நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 15 மே, 2019

இரும்புப் பெண்மணி இரோம் and the streak of hope


ஊர் உலகமே ஆர்வமாய் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்துக் கிடக்கின்றது. வெற்றியோ தோல்வியோ முடிவு ஏதாகிலும் அது பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடக்கூடும். அவர்தம் கொள்கைகளையும் முடிவுகளையும் சார்புகளையும் நம்பிக்கைகளையும் ஒரு தோல்வி அசைத்துப் பார்துவிடக்கூடும். என்னதான் பொதுநலனோடு மக்களுக்காக போராளியாய்க் குரல் கொடுத்தாலும், தேர்தல் அரசியலின் வழியாகவே பெரும்பாலான அமைப்புரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமென்பது என் நம்பிக்கை.

நினைவு தெரிந்த நாள் முதலாய் செய்திகளில் கலைந்த தலைமுடியோடும் மூக்கில் சொருகப்பட்ட ப்ளாஸ்டிக் குழாயோடுமே பார்த்துப் பழகியது இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் முகம். எப்போதுமே கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உணவு/சத்து ஊட்டப்படும். மறுபடியும் உண்ணா நோன்பிருக்க களம் காணுவார்.வடகிழக்கில் AFSPA குறித்த பின்னணி விவரங்களையெல்லாம் அறிந்து கொண்ட வயதுக்கு முன்பே, ஒவ்வொரு முறை இரோமின் முகத்தை செய்திகளில் காணும்போதும் அதீதமான குற்ற உணர்வுக்கு ஆளாவேன். எதற்காக இத்தனை பிடிவாதம்... யாருக்காக இந்த போராட்டம் என.

2017ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டபோது, அடடா இத்தனை ஆண்டுகளாய் மக்களுக்காக போட்டியிட்டவராயிற்றே; மக்கள் கட்டாயமாய் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்வார்களென திண்ணமாக நம்பினேன். 16 வருடங்களாய் உண்ணா நோன்பிருந்த போராளிக்கு மக்கள் தந்தது 90 வாக்குகள். வெறும் 90 வாக்குகள். நிச்சயமாய் அப்போது இரோமுக்கு ஏதோவொரு பிடிப்பு விட்டுப்போயிருக்கக் கூடும்.

தான் முழுநேர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் இரோம்.
7 ஆண்டுகளாய் தனக்காகக் காத்திருந்த சமூக ஆர்வலர் டெஸ்மான்டை, கொடைக்கானலில் எளிமையானதொரு பதிவுத்திருமணத்தில் வாழ்க்கைத் துணைவராய் ஏற்றபோது அப்படியொரு மனநிறைவு எனக்கு. You deserve to have a life, you warrior.For everything you went through; I'm glad you are finding solace என அகமகிழ்ந்தேன்.

இன்று காலை இரோம்-டெஸ்மாண்ட் இணையருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்திகேட்டு அத்தனை மகிழ்ச்சி.I was elated and almost on tears when I saw the picture. Light at the end of the tunnel , Ray of hope, நம்பிக்கையின் ஒளிக்கீற்றென நாம் கேட்ட கதைகளும் கேள்விப்பட்ட அற்புதங்களும் இரோம் மாதிரி யாருக்கோ எங்கெங்கோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது... இல்லையா ❤️ Stoicism சொல்வது போல "sometimes even to live is an act of courage".

More power to you Sharmila... Loads of love to you and your family. May you find the comfort, calmness and the happiness you deserve ❤️❤️❤️❤️
Related Posts Plugin for WordPress, Blogger...