நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? - ராஜ் சிவா


காலம்: 5054A.D 
மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது. ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகனங்கள் சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. பரிணாம வளர்ச்சியினால் மனிதர்களாகிய நமது உருவமும் மொழியும் உருமாறிவிட்டிருக்கின்றன. காலவெளியில் பயணம் செய்யக்கூடியடைம் மெஷினைகூட உருவாக்கிவிட்டோம்அப்போது மனித இனத்துக்கு ஒரு விபரீத ஆசை வருகின்றது. அது தம்முடைய மூதாதையர்களை, காலத்தில் பின்னோக்கி பயணம் செய்து சந்திக்கவேண்டுமென்பதே. ‘டைம் மெஷினில்வார்ம் ஹோல் ஒன்றை உருவாக்கி 3000 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கின்றார்கள். 1… 2… 3… @#$@#%#$%^$^*&^* ஸூம்…!!!!! 

காலம்: 2014 A.D 
ஏதோவொரு நாட்டின் ஏதோவொரு கிராமம். திடீரெனத் தோன்றும் ஒளிவெள்ளத்திலிருந்து இறங்குகின்றது ஒரு வித்தியாசமான விண்கலம். அதிலிருந்து இறங்கிவரும் பரிணாமவளர்ச்சியில் முற்றிலும் வேறுபட்ட எதிர்காலத்தின் மனிதர்களைச் சமகால மனிதர்களாகிய நம்மால் நம்மவர்களாக நம்பமுடியவில்லைஅவர்களின் உருவத்தையும் பேசும் மொழியும் கண்டு திகைக்கின்றோம். தொழில்நுட்பத்தில் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்ற அவர்கள் நிச்சயம் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடுமென முடிவுசெய்கின்றோம. நம்முடன் பேசி எதையும் புரியவைக்கமுடியாத அவர்கள் தாங்கள் வந்துவிட்டு சென்றதற்கான அடையாளமாக எதையாவது செய்துவிட்டுச் செல்வோம் எனமுடிவு செய்து பூமியில் ஆங்காங்கே மிகப்பெரிய அடையாளங்களை ஏற்படுத்திவிட்டு தங்களின் காலத்துக்குத் திரும்பிச் செல்கின்றார்கள்

கட்…!! 


vமேலே நீங்கள் படித்த நிகழ்வு ஏதோ அறிவியல் புனைகதை போலத் தோன்றியதா உங்களுக்கு…?? 
v  இப்படி ஒரு நிகழ்வு உண்மையில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன…?? 
v ஒருவேளை அப்படி உண்மையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததற்கான அடையாளங்களைக் கண்டால் இதெல்லாம் உண்மை என்று ஒப்புக்கொள்வீர்களா…?? 
vஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி நிறையக் கதைகளை வாசித்திருக்கின்றோம்நிறையத் திரைப்படங்கள் பார்த்திருக்கின்றோம்.அதெல்லாம் நிஜமா ?? 
vஉண்மையாகவே இந்தப் பேரண்டத்தில் மனிதர்களான நம்மை விட அறிவிலுயர்ந்தவர்களாக எங்கேனும் ஒளியாண்டுகள் தொலைவுக்கப்பாலுள்ள ஒரு கோளில்உயிரினங்கள் வாழ்கின்றனவா…?? 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? 

சரி.. கீழே இருக்கின்ற படங்களைப் பாருங்கள்…!! 



அற்புதமான கலைப் படைப்படைப்புகளாகத் தோன்றும் இந்தச் சித்திரங்களெல்லாம் யாரால்.. எங்கு.. எப்பொழுது வரையப்பட்டவை…??? என்ற கேள்வி எழுகிறதல்லவாஇவையெல்லாமே பயிர்வட்டங்கள் (Crop Circles) என்று அழைக்கப்படுகிற, வயல்வெளிகளில் சிலமணி நேரங்களில் அதிசயமான முறையில், ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகளால் வரையப்பட்டதாகச் சொல்லப்படும் சித்திரங்கள். (முதலிரண்டு பத்திகளில் படித்த கற்பனையின் க்ளைமேக்ஸ் நினைவுக்கு வருகின்றதா…???ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் இந்தப் பயிர்வட்டங்கள் பற்றிய தகவலோடு தான் தொடங்குகின்றதுராஜ் சிவாஅவர்கள் எழுதி உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும்               
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ கட்டுரைத் தொகுப்பு

இந்த மாதிரியான பயிர் வட்டங்களை வரைவதற்கு தேவைப்படும் அசாத்தியமான மனித உழைப்பும், இவைகளின் அளவீடுகள் கொண்டிருக்கும் வடிவியல் துல்லியத் தன்மையும் (Geometric Accuracy), இவைகள் உருவாக/உருவாக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் ஆகியவையே இந்த பயிர்வட்டங்கள் மனிதர்களால் வரையப்பட்டவையல்ல என்று ஆராய்ச்சியாளார்கள் உறுதியாகச் சொல்வதற்கான காரணங்கள்.  இந்த முதல் தகவல் அளிக்கின்ற ஆச்சரியத்தில் அசந்து போகும் நம்மை, மேலும் மேலும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளாலும் சான்றுகளாலும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றார் ‘ராஜ் சிவா’. 

தகவல்களைப் பொருத்தமட்டிலும் UFO, ஏலியன்கள் பூமிக்கு வந்த நிகழ்வுகள், ரோஸ்வெல் அதிசயம், காலப்பயணம், பிரபஞ்சத்தின் தோற்றம், Parallel Universe, SETI, அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ஏரியா-51’ பகுதி,  ஏலியன்களோடு பேரம் பேசிய அமெரிக்க பிரதமர், காலவெளிப் பயணம் மேற்கொண்ட பெண் ஆஸ்ட்ரானட், ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம், String Theory, M Theory, ஏலியன் அனுப்பிய ரேடியோ சிக்னல்கள்...என ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. இத்தனை தகவல்களையும் மிகவும் நேர்த்தியாகவும் வாசிப்பவனுக்கு எந்த குழப்பமுமில்லாமலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய விதத்திலேயே எழுத்தாளர் வெற்றி பெற்றுவிட்டார். 



பொதுவாக ஏலியன்கள் மாதிரியான மர்மான விஷயங்களைப் பற்றிய தகவல்களை எழுதுகிறவர்களோ பேசுகிறவர்களோ அந்த விஷயத்தின் நம்பகத்தன்மை குறித்த ஓர் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வது மிகக் கடினம். எழுதப்பட்ட/சொல்லப்பட்ட தகவல்களைப் படிக்கும் வாசகனின் அறியாமை அல்லது அறிவுக்கூர்மையைப் பொருத்து சொல்லப்படும் விஷயங்களை, முழுமையாக நம்பவோ அல்லது முழுமையாக மறுக்கவோ வாய்ப்பிருக்கின்றது

இங்கே கட்டுரையாசிரியர் அல்லது எழுத்தாளரின் பணி கயிற்றின் மேல் நடப்பது போலாகிவிடுகிறது (வேற உதாரணம் கெடைக்கல.. க்ளிஷே தான்..மன்னிச்சுடுங்க) அறிவியலின் பக்கமும் நம்பிக்கையின் பக்கமும் சரிசமமாகத்தான் எந்தக் கருத்தையும் வாசகனிடம் முன்வைக்க வேண்டியிருக்கின்றது. இன்னது தான் உண்மை...இதுதான் சரி... என்கிற முடிவெடுக்கும் உரிமையையும் வாசகனுக்கே அளித்துவிடுகின்றார். அதுவே அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் அறிவியலுக்கு செய்கின்ற மிகப்பெரிய நியாயமுமாகும். அந்தவகையில் அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏலியன் முதலிய விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கு ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ புத்தகம் ஒரு மறக்கமுடியாத பரிசு. ’ராஜ் சிவா’ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....!!

புத்தாண்டன்று நடைபெற்ற உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசிய ‘கிழக்கு’ பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அறிமுகக்  கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...