நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 22 ஜூன், 2022

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்
-------------------------------------------------

முதன்முதலில் நட்சத்திரங்களை எப்போது வியந்து பார்க்கத் தொடங்கினேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? 

சிறு வயதில் நட்சத்திரங்களுக்கும் விட்டில் பூச்சிகளுக்கும் வேறுபாடு தெரியாதவனாக இருந்திருக்கலாம்.

வளர்ந்து, கேள்வி கேட்டு, வாசித்து, தேடத் துவங்கியபின் நட்சத்திரங்களைப் பார்த்தல் என்பது எப்போதுமே வியப்புக்குரியதாகிப் போனது

இந்த அண்டத்தின் எங்கோ ஓர் மூலையில் பல நூறாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் வாழ்ந்து ஒளிர்ந்து மறைந்து போன ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுளின் ஒரு கனத்தை, ஒரு நொடியின் ஒளிச்சிமிட்டலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தர்க்கப்பூர்வமாய்... இரவு வானில் நட்சத்திரங்கள் பார்த்தலென்பது கடந்தகாலத்தைப் பார்த்தல் தானே ?

சில நாட்களுக்கு முன் வீட்டின் பழைய காகிதங்களுக்கு நடுவே ஏதோ ஓர் ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் கைகளில் தட்டுப்பட்டன 

நூறாண்டுகள் பழைய புகைப்படமொன்றும்
நூறாண்டுகள் பழைய திருமண அழைப்பிதழொன்றும்

அப்பா சொன்னார்.. என் பாட்டனுக்குப் பாட்டனாரின் குடும்பப் புகைப்படமென்றும், அவர் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் அதுவென்றும்

பழுப்பேறிய அந்த புகைப்படத்தையும் அழைப்பிதழையும் கைகளில் ஏந்துகையில் நூறாண்டுகளின் வரலாற்றையும், மூதாதையரின் கதைகளையும், அவர்தம் வாழ்வின் மிச்சத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது 

கடந்தகாலத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது

ஒரு நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது...!

<3

சனி, 11 ஜூன், 2022

விக்ரம் - 2022 - There lived a ghost

விக்ரம் பாத்து முடிச்சு ரெண்டு மூனு நாளா திரும்பத் திரும்ப படத்த மண்டைக்குள்ள ஓட்டிப் பாத்து, ஒவ்வொரு mass moment ஆ  recollect பண்ணி சந்தோஷப் பட்டுட்டு இருந்தேன்.

பயங்கரமா பசியெடுத்து ரொம்ப நேரம் ஆன பிறகு சாப்பாடு கெடச்சா அது நமக்கு ரொம்ப பிடிச்ச உணவா இருந்தாலும் வழக்கமா சாப்பிட்ற அளவு கூட இல்லாம கொஞ்சமா சாப்ட்ட உடனள தெகட்டிடும். ஒரு சில திரைப்படங்களுக்கு ஏற்பட்ட இந்த அதீத hype அந்தப் படங்கள ஒரு சராசரி ரசிகனா ரசிக்க முடியாம பண்ணியிருக்கு.

ஒரு சில திரைப்படங்கள் தான் இதுக்கு விதிவிலக்கா அந்த hypeக்கும் குடுத்த காசுக்கும் worthஆ இருந்துருக்கு.
இந்த வருஷம், முதல்ல நான் அப்டி என்னை மறந்து தேட்டர்ல ரசிச்ச படம் 'மாநாடு'. அவ்ளோ flawless ஆ ன்னு கேட்டா இல்லைதான்... ஆனா சின்னச்சின்ன விஷயங்கள ஊதிப் பெருசாக்கி பாக்க ஆரம்பிச்சா எந்த கலைவடிவத்தையும் முழுசா ரசிக்க முடியாம போயிடுமோங்குற பயத்துல I always choose to tell myself, if you get lost in a movie for those two and half hours then it's totally worth itனு. அதுக்கப்புறம் 'விக்ரம்' படத்துக்கு தான் அப்படியொரு feel கெடச்சுது.

கமல்ங்குற பேரே excitementக்கு போதுமானதா இருந்தாலும் Lokesh and team + Fahad+ VJS +Anirudh இவங்க எல்லாருடைய பெயர்களும் சேர்ந்ததால எதிர்பார்ப்பும், excitementம் இன்னும் அதிகமா இருந்துச்சு. கடைசியா படம் வெளியாகி தேட்டர்ல பாக்கும் போது கொஞ்சம் கூட ஏமாத்தல.

Mild spoilers ahead

Masked men sequenceல தொடங்கி அமர் ஒவ்வொரு விஷயமா தேடித்தேடி investigate பண்ணப் பண்ண பரபரப்பு அதிகமாகிட்டே போனாலும் Interval block reveal க்கு கொஞ்சம் முன்னாலேயே ' இந்த sceneல நான் தான் ஹீரோ' dialogue kinda gave it away... Still I was so lost and engrossed in the movie that I was screaming my hearts out. 

Stunt choreo, cinematography, editing, இசைன்னு எல்லாமே சிறப்பா அமைஞ்சு அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயார்படுத்திகிட்டே இருந்த மாதிரி இருந்தது. Anirudh has done a tremendous job as well (இசை பத்தி டெக்னிக்கலான விஷயங்கள எனக்கு சொல்லத்தெரியாது.. My opinion is just based on the engagement factor)

 கதை,கைதி படத்துல நடக்குற சம்பவங்களை இந்தப் படத்தோட இணைச்ச விதம், flow of events, scene sequences, கடைசில ரோலக்ஸ் intro,  பத்தியெல்லாம் எல்லாருமே  நிறையவே பேசிட்டாங்க. நாம புதுசா சொல்ல எதுவுமில்ல.

ஹாலிவுட்ல Harrison Ford, Clint Eastwood, Mel Gibson, Bruce Willis, Liam Neeson, Denzel Washington, Samuel Jackson மாதிரியான ஆக்ஷன் கிழ சிங்கங்கள் நடிச்ச பல படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை RED (Retired and Extremely dangerous), Expendables, Equalizer, Shaft, மாதிரியான படங்கள் அந்த பட்டியல்ல உண்டு.

இந்த வகை படங்கள் மேல சொல்லபட்ற முக்கியமான குற்றச்சாட்டு Engagement factor இருக்குற அளவுக்கு emotional factor இல்லன்னு.. விக்ரம் படத்துக்கும் அதே தான் சொல்றாங்க... ரொம்ப shallowஆ இருக்குன்னு தான். இன்னும் dark and grim, emotionally strong plot இருந்துருக்கலாம்னு. But if the movie reaches to the mass audience and satisfies , I don't actually think there's any harm in it. 

ஆனா பிரச்சனை அது இல்ல இவ்வளவு விஷயங்கள மெனக்கெட்டு திட்டமிட்டு பண்ற படக்குழு அந்த emotional depth quotientஐயும் கொஞ்சம் effort போட்டுப் பண்ணா இதே mass appeal படத்தோட output இன்னும் பல காலம் நிலைச்சு நிக்குற ஒரு cult classicஆ மாறலாம் இல்லையா?  ஆனாலும் ஒன்னும் மோசமில்ல. எனக்கு, கர்ணன் தன்னுடைய மகனுக்காக வருந்துற பகுதியும், அதைத் தொடர்ந்த போர் கண்ட சிங்கம் பாடல் பகுதிகளுமே போதுமானதா இருந்துச்சு.

விஜய் சேதுபதியுடைய நடிப்புமே அவருடைய வழக்கமான ஸ்டைல்ல இருந்து மாறுபட்டு நல்லா இருந்துச்சு. ஒரு மாதிரி நளினமா, தன்னை குறுக்கிக் கொள்கிற உடல்மொழியோட ஒரு கொடூர வில்லன் ரோல். கடைசியா இந்த மாதிரி பாத்த வில்லன்  'அஞ்சாதே' படத்துல தயா (Prasanna nailed it - Actually Mysskin thr GOAT nailed it) VJS ஓட intro தொடங்கி கல்யாண fight வரைக்கும் மனுஷன் மெரட்டி விட்ருக்காரு. 

ஃபஹத் பத்தி சொல்லியே ஆகனும். உண்மையில கமலுக்கு இந்திய சினிமால ஒரு protégéன்னு சொல்லனும்னா அதுக்கு எல்லா வகைலயும் தகுதியான ஆள் ஃபகத் பாசில் தான். எப்படி கமல் calibreக்கு விக்ரம் role பஞ்சு முட்டாய் சாப்புட்ற மாதிரியோ ஃபகத்துக்கும் இந்தப்படம் அப்படியே.

Best reveal of the movie ன்னா இடைவேளைக்கு பிறகான அந்த female agent ஓட intro and சண்டை தான். அப்படியொரு goosebumps எனக்கு. 'Raid' ன்னு ஒரு Indonesian படத்துல பெரிய stunt sequence ஒன்னு வரும்... நான் நிறைய முறை பாத்த hand to hand combat அது. அதுக்கப்புறம் தமிழ்ல அந்தளவு intense ஆ பாத்த சண்டை sequence இதான். (இதுலயும் தலைவன் Mysskin has done a similar sambavam with Cheran and a nail cutter knife🔥🔥🔥) 

கடைசி கடைசியா விக்ரம்ல  துப்பாக்கிகள் பத்தி இவ்வளவு details வந்ததும், பலருக்கும் என்னோட all time favorite 'வட்டாரம்' படம் நினைவுக்கு வந்துருக்கு. Facebookல இயங்குற 'வட்டாரம் appreciation club' ஓட நீண்டகால உறுப்பினரா I felt so happy 😜

லோகேஷ் கனகராஜ் உடைய  execution பத்தி தான் திரும்ப திரும்ப யோசிச்சுட்டே இருந்தேன். இப்படி ஒரு ensemble castஅ வெச்சுகிட்டு எல்லா பக்கத்துல இருந்தும் வந்த அழுத்தங்கள் தன்னை பாதிக்க விடாம அட்டகாசமா ஒரு படத்த குடுத்துட்டு இன்னும் நாலு படத்துக்கு தேவையான premiseஐயும் செட்டப் பண்ணிட்டு முடிச்சுருக்காரு. Tremendous efforts and control...! ❤️ வாழ்த்துகள் 

As much as Kamal needed this we Tamil audience also needed this one after disappointing outings from big stars. And it feels wholesome to see him happy and content....! 😊❤️

Please do not miss it on theatres. நான் இன்னும் ரெண்டு மூனு முறையாவது பாப்பேன்னு நினைக்கிறேன்.

Once upon a time
There lived a ghost
He was known to be a killer
And fear the most...

He is not a myth anymore... His name is... 

விக்ரம்ம்ம்ம்ம்... Absolutelyyyy lit 💥💥💥🔥🔥🔥

புதன், 8 ஜூன், 2022

இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?

 


” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில்  விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”

              -இறவான் (பா.ராகவன்)

சிறிதொரு இடைவெளிக்குப்  பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’.  மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...! 

இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.

 இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை. 

எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து  காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம். 

//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”              

-இறவான் (பா.ராகவன்)//

மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். 

//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில்  ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை

              -இறவான் (பா.ராகவன்) //

இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.

// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த  அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.

              -இறவான் (பா.ராகவன்) //

இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில்  நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது. 

 ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு,  அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல். 

இறவான் - இசையைத் தேடி <3


 இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/- 

 இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன்  அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.

 இணைப்பு  இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T

 



Related Posts Plugin for WordPress, Blogger...