன் தரப்பு நியாயத்தையும் விளக்கிச் சொன்னபின் கொஞ்சம் ஆறுதலடைந்தாய் நீ. 

 பிறகு நீ ஓரிடமும் நான் ஓரிடமுமாய் பணிநிமித்தம் விலகிச் சென்றோம். சம்பிரதாய நல் விசாரிப்புகளும் குறுந்தகவல்களும் தவிர்த்து அதிகமாய் ஒன்றும் பேசிக்கொண்டதில்லை நான். காலம் மீண்டும் நம் பாதைகளை ஒன்றிணைத்தது, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோ. அப்போது தொடங்கியது நம் இரண்டாம் அத்தியாயம் . உரையாடல்களும், காஃபிக் கோப்பைகளும், மாலை நேரத்து நடைகளும், புகைப்படங்களும், பாடல்களும்,திரைப்படங்களும், புத்தகங்களுமாய் கழிந்த அற்புதமான நாட்கள் அவை. உன் எதிர்காலம் குறித்த பெரும் அச்சங்கள் ஏதுமற்றவளாகவே இருந்தாய் நீ. 

வாழ்வில் உன்னைச்சுற்றி உன்னைக் காயப்படுத்தாத மனிதர்கள் இருந்தால் போதுமானது என்றே சொல்வாய். நானும்  உனக்கு அதுவே வாய்க்கட்டுமென விரும்பினேன்..வாழ்த்தினேன். ஒரு வாரயிறுதியில் எதிர்கால வாழ்வு குறித்த பெரும் கனவுகளோடு நீ ஊருக்குக் கிளம்பிச் சென்றிருந்தாய். ஓரிரு நாட்களுக்கும் பின், ஓர் இரவில் என்னைத் தொலைப்பேசியில் அழைத்த நீ வெடித்து அழுதாய். உன்னைத் தேற்ற வார்த்தைகளின்றி ”எல்லாம் சரியாயிடும், நீ அழாத” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.  பின் நீ ஊர் திரும்பியதும் எதிர்பாராத ஓர் அதிகாலையில் உன்னைப் பார்க்க வந்தேன். வாழ்நாளைக்கும் மறக்கமுடியாத புன்னகையை உன் முகத்தில் கண்டேன் அன்று.

நாம் ஒன்றாகச் சென்று வாங்கிய கிட்டார் நினைவிருக்கிறதா உனக்கு. என்னுடைய கிட்டார் இன்றும் உன்னை நினைவூட்டியபடி என் வீட்டுச் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நீ வெளிநாட்டுக்கு பறந்து போவதாய்ச் சொன்ன ஓர் நாளில் என் கிட்டார் இசைப் பயணம் முடிவுக்கு வந்தது.  :) விமான நிலையத்தில் உன்னைச் சந்தித்துவிட பெருமுயற்சி செய்தும், அதில் தோற்று எங்கோ நெடுந்தொலைவில் இருந்து உனக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு வந்தேன் நான். 

அதன் பின் நீ ஊர் வந்து, நாம் சந்திக்கையில் உன் அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கான அறிவிப்புடன் வந்தாய். மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் உன்னிடமிருந்து விடைபெற்றேன் நான். மாதங்கள் உருண்டோடின, நமக்கிடையேயான தொலைபேசி அழைப்புகள் வெகுவாய் குறைந்துவிட்டிருந்த தருணத்தில் , நான் சற்றும் எதிர்பாரா ஓர் நாளில் ஒரு பெரும் துயரிலிருந்து நீ தப்பிப் பிழைத்த வீடு வந்த கதையைச் சொன்னாய்.  இந்தப் பெண் இன்னும் எத்தனைப் போராட்டங்களைத் தான் தாங்குவாள் என விதியை நொந்து கொண்டேன் நான்.

உனது, ஒரு பயணத்திற்கும்  அடுத்த பயணத்திற்கும் இடையேயான நாட்களே நாம் சந்தித்த நாட்களாக மாறிப்போயின. ஒவ்வொரு முறையும் ஒரு புதுமாதிரியான சவாலைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாய் நீ. மற்றுமொரு முறை நீ கடல்கடந்து பறந்துவிட ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாய். பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டுமொரு முறை சந்தித்தோம். ஒரு தேவதை போல உருமாறியிருந்தாய் நீ. அதே பழுப்பு நிற விழிகளும், சிங்கப்பல் புன்னகையுமாய் உடல் மட்டும் வெகுவாய் மெலிந்திருந்தாய். காய்ச்சல் வந்த தேவதையாக, கடுமையான உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருந்த உன்னை நான் நேரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஓரளவு நீ சீரான பின், உணவும், உலாவலும், தேநீருமாய் மிச்ச நாளைக் கடத்திவிட்டு பின்பு உன்னைப் பிரிய மனமில்லாமல் ஒரு மென் அணைப்புடனும் , கலங்கிய கண்களுடனும் உன்னிடமிருந்து விடை பெற்றேன்.

இப்போது எண்ணிப்பார்த்தால், எப்போதெல்லாம் நீ ஏதோ ஒரு துன்பத்தில் சிக்குண்டு இருந்தாயே அப்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உன் வாழ்வில் பெரிதாய் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தாலும், உனக்காக செவிசாய்க்கவும் உரையாடவும், முடிந்தவரையில் கூட நடக்கவும் செய்திருக்கிறேன். I was there for you and will continue to be so.  நாம் அதிகம் பேசிக்கொள்ளாத, குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்ளாத நாட்களில் எல்லாம் நீ கவலைகள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்..நம்புகிறேன்...!

இந்த பிரபஞ்சம் உனக்காக இன்னும் எத்தனை ஆச்சரியங்களை வைத்திருக்கிறதோ தெரியாது. ஆனால் அவை உனக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என உறுதியாக நம்பிகிறேன். உன் வாழ்வின் இந்தப் பகுதி, முழுக்க முழுக்க உனக்கே உனக்கானது. எதிர்கொண்ட அத்தனை போராட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த உனக்கு, இது அமர்ந்து இளைப்பாற வேண்டிய நேரம். உன் மகிழ்ச்சியைத் தவிற வேறெதையும் முன்னிறுத்தாமல், புன்னகையும் கொண்டாட்டமுமாய் உன் வாழ்வை நிறைத்துக் கொள். உன் விருப்பப்படி இன்னும் உயரமாகவும் , தூரமாகவும் பறந்து திரி. கொண்டாடு...! 

இந்தப் பத்தாண்டுகளில் பேசியவை போக,அடுத்த முறை சந்திக்கும்போது உன் பழுப்பு நிற விழிகள் மின்ன இன்னும் நிறைய கதைகளைச் சொல். ஒரு புன்னகையோடு உன் எதிரே அமர்ந்து , உன் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன்...!

Loads of love to you...! Love you...!

மனம் நிறைந்த அன்புடன், 

நான்  <3

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கலகம் காதல் இசை - Bibliography/References/Glossary - Part 1

 

இன்று சாருவின் பிறந்தநாள்...! <3

புத்தகம்/வாசிப்பு சார்ந்து என் நட்புவட்டத்தில் இயங்கும் பலரும் சாருவின் வழியாக நான் கண்டடைந்தவர்களே. வாசகர் வட்டம், விமர்சகர் வட்டம், வாசகசாலை என எல்லா பக்கத்திலிருந்தும் நண்பர்களை இணைக்கிற ஒற்றைப் புள்ளி சாரு.

தனிப்பட்ட முறையில் அவருடைய புனைவல்லாத புத்தகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆய்வு நூல்களைப் போல Bibliography/Glossary/Index/References உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாய் ஒரு விருப்பம்.
சுஜாதாவின் ’கற்றதும் பெற்றதும்’ புத்தகத்திற்கு யாரோ ஒருவர் இதனைச் செய்ததும் நினைவில் வந்தது.

சில மாதங்களுக்கு முன் சாருவின் புனைவல்லாத புத்தகங்களில் ஒன்றான ‘கலகம் காதல் இசை’ புத்தகத்தை இதற்காக எடுத்துக்கொண்டேன். இசை தொடர்பான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பு; வெறும் 120 பக்கங்கள் என்பதால் எளிதாக முடித்துவிடலாம் என்பது என் கருத்து.

Boy.. I was so wrong....! முன்னுரை தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள், பாடல்கள், வரலாற்றுத் தகவல்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள், என ஒவ்வொன்றைப் பற்றிய referenceஐயும் Wiki, youtube, Spotify, Research papers, articles எனத் தேடித் தேடி தொகுக்க வாரங்கள் மாதங்கள் ஆகின.

இந்த பணியை செய்யும்போது நான் புரிந்து கொண்ட விஷயம், வெறுமனே namedropping செய்வதற்காக கூட இத்தனை பேரைப் பற்றி இவ்வளவு தகவல்களையும் இந்த இணைய யுகத்தில் சேகரிக்கவும் புரிந்து கொள்ளவும் இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலவிட வேண்டியிருக்குமே. அத்தனையையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுத சாரு எவ்வளவு வாசித்திருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்...! எவ்வளவு பாடல்களைக் கேட்டிருப்பார் ? உண்மையிலே மலைப்பாக இருக்கிறது...!

Charu is indeed an icon of our times...! <3 Long may you live, write and celebrate Charu....! <3
 
இதோ இன்று வரை முன்னுரை உட்பட முதல் நான்கு அத்தியாயங்களுக்கான references என் blogல். கூடிய விரைவில் இரண்டாம் பகுதியையும் பதிப்பிக்கிறேன். 
 
Link to buy the book : Zero Degree Publishing

Preface:

Naqareh - Youtube - Musical Instrument

Senior Dagar brothers -  Junior Dagar brothersNasir Zahiruddin and Nasir Faiyazuddin - Youtube - Singer/Artist/Musician

Dhrupad - Dagar Tradition 

Baba Behram Khan Dagar - Singer/Artist/Musician

Octavio Paz - Book by Octavio Paz - In Light Of India  - Writer/Author

Dr.Gangubai Hangal - Spotify Playlist  - Youtube- Singer/Artist/Musician

Pandit Jasraj - Spotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Mallikarjun MansurSpotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Kumar Gandharva - Spotify Playlist  - Youtube - Singer/Artist/Musician

Basavaraj Rajguru - Youtube - Singer/Artist/Musician

Kishori Amonkar - Youtube- Singer/Artist/Musician

Rajan and Sajan Mishra - Youtube- Singer/Artist/Musician

Parween Sultana - Youtube- Singer/Artist/Musician

Ustad Allah Rakha - Youtube - Singer/Artist/Musician

Ravi Shankar - Youtube  - Singer/Artist/Musician

Rais Khan - Youtube - Singer/Artist/Musician

Bismillah Khan - Youtube - Singer/Artist/Musician

N.Rajam - Youtube - Singer/Artist/Musician

Pannalal Ghosh - Youtube - Singer/Artist/Musician

Shivkumar Sharma - Youtube - Singer/Artist/Musician

Bade Ghulam Ali Khan - Youtube - Singer/Artist/Musician

Iannis Xenakis - Youtube - Singer/Artist/Musician

Reggaeton Ninos - Youtube - Singer/Artist/Musician

Daddy Yankee - Gasolina  - Singer/Artist/Musician

Eminem  - Rapper/Artist/Musician

Cesária Évora - Youtube - Singer/Artist/Musician

Fado - Music form/genre - Portuguese / Youtube

Morna - Music form/genre - Cape Verde/Cabo Verde / Youtube

Chapter - 1

Augusto Pinochet - Dictator ruler of Chile / Politician

Victor Jara - - Singer/Artist/Musician - Venceremos song - Plegaria a un labrador song

Patricia Verdugo - Journalist/Author

Nicanor Parra - Chilean Poet - Poetry

Violeta Parra - Composer - Youtube

Nueva canción - Social movement / Music genre

Salvador Allende - Politician - Chile

Illapu - Music Band - Despedida Del Pueblo song

Charango - Musical Instrument - Youtube

Quena  - Musical Instrument - Youtube

El candombe para jose - Song

Preguntas por Puerto Montt - Song written by Victor Jara

Chapter - 2

Plutarch - Greek Philosopher

Lycurgus of Sparta - Lawgiver of ancient Sparta 

Lyre - Youtube - Greek Music Instrument

Pindar - Ancient Greek Poet

Muses -  Greek goddesses

Thamyris - Greek Mythology - Singer

The Iliad by Homer - Ancient Greek Poem

Paradise Lost by John Milton - Poem

Alypius - Author of Eisagōgē mousikē (Introduction to Music) book

Ensemble De Organographia - Instrumental/Band/Music - Greek - Youtube

Euripides - Greek Playwright who wrote Medea 

A Dream of Passion (1978) aka  Kravgi gynaikon - Movie based on the Greek tragedy Medea

The Consolation of Philosophy - Book by Boethius - Youtube

Chapter - 3



Zorba's dance - Song/Music - Youtube / Original score

Nikolaos Mantzaros - Greek Music Composer

Georgios Papandreou - Greek politician / Former Prime Minister of Greece

Georgios Papadopoulos - Greek politician / Colonel / Military ruler

Athens Polytechnic Uprising - Historic/Political event


Leonard Bernstein - American Music Composer - Youtube

Yehudi Menuhin - American born Violinist/ Music Conductor - Youtube

Bouzouki - Greek Musical Instrument - String - Youtube

Rebetiko/Rembetika - Ancient Greek Music Fom - Youtube

Smyrna 1922: The Destruction of a City - Book written by Majorie Housepian Dobkin - Amazon

Anabasis - Ancient Greek Book written by Xenophon

'Rebetika – The Music of the Outsiders' - Research work of Rembetika music by Lysandros pitharas - Youtube for the documentary

Dionysis Savvopoulos - Greek Songwriter/Singer/Music Composer - Youtube
Vrómiko Psomí (1972 ) - Music album by Dionýsis Savvópoulos - Youtube
Road to Rembetika: Music of a Greek Sub-Culture - Songs of Love, Sorrow and Hashish -
book written by Gail Holst
Songs of the Greek Underworld: The Rebetika Tradition  - book written by Elias Petropoulos


(The other books of Elias which Charu has mentioned are not yet translated in English - However, you can access the list here in the Greek Wikipedia page)

Ilias Petropoulos-An Underground World - The documentary on Elias Petropoulos is available on Youtube - (without English subtitles)

Márkos Vamvakáris - Greek Musician - Youtube - Spotify

Vassilis Tsitsanis - Greek Musician/Songwriter - Youtube - Spotify

Roza Eskenazi - Greek Singer - Youtube - Spotify

Rita abatzi - Greek Singer - Youtube - Spotify

Sotiria Bellou - Greek Singer - Youtube - Spotify

Marika Ninou - Greek Singer - Youtube - Spotify
 

Chapter -4

Iannis Xenakis - Youtube - Singer/Artist/Musician
 
Metastasis  - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube
 
 
 
Pithoprakta - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube 
 
Towards a Metamusic - Journal/Article by Iannis Xenakis

The Geometry of Art and Life - Book on Msuic and Mathematics by  Matila Ghyka

Polytope - Orchestration/Composition by Iannis Xenakis - Youtube
 
Xenakis - Biography of Iannis Xenakis written by  Nouritza Matossian

சனி, 28 நவம்பர், 2020

The Trial of the Chicago 7 (2020) - Netflix - 2020

உலகம் முழுவதும் போராட்டங்களுக்கென ஒரு நெடிய வரலாறு உண்டு. வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், அடிப்படை உரிமைகளுக்காகவும் என காரணங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். சில நேரங்களில் உயிர்பிழைத்து வாழ்வதற்காகக் கூட மக்கள் போராட வேண்டிய சூழல் நிலவக்கூடும்.

தனி மனிதர்களின் குரல்களுக்கு அரசோ அதிகாரமோ அமைப்போ எவ்வகையிலும் செவி சாய்க்காதபோது, அவர்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கும் பொருட்டும், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கவும் போராட்டங்கள் அவசியமாகின்றன. உலக அரசியலில் பெருமளவு மாற்றங்களை நிகழ்த்திய புரட்சிப் போராட்டங்கள் அத்தனைக்குமே தங்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும் என்கிற அடிப்படைக் காரணமே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்க வேண்டும். 

அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதற்காக வெவ்வேறு குழுக்களுக்குத் தலைமை தாங்கிய ஏழு பேர் மீது வழக்குத் தொடுக்கிறது அமெரிக்க அரசு. முறையான அனுமதி பெறாமல் கூட்டம் சேர்த்து பொது அமைதிக்கு ஊறு விளைவித்து அரசாங்கத்துக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டதாக காரணம் சொல்லப் படுகின்றது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த வழக்கின் தொடக்கம் முதல் தீர்ப்பு வரை நடந்த சம்பவங்கள்தான் ’The Trial of the Chicago 7’ திரைப்படம். 
இந்த திரைப்படத்தில், அப்போது அமெரிக்காவில் சொல்லப்படும் பல விஷயங்களை இங்கே நடக்கும் சம்பவங்களோடு (பிமா கோரேகான், டெல்லி போராட்டங்கள்) எளிதாகப் பொருத்திப் பார்க்கலாம். குரலற்றவர்களின் குரலை ஒடுக்குதல், நியாயம் கேட்டு தங்களுடைய உரிமைக்காக போராடுகிறவர்களை அவர்களின் கோரிக்கைகள் என்னவென்று கூட கேட்காமல் குற்றம் சுமத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் என முத்திரைகுத்துதல் என நீளும் அந்தப் பட்டியல்.

எல்லா தரப்பையும் தீர ஆய்ந்து நேர்மை தவறாது தீர்ப்பு வழங்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையது. ஆனால் நீதித்துறையும், நீதிபதிகளும் ஒரு தலைப்பட்சமாகவும் அரசியலமைப்பிற்கு எதிராகவும் செயல்பட்டால் ? முன்முடிவுகளோடு வழக்கை அணுகினால் ? மக்கள் யாரை நம்புவார்கள்..?! 

கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய Black Panther கட்சியின் நிறுவனர்களுள் ஒருவர் Bobby Seale . இந்த வழக்கில் 8வது ஆளாக சேர்க்கப்பட்டு பின் நீக்கப்படுவார். அதற்குக் காரணமான சம்பவம் திரையில் காட்சிகளாக விரியும் போது நிச்சயமாய் உங்கள் மனதை உலுக்கிப்போடும்.

வேறொரு நேரத்தில் பாபிக்கும் , வழக்கில் தொடர்புடைய மற்றொரு சமூகப் போராளி டாம் ஹேடனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடல்..இது...

Bobby: The seven of you, you all got the same father, right ? I'm talking to you... You all got the same father right ? "Cut your hair....don't be a fag...respect authority...respect America...respect me." Your life is a fuck you to your father right ? a little...

Tom: (remorsefully says) May be...

Bobby: And you can see how that's different from a rope on a tree ?

வரலாற்றில் சில போராட்டங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கலாம். போராடுகிறவர்களின் முகங்களும், குரல்களும், வழிமுறைகளும் மாறினாலும் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கும். 
The Trial of the Chicago 7 (2020) - Netflix தளத்தில் இந்த திரைப்படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள். 

அந்தகாரம் - Anthagaram - 2020 - Netflix

எனக்கு பெரிய உலக சினிமா பரிச்சயமெல்லாம் இல்லை. ஆனாலும் வெவ்வேறு இயக்குநர்களின் திரைப்படங்களை தொடர்ச்சியாகப் பார்க்கும் போது அவர்களுடைய காட்சி மொழி, Signatureலாம் ஓரளவு புரிஞ்சுக்க முடிஞ்சுது ( Eg: Wes Anderson, Quentin Tarantino, Spike Lee, David Fincher)

அந்த மாதிரி சில குறிப்பிட்ட உணர்வுகளை திரைல காட்சிப் படுத்தும்போது இந்த இயக்குநர் தான் இத சிறப்பா பண்ண முடியும்னு தோணும்....ஒரு கட்டத்துல அதே உணர்வுகளையும் காட்சி மொழியையும் வேற யார் கையாண்டாலும் நம்ம மனசுல பதிஞ்ச நமக்கு விருப்பமான இயக்குநருடைய signature தான் தெரியும்...

(spoilers ahead)

அந்தகாரம் படம் பாத்தப்போ படம் முழுக்க என் மனசுல மிஷ்கின் தான் இருந்தாரு. கதைலயும் நிறைய விஷயங்கள் அவருடைய படங்கள நினைவூட்டிகிட்டே இருந்துச்சு. பார்க்கும் திறனற்ற செல்வம் பாத்திரம், அப்புறம் அந்த ஃபோன தூக்கிட்டு வினோத் ஓட்றது அப்டியே பிசாசு படத்துல நாயகன் ஆப்பிள் டப்பாவோட ஒட்ற காட்சியையும் நினைவு படுத்துச்சு.  மரணத்துக்கான தேடல், காரணங்கள், இறந்து போனவங்க உதவி பண்றதுன்னு நிறைய பிசாசு references. 

(spoilers end) 

படம் பார்த்த நிறைய பேர் குறையா சொன்னது running time... கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள்... ஆனா இயக்குநர் நினைச்ச மாதிரி எல்லாத்தையும் visual ஆ காட்டிருந்தா இன்னமும் ஒரு 30-40 நிமிஷம் அதிகமாகியிருக்கும். அதை தவிர்க்க தான் க்ளைமாக்ஸ்ல மொத்தமா வசனத்துல எல்லாத்தையும் விளக்கி சொல்ல வேண்டியதா இருந்துச்சுன்னு நினைக்கிறேன்.

தனிப்பட்ட முறைல எனக்கு சிக்கலா தோன்றியது Psychiatry/psychology பத்தி பொதுவா மக்களுக்கு இருக்கிற தவறான புரிதல்களையும் அச்சங்களையும் ஊதிப் பெருசாக்குற மாதிரியான காட்சிகள்/உரையாடல்கள் படம் முழுக்க இருக்கு. நிறைய misconceptions and misunderstandings வர வாய்ப்பிருக்கு. டாக்டர் பாத்திரத்தின் அடிப்படையிலேயே பிரச்சனை இருக்குறதா தோணுது. அமானுஷ்யத்தையும், உளவியலையும் குழப்பியடிச்சிருக்க வேணாம். 

மத்தபடி ரொம்ப சிக்கலான திரைக்கதை அமைப்போட  வினோத், செல்வம், டாக்டர் இவங்க மூனு பேருடைய கதைகளையும் இணைச்சு சொன்ன விதமும், காட்சிப்படுத்தலும், Non-linearஆ அதைத் தொகுத்த விதமும் ரொம்பவே நல்லா இருந்துச்சு. நான் சலிக்காம பாத்தேன். ரொம்பவே புடிச்சுது...! பிரதீப் குமாரின் இசையும் பொருத்தமா, சிறப்பாவே இருந்துச்சு (Srini மாதிரி யாராவது இதப்பத்தி technical ஆ விரிவா எழுதுவாங்கன்னு நம்புறேன்)

நந்தா படத்துல ஜூனியர் சூர்யாவா அறிமுகமாகி 'நான் மகான் அல்ல'ல வில்லத்தனம் பண்ண விநோத் கிஷன் இதுவரைக்கும் template ஆ பண்ண எந்த பாத்திரம் மாதிரியும் இல்லாம நல்லாவே நடிச்சுருக்காரு. ரொம்ப பவர்ஃபுல்லான கண்கள் அவருக்கு.. ஆனா அவரை பார்வையற்றவரா நடிக்க வெச்சுட்டாங்க. ஆனாலும் he scored 😊❤️ அர்ஜூன் தாஸுக்கும் நல்ல scope இருக்கிற பாத்திரம்... அந்த madnessக்கு சரியா பொருந்திப் போற ஒரு ஆள். நல்ல performance. Casting was on point. அந்த பிரதீப் அக்கா (Misha Goshal) and வினோத்துடைய காதலி (Pooja Ramachandran) பாத்திரங்களின் உருவ ஒற்றுமை தற்செயலா அல்லது நம்மள குழப்புறதுக்காக வலிஞ்சு பண்ணதா தெரியல 😂 

OTT இல்லன்னா இந்த மாதிரி experimentகள் வெளிச்சதுக்கே வராது.Despite of some clichés, I liked the movie overall and was totally immersed Since it is an entirely different attempt made in Tamil (or I feel that way), I wanted to write about this movie.  Kudos to the director and the whole team 😊

Can't believe that the movie was originally made in 2014...! 

Anthagaram is streaming on Netflix

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

Soul Piercing Balu...!


மூன்று நாட்களாக மனம், சொல், செயல் என அத்தனையிலும் நிரம்பிக்கிடக்கிறார் SPB...! எனக்குத் தெரிந்தவரையில, அண்மையில் எந்த ஒருவரின் மறைவிற்கும் இத்தனை பேர் this feels personal என்று சொல்லக் கேட்டதில்லை;கண்டதில்லை. Indeed, it felt personal for me as well and the loss is incomparable...! 

இசையமைப்பாளருக்கும், பின்னணிப் பாடகருக்கும், பாடலாசிரியருக்கும், நடிகருக்கும் இடயேயான வேறுபாடுகளை பகுத்து அறிந்துகொள்ளத் தெரியாத வயதிலிருந்தே பரிச்சயமானவை அவருடைய முகமும் குரலும்...! 

கடந்த இரு நாட்களாக நண்பர்கள் பலரும் SPB பற்றி எழுதிய, பேசிய விஷயங்களில் குறிப்பிட்ட ஒன்று, அவர் ஏதோ ஒரு வகையில் எந்த ஒரு சாமானியனும் அவரைத் தொட்டுவிடக்கூடிய, எதாவது ஒரு பாடலில் அவரது குரலை நகலெடுத்து தன்னையும் SPBயாக உணர்ந்துகொள்ளக் கூடிய இடத்தைத் தந்திருக்கிறார் என்கிற விஷயம். எத்தனை ஆழமான, உணர்வுப்பூர்வமான கண்டுணர்தல் இது..! கவிஞர் இசையின் ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ கவிதை இந்தத் தருணத்தை வார்த்தைகளில் படம்பிடித்த அற்புதமானதொரு snapshot.

நானொரு small time amateur singer...SPB மாதிரியான பெருங்கலைஞர்களின் பாடல்களிலிருந்து அவர்களின் குரலை..சாயலை... நகலெடுத்துவிட்டு அற்பமாய் மகிழ்ந்து சிரித்துக் கொள்கிறவன். பாடலின் ஒரு துணுக்கையாவது பத்து சதவிகிதம் சரியாகப் பாடிவிட்டால் பெருமிதத்தில் தூக்கம் வராது எனக்கு.

ஐம்பதாண்டுகளாய் பாடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு அதுவும் இசையமைப்பாளர் , கவிஞர், நடிகர், இயக்குநர், கதை, சூழல், உணர்வு என அத்தனையையும்/அனைவரையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றை குரலில் மிகச்சரியாக வெளிப்படுத்திவிடுகிற பெரும் கலைஞனுக்கு இந்த இசை எத்தனை இன்பத்தை வாரி வழங்கியிருக்கக்கூடும் ! I've been wondering how fulfilled and pleasure full he must've felt என்று...!

And most of us are realizing how close he has been to all of us, only now... மனதளவில் ஆண்டாண்டுகளாகத் தன் குரலால் நம்மை அணைத்துக் கொண்டிருந்தார் தானே ?

சில இழப்புகளை வார்த்தைகளின் துணையின்றி வேறு எப்படியும் கடந்துவிடவே முடியாது. எந்த நோக்கமும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக அவருடைய பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், மேடைக் கச்சேரிகளையும், பாடல்களையும் தொடர்ச்சியாக ஓடவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கட்டுப்படுத்தவே முடியாத கண்ணீருடனும்..! 

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். கோவையாய் பெரிதாகச் சொல்லிவிட என்னிடம் என்ன இருக்குமோ தெரியவில்லை. Pardon me if none of what I've written here makes any sense to you. 

பொதுவாக எல்லாக் கலைஞர்களும் தங்களுக்கு மிகப் பிடித்தமான அல்லது கைவந்த கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகையில் , அது எந்தளவு அவர்களை மகிழ்வித்து மனம் நிறைக்கிறதென மூன்றாவது மனிதராய் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் SPB அப்படியல்ல.. மேடையோ டிவியோ..பாடினாரென்றால் ஒரு பாடல் வரியை எந்தளவு, உணர்ந்து, ரசித்து, உருகி, கொண்டாட்டமாய் அனுபவித்துப் பாடிக்கொண்டிருக்கிறார் என அப்பட்டமாய் புலப்படும் நமக்கு. சோகமோ, மகிழ்ச்சியோ, நெகிழ்ச்சியோ, அந்த உணர்வு சிந்தாமல் சிதறாமல் அப்படியே நம்மை வந்தடைந்து மொத்தமாய்த் தாக்கும்...! It has always been a pleasure, not only to listen him sing but also to watch him sing...! 

எத்தனை மொழிகள், எத்தனை ஆயிரம் பாடல்கள், எவ்வளவு உணர்வுகள்...அத்தனைக்கும் ஒரே குரல்..ஒரே உடல்..ஒரே முகம்...! 

Interstellar திரைப்படத்தில் love பற்றிய ஒரு உரையாடல் உண்டு...

“Listen to me when I say that love isn’t something we invented, it’s observable and powerful, it has to mean something…maybe it means something more, something we can’t yet understand. Maybe it’s some evidence, some artifact of a higher dimension that we can’t consciously perceive... Love is the one thing we’re capable of perceiving that transcends dimensions of time and space. Maybe we should trust that, even if we can't understand it. ” — Dr. Brand, Interstellar.


”கால வெளி பரிமாணங்களையும் தாண்டி நம்மால் ஒன்றை உணர்ந்து கொள்ள முடியுமென்றால், அது அன்பு மட்டுமே” என விளங்கிக் கொள்கிறேன். 


அவருடை குரலில் வந்த பாடல்களின் வழியாக, கால வெளி கணக்குகளுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் அவரோடு பேசிவிட முயன்றபடியே இருந்துவிடப்போகிறேன்...!

கடைசியாக குமரகுருபரனின் கவிதை ஒன்று... 

நனைக்கிற எல்லாத் துளியிலும் இருக்கிறது

ஏதோ ஒரு மழை.

வெட்டுகிற எல்லா மின்னல் கீற்றுகளிலும் இருக்கிறது

ஏதோ ஒரு ஞாபகம்.

தவிக்கும் எல்லோரின் ஞாபகங்களிலும் இருக்கும்

ஏதோ ஒரு நிலா.

ஆமென்.

பாடும் நிலா...my beloved Balu sir.. Love you to the moon and back.. And I terribly terribly miss you...! ❤️


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை, முறைசாரா தொழிலாளர்கள், Skilled labourers


 

சென்ற ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த வகை திறன் தொழிலாளர்கள் உண்டு. புதிய கல்விக் கொள்கை -2020 வழிகாட்டலின் படி ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வியை அறிமுகம் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நாட்டில் இந்த திறன் தொழிலாளர்களுக்கான தேவையை இட்டு நிரப்பிட முடியும் என்பது ஒரு தரப்பினரின் வாதம். இது நியாயமான தீர்வாக இருக்க முடியுமா ?

இப்படியான திறன் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் , இவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றை நெறிப்படுத்தவும் மத்திய அரசோ மாநில அரசோ எந்த , வரைமுறைகளையும் இதுவரை செயல்படுத்தவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் unorganized sector எனப்படும் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதும் ஒரு காரணம். (mostly level 1 and 2)

முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008 (The Unorganized Workers' Social Security Act (2008)) -ன் படி, மத்திய மாநில அரசுகள் சில பல காப்பீட்டுத் திட்டங்களையும் , இழப்பீடுகளையும் பரிந்துரைக்கிறதே அன்றி கட்டாயமாக்கவில்லை. மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் தெளிவான விளக்கங்கள் இல்லை. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வாரியங்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்கள் உட்பட வெறும் பதினோரு மாநிலங்கள் மட்டுமே இதைச் செயல்படுத்தின.

2010-11 ஆண்டுகளில் அப்போதைய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக (National Social Security Fund - NSSF) , 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.  அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும், பாதித் தொகையோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ மட்டும் வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை குழு (Comptroller and Auditor General - CAG) தாக்கல் செய்த அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டு  பின் பயன்படுத்தப்படாமல் தேங்கிய தொகை மொத்தம் ரூ.1927 கோடிகள். இந்தத் தொகை மீண்டும் மத்திய தொகுப்பு நிதியிலேயே (Consolidated Funds of India) சேர்க்கப்பட்டது.

அப்படியே இந்த தொகை முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆணையங்களும் அமைக்கப் பட்டிருந்தாலும், போதுமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே ? ஏன் ?

CBAG (Centre for Budget and Governance Accountability) என்கிற அமைப்பு தாக்கல் செய்த ஆய்வறிக்கையின் படி , உன்மையில் முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கவேண்டிய தொகை ரூ.22,841 கோடிகள் (நாட்டின் மொத்த GDPல் 0.39 சதவிகிதம்) இந்த பரிந்துரைக்கப்பட்ட தொகைக்கும் அரசு ஒதுக்கிய தொகைக்குமான வேறுபாட்டிலேயே உண்மை நிலையை விளங்கிக் கொள்ளலாம்

2019ஆம் ஆண்டின் இறுதியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட Code on Social Security 2019 சமூகப் பாதுகாப்பு மசோதா , பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிட்டத்தட்ட தொழிலாளர் நலம் தொடர்பான பத்து சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கூறுகளைக் கொண்டிருந்த இந்த மசோதாவில் தான் முறைசாரா தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் gig workers, platform workers (ஸ்விக்கி, ஊபர், மாதிரியான தளங்களின்  ஒருங்கிணைப்பில் பணிபுரிகின்றவர்கள்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள், வேற்று மாநிலத் தொழிலாளர்கள்  (Inter state migratory workers) உள்ளிட்டவர்களையும் அரசு வகைமைப்படுதியிருக்கின்றது. இவர்களின் நலனுக்கான வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, ஜன் தான் திட்டம் உள்ளிட்டவற்றையும் பரிந்துரைத்திருக்கின்றது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டால் தான் இவற்றில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். 

இப்போது புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிற சில பரிந்துரைகளோடு பார்க்கலாம். 

1.மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வுகள்

2. ஆறாம் வகுப்பிலிருந்தே மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வியை (உள்ளூர் திறன்தொழிலாளர்களோடு இணைந்து) அறிமுகப்படுத்தல்

3. இளங்கலை/அறிவியல்/பட்டயப் படிப்புகளுக்கு - மூன்றாண்டுகள் கட்டாயம் , இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு - நான்கு ஆண்டுகள் கட்டாயம் - இந்த முறையை மாற்றி முதல் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய கல்வியை இடைநிறுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற சான்றிதழ் வழங்கப்படும் என மாற்றம்

4. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், என அத்தனைக்கும் இளங்கலை/முதுகலைக்கென தனித்தனி நுழைவுத் தேர்வுகள், தேசிய திறனறி தேர்வுகள், தகுதித் தேர்வுகள், தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள்

5. கட்டாய மும்மொழிக் கொள்கை - கட்டாய தாய்மொழிக் கல்வி 

6. கல்வியில் மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு மாற்றல் 

தொழிலாளர் நலம் சார்ந்த சட்டங்கள், சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மேற்சொன்ன அத்தனையையும் மனதில் நிறுத்தி, அவற்றை புதிய கல்விக்கொள்கை முன்வைக்கிற திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 

பலதரப்பட்ட சமுகப் பொருளாதரப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதே ஓர் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, தரத்தின் பெயரால் கல்வியைப் பெற இத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டு அவர்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் மறைமுகமாகத் தடுத்து நிறுத்துவதாக இருக்கக் கூடாதல்லவா ?

Skilled labour கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சுற்றிவளைத்து புலம்புவதெல்லாம் cheap labour கிடைக்கவில்லை என்பதாவே புரிந்து கொள்கிறேன்.

குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பையும் நிலையான ஊதியத்தையும் வழங்குகிற சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் நுழைய உதவும் தற்போதைய கல்விமுறையை மாற்றி, பணிப்பாதுகாப்போ, சட்டப்பாதுகாப்போ, நிலையான ஊதியமோ இல்லாது முறைசாரா தொழில்களுக்குள், திறன் தொழிலாளர்கள் என்ற பெயரில் நம் குழந்தைகளைத் தள்ளுவதா அறம் ?

இது அமைப்புசார் அடக்குமுறை (systematic oppression) அல்லவா ? 

***Spoilers ahead***

Snowpiercer என்ற  ஒரு கொரியத் திரைப்படம் உண்டு. உலகம் மொத்தமும் பணி சூழ்ந்து வாழத் தகுதியற்றதாக மாறிய பின் உலகின் கடைசி மக்கள் கூட்டம், நில்லாமல் ஓடும் ஒரு ரயிலில் பயணிக்கும். அங்கேயும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு.ரயிலில் செல்வச் சீமான்கள் சொகுசான முன் பகுதிப் பெட்டிகளிலும் அந்த ரயிலைத் தொடர்ச்சியாக ஓடவைக்கிற உழைக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ரயிலின் பின் பகுதிப் பெட்டிகளிலும் வாழ்ந்து வருவார்கள்.  

ஏழைகளின் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உயரமும் எடையும் கொண்டிருக்கிற குழந்தைகள் வருடந்தவறாமல் தொடர்ச்சியாகக் காணாமல் போவார்கள். இதனைத் தடுத்து அந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆனது என கண்டறியும் பொருட்டே தொழிலாளர்களிடையே கிளர்ச்சி எழும். ஆயுதம் ஏந்தி ஒரு தலைவன் பின்னால் அணிவகுத்து போராடுவார்கள். பெரும் உயிர்ச்சேதமும் போராட்டமும் நிகழ்ந்தபின் அந்தத் தலைவன் ரயிலை இயக்குகிற இஞ்சின் பெட்டியை அடைவான். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காம இறுதியில்  இஞ்சின் கதவைத் திறக்கும்போது அவன் காணும் காட்சி நம் இதயத்தை உறையவைக்கும். 

காணாமல் போகும் அந்தக் குழந்தை, பழுதாகிப் போன ஒரு இஞ்சின் பாகத்துக்குப் பதிலாக கையால் அந்த வேலையை செய்ய உட்காரவைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட வயது, உயரம், எடையில் அதுவரை காணாமல் போன அத்தனைக் குழந்தைகளும் அதற்காகத்தான் பயன்படுத்தப் பட்டிருப்பார்கள் என்ற உண்மை புலப்படும். 

***Spoiler ends***

இதற்குமேல் நேரடியாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. 

நம்மாலானதெல்லாம் குறைந்த பட்சம் நம்முடைய வட்டத்தில் இருப்பவர்களுக்காவது இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. அதையாவது முழுமையாகச் செய்வோம். 

உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பேசுவோம்

***********************************************************

References:

https://thewire.in/labour/national-social-security-fund-unorganised-workers

https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Report_No.44_of_2017_-_Financial_Audit_on_Accounts_of_the_Union_Government.pdf

https://www.inventiva.co.in/stories/riyarana/india-lockdown-most-affected-is-unorganized-sector-it-is-93-of-the-total-workforce-41-crore-people-lack-economic-security/

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://economictimes.indiatimes.com/news/economy/indicators/national-database-of-workers-in-informal-sector-in-the-works/articleshow/73394732.cms?from=mdr

https://www.prsindia.org/billtrack/code-social-security-2019#:~:text=The%20Code%20on%20Social%20Security%2C%202019%20was%20introduced%20in%20Lok,for%20Labour%20and%20Employment%2C%20Mr.&text=It%20replaces%20nine%20laws%20related,'%20Social%20Security%20Act%2C%202008.

https://www.financialexpress.com/opinion/skill-india-why-there-is-a-gap-between-current-status-and-goals-explained/1520633/#:~:text=The%20proportion%20of%20formally%20skilled,and%2096%25%20in%20South%20Korea.

https://www.rediff.com/business/column/does-india-have-enough-skilled-labour/20190930.htm



செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்து - #MeToo மற்றும் #CancelCulture

(C) - Illustration by Taylor Callery for TIME


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற ஆஃப்ரிக்க அமெரிக்கர் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முக்கியத்துவம் பெற்றது இந்த #CancelCulture என்கிற விஷயம். ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவமதித்த, அவதூறாக, மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரித்த திரைப்படங்களையும், அவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்களையும் எதிர்த்து போராடத் துவங்கினர். விளைவாக hbo சேனலிலிருந்து ‘Gone with the wind’ திரைப்படமும், netflixல் இருந்து ‘the help’ திரைப்படமும் நீக்கப்பட்டன.


#MeToo இயக்கத்தில் தொடங்கி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வரை எல்லா தரப்பிலும் இந்த Cancel culture கடைபிடிக்கப்பட்டது/படுகிறது.



ஒரு துறையில் பெரும் புகழ்பெற்ற தனிமனிதர் (சினிமா/விளையாட்டு/அரசியல்/கலை etc) அவருடைய கடந்தகாலத் தவறுகளின் அடிப்படையிலோ அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ பொதுத் தளத்திலும் பிற இடங்களிலும் (அவரின் கலைத்திறம் ஆளுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல்) நிராகரிக்கப்பட்டால், அது தான் #CancelCulture இந்த வரிசையில் காலம் கடந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது அந்த படைப்பு உருவான காலகட்டத்தில் சரியான பார்வையோ புரிதலோ இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தேதிக்கு அந்த திரைப்படமோ/புத்தகமோ பேசும் விஷயம் தவறு (irrelevant/incorrect) எனக் கொள்வது.

இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை நூறாண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் இதைப் போல நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ’The Dearborn Herald' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த அவர், யூதர்களை மோசமாக சித்தரித்து அவதூறாக எழுதப்பட்ட ஒரு தொடர் கட்டுரையையும் அந்த பத்திரிக்கையில் வெளியிட்டுவந்தார்.பின்பு அமெரிக்கா முழுக்கவும் யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பாலும், அறப்போராட்டங்களாலும், நீதிமன்ற வழக்குகளாலும் ஒரு கட்டத்தில் ஃபோர்ட் தனது தவறுகளுக்காக பொது மன்னிப்புக் கேட்க வேண்டிவந்தது.அப்படியாக அந்த cancellation campaign முடிவுக்கு வந்தது.

இதே போல் சமகாலத்தில் sexual assault / harassment பாலியல் புகார் காரணமாக cancel செய்யப்பட்டவர்கள் ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், இயக்குநர் வுடி ஆலன், நடிகர் கெவின் ஸ்பேசி உள்ளிட்டோரும் உண்டு.

இந்த #CancelCulture சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு பிரபலத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
இது இப்படி இருக்க, இந்த sexual assault/harassment allegations ஐப் பொருத்த வரையில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே அன்றி பொதுவில் அவர் எப்படி நடத்தப் பட வேண்டுமென்றோ ஊடகம் உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி அணுக வேண்டும் என்றோ எந்த guidelinesம் இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்)

நம்மளால, நம்முடைய மனசாட்சிப்படி, moral compass படி, நமக்குத் தெரிஞ்ச தகவல்களை வெச்சு தான் முடிவெடுக்க முடியும். அப்படிப் பாத்தா benefit of doubtஅ position of powerல இருக்குறவங்களுக்கு குடுக்காம இருக்குறதுதான நியாயம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தானே நிக்கனும்.

வைரமுத்து எழுதுன பாடல்களைக் கேக்குறது guilty pleasure தான்..ஆமாம் அவருடைய எழுத்தைப் புகழத்தோணும் தான் அதே சமயம் அவரால பாதிக்கப்பட்ட இந்த victims பத்தி ஞாபகம் வந்தா நமக்குள்ள ஒரு conflict வரனும். அதான் நியாயம்…! பரவால்ல… இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கிறவரை, நம்மால முடிஞ்சவரைக்கும் அவரைக் கொண்டாடாம இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன்.

இவ்வளவு எழுதுறதுக்கு காரணமும் அந்த internal conflict தான்.

வைரமுத்து, தாம்ப்ராஸ் நாராயனன், காஞ்சிபுரம் ஜெயேந்திரன், உள்ளிட்ட எல்லாரையும் ஒரே தட்டுல தான் வெச்சுப் பாக்கனும்..எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரே மாதிரி தான் அணுகனும்… போலவே ஸ்ரீரெட்டி அவர்களுடைய புகாரையும் சின்மயி அவர்களுடைய புகாரையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கனும். Partialஆ அறம் பேசக் கூடாது…!


எனக்கு எழுந்த இன்னொரு கேள்வி, இந்த #CancelCulture மாதிரியான விஷயங்களைப் பத்தி இங்க நம்முடைய தமிழ் சமூகத்துல ஏன் பரவலான விவாதங்கள் எதுவும் நடக்கல ? குழப்பத்துல இருக்குறவன் தன்னுடைய referenceக்காக தேடுனா கூட இங்க எந்த ஆய்வுகளோ விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை…இந்த போஸ்ட் எழுத அதுவும் ஒரு காரணம்.


உங்களுடைய கருத்துகளை சொல்லுங்க. I’m eager to learn, unlearn and listen


(மேற்கண்ட போஸ்ட் நான் ஃபேஸ்புக்கில் எழுதிய. பின்னாட்களில் referenceக்காக இங்கே பதிகிறேன். கூடவே நண்பர்களுடைய கருத்துகளையும்)



திங்கள், 18 மே, 2020

வெறுப்பின் வேர்கள் - The anatomy of hate by Revati Laul



வெறுப்புக்கும் கோபத்திற்குமான வேறுபாடு என்ன ? கோபம் ஒரு நொடிப்பொழுதில் ஒரு குறிப்பிட்ட சூழலில் அப்போதைக்கு நிகழ்கிற உணர்வுப்பூர்வமான எதிர்வினை (emotional response) அல்லது ஒரு உணர்வு வெளிப்பாடு . வெறுப்பென்பது அப்படியல்ல; பல காலமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைப்படுகிற ஒன்று. தவறான முன்முடிவுகள், மதிப்பீடுகள், அருவருப்பு, கோபம், பழி உணர்வு, ஏமாற்றம் உள்ளிட்ட பலவற்றின் கலவைதான் வெறுப்பெனக் கொள்ளலாம்.

மேலும், உளவியல் ரீதியாக தனி மனிதர்களைக் காட்டிலும் ஒரு குழுவின் மீதான வெறுப்பை வளர்த்துக்கொள்வது எளிதென சொல்லப்படுகிறது. நீங்கள் முகந்தெரியாத யாரோ ஒருவர் மீது உடனேயே கோபப்பட முடியும்; ஆனால் அவரை நீங்கள் வெறுப்பதற்கு உங்களுக்கு தொடர்ச்சியாக நிறைய காரணிகளும், நியாயங்களும் தேவைப்படலாம். அப்படி காலம் காலமாக ஒரு மதத்தின் பெயரால் மற்றொரு மதத்தின் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்களுக்கு , அதை மொத்தமாக வெளிக்காட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்ன ஆகும் ? எதிர்படுகிறவர்களின் நிலை என்ன ? அங்கே ஒரு உயிருக்கான மதிப்பு இருக்குமா ?



2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த மதக்கலவரங்களும் , உயிர்கள், உடைமைகள் என பெரும் சேதம் விளைந்ததையும்,  கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக (அதிகாரப்பூர்வமான தகவல் மட்டும்)  நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரே நாளில் நடந்துவிட்ட ஒர் நிகழ்வா ? கலவரங்களைச் செய்தவர்களும், வீடுகளைக் கொளுத்தியவர்களும், கடைகளைச் சூரையாடியவர்களும் , பெண்களை வன்புணர்ந்தவர்களும், வேறு பல குற்றச்செயல்களைச் செய்தவர்களும் ஒரு நாள் கோபத்திலா இத்தனையையும் செய்தார்கள் ? நிச்சயமாக இல்லை.

சுரேஷ் - ச்சர்ரா (Chharas) என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். 1871 ல் ப்ரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றப்பரம்பரையினராக அடையாளப் படுத்தப் பட்டவர்கள் இந்த ச்சர்ரா மக்கள். திருடுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் பெருமளவு குடியிருந்த குஜராத்தின் ச்சர்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் சுரேஷ். குடும்பத்தின் அடையாளமும் அதனால் எழுந்த பிரச்சனைகளின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்.

டங்கர் - பில் (Bhil) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கல்லூரி சென்று பட்டப்படிப்பு வரையிலும் பயின்றவர் . இறைச்சி உண்கிற, மது குடிக்கிற தன்னுடைய சொந்த சமூகம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை டங்கருக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. உண்மையில் தான் பழங்குடி அல்ல; ஒரு ராஜபுத்திர ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளவே அவர் எப்போதும் உள்ளூர விரும்பினார்.

ப்ரணவ் - முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்ற ஓரளவு வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவர்களுடைய குடும்பத்திற்கென சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. ப்ரணவ்வின் தந்தை போர்வெல் தொழிலை நடத்திவந்தார். ப்ரணவ்வின் குடும்பத்தில் அனைவருமே சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்

ஒருவரோடு மற்றொருவருக்குத் தொடர்பில்லாத மூன்று பேர்; மூவருமே சமூகப் பின்னணியிலும் , பொருளாதார நிலையிலும் , கல்வியிலும், வெவ்வேறு படிநிலைகளிலிருந்து வந்தவர்கள். மூவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மதத்தைத் தவிற மூவரையும் இணைக்கிற புள்ளி  குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள்  மட்டுமே.இம்மூவரின் வாழ்க்கையையுமே சிறுவயதிலிருந்து  தொடங்கி , குஜராத் கலவரங்களோடு இவர்கள் எந்த வகையில் இணைகிறார்கள் என்பது வரையிலும் விவரித்திருக்கிறார் புத்தகத்தை எழுதிய ரேவதி லால் .

எல்லா எளிய மனிதர்களைப் போலவும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்புகளைத் தருகின்றது. அவர்கள் தேர்ந்தெடுக்கிற பாதைகளைப் பொருத்து சிலருக்கு மீட்சியும் சிலருக்கு மீளாத் துயரும் மிஞ்சுகின்றது.
Choice, however, is a vexing word. What part of choice applies when a tidal wave of anger tears through a state What part of it is the moment, the madness, the collective, and what part individual, personal history -Revati Laul, The anatomy of hate

உண்மையில் சிறுவயதிலிருந்தே மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் இவர்களுக்கு ஊட்டப்படுகிற வெறுப்பு அச்சமூட்டுவதாக இருக்கின்றது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS), விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) , பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் சமூகத்தினூடாகவும் மக்களினூடாகவும் அந்தளவு ஊடுருவியிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி, பில்கிஸ் பானோ, நரோதா பாட்டியா படுகொலைகள்; இந்தப் பெயர்களையெல்லாம் நாம்செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நிறையவே கேட்டிருப்போம். உண்மையில் அந்த ஒவ்வொரு பெயரின் பின்னாலும் பல ரத்தக் கறையோடான கதைகள் இருக்கின்றன. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் அத்தனை கொடூரமான செயல்களை செய்தவர்களும், செய்யத்தூண்டியவர்களும், அதனை அனுபவித்தவர்களும், மனிதர்கள் என்னும் உண்மையை மட்டுமே. 

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரில் இருவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இந்து மதம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் இவர்களைக் கொண்டு வந்து அந்த மதத்தின் பெயரால் வன்முறைச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது ? இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாயிற்று ? 

சுரேஷ் (ச்சார்ரா) ஆகட்டும் , டங்கர் (பில்) ஆகட்டும் இவர்களுடைய தொடக்கம் என்பது அவரவர்களுடைய பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைப்பதிலேயே தொடங்கியிருக்கின்றது. ஒரு சிறு குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தொடங்கி, மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கூட்டம் கூட்டுவது, அவர்கள் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்ப்பது, தேர்தலுக்காக வேலை செய்வது, எனத் தொடங்கி அவரவர்ககளின் தனிப்பட்ட மேற்பார்வையில் கட்சியோ/இயக்கமோ செய்ய விரும்பும் பெரும் வன்முறைச் செயல்களைச் செய்ய இந்த குழுக்களுக்கு தலைவர்களாக தங்களை வரித்துக் கொள்வது வரை உள்ள உளவியலை நாம் கண்டுணர வேண்டும்.  

VHP, RSS, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக இளைஞர்களுக்கு போலியானதொரு தலைமைப் பொறுப்பையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் வழங்குவதன் மூலமே அவர்களை மதம் என்ற குடையின் கீழ் ஒன்றுதிரட்டுகின்றார்கள். முறையான கல்வியும், வேலை வாய்ப்பும் மட்டுமே அவர்களுடைய சமூகப் பொருளாதார பின்னணியை மேம்படுத்தி இந்த அடையாளச் சிக்கலிலிருந்து அவர்களை மீட்க வழிவகை செய்யும். இந்த மீட்சியானது தனி மனிதர்களுக்கு மட்டுமான தற்காலிகமான் ஒன்றாக இல்லாமல்  அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினர் வரையிலும் தொடரக்கூடிய நிரந்தமான , உண்மையான மீட்சியாக இருக்கும். 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் கலவரங்களில் தொடர்புடையவர்களை நேர்கண்டு, பல ஆவணங்களைச் சேகரித்து, தீர ஆய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றார் பத்திரிகையாளரான ரேவதி லால். மதத்தின் பெயரால் மக்கள் மனதில் விதைக்கப்படுகிற நஞ்சைப் பற்றியும் அரசியல் லாப நோக்கங்களுக்காக பொதுமக்களின் உயிரைக் கொல்லவும் தயங்காத தனி மனிதர்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகச்சிறந்த தொடக்கம்.

The Anatomy of Hate Paperback by Revati Laul (Author) - Amazon

திங்கள், 6 ஏப்ரல், 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்



Like most human behavior, suicide is a multi causal act. Teasing out the strongest predictive variables is difficult, particularly because such internal cognitive states may not be accessible even to the person experiencing them. We cannot perceive the neurochemical workings of our brain, so internal processes are typically attributed to external sources. Even those who experience suicidal ideation may not understand why or even if and when ideation might turn into action.

-Michael Shermer , Scientific American

இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இயற்கையாகவோ அல்லது வேறு புற காரணிகளின் பொருட்டோ தத்தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை, அல்லது நின்று போவதை, நாம் மரணம்/மரணித்தல் என்கிறோம். மனிதர்களாக இருக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய நினைவுகளின் வாயிலாக, அவர்தம் சுற்றத்தோடு கொண்டிருக்கிற உறவின் வாயிலாக, அவர் கொண்டிருந்த (அல்லது கொண்டிருந்ததாக அனைவரையும் நம்பவைத்த)  பண்புநலன்களின் வாயிலாக, இறந்துபோனவரைக் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளுகிறோம்.

இறந்துபோனவர் குறித்து நாம் உருவாக்கிக் கொள்ளுகிற மனச்சித்திரம் முழுக்கவே நமது பார்வைக் கோணமே அன்றி அவரை இன்னார் என்று விளக்கிச் சொல்கிற வரையறையாகிவிடாது. Our opinion or perception is entirely what we interpret about the deceased person rather than being the definition of their personality.

ஓர் உயிரின் மறைவு, அதை எல்லோராலும் எடுத்தாளப்படுகிற, உரிமை கோரப்படுகிற ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. இறந்தவரைப் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; நல்லவிதமாகவோ அல்லது வெறுப்புடனோ அல்லது தனிபட்ட வெறுப்புக்கு கணக்குத் தீர்க்கும் வகையிலோ; எப்படியானாலும் மறைந்தவர் வந்து கேள்வி கேட்கப் போவதில்லையல்லவா ?

தனிப்பட்ட முறையில் மரணங்களால் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகும் ஆள் நான்; எந்த ஒரு உயிரிழப்பையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.  இது குறித்து நண்பர்களோடு நிறையவே பேசியிருக்கிறேன். தெரிந்தவர்கள் என்று இல்லை; கொஞ்சம் கூட தொடர்பில்லாத யாரோ ஒருவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டாலும் அதே உணர்வு தான்.சாலை விபத்துகள், இயற்கை மரணம், தற்கொலை, மூப்பு, நோய் என எப்படி நிகழ்ந்த மரணமாக இருந்தாலும் அதற்கு காரணங்களும் விளக்கங்களும் தேடி மனதை ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக்கொள்ளவும் முயல்கிற பெரும்பாலானோர் போலவேதான் நானும்.

என் அம்மா அடிக்கடி சொல்கிற விஷயம் ஒன்று உண்டு. ”செத்துப் போறவங்களுக்கு அந்த ஒரு நிமிஷ வலிதான். சுத்தியிருக்குறவங்களுக்கு அவங்களோட வாழ்நாள் முழுக்க அது வலி.” இயற்கை மரணமே இப்படியென்றால், உண்மையில் தற்கொலை முடிவை எடுக்கிறவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியொரு தற்கொலையில் தான் தொடங்குகிறது ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’. நாம் நினைப்பதைப் போல இங்கு கூறாய்வு செய்யப்படுவது அவனுடைய உயிரற்ற உடல் அல்ல. பிரபாகரனுடைய நண்பனாகிய கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. மாறாக அவனுடைய பார்வையில், அவன் வழியாகத் தான் பிரபாகரனைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். பிரபாகரனின் மரணத்திற்கான /தற்கொலைக்கான காரணத்தை அறியும் பொருட்டே துவங்குகிறது கதைசொல்லியின் தேடல்.

கதைசொல்லியின் ஐயங்களும், முன்முடிவுகளும், தீர்மானங்களும், அற்பத்தனங்களும், கேள்விகளும், மனவுளைச்சலும் நம்முடையதாகிவிடுகின்றன.ஒருகட்டத்தில் வாசிக்கிற நாமே கதைசொல்கிறவராக மாறிவிடுகிறோம்.  நாவலின் முதல் பாதி முழுக்க நாம் சந்திக்கிற உரையாடுகிற ஒவ்வொருவரும் தத்தமது உலகத்தில் தம்மையே முன்னிறுத்தி தங்களுடைய கோணத்தில் சொல்கிற கதைகளில் நாமும் பிரபாகரனும் துணைப் பாத்திரங்களே.

பிரபாகரனின் உற்ற நண்பனாகத் தன்னைக் நிறுவிக் கொள்கிற சதாசிவம் தொடங்கி, செவிலி நாஸியா, மணி, தாமோதரன், பாஸ்கர், லீமா, அன்வர் என அத்தனை பேரும் ஒவ்வொரு முடிச்சைப் போட்டு பிரபாகரனின் மரணத்துக்கு வெவ்வேறு சாயங்களைப் பூசிச் செல்கின்றனர்; காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், பணி நிமித்தமான மன அழுத்தம், போதைப் பழக்கம்,  அகந்தை, ஏன்.. அமானுஷ்ய சாயமும் கூட. எல்லா தேடல்களையும் போலவே பிரபாகரனின் மரணத்திற்கான விடைதேடலும் இடைநிறுத்தத்திற்குள்ளாகிறது.

புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் ஏழாண்டுகளுக்குப்பின்  மீண்டும் தொடர்கிற தேடலில் ஒவ்வொரு முடிச்சும் கதைசொல்லியின் பார்வையிலேயே அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் நாம் எதிர்பார்க்கிற விடை கிடைத்ததாவென புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு பாத்திரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவராக வருகிற மயில்சாமியுடையது. ஒரு அரசியல் கட்சிக்கு கொஞ்சமும் குறையாத அளவு அதிகாரத்திமிரும், பதவி தருகிற மிதப்பும், உள்ளரசியலும், தனிமனித வஞ்சம் தீர்த்தலும் மருத்துவத்துறையில் (லும்) நிறைந்திருப்பதே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது

மேலே குறிப்பிட்ட எல்லா பாத்திரங்களுமே சமூகத்தின் வெவ்வேறு பண்புநலன்களைக் கொண்ட வெவ்வேறு முகங்களின் மாதிரிகள் எனச் சொல்லலாம். நாவலின் முதல்பாதியில் அவர்களுடைய தரப்பு நியாயங்களையும் விளக்கங்களையும் கேட்டறிந்து கருத்துருவாக்கம் செய்யும் நாம், இரண்டாம் பாதியில் ஒவ்வொருவர் சொல்கிற தகவலுக்கும் பின்னாலிருக்கிற தரவுகளைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கிறோம். Like a detailed case study or psychoanalysis.

மயிலனின் சிறுகதைகளில் நான் தொடர்ந்து கவனித்து வருகிற கூறு ஒன்றுண்டு. பாத்திரங்களின் வழி தனிமனிதர்களின் ego குறித்தும் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் குறித்தும் நிறையவே பேசப்படும். அந்த ego சிறிதளவேனும் சீண்டப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, போலி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு சில்லறைத்தனங்கள் அத்தனையும் வெளிப்படும். பின்பு சுய பரிசோதனையும், கேள்விகளுமாய்த் தொடர்ந்து இறுதியில் தெளிவடைவதோடு , தன் அற்பத்தனத்தை தானே நொந்துகொள்கிற புரிதலோடு முடியும். இந்த படிநிலைகளின் விரிவான வடிவமாகவே ’பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலாகப் பார்க்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’மனநலம்’ என்பதே அதிகம் பொருட்படுத்தப் படாத இன்றைய சூழலில், லூசு மெண்ட்டல் மாதிரியான சொற்கள் அத்தனை சுளுவாக புழங்குகிற சமூகத்தில், மருத்துவர்களின் (மாணவர்களின்) மன அழுத்தம் குறித்தும் அதற்கான புற காரணிகளைக் குறித்தும்  விரிவானதொரு  உரையாடலையும் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வாயிலாகத் துவக்கி வைத்திருக்கிறார் மயிலன்.

இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.

An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!

வாழ்த்துகள் மயிலன்...! :)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...