நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 15 ஜூன், 2018

நாடோடித்தடம் - ராஜ சுந்தர்ராஜன்


புனைவல்லாதவற்றில் இத்தனை ஈர்ப்போடான ஒரு புத்தகத்தைப் படித்தேனில்லை. தனித்தமிழ் மிளிர் கவித்துவ உரைநடை தொடக்கத்தில் சற்றே தடுக்கினாலும், போகப் போக சுவையுணர்த்தி போதையில் கிறங்கடிக்கச் செய்யும். வார்த்தைகளின் கோவையும் உணர்வுகளின் குவியலுமாய் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு தேடல்களோடு திரிந்தலைந்து, கடவுளும், கவிதையும், காமமும் நிறைந்து/நிறைத்துக் கதை சொல்லுகிற நாடோடியின் பெருங்குரல் பாடலெனக் கொள்ளலாம்.

புனைவுகளில் கூட morality தேடுபவர்களாயின் இது உங்களுக்கான புத்தகமன்று. முகத்திலறைகிற நிஜங்கள் எப்போதுமே தனிப்பட்டவர்களின் அரசியல்/ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. முன்பொருமுறை இப்புத்தகம் குறித்து  யாரோ கேட்டபோது இப்படிச் சொல்லியிருக்கிறேன், சாருநிவேதிதா முழுமையாய் கவிஞராய் இருந்து பின் பத்தியெழுத வந்திருந்தால் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்குமென.

கலைச்சொற்களின் பயன்பாடு, ஆங்காங்கு தனித்தமிழ் அழகியல் அத்தனையையும் தாண்டி தனிக் கட்டுரைகளாய் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு எப்படி ஒரு பொதுவான மையச்சரடைக் கொண்டிருக்கமுடிந்தது ?
அதை என்னவென்று விளக்கிச்சொல்லக் கேட்பீர்களானால் இன்னதென சுட்டிவிடமுடியாது என்னால். Abstract என்பதற்கு அருவமானது எனப் பொருள் சொல்கிறது இணையம். அதுவே பொருத்தமா எனத் தெரியவில்லை. I'd probably say, what connects these writeups which gives us the feeling of reading a novel; is probably an abstract sense of truth...! And abstracts necessarily need not to anything. It could be physical, metaphysical, poetic, naked, truth, lust, love...! Anything...!

ராஜ சுந்தர்ராஜன் நம்மை வெவ்வேறு களங்களுக்கு அழைத்துச் சென்று கதை சொல்ல பயன்படுத்துகிற வாகனமாக/கருவியாக மொழியையும், சாலையாக/ பாதையாக அவருடைய SPIC பணியையும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். தோரோவ் (Hendry David Throreau) சொன்னதுபோல after all , "the world is but a canvas to our imagination". Autobiographyயை autofictionஆக எழுதிவிட்டு (taking all the liberty fiction  could offer) புனைவில் படைப்பாளியைத் தேட முற்படாதீர்கள் என அறைகூவும் படைப்பாளிகளைக் கண்ட நமக்கு, “கோழையாகையால் நான் ஓடி ஒளிகிறேன் என்பதல்ல,ஓடி ஒளிவதால் நான் கோழையாகிறேன் என்பதே சரி. இதன்படி, ஒளிவுமறைவற்று வெளிப்பட்டு இருக்கிறது எழுத்து எனது இந்த எழுத்தும்.என்றால் இதில் புனைவே இல்லையா ? மொழிநடையில் இல்லாமல் இல்லை; நிகழ்ச்சிகளில் இல்லை. ஆம்” என தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகின்றார் கவிஞர்.

ஒரு நல்ல கவிதை எழுதப்படுவதற்கு முன்போ அல்லது ஒரு மிகச்சிறந்த புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்போ ஒரு leading moment இருக்குமென்றும், அந்த நொடியில் உணர்வுகள் ஏற்படுத்துகிற வெற்றிடத்தை ஒரு புகைப்படத்தாலோ கவிதையாலோ இட்டுநிரப்புகிற முயற்சிதான் படைப்பூக்கம் என்றும் நம்புகிறேன் நான். Also it is at the creator's liberty whether he/she decides to capture a speck of that moment or let it pass. இப்படியான leading moment அல்லது ஒன்றை நோக்கிச் செலுத்துகிற நிகழ்வுகளின் விளைவுகள் , (அவை பொதுவில் வைக்கப்படும்பட்சத்தில்) படைப்பாளிக்கு நிகழ்ந்த அதே உணர்வெழுச்சியை வாசிக்கிறவருக்கும்/பார்க்கிறவருக்கும் கடத்திவிடக்கூடும். ’நாடோடித் தடம்’ முழுக்க முழுக்க அந்த மாதிரியான தருணங்கள் நிறைந்து கிடக்கின்றன. Now that I've identified those moments of creations, I'd love to see those creations now. அவருடைய கவிதைகளை இதுவரை படித்ததில்லை. நிச்சயமாகப் படிக்கவேண்டும்.

எனக்கு மிகவும் விநோதமானதொரு pattern recognition habit இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன். முகங்கள், அலைப் பேசி எண்கள், குரல்கள், வாசனைகள், சாலைகள் என அனைத்திலுமே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாததொரு symmetry/சீர்மையை அடையாளம் கண்டிருக்கின்றேன். ஏதோவொரு ஒற்றுமை; ஏதோவொரு சாயல்.  ஒரு இடத்தில் இந்த சாயல் குறித்து இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
"சாயல் என்பது பழமையின் நீழல். எனில் பழஞ்சுவைக்கு மீளும் பயனிலை தானோ மகிழ்ச்சி இன்பம்? பண்டே கண்டு கடக்கப்பட்டது, பழையதென்று கழியாமல், இன்றுக்கும் நாளைக்கும் இலக்குவிதி ஆவதென்ன? இத்தனை கிண்ணங்கள் மாறி மாறி நான் எத்தகு போதையின் சாயலை விழைகிறேன்? கைக்கொள்ளும் ஓரொரு கிண்ணத்திலும் பழமையின் சாயல் படிந்திருக்கிறதா? அல்லது அவ்வாறு நம்பித்தான் புதைகிறோமா? Happiness: a talent or a gift? "
இங்கே மேலே சொல்லப்படுகிற போதையும் கிண்ணங்களும் abstracts. எனக்குப் பயணங்களும் புத்தகங்களுமாயும் வேறொருவருக்கு மற்றொன்றுமாயும் இருந்திருக்கலாம்.

அவருடைய மொழியாளுமையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் usage of negatives. ஆஃப்ரிக்க அமெரிக்கர்களுக்கென பேச்சுவழக்கில் ஒரு பிரத்தியேகமான double negatives பயன்பாடு உண்டு. உ.ம்: ain't never seen no such thing, nobody ain't never have done that. இது பற்றி உலகம் முழுக்க பல மொழி ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு signature பயன்பாடு. நினைக்கவில்லை; பார்க்கவில்லை; செய்யவில்லை என்பதற்குப் பதிலாய் நினைந்தேன் இல்லை; பார்த்தேன் இல்லை; செய்தேன் இல்லை. இலக்கண விளக்கம் அறியாவிடிலும் நான் மிகவும் நுணுக ரசித்த மொழிக்கூறு இது.

சோதிடமும், வானவியலும், மத போதனைகளும், போதையும், காமமும், பெண்களும், வேதியியலும், இயற்பியலும், அரசியலும், மொழிவளமும், இலக்கணமும், சங்க  இலக்கியமும், வேற்று மொழி படைப்புகளும் என எல்லாவற்றைப் பற்றியும் இந்த நெடும்பயணத்தினூடே தன் தனித்துவ மொழியில் பேசிக்கொண்டேயிருக்கிறார். இந்தியாவில் பெரும்பகுதியும் உலகில் கொஞ்சமும் பயணித்திருக்கின்றார்.  கவிஞருடைய அறிவின் விரிவு நிச்சயமாய் நம்மை அயர்த்தி விடுகின்றது. ராமாயணம் குறித்தும் அதன் வரலாற்றுத் தன்மை குறித்து தன் சக ஊழியருக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை இப்போது பொதுவில் வைத்தால் பல விவாதங்களைக் கிளப்பக் கூடும்.

கடைசி அத்தியாயமான ‘கனவுக்கதை மனிதன்’ நாடோடித்தடத்தின் ஒட்டுமொத்த சாரம் எனப் பட்டது எனக்கு. Observing one's astral self as a third person and writing it all down in words. பா.வெங்கடேசனின் சிறு(!)கதைகளுள் ஒன்றில் இப்படியான ஒரு narrative உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, நிதானமாக நினைவுகளை அசைபோடுகிற திண்ணைப் பெரியவர்களின் மனநிலையிலல்லாது ஆரவாரமாய், கொண்டாட்டமாய்  நம்மோடு நினைவு பகிர்கிறார் கவிஞர்.

It has been an absolute pleasure traveling with you sir..!!

நாடோடித்தடம் - ராஜசுந்தர்ராஜன்
தமிழினி பதிப்பகம்
மறுபதிப்பு: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க: இங்கு


Related Posts Plugin for WordPress, Blogger...