நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 28 டிசம்பர், 2016

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்


சம்பந்தமில்லாத குரல் 1:

ஸ்கூல் படிக்கும்போது செம்மையான ஹாக்கி ப்ளேயரா இருந்த ஒரு பையன் , ஸ்கூல் பீப்பிள் லீடராவும் இருந்தவன், பெருசா படிக்க மாட்டான் ஆனாலும் அப்படியொரு கண்ட்ரோலிங் பவர் அவனுக்கு; அவன் சொன்னா பசங்க கேப்பாங்க. ஸ்கூல்ல சின்ன லெவல்ல சண்டை போட ஆரம்பிச்சு மத்த ஸ்கூல் பசங்களோட நடக்குற பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ணிகிட்டு திரிஞ்சவன். ஒரு நாள் கண்ணு மண்ணு தெரியாத கோவத்துல அவன் பண்ண ஒரு கொலைக்கப்புறம் அவன் வாழ்க்கையே மாறிப் போச்சு.லோக்கல் அரசியல் தொடர்புகள், அடியாள், அப்டி இப்டின்னு இப்ப ஜெயில்ல போய் உக்காந்துருக்கான். இப்போ அவன் மேல பத்துக்கும் மேற்பட்ட கேஸ்கள். வயசு இன்னும் முப்பதைத் தொடல.
------------------------------------------------------------------------------------------------------------------------
சம்பந்தமில்லாத குரல் 2:

ஒரு அண்ணன்.  பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலையில்லாம சுத்திட்டு இருந்தாரு.சத்தம் போட்டுக் கூட பேசமாட்டாரு. வேலை இல்லாததனால ஏரியாவுல ஒரு ’ஒன்றிய’த்தோட ஆபிஸ்/ரூம்ல எடுபிடி வேலை பண்ணிட்டு இருந்தாரு. அப்புறம் அங்கேயே கார் ஓட்டவும் ஆரம்பிச்சாரு. எதிராளி எவனோ அந்த அரசியல்வாதிக்கு போட்ட ஸ்கெட்ச்சுல வண்டில இருந்த அத்தன பேரும் எஸ்கேப்பாகிட இவர் மாட்டிகிட்டாரு. கொத்திப் போட்டுட்டானுங்க. அப்போ அவருக்கு வயசு 28.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையோட குரல்:

வாழ்க்கைல ஒருத்தர் என்னமாதிரி மாற்றத்துக்கு உள்ளாகுறாங்கன்றத தீர்மானிக்கிறது அவங்களோட இளமைக்காலம் தான். குடும்பத்துல என்ன மாதிரியான சூழல்ல வளர்ராங்க, வெளில யார்கூட பழகுறாங்க, சுத்தி இருக்குற இடங்கள்ல என்ன நடக்குது, தனிப்பட்ட முறைல ஒருத்தரோட குணாதிசயம் என்ன, இதெல்லாம் சேந்தது தான் ஒரு மனுஷன். அப்டியே டமால்னு ஆகாயத்துலேர்ந்து குதிச்சு ஒருத்தன் நல்லவனாவோ கெட்டவனாவோ மாறிடுறதில்ல.அது ஒரு நீளமான ப்ராசஸ்.பல சம்பவங்களோட தொகுப்பு. இந்த ப்ராசஸ் அவங்க ஆசப்பட்டதுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அல்லது அவங்களோட குணாதிசயத்துக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு வாழ்க்கைமுறைல கொண்டுபோய் தள்ளும். சில சமயங்கள்ல அவங்க வாழாமலே கூட போறதுண்டு.  ரவுடியாகவோ, வன்முறையாளனாகவோ, இருக்கிற ஒருத்தனோட கடந்த காலத்தைப் பாத்தீங்கன்னா நிச்சயம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கும். Form ஆகுறதுன்னு சொல்வாங்கள்ல, அந்த மாதிரி.

தஞ்சாவூர் குரல்:

தஞ்சாவூரைக் களமாகக் கொண்ட நாவல்னு கேள்விப்பட்டவுடனே ரொம்ப ஆவலா காத்திருந்தேன். நான் தஞ்சாவூர்க்காரனில்ல. பெரிய கோவில், சோழர்களின் தலைநகரம், காவிரியோட கடைமடைத் தண்ணி, இசைப் பாரம்பரியம், இப்படியா எங்க ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ஏகப்பட்ட ஒத்துமைகள் இருக்கு.அந்த தஞ்சாவூர்ல இருக்குற சுந்தர், கதிரவன். இந்த ரெண்டு பசங்களோட வாழ்க்கைல நடக்குற சம்பவங்களோட தொகுப்பு தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’.

சுந்தரின் குரல்:

சுந்தர் ஸ்கூல் பையன்; காரணமேயில்லாம தன்மேல வன்மத்தோட அடிக்கிற வாத்தியார திருப்பி அடிச்சுடுற அளவுக்குக் கோபமும் முரட்டுத்தனமுமான பையன். கொஞ்சமும் அவனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணாத, வரட்டு கெளரவத்தப் புடிச்சுத் தொங்குற அவனோட அப்பா. இந்தக் குடும்பத்தை விட்டுட்டு தன் நண்பன் கருவாயனோட  நிம்மதியா எங்கேயாவது போய் சந்தோஷமா இருக்கனும்ங்குறது தான் வாழ்க்கை லட்சியம். ரயில் இஞ்சின் டிரைவரா இருக்குற ரவி அண்ணன் தான் மனசப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆளு. மேட்டுத்தெருவுல இருக்குறவங்களோட வாழ்க்கை மாதிரி தன் வாழ்க்கை ஏன் இல்லன்னு மனசுக்குள்ள கேள்வி.என்ன ஆச்சு ?

கதிரவன் குரல்:

அப்பாவைப் பிரிஞ்ச அம்மா தப்பான ஒரு உறவுல இருக்கான்னு தெரிஞ்சதும் வீட்ட விட்டு வெளிய வந்துடுடத் துடிக்கிற கதிரவன். சோறு போட்டு ஆதரிச்சு உள்ளூர் ரவுடி அப்பள கனேசன் கிட்ட சேத்துவிட்ட நண்பன் ராஜா, காதலிச்சதுக்கே அறுவா வெட்டு வாங்குற அளவுக்குப் போனாலும் மனசுலேர்ந்து அழிக்க முடியாத கோமதி . இவன் தன்னோட வழிகாட்டியா நெனைக்குற தியேட்டர் ஆப்பரேட்டர்; ஒருகட்டத்துல வாழ்க்கைய நகர்த்துறதுக்காக வன்முறையைத் தேர்ந்தெடுக்குற கதிரவன் என்னதான் ஆனான் ?

என் குரல்:

வன்முறையையும் காமத்தையும் justify பண்ணவுமில்லாம glorify பண்ணவுமில்லாம ஒரு கதை சொல்லல். கதையோட ஓட்டத்துலயே ஊரோட geographyய சொல்ற விதமும் (ஆத்துப்பாலம் தொடங்கி தெருக்கள், சேரி, சாலைகள், பழைய கட்டிடங்கள்), பேரடைஸ் தியேட்டர் - நதியா கட் அவுட் - தஞ்சாவூர் வெட்டு - ஸ்போக்ஸ் கம்பி மீன் குத்தல்னு எல்லாத்துலயும் இருக்குற டீட்டெய்லிங்கும் அட்டகாசம்.

கடைசியா : செகண்ட் பார்ட் வருமோன்னு யோசிக்க வைக்குற நாவலோட abrupt முடிவு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்னு தோணுச்சு. அந்த விவரனைகளுக்காகவும் காட்சிப்படுத்தலுக்காகவுமே கட்டாயம் படிக்கலாம்

வாழ்த்துகள் பிரபு மாம்ஸ்...!

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்
உயிர்மை பதிப்பகம்
ISBN: 978-93-85104-71-8
விலை: ரூ.120
128 பக்கங்கள்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

திங்கள், 26 டிசம்பர், 2016

அஜ்வா - சரவணன் சந்திரன் - மீட்பனின் மீட்சி


 'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது.  ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.  

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய  பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை  அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான். 

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.  வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான். 

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய்  டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை. 

நீங்களும், நானும், நம்மைச் சுற்றியிருக்கிற உயிருள்ள எல்லாமும், தன்னைத்தானே அழித்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிற செல்களாலானவை தானே. ஒரு முடிவில்தான் மற்றுமொரு தொடக்கம்;அழிபவையெல்லாம் மீண்டும் பிறக்கவும் துளிர்க்கவும் செய்யும் என்கிற நம்பிக்கைக் கீற்று தான் ‘அஜ்வா’.

நிச்சயமாகப் படிக்கலாம்.!! 

வாழ்த்துகள் சரவணன் அண்ணா..!! 

’அஜ்வா’
உயிமை பதிப்பக வெளியீடு
விலை: ரூ.130
ISBN: 978-93-85104688

ஆன்லைனில் வாங்க: இங்கு சொடுக்கவும்

’அஜ்வா’ நாவலின் டீசர் : இங்கு

வியாழன், 22 டிசம்பர், 2016

டாப் 10 - ஃபேஸ்புக் பதிவுகள் - 2016


எல்லாரும் மாத்தி மாத்தி பட்டியல் போடுற இந்த நேரத்துல, நாமளும் ஒரு லிஸ்ட்ட போடுவோம்னு யோசிச்சேன். 2007 வாக்குல தான் ப்லாக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சது. இன்னதுன்னு வரைமுறை இல்லாம சினிமா தொடங்கி ,அறிவியல், பயணம், அரசியல், டெக்னாலஜி, கவிதை, சுயசொறிதல் உள்ளிட்ட எல்லாவகையான content எழுதுறதுக்கும் ஆளுங்க இருந்தாங்க. இப்ப ஃபேஸ்புக்லயும்,ட்விட்டர்லயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலயும் எழுதுறவங்கள்ள முக்கியமானவங்க எல்லாரையும் ப்லாக் வழியா தான் எனக்குத் தெரியும். இந்த evolutionல Google Reader காணாமலே போச்சு (இன்னமும் feedly வெச்சு ப்லாக் போஸ்ட் படிக்கிற ஜீவன் நானு).நமக்கு மூளைல அரைக்க இந்த மாதிரியான content தேவை. இப்போ ஃபேஸ்புக்ல அதே மாதிரி அட்டகாசமான content எழுதுறவங்க நெறைய பேர தேடிப்பிடிச்சு/தேடிப்படிச்சு சேத்து வெச்சுருக்கேன். அப்புடி படிச்சதுல randomஆ மனசுக்குப் புடிச்சத சேவ் அல்லது evernoteல clip பண்ணி வெச்சுருக்கேன். அதுல சிலத இங்க பகிர்ந்துக்கலாம்னு...!!
இதுல சிலர் முழுநேர எழுத்தாளர்களாகவும்/கவிஞர்களாகவும் இருந்தாலும்..ஃபேஸ்புக்ல அவங்க எழுதுனதுல எனக்கு ரொம்பப் பிடிச்சத மட்டும் இங்க போட்டு வெச்சுருக்கேன்.
***************************************************************************
மொதல்ல Karundhel Rajesh எழுதுன இந்த போஸ்ட். ராஜேஷ் அவரோட சைட்ல நெறைய எழுதுனாலும் அப்பப்ப fbல நச்சுன்னு சில போஸ்ட்ஸ் போடுவாரு. அப்டி ஒன்னுதான் இது.
https://www.facebook.com/rajesh.scorpi/posts/10153901617955987
***************************************************************************
அடுத்தது Bogan Sankar எழுதுன ’அப்பாக்களின் நாட்கள்’ங்குற போஸ்ட். கொஞ்சம் உணர்வுப்பூர்வமானதா இருந்தாலும் we need something to feel emotional every now and then... Isn't it ?
****************************************************************************
இந்த வருஷத்துல அதிகமா சேவ் பண்ணி வெச்சது Vijay Bhaskarvijay எழுதுன பதிவுகளா தான் இருக்கும். அறிவியல், கணிதம்,இலக்கியம், சொந்த அனுபவங்கள்னு கலந்துகட்டி ரொம்ப விவரமா எழுதுவாரு. புதுசா எதாவது புத்தகங்கள் பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம். கணக்கு நமக்கு பீதியக் கெளப்புற ஒரு சப்ஜெக்ட்,.ஆனாலும் அத ரசிக்கிற மாதிரி எளிமையா எழுதுவார். விஜயுடைய பதிவுகள்ள சேவ் பண்ணி வெச்ச சிலது இங்க..!
தமிழிலக்கியம்- வெஸ்டர்ன் ஃபிலாசஃபி
https://www.facebook.com/meevijay8/posts/637526713006341
கணித மேதை ராமானுஜன் - கொள்கை/அரசியல்
https://www.facebook.com/meevijay8/posts/1029872007105141
******************************************************************************
Shan Shylesh
ஆளு நம்ம செட்டுன்னு நெனைக்க வைக்கிற ஆள். சென்னைலதான் இருந்தாலும் இன்னும் சந்திக்காத நண்பன்.சமகால அரசியல், relationships, பெண்கள் (Yes...!) பத்தி இவர் எழுதுற பல விஷயங்கள் ரொம்ப ரொம்ப sensibleஆ தோணும் எனக்கு. நெறைய எழுதுறதில்ல இப்போ. ஆனாலும் சின்னச்சின்னதா blurb மாதிரி தன்னுடைய கருத்துகள சொல்லிட்டே இருப்பாரு. அதுல எனக்குப் பிடிச்ச ஒரு போஸ்ட்.
The delusion of choice : பெண்ணியமும் நுண்ணடிமைத்தனமும்
https://www.facebook.com/iKoothaadi/posts/1283233528356528
இறைவி படம் பத்தி
https://www.facebook.com/iKoothaadi/posts/1207730729240142
எளிமைவாதம் : ஏன் வாசிப்பதில்லை நாம்.
https://www.facebook.com/iKoothaadi/posts/1210646458948569
********************************************************************************
Karl Max Ganapathy
மாக்ஸுக்கு நான் சர்டிஃபிகேட் தர வேண்டியதில்ல. அவருடைய அரசியல் கட்டுரைகளுடைய தீவிரத்தன்மையும் தெளிவும் பத்தி எல்லாருக்கும் தெரியும். அவரு எழுதி மொதல்ல நான் படிச்ச போஸ்ட் இது
பூவரசி பிரச்சனையும் அது சார்ந்த விளக்கங்களும்
https://www.facebook.com/gkarlmax/posts/1235980709768783
********************************************************************************
Sam Nathan
ஓஷோவைப் பத்திக் கேள்விப்பட்டாலோ/படிச்சாலோ இவர் ஞாபகம் வர அளவுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரு.
அதுமட்டுமில்ல..ஏகப்பட்ட விவாதங்கள்.. எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துறது..அது இதுன்னு இன்னும் நெறைய...!
கொண்டாட்டமான personality..!!
இது அவரு போன வருஷம் எழுதுன போஸ்ட் தான். ஆனாலும்..பட்டாசான போஸ்ட்
தஞ்சை பிரகாஷ் - பாலியல் - சமகால இலக்கியம்
https://www.facebook.com/sam.nathan.18/posts/1188276434524315
சாம் இப்படியும் எழுதுவாரான்னு ஆச்சரியப்பட வெச்ச (கொஞ்சம் எமோஷனல்) போஸ்ட்..!
https://www.facebook.com/sam.nathan.18/posts/1222223987796226
கடைசியா இந்த லெட்டர்...! இது புனைவா இல்ல நிஜமான்னு எல்லாரும் கேள்வி கேக்குறதுலயே எந்தளவு பாதிப்பு இருந்திருக்கும்னு புரியுது. ரொம்ப அழகான கடிதம்..!!
இந்த இரவை என்னுடன் கழித்தவனுக்கு
https://www.facebook.com/sam.nathan.18/posts/1482567748428514
*************************************************************************
மாம்ஸ் Lakshmi Saravanakumar எழுதுன இந்த போஸ்ட்..!
Enough said..!
”பிறக்க இருக்கும் என் மகளுக்காக”
https://www.facebook.com/saravanakumar.lakshmi/posts/1244146252262210
*********************************************************************************
வாசுகி பாஸ்கர்
வருஷக்கடைசில தான் இவருடைய பதிவுகள தொடர ஆரம்பிச்சேன். சமூகநீதி,அறம் சார்ந்து முன்வைக்கிற கருத்துகள், அந்த தெளிவு simply amazing.
நான் படிச்ச அவருடைய முதல் போஸ்ட்
போராட்டங்களையும் போராடுபவர்களையும் கேலிக்குள்ளாக்குகிறவர்கள் பற்றி
இடஒதுக்கீடு பற்றிய பொதுபுத்தி
https://www.facebook.com/photo.php?fbid=10210525581791526&set=a.10202327954975979.1073741837.1104997241&type=3&theater
*****************************************************************************
Madhu Sridharan
இவரை தொடர்பவர்களுக்கு நிச்சயம் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். சின்ன பகவதி, சின்னம்மா வரிசைல சின்ன சுஜாதா ங்குற பட்டத்துக்கும் பயங்கரமான போட்டி வரும் பட்சத்துல he is one tough contender...!
அறிவியல்-ஆன்மிகம்-இலக்கியம் காம்போ ல இப்போதைக்கு read-worthy contents (எனக்கு) நெறைய கெடச்சது இவரோட எழுத்துலதான்
இவருடைய facebook பதிவுகள Random Thoughtsனு pdfஆகவே தொகுத்து வெச்சுருக்கார் (கேட்டு வாங்கிக்கங்க - worthy of your time)
சாம்பிளுக்கு அவருடைய போஸ்ட்ஸ் சில
https://www.facebook.com/madhu.sridharan.14/posts/1532475430103024
********************************************************************************
இவரு என்ன எழுதுனாலும் படிப்பேன். புதுசா கத்துக்க ஏதாவது இருக்கும்னு நெனைக்கிற இன்னொருத்தர் கவிஞர் Raja Sundararajan அவர்கள்.
உதாரணத்துக்கு ஒரு ரெண்டு போஸ்ட் மட்டும் கீழ
’அருவி’ங்குற ஒத்த வார்த்தைய வெச்சு ஆடுன ஆட்டம்
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1364780540222448
World Diabetes Day அன்னைக்கு எழுதுனது
https://www.facebook.com/raja.sundararajan.9/posts/1350682208298948
*********************************************************************************
Saravanan Chandran அண்ணனோட எல்லா பதிவுகளுமே ஒரு கத சொல்லும். விளையாட்டு, உடல் உறுதி, இன்னும் நிறைய விஷயங்கள் பத்தி அடிக்கடி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருப்பாரு. அதுல ஒரு ஸ்டேட்டஸோட லின்க் கீழ
அப்புறம் இந்த ‘கஞ்சா’ போஸ்ட் ;)
https://www.facebook.com/saravanan.chandran.77/posts/1090816541026593
அஜ்வாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்ண்ணே...!!
************************************************************************************
Venba Geethayan எழுதுற கிருஷ்ணார்ப்பணம் சீரிஸ் :) மொதல்ல ஜெயமோகன் வெண்முரசுல எழுதுனத ஷேர் பண்ணிருக்காங்களோன்னு தான் நெனச்சேன் அப்புறம்தான் அது அவங்களோட எழுத்துன்னு தெரிஞ்சுது. மொழிநடை செம்ம <3 span=""> <3 span=""> <3 span="">
நான் படிச்ச மொதல் கிருஷ்ணார்ப்பணம் போஸ்ட்
https://www.facebook.com/venba.geethayan/posts/534540606670812
************************************************************************************
Vidhya Vijayaraghavan நிறைய long reads எதுவும் எழுதறதில்ல. ஆனாலும் நான் படிச்ச முதல் போஸ்ட்
Sharp, sarcastic அண்ட் கலாய் queen ( Digital India..?? Ole da சாம்பிள் :D :D :D )
பெண்களுடைய tolerance பத்தி
https://www.facebook.com/vidhya.vijay.911/posts/10205983878270621
************************************************************************************
Bavachelladurai Bava அவர்கள் எழுதுன வைக்கம் முகமது பஷீர் பத்தின இந்த போஸ்ட். <3 span=""> <3 span="">
அந்த பேப்பூர் சுல்தானை போய் பாக்கனும்னு தோணவெச்ச எழுத்து
************************************************************************************
காடோடி நாவலை எழுதுன நக்கீரன் நக்கீரன் அவர்கள் குறைய நாட்களுக்கு முந்தைய சென்னை புயலினால் ஏற்பட்ட மரச்சேதங்கள் குறித்து எழுதியிருந்த இந்த போஸ்ட்
ஷேர் பண்ண என் மச்சானுக்கும் Vedha Arjun சேத்து நன்றிகள்
************************************************************************************
த.ராஜன் இந்த ஆல்பத்துல தான் படிச்ச புத்தகங்கள் பத்தி எழுதியிருக்கிற எல்லாமே பிடிச்சது தான். சில அற்புதமான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது இதன் வழியாதான்.
************************************************************************************
Lekha Ramasubramanian இவங்க புத்தகங்கள், சினிமா பத்தி எழுதுற எல்லாமுமே செம்ம போஸ்ட்கள். அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச சில
ராணியுடன் ஒரு தேநீர் விருந்து
https://www.facebook.com/lekha.ramasubramanian/posts/10153309732968039
எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"
https://www.facebook.com/photo.php?fbid=10153461385083039&set=a.439473748038.215838.685783038&type=3&theater
************************************************************************************
கட்டக்கடைசியா ரொம்ப சமீபத்துல படிச்ச Akhil Kumar எழுதுன இந்த போஸ்ட். நம்மளமாதிரி யாருக்காக எழுதுறோம் எதுக்காக எழுதுறோம்னு கேள்வி எழுப்பி அதுக்கான பதிலையும் எழுதியிருக்காரு.
எழுத்தெனப்படுவது:
https://www.facebook.com/Ksrakhil/posts/1154825611270125
***********************************************************************************
பிற்சேர்க்கை:
’டாப் டென்’ னு தலைப்பு வெச்சுட்டு இஷ்ட சிகைக்கு போட்டுத் தள்ளியிருக்கியே ஏண்டான்னு கேட்டீங்கன்னா.. அது ஒரு click bait..கவர்ச்சிக்காக வெச்ச டைட்டில். ’படித்ததில் பிடித்தது’ மாதிரியான ரசவடைய விட ‘டாப் 10’ நறுக்குன்னு இருக்கு.
புரியாத தன்னிலை விளக்கம்:
புதுசா ஒருத்தரை சந்திக்கிறோம்..பழகி புரிஞ்சு நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சுக்குறோம். அதுக்கப்புறம் அவங்களுடைய அரசியலோ, கொள்கையோ, ரசனையோ நம்மளவிட மாறுபட்டு இருந்தா..அது நமக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சா விலகுறதுதான் பெஸ்ட் ஆப்ஷன்னு நெனப்போம். அப்படி விலகிட்டா அவங்களோட பக்கத்து நியாயங்களை /பார்வையை நம்மளால தெரிஞ்சுக்கவே முடியாம போய்டும். It is equally important to listen to the other side. வாதம் பண்ணி புரியவைக்க சொல்லல. குறைந்தபட்சம் காதுகொடுத்து கேக்குறதுக்காவது பக்குவமில்லைன்னா எவ்வளவுதான் தேடித் தேடி இலக்கியம் படிச்சாலும் அதால எதுவும் பயனில்லைங்குறது என்னுடைய தாழ்மையான கருத்து.Difference of opinionங்குற ஸ்கேல கைல எடுத்துட்டா இந்த இன்னொரு perspectiveங்குற விஷயத்தை கடைசி வரைக்கும் பாக்கவே முடியாமப் போயிடும்ங்குறதனால..புதுசா கத்துக்குற/தெரிஞ்சுக்குற விஷயங்கள்ல எந்தவிதமான முன் முடிவும் இல்லாம தான் அனுகுறேன்/வேன்...!!
மத்தபடி பத்தி பத்தியா எழுதித்தள்ளுன எல்லாருக்கும்
எல்லையில்லா அன்பு...!! <3 span=""> <3 span=""> <3 span=""> நிறைய எழுதுங்க..! என்ன மாதிரி எவனோ ஒரு கிறுக்கன் தேடிப் படிச்சுட்டு இருப்பான்..!! :);)

சனி, 10 டிசம்பர், 2016

பிரிவன்றிப் பெரிதாய் பிறிதொன்றும் உண்டோ


போகத் திசையற்று
வாய்பேச வக்கற்று
காண வழியற்று
உறுபசியோ டுலவித்திரிந்தபடி
விழுந்தரற்றிப் புரண்டழுது
தன் குருதி தான் கண்டு
வலிமிகுந்து வலிமறத்து
என் செய்து தேற்றுவன்
இந்த பொல்லா புல் மனத்தை
ஆற்றாரும் உண்டோ
தேற்றாரும் உண்டோ
வேறாறும் உண்டோ
பிரிவன்றிப் பெரிதாய்ப் பிறிதொன்றும் உண்டோ...!!?

சனி, 15 அக்டோபர், 2016

இசைசூழ் தனிமை - Playlist#4 - Melancholy ?!


இன்னதுதான்னு பகுத்தறியமுடியாத உணர்வை சில பாடல்கள் தரும் (unfortunately சினிமாப் பாடல்கள்லேயே திருப்திப்பட்டுக்குற ஜென்மம் நான்) .இசையமைச்சது ஒரே இசையமைப்பாளரா இல்லாம இருக்கலாம், ஒரே மாதிரியான ராகமா இருக்காது, arrangements வேற வேற மாதிரியானதா இருக்கலாம்.. ஆனா கேக்கும்போது அந்தப் பாடல்கள் தர்ற உணர்வு இருக்கே, அது இந்த எல்லாப் பாடல்களையும் ஒரு புள்ளியில இணைக்குற ரொம்ப மெல்லிசான ஒரு இழை. இந்த பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட பாசம், காதல், ஏக்கம்,பிரிவு, நினைவுகள், அமைதி... இந்த வகைகளுக்குள்ள அடக்கிடலாம். அப்புடி நினைவு தெரிஞ்சு மொதல்ல ரசிச்ச பாடல்
பாடல்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி
இசை: யுவன்
அசலை எழுதி இசையமைத்தவர்: N.S.சிதம்பரம்
படம்: கண்டநாள் முதல்
பாடியவர்கள் : சுபிக்‌ஷா, பூஜா

அதுக்கப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரியான feel கெடைச்ச இன்னொரு பாட்டு.துக்கம், சோகம்... ஏக்கம் எல்லாமே...கலந்த உணர்வு மொத வாட்டி கேட்டுட்டு அழுதுட்டேன்.
பாடல்: மஞ்சள் முகமே... மங்கள விளக்கே
இசை: இமான்
எழுதியவர்: சரவண சுப்பைய்யா
படம்: ABCD
பாடியவர்: சைந்தவி (இவங்க மேல பயங்கரமான லவ்வோட சுத்திட்டு இருந்தேன் அப்போ)

தலைவனுக்காக காத்திருக்குற தலைவியோட உணர்வுகள் வகைப் பாடலா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் கிண்டலும் மகிழ்ச்சியும் கலந்து இருக்குற இந்தப் பாட்டும் இந்த பட்டியல்ல வரும். தனிப்பட்ட முறைல இந்தப் பட்டியல்லேயே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு இதான். (இதுக்குப் பின்னால ஒரு கத இருக்கு)
பாடல்: எங்கிருந்து வந்தாயடா
இசை: ஸ்ரீராம் பரசுராம் (பாடகி அனுராதா ஸ்ரீராமோட ஊட்டுக்காரர் தான்)
எழுதியவர்: தாமரை
படம்: ஃபைவ்ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா

கொஞ்சம் தாலாட்டு சாயல்ல இருந்தாலும் ரொம்ப ரொம்ப அழகான பாட்டு. ஊர்ல இருந்தப்ப இத காரைக்கால் வானொலில கேட்டுட்டு தேடியலஞ்சு ப்ரவ்சிங் செண்டர்ல ஒருவழியா கண்டுபிடிச்சு டவுன்லோட் பண்ணி சிடில காப்பி பண்ணிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கேட்டுட்டே இருந்தேன்.
பாடல்: என்னம்மா தோழி பொம்மைய காணோம்
இசை: சதிஷ் ராமலிங்கம்
எழுதியவர்: சசிக்குமார்
படம்: காலைப்பனி
பாடியவர்: (RJ) சுலபா

இது ஒரு அம்மா-மகன் பாட்டு தான். கிட்டத்தட்ட மேல பாத்த பாடல்கள பாடுனவங்களோட voice timbre தான் இந்த பாடகிக்கும். மொதல்ல கேட்டப்போ சாதாரணமா இருந்து அப்புறமா this one grew on me..!! Lovely song..! கவிஞர் தாமரையோட வரிகள்ல இருக்குற உயிர்ப்பே தனி தான்.
பாடல்: கண்கள் நீயே
இசை: ஜி.வி.பிரகாஷ்
எழுதியவர்: தாமரை
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்தாரா

இதுவும் அம்மா-மகன் பாட்டு தான். பிரிவுத் துயரம் ஊடாடுற வரிகள்... வைக்கம் விஜயலக்ஷ்மி தமிழ்ல பாடுன முதல் பாட்டு.கலங்கடிச்ச பாட்டு...!
பாடல்: புதிய உலகை புதிய உலகை
இசை: இமான்
எழுதியவர்: மதன் கார்க்கி
படம்: என்னமோ ஏதோ
பாடியவர்: வைக்கம் விஜயலக்ஷ்மி



கடைசியா இப்டி ஒரு லிஸ்ட் போடுறதுக்கு காரணமான பாட்டு. இந்தப் படத்துக்கு வந்து சிக்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணாலும் ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான். மறுபடியும் இமான்... நாதஸ்வர preludeஓட ஆரம்பிக்கிற பாட்டு..அந்த dense voiceக்காகவே எத்தன வாட்டி வேணாலும் கேக்கலாம்..!!! <3 span=""> <3 span=""> <3 span="">நந்தினி ஸ்ரீகர் குரல்ல யுகபாரதியின் வரிகள் அவ்ளோ அழகு..!
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
இசை: இமான்
எழுதியவர்: யுகபாரதி
படம்: ரெக்க
பாடியவர்: நந்தினி ஸ்ரீகர்

சனி, 8 அக்டோபர், 2016

கபாலி, பாலைய்யா மற்றும் இந்திய ரயில்வே



கபாலி திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சியில் சிறையில் அவர் படித்துக்கொண்டிருக்கிற புத்தகமாகத்தான் பெரும்பாலானவர்களுக்கு (நான் உட்பட) இந்தப் புத்தகம் அறிமுகம். ஒரு நல்ல புத்தகம் ஏதாவதொரு வகையில் பலரையும் சென்றடைவதில் மகிழ்ச்சி தான் .

சமூகத்தால் ஒடுக்கப்பட்ட, கல்வி மற்றும் ஏனைய வசதிகள் மறுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதைதான் இந்தப் புத்தகம்.


சமீபத்தில்,தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் நாம் பார்த்த ஒரு காட்சி;  ஒரிசாவை சேர்ந்த டானா மான்ஜி என்பவர் இறந்துபோன தன் மனைவியின் உடலைச் சுமந்தபடி தன் மகளோடு நடந்து செல்கிற அந்தக் காட்சி நிச்சயம் நம்மை உலுக்கியிருக்கக் கூடும். கிட்டத்த நூறாண்டுகளுக்கு முன்பு அதே மாதிரியான சூழலில் யெலுக்காட்டி நரசையா (இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் சத்தியநாராயணாவின் தாத்தா) எடுத்த முடிவுதான் பின்வரும் தலைமுறைகளில் யெலுக்காட்டி குடும்ப வழித்தோன்றல்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் அவர்களின் நிலையையும் மாற்றி இருக்கின்றது. இறந்தபோன தன் மனைவியின் உடலை கட்டி இழுத்துக் கொண்டு தன் மூன்று வயது மகன் பாலையாவுடன் சொந்த கிராமத்தைவிட்டு கண்ணீரோடு வெளியேறுகிறார் நரசைய்யா.தனது மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வியாபாரத்துக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் 'The Great Indian Peninsula Railway Corporation' ஆக  பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, அடுத்த நூறாண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், வளார்ச்சிக்கும் மட்டுமல்லாது சாதீய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான மக்களுக்கு முறையான கல்வி, வீட்டு  வசதி, வேலைவாய்ப்பு கிடைக்கவும் பேருதவியாய் இருந்தது. புதிய பல கதவுகளைத் திறந்தது.இந்திய ரயில்வேயின் பெரும்பாலான உயர்பதவிகளில் பிரிட்டிஷாரும், இரண்டாம் நிலை அதிகாரிகளாக படித்த பிராமணர்களும் , அதற்கடுத்த அலுவலகப் பதவிகளில் சூத்திரர்களான இடைநிலை சாதி இந்துக்களும் பணிபுரிந்த நிலையில், பெரும் உடலுழைப்பை கோருகிற, கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தான அடிமட்ட பணிகளில் (பாயிண்ட்ஸ்மேன், கேங்மேன்)  தலித்துகள் பெருமளவு வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு பாயிண்ட்ஸ்மேனாகத் தான் நரசைய்யா ரயில்வேயில் சேர்கிறார். அதன்பின் அவருடைய இரண்டாம் திருமணம், ரயில்வே குவாட்டர்ஸ் குடியேற்றம் எனத் தொடற்கிறது அவருடைய கதை.


இந்திய கிராமங்கள் குறித்து அம்பேத்கர்:
The Indian village is the very negation of a republic. If it is a republic, it is a republic of the touchables by the touchables and for the touchables. The untouchables have no rights. They are only to wait, serve and submit. In this republic, there is no place for democracy. There is no room for equality. There is no room for liberty and there is no room for fraternity.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கிராமங்களில் (இப்போதும் கூட) சாதீய ஒடுக்குமுறைகள் கொடுமையாக இருந்தபோது பிரிட்டிஷாரும் இந்திய ரயில்வேயும் நிகழ்த்திய  குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் நிச்சயம் ஏராளமானவை. அதில் ஒன்று சூத்திரர்களையும், பிராமணர்களையும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களையும் ஒரே இடத்தில் பணிபுரிய வைத்ததும், ஒரே சுற்றுச்சுவருக்குள் வீடுகளில் குடியிருக்கவைத்ததும் . இதுபற்றி சத்தியநாராயணா பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.

It was a strange situation: untouchables, who were outcasts and segregated in every village, were suddenly living in the same quarters as Sudras! The environment had changed, and now they had the means to learn many new things, not just about work, but about society and social structures too. In many ways, it was the British Indian era that opened the doors of development to the untouchables.

இரண்டாம் தலைமுறையான நரசைய்யாவின் மகன் பாலைய்யாவும் ரயில்வேயில் ஒரு அடிப்படை ஊழியராக (பாக்ஸ் மேன்) வேலையில் சேர்கிறார்.  முறையாக கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கல்வியின் மேன்மையை உணர்ந்ததும், கற்கும் ஆர்வம் இருந்ததும் தான் யெலுக்காட்டி குடும்பத்தினரின்  முன்னேற்றத்துக்குக் காரணம்.உணவு உள்ளிட்ட அடிப்படை  வசதிகளில் குறியிருந்தாலும் பாலைய்யா தனது எட்டு குழந்தைகளுக்கும் ஒழுங்கான கல்வியறிவைப் பெற்றுத்தருவதில் கவனமாகவும் கண்டிப்புடனும் செயல்பட்டார்.

அடுத்தடுத்த தலைமுறையினர் பள்ளிக்கல்வியைத் தாண்டி கல்லூரிக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று படித்தது, ரயில்வே துறையிலேயே உயர் பதவிகள் வகித்தது, அடையாளங்களைத் துறக்கும் பொருட்டு பெயர்களை மாற்றிக் கொண்டது, சாதீய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேறு மதத்தை தழுவிக் கொண்டது , தெய்வ வழிபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் மாற்றத்திற்குள்ளாவது என யெலுக்காட்டி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினருள் ஒருவரான இப்புத்தகத்தின் எழுத்தாளர் சத்தையா என்கிற சத்யாநாராயணா, தனிப்பட்ட ஒரு குடும்பம் சார்ந்து மட்டும் பேசாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்

Abbasayulu, Narsing Rao and Anjiah were well-settled as lecturers in different colleges. People marvelled at how a single family had produced four lecturers. Life was good now in every family. I began to observe the slow cultural transformation of each family towards Sanskritization.
We had a simple process: my father would offer food to Goddess Durgamma – rice and mutton, and sometimes a bottle of liquor, pray briefly, and then enjoy drinking and eating the offerings. There were no such things as fasting, offering flowers, or making special vegetarian dishes and offering them – untouched and untasted by others – to the gods. But now I would find pictures of gods and goddesses like Saraswati, Lakshmi, Ganapati and Venkateshwara in our families

இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்கள் மாறியிருந்தாலும் மனித மனங்களுக்கு உள்ளே இருக்கின்ற அழுக்கு கொஞ்சம் கூட மாறவில்லை என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியையும் விவரிக்கிறார் சத்யநாராயணா. 1982ஆம் டெல்லியில் இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு கல்லூரிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் நடந்தது இது.

There was a debate on the subject of the emancipation of scheduled caste and scheduled tribe students, and the affirmative actions a principal could take to achieve this goal. It was an interesting and important topic, during which I came to know the attitude of caste Hindus towards this section of students. Instead of discussing how best the students’ grievances could be addressed and their socio-economic sufferings relieved, or how the social ills of untouchability and segregation could be removed, there was a deviation from the subject and everyone started discussing how long the reservations should continue. The antagonism was clear. None of the heads of institutions was even thinking in favour of reservations for Dalit students. One principal made a derogatory remark, ‘Aap kitni bhi chhoot de, ye harijans sudharne vale nahi hain.

No matter what reservations you provide and however long you extend it, these Harijans are never going to get any better. Their children attend colleges simply to receive the scholarship money.’ I could see upper-caste arrogance in his words; he had not made a single affirmative suggestion and was showing his contempt and hatred against students from the scheduled castes and tribes. I could not restrain myself any more and said, ‘I strongly protest against the remarks made against Dalit students. They are derogatory and insulting, and if this is the attitude of the principal, I wonder how his unfortunate and neglected students can expect any social justice.’

இந்தியாவில் சாதியின் பெயரால் இதுவரை நடந்த நடக்கின்ற கொடுமைகள் பற்றி எதுவும் தெரியாமல்; தெரிந்துகொள்ளவும் விரும்பாமல், ”இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறா ?”, “Because of this reservation only I was not able to get medical seat.." மாதிரியான மொக்கைப் புலம்பல்களை உதிர்த்தபடி   , இட ஒதுக்கீடு பற்றி அவதூறு பேசியபடி திரிபவர்களும், சாதிப் பெருமை பேசியபடியும், சமகால அரசியல் தெரியாமல் பேசுபவர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

Update: 06/06/2018 - இப்புத்தகம் இப்போது தமிழில் ஜெனி மொழிபெயர்க்க ‘என் தந்தை பாலய்யா’ என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. வாங்க இங்கு சொடுக்கவும்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இரவும் யட்சியும்




எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி – அம்மா சொன்னாள்.

-யட்சி சிறுகதை - ஜெயமோகன்

யட்சிகளைப் போலத்தான் இரவுகளும். ஒருவனுக்கு அழகு. மற்றொருவனுக்குப் புதிர். வேறொருவனுக்கு திகில். தனியனுக்குத் துணை. ஆரவாரத்தின் முடிவு. அடங்கல்..! துலக்கம்..! 

சாதாரணமான வார்த்தைகள்ல அந்த உணர்வை கடத்திட முடியுமான்னு தெரியல. ஆனாலும் வார்த்தைகள் சாதாரணமானவை இல்லையே. நண்பர்களுடனான ஒரு சந்திப்புல விடிய விடிய ஏதேதோ பேசிட்டிருந்தோம். பிடிச்ச எழுத்தாளார். பிடிச்ச புத்தகம். அப்படி இப்படி...எதோ..! ஜெயமோகன் பத்தி பேச்சு வந்துது. அந்த கூட்டத்துல மூனு பேரு ஆசான் பக்தர்கள்ங்குறாதுனால வழக்கம்போல தரிசனம், மரபு, அது இதுன்னு ரசிச்சுப் பேச ஆரம்பிச்சாங்க. என்கிட்ட வந்து ஜெ.மோ படிச்சுருக்கியான்னாங்க. இல்லங்க ஆனா ‘விசும்பு’ தொகுப்புல வந்த கதைகளும் வெண்முரசுல சில பல அத்தியாயங்களும் நண்பர்களோட பரிந்துரையின் பேர்ல படிச்சிருக்கேன்னேன். அட..அதுமட்டுமில்லப்பா அவரு. நீ மொதல்ல ‘இரவு’ படி. அப்புறம் பேசுவோம்னாங்க. அன்னைக்கு மனசுல விழுந்த எண்ணம். பல மாசங்களுக்கு அப்புறம் தேடிப் பிடிச்சு இரவு வாங்குனேன். கொஞ்சம் கொஞ்சமா படிக்கவும் ஆரம்பிச்சேன். 

எதப்பத்தின நாவல்னு கேட்டா பொதுவா விலங்குகள்ல nocturnalனு சொல்லப்பட்ற இரவுலாவிகள் மாதிரி மனுஷங்கள்லயும் ஒரு கூட்டம் இருக்கு. இரவுகள்ல வாழ்ற சமூகம். அவங்களப் பத்தின நாவல்னு மேலோட்டமா பதில் சொல்லிடலாம். ஆனா நாவலுடைய உள்ளடக்கம் இதையும் தாண்டுனது. 

சமீபத்துல ”உரைநடை உலகத்தின் சர்வவிரோதி, இந்தக் கவிதைத் தமிழ்தான்"னு கி.ரா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. கவித்துவமான வர்ணனைகள் உரைநடையுடைய தீவிரத்தைக் குறைச்சுடும்ங்குறது அவருடைய கருத்து. ஆனா சமயத்துல தான் அனுபவிச்ச ஒரு விஷயத்த அல்ல உணர்ந்த ஒரு விஷயத்த வேற ஒருத்தருக்கோ இல்ல பல பேருக்கோ கடத்தனும்னா அதுக்கு இந்த மாதிரியான வர்ணனைகள் தவிர வேற வழியே இல்லையோன்னு தோணும் எனக்கு. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியும் வர்ணிக்கிற தொனியும் இருக்கும். “வெயில் விரிந்த சாலை ஒரு கறுத்து நீண்ட சர்ப்பம் போல..” ன்னு படிச்சாலே உங்க கண்ணு முன்னாடி எஸ்.ரா வராருல்ல ? அதான் அந்த signature..! அப்படி ஜெயமோகனுடைய signature பிடிபட்டது ’இரவு’ படிச்சப்ப தான்.ஒருத்தர் கதை சொல்லும்போது அந்த கதையைவிட அவர் சொல்லுகிற மொழி நடையும் கதை பேசியபடி நாம கடந்து போகிற பாதையும் ரொம்ப அழகா மனசுல பதிஞ்ச மாதிரி இருக்கு.


சரவணனோடு சேர்ந்து நாமும் இரவை ரசிக்கத் தொடங்குறோம். இரவுக்குக் கண்கள் பழகிப் போகுது. பகலை அருவருக்கிறோம். யட்சிகள் பத்தின வர்ணனைகளும், நிசாகந்திப் பூவின் வாசமும், கரிய நெடும் இரவின் பேரழகுமாய் நீலிமா என்னும் யட்சிமேல பைத்தியமா சுத்துறோம். வார்த்தைகள்ல தொடுதலும் நெருக்கமும் உணர்ந்து அவளுடைய அப்பட்டமான அழகைத் தாங்க முடியாம நாமளும் மனப்போராட்டத்துக்கு உள்ளாகுறோம். என்ன ஒரு உலகம்யா...! என்ன ஒரு ரசிப்பு. சர்வ நிச்சயமா சொம்ப அழகான காட்சியமைப்புகள் உங்கள் கண் முன்னே விரியும்.காயல் ஓடுகிற சத்தமும், கேரளத்து ஈரக்காத்தும், பசுமையும் , பரந்து விரிந்த இரவும், கவித்துமான மனிதர்களுமாக உங்களைச் சூழக்கூடும். 

நாவல்ல எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச சில பகுதிகளை மட்டு கீழ எடுத்துப் போட்டுருக்கேன். 

என் சொற்களை நான் கண்டுகொண்டேன். ”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது, எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்”

அவள் கோணலாகப் புன்னகைசெய்தபடி ”ஏன் புடிச்சாத்தான் என்ன?”என்றாள் ”பைத்தியம்னா என்ன? மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே தெறந்து போடறது. இன்னும்கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்ரது. பைத்தியத்துக்கான சான்ஸ் இல்லாத யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்களிலேயும் நாம கொஞ்சம் பைத்தியங்களாத்தான் இருக்கோம்…” நான் மெல்ல மனம் அதிரப்பெற்றேன். அதை நானே உணர்ந்திருந்தேன். ”தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்றாள் அவள். நான் எழுந்து செல்ல விரும்பினேன். ஆனால் என் உடல் அங்கேயே இருந்தது



தாமஸ் மேஜைமேல் தாளமிட்டபடியே என்னைப் பார்த்தார். ”உன் குழப்பம் என்ன என்று எனக்கு தெரியவில்லை” என்றார். ”நீ அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக விஜயன் சொன்னார். நல்ல விஷயம் என்று எனக்கும் பட்டது. இப்போது நீ அவளைப் பயப்படுகிறாய். ஒரு பெண் ஆணுக்கு முன் போடக்கூடிய வழக்கமான வேஷங்களை எல்லாம் அவளும் போடுவாளா என்று சந்தேகப்படுகிறாய். அந்தமாதிரி வேடம்போடாத பெண்ணுடன் எப்படி ஒரு ஆண் குடும்பத்தில் வாழமுடியும் என்று நினைக்கிறாய். அந்த வாழ்க்கை சாத்தியமல்ல என்பதனால் திருப்பி பகலுக்கே ஓடிவிடலாம் என்று திட்டமிடுகிறாய்…அதுதானே?”

அவர் மிக எளிமைப்படுத்துகிறார் என்று எனக்குப் பட்டது. ஆனால் அங்கிருந்தே அவர் பேச ஆரம்பிக்கலாமே என்று நினைத்து தலையசைத்தேன். ”அவள் ஒன்றும் அசாதாரணமான பெண் அல்ல. மிக சர்வசாதாரணமான பெண் மட்டும்தான். வெளியே பகலில் வாழும் எந்த ஒருபெண்ணையும் இரவில் கொண்டுவந்து வைத்தால் இப்படித்தான் இருப்பாள். ..” ”யட்சியாகவா?” ”ஆமாம். யட்சியை பகலில் கொண்டுவந்து வைத்தால் வீட்டுவேலை செய்ய வைக்கலாம்…” நான் தலையசைத்தேன்.

”இதோபார் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆண்கள் பெண்களை கவனிப்பதே இல்லை. இளமையில் அவர்களின் அழகு அவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. முதுமையில் அவர்களின் அழகின்மை திசை திருப்புகிறது. கவனித்துப் பார்த்த எந்த ஒரு ஆணும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் யட்சியைக் கண்டிருப்பான். தப்பவே முடியாது…” ”அவள் என்னை அருவருப்பதாகச் சொன்னாள்…” ”ஆமாம். ஆண்கள் வேறு பாலினம் என்பதற்காகவே பெண்கள் அவர்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் வேறு பாலினம் என்பதனாலேயே பெண்கள் அவர்களை விரும்பவும் செய்கிறார்கள்..”


இந்தப் புத்தகத்தைப் பத்தின முறையான அறிமுகமா இது இருக்கனும்னோ, அல்லது அலசி ஆராய்ஞ்சு காரணம் கற்பிக்கிற ஆய்வுக் கட்டுரையா இருக்கனும்னோ நான் இதப் பத்தி எழுதல. மொத்தமா படிச்சு முடிச்சப்புறம் அந்த உன்மத்தத்தையும் உணர்வுகளையும் கலவையா வார்த்தைகளா கொட்டிப் பேசுனா எப்புடி இருக்குமோ அப்புடி தான் எழுதியும் இருக்கேன்.

முறையான அறிமுகம் வேணும்னா இங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.

’இரவு’ நாவலுடைய எல்லா அத்தியாங்களையும் அவரோட தளத்துலயே இங்க போய் படிச்சுக்கங்க.

கண்டிப்பா படிச்சுடுங்க...! ஒரு வாட்டியாவது,,! 


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இந்தியாவைச் சுற்றிவர 80 ரயில்கள்


80trains.tmblr.com
கொஞ்ச நாள் முன்னாடி தான் 'Around India in 80 trains'ங்குற புத்தகத்த படிச்சு முடிச்சேன். ஒரு நாள் தூக்கமில்லாம கண்டபடி ஏதேதோ பயணக்கட்டுரைகள எல்லாம் தேடித் தேடி படிச்சுட்டு இருந்தப்ப இந்த புத்தகம் பத்தி ஒரு ப்லாக்ல எழுதியிருந்தாங்க. உடனே ஆர்டர் பண்ணிட்டேன் . இங்கிலாந்துல இருந்து மோனிஷா (journalist) அவங்க வேலைய விட்டுட்டு இந்தியா முழுக்க ட்ரெய்ன்ல சுத்திப் பாக்கனும்னு முடிவு பண்ணி துணைக்கு ஒரு ஃபோட்டோக்ராஃபர் நண்பனையும் கூட்டிகிட்டு வராங்க. Jules verne எழுதுன 'Around the world in 80 days'ஓட தாக்கத்துல இந்தியா முழுக்க 80 ட்ரெய்ன்கள்ல சுத்தனும்னு முடிவு பண்ணி அதுக்கான திட்டத்தோட பயணத்த தொடங்குறாங்க. 

இந்திய ரயில்வே பத்தி அவ்வளவு தகவல்கள். படிக்கப் படிக்க மலைப்பா இருக்கு.கண்டிப்பா நம்ம நாட்டோட உள்கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் மக்களோட வாழ்க்கைநிலை முன்னேற்றத்துக்கும் ரயில்வே ஒரு மிகப்பெரிய காரணியா இருந்துருக்குன்னு தோணுது.
'Palace on wheels'னு அழைக்கப்படுற கிட்டத்தட்ட ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மாதிரியான மகாராஜா எக்ஸ்ப்ரஸ் தொடங்கி , ஊட்டி-டார்ஜீலிங் ஆகிய இடங்கள்ல இருக்குற 'toy trains',கூட்டம் நெருக்கித் தள்ளுற மும்பை மெட்ரோ ரயில், இந்தியாவுலேயே ரொம்ப அழகான பயணப்பாதையைக் கொண்ட ரயிலான 'Mandovi express' , நடமாடும் மருத்துவமனையான 'Lifeline express'னு எவ்வளவோ விதமான ரயில்கள்...!! ரயிலை தங்களோட வாழ்க்கையின் ஒரு பகுதியா மாத்திக்கிட்ட லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பயணிகள்..!!
http://images.catchnews.com/

எத்தனையோ ரயில்கள் பத்தின தகவல்கள் இருந்தாலும், இந்த லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸ் உருவான விதம் ரொம்ப ரொம்ப நெகிழ வெச்சுது. இந்த ரயிலோட கதை 1981ல, வருஷம் ஐக்கிய நாடுகள் சபை அந்த வருஷத்த சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் வருஷமா அறிவிக்கும்போது தொடங்குது. அப்போ எல்லா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்களும் ஒன்னு கூடிப் பேசுறாங்க. கிட்டத்தட்ட உலகம் முழுக்க 50 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்காங்கன்னும் இதுல பாதி பேருக்கு மேல சரியான சிகிச்சை மூலமா குணப்படுத்தக் கூடியவங்கதான்னும் முடிவுக்கு வராங்க.
சரியா கவனிக்காம விட்டா இந்த 50 கோடி 2000ஆம் வருஷத்தப்ப 100 கோடியா மாறும்னு பயப்படுறாங்க. அதனால அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களோட கூட்டு சேர்ந்து இதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரணும்னு முடிவாகுது

வளரும் நாடுகளில் கண்பார்வையின்மையை தடுக்குறதுக்காக பல வழிகள்ல உதவிகள் செஞ்சுட்டு இருந்த சர்.ஜான் வில்சன் கிட்ட இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுது. பிலிப்பைன்ஸுக்கு பயணமாக இருந்த அவர இந்தியாவுக்கு வரச்சொல்லி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கேக்குறாங்க. இந்தியாவுக்கு வந்த அவரு இங்க டாட்டா குழுமத்தோட கலந்து பேசி 'Impact India' ங்குற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்குறது.

சில வருஷங்களுக்கு அப்புறம்... இந்த Impact India உடைய அப்போதைய தலைவரான செல்மா லசாரஸ் (Zelma Lazarus) அவங்க நிறுவனத்துக்கு நன்கொடையா வழங்கப்பட்ட ஒரு நவீன மருத்துவ வசதிகள் கொண்ட பேருந்தை வாங்கிக்குறதுக்காக இந்தியா வராங்க. விமானத்துல அவங்க கூட பயணம் பண்ற டாக்டர். பேட்ரிக் ரொசாரியோ, அவரு வழக்கமா மலையேற்றத்துக்காக இமாலயா வரும்போது அங்க இருக்குற கிராமவாசிகள் கிட்ட அடுத்த முறை வரும்போது அவங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள செய்றேன்னு வாக்குக் கொடுத்த விஷயத்த சொல்றாரு. அதக் கேட்ட செல்மா , அவங்களோட அந்த நடமாடும் மருத்துவமனை பேருந்த அவரைய எடுத்துக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம தானும் அவங்க கூட வர்ரதா சொல்றாங்க.

அடுத்த நாள் காலைலேர்ந்து கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் செஞ்சு முடிச்சு களைச்சுப்போயி கேம்ப் ஃபயர சுத்தி ஓய்வெடுத்துகிட்டு இருக்கும்போது , செத்துப் போனதா சொல்லி ஒரு சின்னப் பையன தூக்கிட்டு பதறியடிச்சுட்டு வராங்க ஊர் மக்கள். அந்தப் பையன பரிசோதனை பண்ண மருத்துவர்கள் அவன் சாகலைன்னும் அவனுடைய வயித்துல குடல்வால் (appendix) வெடிச்சிருக்குன்னும் கண்டுபிடிக்குறாங்க. பல மணி நேர போராட்டதுக்கு அப்புறம் அந்தப் பையனுக்கு சிகிச்சை குடுத்து பொழைக்க வைக்குறாங்க. மறுபடியும் எல்லாரும் களைச்சுப் போய் கேம்ப் ஃபயர சுத்தி உக்காந்திருக்கும் போது தூரத்துல மலை ரயிலோட சத்தம் செல்மாவுக்கு கேக்குது.

மேற்கொண்டு அவங்க வார்த்தைகள்லையே படிங்க.
"Suddenly, I said, 'How wonderful it would be if a train could come to these children.All night the idea thundered in my head. A train. A train that goes around India. A train that goes where it is needed. A train that prevents children from being crippled by polio. A train that prevents people from losing their sight to cataracts. A train...!!"

யோசிச்சவங்க அதோட நிக்காம உடனே டெல்லிக்குக் கெளம்பிப் போறாங்க. அப்போதைய ரயில்வே அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னண்டஸ் இவங்களை சந்திக்க அஞ்சு நிமிஷம் அப்பாயின்மெண்ட் குடுக்குறாரு. செல்மா தன்னுடைய திட்டத்தை சொல்லி இதுக்கு ஒரு புது ட்ரெயின் வேணும்னு கேக்க, அதேல்லாம் முடியாது மூனு கேரேஜ் மட்டும் தான் இப்ப அப்ரூவ் பண்ண முடியும்னு சொல்றாரு.அதப் போய் பாத்துட்டு திரும்பி வாங்கன்னு சொல்லி அனுப்பி வைக்கிறாங்க. சரின்னு ஒத்துக்கிட்டு செல்மா அந்த கேரேஜ்களை பாக்க வராங்க. அவங்க கால் வெச்சு உள்ள ஏறும்போதே ஒடச்சுகிட்டு உள்ள போகுது. விதியை நொந்தபடி திரும்ப அமைச்சர பாக்க வராங்க.

“கேரேஜ்களைப் பாத்தீங்களா..?”

“பாத்தேன்.”

”சரி பண்ண எவ்வளவு செலவாகும்னு தெரியுமா ?”

“தெரியாது”

“ஒரு கோடி ஆகும். உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா ?”

”இல்ல. ஆனா அதையெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க இந்த கேரேஜ்களை எடுத்துட்டு போறதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க போதும்.”

“சரி அப்புறம் உங்க இஷ்டம்”

செல்மா அடுத்து மும்பைக்குக் கெளம்பிப் போறாங்க. அங்க ரோட்டரி சங்கத்துல இருந்த அவங்களுடைய மருத்துவ நண்பர்கள் சில பேர்கிட்ட உதவி கேக்குறாங்க. மருத்துவர்கள் தங்களுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் தர்ர நிறுவனங்கள் கிட்டப் பேசி இந்த மாதிரி ஒரு நோக்கத்துக்காக சில உபகரணங்கள் தேவைப்படுது, கொஞ்சம் சலுகை விலைல தரமுடியுமான்னு கேட்க அந்த நிறுவனங்கள் ஒத்துகிட்டு தேவைப்படுற எல்லா கருவிகளையும் அனுப்பி வைக்கிறாங்க.

இலவசமாகவே...!!!

https://www.tkbsen.in/wp-content/uploads/2016/07/Lifeline-Express-16072016.jpg


ஒரு வழியா லைப்லைன் எக்ஸ்பிரஸ் 1991ஆம் வருஷம் தன்னுடைய பயணத்தைத் தொடங்குது.  Cleft lipsனு சொல்லப் படுற அன்னப்பிளவுக்கான அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை, போலியொமைலெட்டிஸ்னு சொல்லப்பட்ற போலியாவால பாதிக்கப் பட்டவங்களுக்கான அறுவை சிகிச்சைன்னு இதுவரைக்கும் லட்சக்கணக்கான அறுவை சிகிச்சைகள் இந்த ட்ரெயின் மூலமா செய்யப்பட்டிருக்கு. இன்னைய தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 10லட்சம் இந்தியர்களுக்கு மேல பயனடைஞ்சிருக்காங்க. 25 வருஷங்களா தன்னுடைய பயணத்தை இந்தியாவின் குக்கிராமங்களுக்குக் கூட தன்னுடைய சேவையை வழங்கிட்டு வர்ர இந்த ட்ரெயினுக்கு இன்னொரு பேர் இருக்கு,,,!!

ஜீவன் ரேகா - தமிழ்ல உயிர் நாடி...!! எவ்வளவு பொருத்தமான பெயர் இல்ல..!!

இந்த லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் பத்தின BBCயுடைய டாக்குமெண்டரி கீழே




மோனிஷா ராஜேஷின் புத்தகத்தை வாங்க: http://goo.gl/57l2s2

லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸின் ப்ராஜக்டுகளுக்கு நீங்க ஏதும் பங்களிக்கனும்னு நெனச்சா : https://www.impactindia.org/make-an-impact.php


Related Posts Plugin for WordPress, Blogger...