நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 20 அக்டோபர், 2012

பீட்சா - Don't Miss It...!!


’பீட்சா’....

ஏற்கனவே ’நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில பார்த்த இந்த படத்தின் இயக்குனருடைய குறும்படங்கள்...அப்புறம் இந்த படத்துடைய பாடல்களும் ட்ரைலரும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புல தான் முதல் நாளே இந்த படத்த பாத்துடனும்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாது..இயக்குனர் ‘கார்த்திக் சுப்பாராஜ்’ கொஞ்சம் கூட ஏமாத்தல... படம் சும்மா அட்டகாசமா இருக்கு..!
எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....

வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):) 

ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான்  அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட். 

மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)

படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.

சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders

வியாழன், 18 அக்டோபர், 2012

A Millionaire's First Love (2006) - Korean - காதலின் தீபம் ஒன்று...!

முன்குறிப்பு:

உங்களுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காதா…?? காதல் படங்கள் என்றாலே மொக்கை என்பவரா..?? அப்படியானால் இது உங்களுக்கான படமல்ல.மன்னிக்கவும் J

எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் சிலவற்றைப் பற்றி எழுதவேண்டுமென வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.     Blog எழுதாத நேரங்களில் பார்த்த படங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆகையால் இனி ஒவ்வொன்றாக எழுத வேண்டியது தான். எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கொரியன் (Korean) திரைப்படத்தோடு தொடங்குகின்றேன்.


   நான் பார்த்த முதல் கொரிய திரைப்படம் 'A Millionaire's First Love'.இந்த படம் பார்த்து கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் இப்போதும் எனக்கு ஒவ்வொரு காட்சியும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.அப்படி ஒரு அற்புதமான காதல் கதை இது...!!!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத, அலுக்கவே அலுக்காத காதல்...!!


ஜே-க்யூன் (Kang Jae Kyung) ஒரு மகா கோடீஸ்வரரின் பேரன்.அப்பா அம்மா கிடையாது.இவனுடைய கார்டியன் இவனது தாத்தாவால் பணியமர்த்தப்பட்ட இவர்களின் குடும்ப வக்கீல்.சதா அடிதடி, நண்பர்களோடு பார்ட்டி, என கொண்டாட்டமாய் பொறுப்பில்லாமல் திரிபவன் ’ஜே-க்யூன்’. அல்ட்ரா மாடர்ன் பைக், ஃபெராரி கார்,சொந்தமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் என பள்ளிக்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவன்.


அன்று அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாள்..!! நண்பர்களோடு கூத்தும் கும்மாளமுமாய் கொண்டாடி முடித்துவிட்டு தன்னுடைய ஹோட்டலுக்கு திரும்புகின்றான்.மறுநாள் அவர்களின் குடும்ப வக்கீல் அவனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியினை சொல்கின்றார். ஜே-க்யூனின் தாத்தா எழுதி வைத்த உயிலின் படி அவனுடைய பள்ளி மேற்படிப்பை ‘கேங்வாண்டோ’ எனும் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்து தேறினால் தான் தாத்தாவின் சொத்துகள் அவனுக்கு சேரும் இல்லாவிட்டால் மொத்த சொத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என சொல்கின்றார்கள்.

வேறு வழியில்லாமல் ஜே-க்யூன் அங்கு செல்கின்றான்.அங்கு அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவனை முன்பே அறிந்திருப்பதை கண்டு வியக்கும் ’ஜே-க்யூன்’ எப்படியாவது அந்த பள்ளியை விட்டு வெளியேறத் துடிக்கின்றான்.அங்கே அவனது வகுப்பில் படிக்கும் சக தோழியாய் அறிமுகமாகின்றாள் ‘யூ-வான்' (Choi Eun whan).பள்ளியை விட்டு வெளியேற/வெளியேற்றப்பட அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து போகின்றன.
காரணம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே-க்யூனின் தாத்தவுடைய நெருங்கிய நண்பர்.வேறு வழியின்றி படிக்க தொடங்குகின்றான்.

இதற்கிடையில் யூ-வானுக்கும் ஜே-க்யூனுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலரத் தொடங்குகின்றது.ஜே-க்யூனுக்கு அவனுடைய பால்ய பருவம் நினைவில் நிழலாட
சிறு வயதில் அதே ஊரில் யூ-வானோடு விளையாடி சுற்றித்திரிந்தது நினைவுக்கு வருகின்றது.பத்து நாட்களில் திரும்ப வருகின்றேன் என யூ-வானிடம் சத்தியம் செய்துவிட்டு அவனது பெற்றோர்களோடு அந்த ஊரைவிட்டு கிளம்பும் அதே நாளில் ஒரு சாலை விபத்தில் அவனுடைய பெற்றோரை இழக்கும் ஜே அவனது தாத்தாவோடு சென்றுவிடுகின்றான்.கால ஒட்டத்தில் மறந்துபோன இந்த விஷயங்கள் அத்தனையும் நினைவுக்கு வர அவள் மேலான காதல் இன்னும் அதிகமாகின்றது.

இதற்கிடையில் பள்ளி இறுதி நாளன்று நிகழ்த்தும் பொருட்டு ஜே-க்யூனின் வகுப்பு தோழர்கள் அனைவரும் ஒரு நாடகத்தை ஒத்திகை பார்த்தபடி இருக்கின்றார்கள். முதலில் இதில் நடிக்க மறுக்கும் ஜே-க்யூன் பின் யூ-வானுக்காக ஒப்புக்கொள்கின்றான். ஒரு நாள் ஒத்திகையின் போது திடீரென ’யூ-வான்’ மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவளுக்கு இதயம் மிகவும் பலவீனமாய் இருப்பதும் அவள் உயிரோடிருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாட்கள் தான் என்பதும் ஜே-க்யூனுக்கு மிகுந்த மன வருத்ததையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.


அதன் பிறகான அவர்களின் நாட்கள்… அவர்களிடையேயான நிகழ்வுகள்... அத்தனையும் கவிதை... அவ்வளவு அழகான மென்மையான காட்சிகள்.ஜே-க்யூன் பள்ளி உயர்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது தாத்தாவின் சொத்துகளை திரும்பப்பெற்றானா..?? யூ-வான் உடனான அவனது காதல் என்னவானது…?? அவள் பிழைத்தாளா…? இதையெல்லாம் ‘டவுன்லோட்’ பண்ணி படம் பார்த்து தெரிந்து கொள்க.

ஒரு Arrogant-ஆன கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையை நம் கண் முன்னே நிறுத்தும் ‘Hyun Bin'-ன்  நடிப்பு வெகு இயல்பாகவே நம்மை கவர்கின்றது.குறிப்பாக கிராமத்து பள்ளி நண்பர்களோடு  Adapt ஆக சிரமப்படுவதும்,படத்தின் பிற்பாதியில் யூ-வான் உடன் காதல் வயப்பட்டபின் அவளின் நோய் தீர்க்க மருந்து எனச் சொல்லி ஒரு பாட்டில் நிறைய (ஆம்..!!) கவிதை எழுதிய சீட்டுகளை அவளிடம் தருகின்ற காட்சியும்... செம்ம Performance.
   
குட்டிக் கண்களோடும் குய்யா முய்யா பாஷையோடும் உள்ள கதாநாயகி ‘Lee yeon Hee’-ஐ பார்த்தவுடனே பிடிக்காது தான்.ஆனால் முழு படமும் முடிந்த பின் கண்டிப்பாக உங்களால் இந்த பெண்ணை மறக்கவே முடியாது. அவ்வளவு அருமையான உணர்வுப் பூர்வமான நடிப்பு. அந்த சின்னக் கண்களில் அவ்வளவு உணர்ச்சிகள்.

இந்த படத்தின் இசையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.பெரும்பாலான ரொமாண்டிக் படங்களுக்கு அந்த உணர்வதைத் தருவதில் பெரும்பங்கு வகிப்பது பின்னணி இசை தான்.AMFL-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு செம்ம சாஃப்ட் மெலடி...!!


முழுப்படமும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றது.படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்..!!
Disclaimer: கொஞ்சம் ‘தம்பிக்கு எந்த ஊரு + இதயத்தை திருடாதே’ ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. J J
 Pictures & Video Courtesy: Original Uploaders

ஞாயிறு, 8 ஜூலை, 2012

War Of The Ring - மின்புத்தகம் - விஸ்வரூபம்...!!!


 பொதுவாக  ஃபாண்டஸி (fantasy) எனப்படும் கற்பனைக் கதைகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நிஜ உலகில் சாத்தியப்படாத நிகழ வாய்ப்பே இல்லாத... பல விஷயங்கள்,கற்பனையான பல வகை மனிதர்கள்,விலங்கினங்கள்.கடவுள்கள்,தேவதைகள்,பூதங்கள்... இப்படி எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடப்பது இந்த கற்பனை/மாய உலகங்கள்... இவ்வாறான உலகங்களையும் மக்களையும் பற்றிய விந்தை கதைகளை முதலில் நமக்கு வரலாறுகளும்..புராணக்கதைகளும் சொல்லி வந்தன.. பின் காலமாற்றத்தில்.. நாம் கதைகளில் படித்து கற்பனை செய்தவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் உயிர் கொடுத்து உலவ விட ஆரம்பித்தனர்..!! ஆங்கிலத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களில் பல உயரங்களைத் தொட்டவர்கள் ஆதலால் மிகச் சிறந்த  ஃபாண்டஸி திரைப்படங்களை இந்த உலகுக்கு அவர்களால் தர முடிந்தது...!! 

ஸ்டார் வார்ஸ் தொடங்கி லார்ட் ஆப் த ரிங்க்ஸ், நார்னியா, ஹாரி பாட்டர்,பேட்மேன்,சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், அவதார் வரை உச்சபட்ச தொழில்நுட்பத்தின் துணையோடு ஹாக்வார்ட்ஸ்,பண்டோரா,மிடில் எர்த் என பலவேறு மாய/கற்பனை உலகங்களையும்...அவற்றின் அதிசய உயிரினங்களையும்...அந்த உலகத்து நாயகர்களின் சாகசங்களையும் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்து வந்திருக்கின்றோம். திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அறிவியல் புரியாத வயதில் அவற்றைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பை விட பல மடங்கு அதிகமான ஆச்சரியமும் பிரமிப்பும் அந்த திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு பின்னணியில் உள்ள உழைப்பையும் கஷ்டங்களையும் அறிந்துகொள்ளும்போது ஏற்பட்டது. 

இப்படியான ஒரு  ஃபாண்டஸி திரைப்பட தொடரை எடுத்துக்கொண்டு அந்த திரைப்படத்திற்கான கதை முதன் முதலில் புத்தகமாக உருவானது தொடங்கி, அதிலுள்ள பாத்திரங்கள், கதை நிகழ்கின்ற உலகம், காலம், அந்த கற்பனை உலகின் மக்கள் பேசுகின்ற மொழி, அவர்களுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகள்,அந்தந்த நாடுகளின் வரலாறுகள், இத்தனையையும் சொல்லி இவையெல்லாவற்றையும் மூன்று பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தினுள் அடக்கி திரையில் கொண்டு வர படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் ,படத்துக்காக அமைக்கப்பட்ட செட்கள்,  புதுமையான கேமரா டெக்னிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்கள், படப் பிடிப்பின்போது படக்குழுவினர் எதிர்கொண்ட சவால்கள், எடிட்டிங் உத்திகள்,ஆடையலங்கார வடிவமைப்புகள்,நடிகர்களைத் தேர்வு செய்த விதம்,பின்னணி இசையின் உருவாக்கம்..இப்படி ஆதி முதல் அந்தம்  வரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும்...?? 

அந்த Cast & Crew வோடு மொத்தமாக பயணித்த ஒரு உணர்வைத் தருமல்லவா...??

அப்படித்தான் இருந்தது எனக்கு நண்பர் கருந்தேள் ராஜேஷ் எழுதி ஹாலிவுட் பாலா மற்றும் கொழந்த கணேஷ் அவர்களின் வடிவமைப்பில் வெளிவந்திருக்கின்ற  வார் ஆப் த ரிங் (War of the Ring) மின்புத்தகத்தை படித்தபோது.ராஜேஷ் முதன் முதலில் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தலிருந்து அவரது தளத்தின் அத்தனை கட்டுரைகளையும் படித்து வந்திருக்கின்றேன்.சின்னதாய் ஒரு விஷயம் சொன்னாலும் அதற்கு பின்னால் ஒரு உழைப்பும், ஹோம்வொர்க்கும் கட்டாயம்  இருக்கும்.ஹாலிவுட் பாலா வின் fx மற்றும் பிக்ஸார் ஸ்டோரி படித்தவர்களுக்கு அவரைப்பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  LOTR சீரிஸ் பற்றி ராஜேஷ் எழுதத் தொடங்கியபோது  அந்த சீரிஸின் ஒரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை...படத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது..!!நான் ஹாரி பாட்டர் விரும்பி ஆதலால் LOTR சீரிசை தொடர்ந்து படிக்கவுமில்லை. ஆனால் LOTR மின்புத்தகம் பற்றிய ராஜேஷின் அப்டேட்டுகள் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தன. ஒரு வழியாக மின்புத்தகம் நிறைவடைந்து வெளிவந்த பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ஈடான ஆர்வத்தோடு படிக்கத்தொடங்கினேன். முழுமையாக படித்து முடிக்க எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன. 

பின்னே... லார்ட் ஆப் த ரிங்க்ஸ் புத்தகங்களை எழுதியவரான டோல்கீன் (Sir.JRR.Tolkien) மற்றும் LOTR திரைத் தொடரின் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson)ஆகியோர் அளித்த நூறு சதவீத உழைப்பில் ராஜேஷும், பாலா,கொழந்த குழுவினரும் ஐம்பது சதவிகித உழைப்பை இந்த மின் புத்தகத்திற்கான உருவாக்கத்திலும் தகவல் சேகரிப்பிலும் அளித்திரும்போது அந்த புத்தகத்தை படிக்கும் நான் ஒரு ஐந்து சதவிகித உழைப்பையாவது தருவது தான் இவர்களுக்கு நான் தரக் கூடிய மரியாதையாக இருக்கும். LOTR சீரிஸின் மூன்று திரைப்படங்களின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்களையும் தரவிறக்கி பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்புகளை முழுவதும் கேட்டுவிட்டு மின்புத்தகத்தை மீண்டுமொரு முறை மேய்ந்துவிட்டே இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கின்றேன். 
'War of The Ring' மின்புத்தகத்தை  உருவாக்கியவர்கள்

Rajesh and JRR.Tolkien
Hollywood Bala and Peter Jackson
என்ன சொல்ல...!! எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!! ஒரு முழுமையான Making of LOTR வீடியோ பார்த்த திருப்தியை அளித்தது இந்த வார் ஆப் த ரிங்ஸ் மின்புத்தகம்...!! ராஜேஷ் மற்றும் பாலா அண்ட் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :) :)

வார் ஆப் த ரிங்  (War of the Ring) மின்-புத்தகத்தை தரவிறக்க  இங்கே கிளிக்கவும்..!!   
கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளம் இங்கு..!!

Image Courtesy: Original Uploaders

ஞாயிறு, 6 மே, 2012

வழக்கு எண் 18/9 - யதார்த்தம்


முந்தைய படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக விட்டிருந்தாலும் கதையையும்,தமிழ் ரசிகர்களையும் நம்பி ஒரு அற்புதமான படைப்பை கையிலெடுத்து திரும்ப வந்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல். நிச்சயம் அவரது முயற்சியில் வென்றிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை பற்றி படங்களைத் தந்தவர்கள் வெகு சிலர் பாலா, வசந்த பாலன் (அங்காடித்தெரு).'காதல்' திரைப்படத்தின் மூலம் அந்த வெகு சிலரில் ஒருவரான பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9 ' மூலம் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கின்றார். 



வீட்டு வேலை செய்யும் ஜோதி என்ற இளம்பெண் முகத்தில் திராவகம் வீசப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது.அதன் பின் காவல்துறையின் விசாரணையில்... நடைபாதைக் கடையில் வேலை செய்யும் வேலு அவன் பிழைப்பு தேடி வந்த கதையையும்,ஜோதியைக் காதலித்த கதையையும் இன்ஸ்பெக்டரிடம் சொல்வதோடு முதல் பாதி முடிகின்றது.திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஜோதி வேலை செய்த வீட்டாரின் மகள் ஆர்த்தி இன்ஸ்பெக்டரிடம் தனக்கு இன்னொருவன் மேல் சந்தேகம் இருப்பதையும் அதற்கான காரணத்தையும் தயங்கித்தயங்கி சொன்னபின் கதை கொஞ்சம் வேகமெடுக்கின்றது.. உண்மைக் குற்றவாளி யார்... ஜோதியின் நிலை என்னவானது... இந்த வழக்கு எண் 18/9 -இன் தீர்ப்பு என்னவானது என்பதெல்லாம் மீதிப்படம்.

 யதார்த்த சினிமாவென்றால் என்னவென்று இளம் இயக்குனர்களுக்கு டியுஷன் எடுத்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல்.பாத்திரத்தேர்வு , கதை சூழல், திரைக்கதையில் பாத்திரங்களின் Perspective-ல் பயணிக்கின்ற Non-linear உத்தி..அத்தனையும் பிரமாதம் . வேலுவாகவே வாழ்ந்திருக்கின்றார்  ஸ்ரீ...அத்துணை எதார்த்தமான நடிப்பு .கனா காணும் காலங்களில் இவரை பார்த்ததாக ஞாபகம். 

ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளா, ஹைக்ளால் ஸ்கூல் பெண் ஆரத்தியாக வரும் மனிஷா, பணக்கார பொறுக்கி விடலையாக வரும் மிதுன்....இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துராமன்... இப்படி முக்கிய பாத்திரங்களான அனைவருமே தங்கள் பங்கை வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். திரைப்படத்தின் முடிவு நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றது. கண்ணீர் விட வைத்து விட்டார் பாலாஜி சக்திவேல். ராஜன் அண்ணன் சொன்னது போல்," கலையின் உச்சபட்ச வடிவம் அந்த ஒரு துளி கண்ணீர் தானே...!!"



துணைப் பாத்திரங்களைப் பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.. பாலியல் தொழிலாளி ரோசி, இட்லிக்கடை முதலாளி, கூத்துக்கார சின்னச்சாமி ,ஜோதியின் அம்மா...ஒவ்வொருவரும் ஆப்ட்டான தேர்வு. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். 

கூர்மையான வசனங்கள், உறுத்தாத பின்னணி இசை...கார்த்திக்கின் குரலில் இசையில்லாமல் வரும் ஒரு குரல் கேட்குது பெண்ணே,தண்டபாணி எழுதி பாடிய 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்' தவிர தனிப்பாடல்கள் எதுவுமில்லை. படம் நெடுக ஒலிக்கும் 'வானத்தையே ' பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு மாதிரி நெகிழ வைக்கின்றது. 

மொத்தத்தில் வழக்கு எண் 18/9 ஒரு அருமையான திரையனுபவம்....!!!இந்த மாதிரி படங்களை திரையரங்கில் சென்று பார்த்து வெற்றி பெற வைப்பது தான் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
கண்டிப்பாக பாருங்கள்..!! 


பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்...!!!
Image courtesy: Indiaglitz

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சொல்லாததும் உண்மை - சுடும் உண்மைகள்





உண்மை...!!!
எத்தனை எத்தனை வார்த்தைகளையும் அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் இது...!!


எல்லாருக்குமே வாழ்க்கையில சில கோட்பாடுகள்..நெறிமுறைகள் இருக்கும்.. யாரையும் கஷ்டப்படுத்தகூடாது...பொய் பேசக்கூடாது...கடன் வாங்கக்கூடாது... சாகிற வரைக்கும் சொந்தக்கால்ல நிக்கணும்... யாரையும் நம்பி வாழக்கூடாது....இப்படி எத்தனையோ தனி மனித கொள்கைகள்.
இவற்றில் பெரும்பாலானவை இன்றைய வாழ்க்கைச் சூழலில் எட்டாக்கனியாக இருப்பினும்...இருப்பதிலேயே கடினமான கொள்கையாக நான் கருதுவது உண்மையாக இருத்தல் என்பதைத்தான்.எப்போதும் உண்மையாக இருப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றும் கூட.

இப்படியிருக்கையில் ஒரு மனிதன் தன வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை... கடந்து சென்ற பெண்களை.. உலுக்கிப்போட்ட மரணத்தை... வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களை.. செவிட்டிலறையும் உண்மைகளாகச் சொல்வது தான் இந்த 'சொல்லாததும் உண்மை'...!!வெகு சமீபத்தில் படித்து முடித்த புத்தகம்.  

அந்த மனிதர் 'பிரகாஷ்ராஜ்'...!!தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவரான பிரகாஷ்ராஜ் இத்தனை இத்தனை வாழ்வியல் அனுபவங்களையும்... கதைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பார் என இந்த புத்தகத்தை படிக்கத் தொடுங்குகையில் சத்தியமாக நான் எண்ணியிருக்கவில்லை. விகடனில் தொடராக வெளிவந்தபோது பெரிதாக என்ன இருந்து விடபோகிறதென இந்த அத்தியாயங்களை படிக்காமல் கடந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போது படிக்க நேர்கையில்  இந்த புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம்...நிச்சயமாக மிகவும் ஆழமானது.வாழ்க்கையை சற்றே கடுமையான படிக்கட்டுகளின் வழி கடந்தவர்களுக்கு/கடந்துகொண்டிருப்பகளுக்கு  இதே தாக்கம் ஏற்படுமென்பது உறுதி.நிச்சயமாக ஒரு தவற விடக்கூடாத புத்தகம் இது...!!!





புத்தகத்தில் என்னை கவர்ந்த/ரொம்பவும் பாதித்த/யோசிக்கவைத்த  வரிகள் சில:


"எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கனும்னு விரும்புவாங்க.நான் உண்மையின் பக்கம் இருக்கனும்னு யோசிச்சதால நிறைய இழப்புகள்.ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம்.சொன்ன உண்மைகளின் அளவு கையளவு மழை.சொல்லாத உண்மைகளின் அளவு ஆகாய நட்சத்திரங்கள்."

"நிகழ்காலத்துக்கான வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்க முடியும்.நாளைக்கான பயத்தின் அடிப்படையில் செய்கிற பாவங்கள் பெரும்பாலும் திருத்த முடியாதவை."

"நடிகனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற தருணம் இருக்கே...அது ரொம்ப துயரமானது.ஏன்னா, அது உண்மையான கண்ணீரான்னு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலேயும் ஒரு செகன்ட் எட்டிப்பாத்துட்டு போகும்."

"வாழ்க்கையில் நமக்கு அம்மாவோ,அப்பாவோ,காதலனோ,காதலியோ,நண்பர்களோ...யாரோ ஒருத்தர் எப்படி வாழறதுன்னு அவங்க வாழ்க்கை மூலமா சொல்லிக்கொடுக்கிறவங்களா இருந்துட்டா, அந்த வாழ்க்கை உண்மையிலேயே வரம் தான்."

"சில விஷயங்களை வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது, மரணம் மாதிரி.காதல், காமம் எல்லாமே வாழறதுக்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்கள்ல கிடைக்கிற எல்லா வலிகளுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவை தான்.அம்மாவுக்கு வலி கொடுத்துட்டு பிறக்கிறவன் தானே ஒவ்வொரு மனுஷனும்.அப்புறம் வன் மட்டும் பலியை எதிர்கொள்ள மாட்டேன்னு தற்கொலைக்குத் தயாராவது நியாயமா? வலி இல்லாம எப்படி வாழ்க்கை?"

"வெற்றிங்கிறது அரண்மனை.அங்கே பாதுகாப்பா இருக்கலாம்.ஆனா,எதையும் கத்துக்க முடியாது.அடர்ந்து விரிந்திருக்கிற காடுகளில்தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கு."

"ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல்,ஒருவரை ஒருவர் அடையணும்னு நினைக்கும்போதுதான் அசிங்கமாகிடுறோம்."

"உண்மை எப்பவுமே எளிமையாதான் இருக்கும்.ஆன, எளிமை தான் எல்லாவற்றையும்விட அழகு...!!"

"இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்கிற உறுதி இருந்தால்தான், மத்தவங்க நம்பிக்கை மேல் கைவைக்கணும்.இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்துட்டுப் போகட்டும்.அதனால லாபம் இல்லாம இருக்கலாம்.நிச்சயமா நஷ்டம் இருக்காது."

"காதல் என்பது பெறுவது இல்லை;தருவது இல்லை;அடைவதும் இல்லை.அது... நிகழ்வது...!!"

"நம்பிக்கை இல்லாம ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட,உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.. ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா..!!"

"வார்த்தையில் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் எண்ணிக்கை இருக்கே..அது வானத்து நட்சத்திரங்கள் மாதிரி எண்ணி முடிக்க முடியாததோ..!!"

"பிரச்சனையைப் பேசாமல்,தீர்வையே தேடாமல்..கோபத்தையும்,அது பெத்தெடுத்த குழந்தையான மௌனத்தையும் தோளில் சுமந்துட்டு வாழ்க்கையைத் தொலைக்கலாமா..?"

"எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் தேடுவதில்லை.ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் ஓர் உலகம் இருக்கும்.பெரும்பாலும் தேவைகள் வரும்போதுதான் நட்பு, காதல், உறவு, உணர்வு... எல்லாமே அர்த்தமுள்ளதா இருக்கும்."



------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: 'சொல்லாததும் உண்மை'
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் 
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ.115 
------------------------------------------------------------------------------------------------------------





வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நெஞ்சக் குளத்தில் நீ கல்லை எறிந்தாய்…!!



பக்கங்கள் படபடத்தபடி

திறந்து கிடக்கும்
புத்தகங்கள்….
தன்னிலை மாறி
ஒழுங்கற்று
கலைந்து கிடக்கும்
துணிகள்..
பாதி பக்கங்கள்
மட்டும் நிரம்பிய
பழைய டைரி..
நில்லாமல் இயங்கும்
கணினி…
நினைவுக் குளத்தில்
கல்லெறிந்தபடி
ஒலிக்கும்
பழைய பாடல்கள்…
முற்று பெற
முரண்டுபிடிக்கும்
வாக்கியங்கள்….
காற்றை சலனப்படுத்தும்
கண்ணீர்த்துளிகள்…
என் அறை முழுதும்…
சிந்திச்சிதறி…
நிரம்பி வழிகிறது…
நீ தவறவிட்ட
உனக்கான என் காதல்…!!!

வியாழன், 19 ஏப்ரல், 2012

மூங்கில் மூச்சு - இது திருநவேலி காவியம்லா

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் எழுத நேரம் கிடைத்தது.முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்து முடித்துவிட்டு அவற்றைப் பற்றி எழுதலாம் என எண்ணியிருந்தேன்.முதலில் படித்து முடித்த சுகா -வின் 'மூங்கில் மூச்சு'  பற்றிய என் அனுபவம்...

மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே அவர்களின் பெற்றோர்,கல்வி, வளரும் சூழல்,நண்பர்கள் என பல காரணிகளின் அடிப்படையில் அவரவர்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாறுபடும்.ஆனால் சில விஷயங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக எல்லோருக்குமே பொதுவானதாக அமைந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு விஷயம் தான் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மேல் நாம் கொண்டிருக்கும் 'ஊர்ப்பாசம்'. நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... சமுதாத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி..ஒரு நிமிடம் நமக்கு மிகவும் பிடித்த இடம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் அது நிச்சயம் நம் சொந்த ஊராகத்தான் இருக்கும்.

ஏனெனில் நம் ஊரின் ஒவ்வொரு தெருவிற்குப் பின்னும், ஒவ்வொரு இடத்திற்குப் பின்னும் நமக்கு ஒரு மறக்க முடியாத கதை இருக்கும்.ஒரு இனிமையான நிகழ்வு இருக்கும்.ஒரு மறக்க முடியாத மனிதர் இருப்பார். முதன்முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகிய தெரு, முதன்முதலில் குடிபெயர்ந்த வாடகை வீடு, வெயில் மறந்து விளையாடிய மைதானங்கள், பதின் பருவ காதலிக்காக காத்திருந்த தெருமுனை, திருவிழாக் காலங்களில் தூக்கம் மறந்து சுற்றித்திரிந்த வீதிகள், நண்பர்களோடு கும்மாளமிட்ட ஆற்றங்கரை, நீச்சல் பழகிய கோவில் குளம், பால்வாடியிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம்,வீட்டுக்கு தெரியாமல் படம் பார்த்த சினிமா கொட்டகை, இப்படி நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து போக எத்தனையோ உண்டு.

அப்படி தான் பிறந்து வளர்ந்த ஊரையும், ஊர் மக்களையும் பற்றி மண் மனம் மாறாமல்...ரசித்து..சிலாகித்து.. 'சுகா' எழுதியது தான் இந்த மூங்கில் மூச்சு. சுகா - சுத்தமான 'திருநவேலி'க்காரர்.இப்போது வசிப்பது சென்னையில்.திரைத்துறையில் பணிபுரியும் இவரின் முதல் படமான 'படித்துறை' விரைவில் வெளிவர இருக்கின்றது.பாலுமகேந்திரா பட்டை தீட்டிய வைரங்களுள் இவரும் ஒருவர்.வேணுவனம் என்ற பெயரில் ஒரு வலைப்பூவும் எழுதிவருகின்றார்.வேணுவனம் - இது அவரது வலைப்பூவின் சுட்டி.இவரது 'மூங்கில் மூச்சு' விகடனில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பினைப் பெற்று, பின்பு விகடன் பிரசுரத்திலேயே புத்தகமாக வெளிவந்தது.


திருநெல்வேலி என்றாலே அல்வா,அறுவா,வாலே போலே நெல்லைத் தமிழ் என்று நமது தமிழ்த்திரையுலகம் அடையாளப் படுத்தியிருக்கின்ற வேளையில் நெல்லைத் தமிழ் மணக்க சுகா ஊர்ப் பெருமைகளை எடுத்தியம்புகையில் நமக்கு ஆச்சரியம் மிகும் என்பது உறுதி.வெறுமனே ஊர்ப்பெருமை மட்டும் பேசாமல் அந்த ஊரில் தன் வாழ்வில் சந்தித்த/கடந்து சென்ற பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அழகுற சொல்லியிருப்பது தான் மூங்கில் மூச்சின் தனிச்சிறப்பு.எப்படி அமரர் 
திரு.சுஜாதா அவர்களின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’-இன் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும் நம்மால் இன்றளவும் மறக்க முடியாதோ..அதேபோல் கனேசண்ணனையும், குஞ்சுவையும், வரதராஜன் மாமாவையும்,சுந்தரம் பிள்ளை பெரியப்பாவையும் நம்மால் மறக்கவே முடியாது.

தாமிரபரணி (தாம்ரவருணி) பெருமையோடு தொடங்கும் முதல் அத்தியாயம் அப்படியே ஒரு நெடும் பயணமாய்த் தொடங்கி பாலுமகேந்திரா, எம்.ஜி.ஆர்-சிவாஜி;ரஜினி-கமல் கால ரசிகர் மன்ற போட்டிகள்,ஆங்கிலம் படுத்திய பாடு, இலங்கை வானொலியில் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த பாடல்கள், பாடல்களுக்கு பின்னாலிருந்த காதல்கள், டூரிங் டாக்கீஸ் சினிமா, திருவிழாக்கால தேவதைகள் துரத்தல்,நெல்லைத்தமிழ், ஐஸ்பால் விளையாட்டு,சென்னையில் வீடு தேடியலைந்த கதை,கேசட்டில் விரும்பி பதிந்த பாடல்கள், நண்பன் குஞ்சு-வின் ரகளைகள்,இளையராஜாவின் இசை, ரிக்‌ஷாக்கார செல்லப்பா மாமா,பாட்டுக் கச்சேரிகள்,குற்றால சீசன்,நெல்லையின் கிளப் கடைகள் (உணவகங்கள்) என பலவாறாகப் பயணித்து காலங்களைக் கடந்து தற்போதைய சுகா-வோடு நம்மை இணைக்கின்றது.

நெல்லை வட்டார வழக்கையும், காலத்தினால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், நமக்குத் தெரியாத சென்ற தலைமுறை மனிதர்களையும், இசை-உணவு-உடை என பல்வேறு 
தளங்களில் அவர்களின் விருப்பங்களையும், மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார் சுகா.மெலிதான நகைச்சுவை இழையோடும் 
நடையைக்கொண்டிருந்தாலும் அங்கங்கே நெஞ்சை உலுக்கும் சோகங்களையும் தரத் தவறவில்லை இந்த ’மூங்கில் மூச்சு’.
 
மொத்தத்தில் 'மூங்கில் மூச்சு' படித்து முடித்தவுடன், "சே... நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கே....எத்தனயோ வித்தியாசமான மனுஷங்க இருக்காங்களே.... கண்டிப்பா நம்ம ஊரப் பத்தியும்..மக்களைப் பத்தியும் நாமளும் எழுதனும்யா " என்று எண்ண வைப்பது தான் சுகாவுக்குக் கிடைத்த வெற்றி.திருவாருர்க்காரனான எனக்கு திருநெல்வேலியைப் பிடிக்கவைத்த/ரசிக்கவைத்த  இந்த 'மூங்கில் மூச்சு'  நிச்சயமாக ஒரு தவறவிடக்கூடாத புத்தகம்.

புத்தகம்: மூங்கில் மூச்சு
ஆசிரியர் : சுகா
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை : ரூ.95 



சனி, 21 ஜனவரி, 2012

Warrior (2011) - ஹாலிவுட் திரைப்படம் - உயிர்வாழ்வதற்கான சண்டை




2012-இல் நான் பார்த்த முதல் ஆங்கிலத் திரைப்படம் ‘Warrior’. IMDB - இல் வழக்கம்போல துழாவிக்கொண்டிருந்தபோது இந்த திரைப்படத்தின் பெயர் கண்ணில் பட்டது.எப்போதும் பார்க்கவேண்டிய ஹாலிவுட் திரைப்படங்களை அதன் இயக்குனரை வைத்தோ அல்லது அதில் நடித்த நடிகர் – நடிகைகளை வைத்தோ தான் தேர்வு செய்வது வழக்கம்.ஆனால் போஸ்டரையும் படத்தின் பெயரையும் பார்த்துவிட்டு எதோ பாக்சிங்/ஆக்‌ஷன் கதை போல என நினைத்து தான் தரவிரக்கினேன். சத்தியமாக இப்படி ஒரு அருமையான அனுபவத்தை இந்த படம் தரப் போகின்றது என நான் நினைக்கவில்லை.

 ஒரு முதியவர் சர்ச்சிலிருந்து வெளிவந்து தன்னுடைய காரில் ஏறுவதில் தொடங்குகின்றது படம். முதியவர் காரில் தன் வீட்டு வாசலில் வந்து இறங்கும்போது அங்கு அவருக்காக ஒரு இளைஞன் காத்துக்கொண்டு இருக்கின்றான். முதியவர் அவ்விளைஞனின் வருகையைக் கண்டு ஆச்சரியம் அடைகின்றார். அதன் பின் அவர்கள் இருவரிடையே நிகழ்கின்ற உரையாடலின் வாயிலாக அந்த முதியவரின் பெயர் பேடி கான்லான் (Paddy Conlon) எனவும் வந்திருக்கும் இளைஞன் டாமி (Tommy Conlon) அவரது மகன் எனவும் நீண்ட நாட்களுக்குப் பின் அவன் தன் தந்தையை சந்திக்க வந்திருப்பதும் நமக்கு புரிகின்றது.

அந்த பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லும் டாமி அங்கு ஸ்பார்ட்டா’ (Sparta) எனப்படும் ஒரு மிகப்பெரிய மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ்( Mixed Martial Arts - MMA) குத்துச்சண்டை போட்டிக்காக பயிற்சி செய்யும் ‘மேட் டாக்’ (Mad Dog) என்ற மிடில் வெயிட் சாம்பியனோடு பயிற்சிக்காக சண்டையிட நேர்கின்றது. டாமி 'மேட் டாக்' – ஐ சில நிமிடங்களில் அடித்து துவைத்துவிட, மேட் டாக் நிலைகுலைந்து சரிகின்றான். இதைக் கண்டு மேட் டாக்கின் பயிற்சியாளரும், ஜிம்மில் இருக்கும் மற்றவர்களும் திகைத்து போகின்றார்கள்.அடுத்த நாள் டாமி ஜிம்முக்கு செல்கையில் மேட் டாக்கின் பயிசியாளன் டாமியின் பெயரை ஸ்பார்டா போட்டியாளர்கள் பட்டியலில் சேர்த்து விட்டதாகச் சொல்கின்றான்.டாமி தன் தந்தையிடம் சென்று தான் ஸ்பார்ட்டாவில் கலந்து கொள்ளப் போவதாக சொல்லி அவரை தனக்கு பயிற்சியளிக்குமாறு வேண்டுகிறான்.இதை சாக்காக வைத்து தந்தை-மகன் உறவை புதுப்பிக்கலாமென எண்ணிக்கொள்ள வேண்டாமெனவும் தன் தந்தையை எச்சரிக்கின்றான்.(இந்த கடுப்புக்கு பின்னால் தனி கதை உண்டு)
 

   இதற்கிடையில் ஃபிலடெல்பியாவில் பள்ளி இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிகின்ற பேடி கான்லானின் மூத்த மகனும் டாமியின் அண்ணனுமாகிய பிரெண்டன் கான்லான் (Brendon Conlon) தன் மனைவி டெஸ் (Tess) மற்றும் இரு பெண் குழந்தைகளோடு வசித்து வருகின்றான்.தன் மகளின் இருதயக் கோளாறு காரணமாக ஏற்பட்ட செலவுகளாலும், வங்கி கடனாலும் மூன்று மாதங்களில் தனது வீடு வங்கியால் ஜப்தி செய்யப்படுமென்ற நிலைக்கு ஆளாகின்றான்.

முன்னாள் (U.F.C) குத்துச்சண்டை வீரனாகிய பிரெண்டன், பண முடையை சமாளிப்பதற்காக இரவு நேரங்களில் அமெச்சூர் வீரர்களோடு சின்ன சின்ன போட்டிகளில் சண்டையிடுகின்றான்.இந்த செய்தி எப்படியோ பிரெண்டனின் மாணவர்களிடையே பரவி பள்ளி நிர்வாகத்தின் காதுகளையும் எட்டுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு தவறான உதாரணம் என்று ஒழுக்கத்தை காரணம் காட்டி பிரெண்டன் பள்ளி நிர்வாகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றான். கிடைத்துக்கொண்டிருந்த ஒரு வருமானமும் நின்று போக வேறு வழியின்றி முழு நேரமாக தன் பழைய தொழிலான குத்துச் சண்டையில் ஈடுபட முடிவெடுக்கின்றான்.

தன் முன்னாள் நண்பன் ஃப்ராங்க் கம்பானா(Frank Campana)-வை சந்தித்து அவனிடம் பயிற்சி பெறத் தொடங்குகின்றான். ஸ்பார்ட்டா போட்டியில் சண்டையிடுவதற்காகத் தயாராகி வந்த ஃப்ராங்கின் மாணவனுக்கு பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு விட அவனால் ஸ்பார்டனில் பங்கு பெறமுடியாத நிலைமை ஏற்படுகின்றது.அவனுக்கு பதிலாக ஸ்பார்ட்டனில் பங்குபெற பிரெண்டன் முன்வருகின்றான்.ஃப்ராங்கும் தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்து போட்டிக்காக அவனை ஆயத்தப் படுத்துகின்றான்.

ஐந்து மில்லியன் டாலரை பரிசுத்தொகையாகக் கொண்ட ‘ஸ்பார்டாவில் டாமி கட்டுக்கடங்காத காட்டு மிருகம்போல எதிரிகளோடு வெறிகொண்டு சண்டையிட்டு அவர்களை தோற்கடித்து இறுதி போட்டியை நோக்கி முன்னேறுகின்றான். இன்னொரு பக்கம் சில சுற்றுகள் கூட தாக்குப்பிடிக்க மாட்டான் என எல்லோரும் குறைத்து மதிப்பிட்ட பிரெண்டன் யாருமே எதிர்பாராவண்ணம் எதிரிகளோடு திறமையாக சண்டையிட்டு இறுதி போட்டிக்கு முன்னேறுகின்றான்.


இரண்டு பேருக்குமே இது வாழ்வா...சாவா... பிரச்சனை.டாமிக்கும் பரிசுத்தொகை தேவை... பிரெண்டனுக்கும் பரிசுத்தொகை தேவை...அண்ணனும் தம்பியும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உண்டாகிறது.இறுதிப் போட்டியில் யார் வென்றது...?முன்னாள் ராணுவ வீரனாகிய டாமி கான்லான் ஏன் தன் பெயரை டாமி ரியொர்டன் என மாற்றிகொள்கிறான்? இந்த பெருந்தொகையை யாருக்கு தருவதற்காக டாமி போட்டியிட்டான்...?பிரெண்டன் தனது வீட்டைக் காப்பாற்றினானா...?
சொன்னா சஸ்பென்ஸ் போயிடும் பாஸு....படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க... J

டாமி கான்லானாக 'டாம் ஹார்டி', பிரெண்டன் கான்லானாக 'ஜோயல் எட்கர்டன்', இவர்களின் தந்தை பேடி கான்லானாக 'நிக் நோல்டே' ஆகியோர் நடித்திருக்கின்றனர்.இயக்குனர் 'கேவின் ஓ கானர்'. இவர்களில் டாம் ஹார்டியை மட்டும் இன்செப்ஷனில் ஒரு காட்சியில் பார்த்ததாக நியாபகம்.மற்றவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்களே.. J J

வழக்கமாக இந்த மாதிரி ஆக்சன்/தற்காப்புக் கலை திரைப்படம் என்றாலே அதில் அழுத்தமான கதை/திரைக்கதை இருக்காது.ஆனால் அந்த குறையை போக்கிவிட்டது இந்தப் படம். உணர்வுப்பூர்வமான ஒரு கதை கொஞ்சம் நான்-லீனியர் மாதிரி பின்னப்பட்ட திரைக்கதை,ரியலிஸ்டிக் ஒளிப்பதிவு என அத்தனை அம்சங்களுமே என்னை ஈர்த்தன.Never Back Down க்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த Mixed Martial Arts திரைப்படம் இதுதான்.

டிஸ்கி: படத்தின் கதையை வரி வரியாக விளக்கவில்லை.பல நல்ல காட்சிகளை ஸ்கிப் செய்து மேலோட்டமாகவே கூறியிருக்கின்றேன் (நீங்கள் பார்க்கும்போது ஏற்படும் சுவாரசியக் குறைவை தவிர்க்கும் பொருட்டு).

Warrior - Inspirational fight for life...!!!


பிடித்திருந்தால் 'லைக்'கவும் .உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் மகிழ்வேன்...!!

புதன், 18 ஜனவரி, 2012

சென்னை 35-வது புத்தகக் கண்காட்சி - நான் வாங்கிய புத்தகங்கள்


இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு நான் சிறிது தாமதமாகவே செல்ல நேர்ந்தது.வார நாட்களில்  அலுவலகப் பணிகளும் போரூர் டிராபிக்கும் போக விடாமல் தடுத்தன என்றால், வாரயிறுதியில் நண்பர்களுடனான ஊர்சுற்றல் காரணமாக இருந்தது.ஒருவழியாக நேரம் ஒதுக்கி கடந்த 12 -ஆம் தேதி அலுவலக நட்பு ஒருவருடன் சென்று வந்தாயிற்று.முதலில் உயிர்மை, கிழக்கு, விகடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய ஸ்டால்களை நோட்டம் விட்டுவிட்டு மற்ற ஸ்டால்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு...திரும்ப புத்தகங்கள் வாங்க வரும்போது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. 9 .00  மணிக்கு ஸ்டால்களை மூடிவிடுவார்களே என்பதை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன்.தலயிலடித்துக்கொண்டு தோழியும் நானும் வேக வேகமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தோம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
மூங்கில் மூச்சு - சுகா
கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா
வண்ணத்துப் பூச்சி வேட்டை - சுஜாதா
நானோ டெக்னாலஜி - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
குருபிரசாதின் கடைசி தினம் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ஜோதி - சுஜாதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா

நட்பு வாங்கியவை:
தாயார் சன்னதி - சுகா
எப்போதும் பெண் - சுஜாதா
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என நினைத்து நேரமின்மையால் தவற விட்டேன்.சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள், விஞ்ஞான சிறுகதைகள் ஆகியவை இந்த மாத இறுதியில் வாங்கவிருப்பதால் வாத்தியாரின் சிறுகதைகள் வேறெதுவும் வாங்கவில்லை.படிக்காத குறுநாவல்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். நான் தவறவிட்ட சில பல புத்தகங்களை இன்று டிஸ்கவரி புக் பேலஸில் சென்று அள்ளிக்கொள்வேன்.

சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கியவை:
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
கடவுளும் நானும் - சாரு நிவேதிதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
கற்றதும் பெற்றதும் - 3 - சுஜாதா
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - 'நீயா நானா' கோபிநாத்
வருங்காலத் தொழில்நுட்பம் - அண்டன் பிரகாஷ்

இந்தாண்டு தவறவிட்டவைகளில் மிகப்பெரிதாக நான் கருதுவது எஸ்.ரா -வின் இலக்கியப் பேருரைகள் டி.வி.டி யும், இன்னு சில எஸ்.ரா வின் புத்தகங்களும் தான்.எப்படியும் இந்த மாதத்திற்குள் அவற்றையும் வாங்கி விடுவேன்.தற்போது 'நானோ டெக்னாலஜி'-யும், 'அணிலாடும் முன்றிலு'ம்  படித்துக்கொண்டிருக்கின்றேன்.ஒவ்வொரு புத்தகமாகப் படித்து முடித்துவிட்டு அவற்றை பற்றி எழுதுகிறேன்.பார்க்கலாம்....!!

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நண்பன் – The Best Friend


நேற்று காலை 7.30 மணிக்காட்சி சங்கம் திரையரங்கில் வேட்டை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி காசி திரையரங்கம் வந்து 11.30 மணி காட்சியில் நண்பனும் பார்த்தாகிவிட்டது.


முன்குறிப்பு: கதை தெரிந்த கதையாக இருந்தாலும் காட்சிகளை விவரித்தால் சுவாரசியம் குறைந்து விடுமென்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கின்றேன்.

ஷங்கர் இயக்கம்,ஏற்கனவே இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸின் ரீமேக்,ஆரவாரமில்லா ரிலீஸ், ஃப்ரெஷ்ஷான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என பெரிய ஸ்டார்காஸ்ட், இப்படி எதிர்பார்ப்பைத்தூண்டும் விஷயங்கள் ரொம்பவே அதிகம்.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே ஈடு செய்திருக்கின்றார்கள்.

கதை எல்லோருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்தின்மேல் பெரிதாய் ஆர்வம் வரக் காரணம் ஷங்கர்.அவரின் முதல் ரீமேக் இது.முதன் முதலில் 3 இடியட்ஸ் பார்த்தபோது இந்த படத்தைத் தமிழில் எடுத்தால் எப்படி திரைக்கதை அமைப்பார்கள்...யாரெல்லாம் நடிப்பார்கள்..என நிறைய யோசித்திருக்கிறேன்.ஷங்கர் இயக்கம் என்றவுடன் மகிழ்ந்த மனது அமீர்கான் கேரக்டரில் விஜய் என்றறிந்தவுடன் பகீரென்றது...குத்து பாட்டு...பறந்தடிக்கிற ஃபைட் என மசாலா கலந்து பஞ்சர் ஆக்கிவிடுவார்களோ என பயந்தேன்.நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.

பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய்... என்ன சொல்வது இவரை... சச்சின்,காவலனுக்குப் பிறகு இப்படி ஒரு Soft, Subtle  பெர்ஃபார்மன்ஸில் விஜய்யை பார்ப்பதே ஆச்சரியமான,ஆறுதலான விஷயமாக இருந்தது.மனிதர் அப்படி பிய்த்து உதறியிருக்கின்றார் நடிப்பில்... சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என அத்தனையிலும் மொத்தமாய் ஸ்கோர் செய்கின்றார் விஜய்.
சேவற்கொடி செந்திலாக ஷர்மான் ஜோஷி கேரக்டரில் ஜீவா, தான் இந்த பாத்திரத்திற்கான மிகச்சரியான தேர்வு என நிரூபித்திருக்கின்றார்.முதலில் பாரியோடு பழகுவதில் தயக்கம் காட்டுவதாகட்டும், மாடியிலிருந்து குதித்து அடிபட்டு பின் தேறி வந்து தன்னம்பிக்கையொடு இண்டர்வியூவில் பேசும் காட்சிகளாகட்டும்...Jeeva at his best… என்றுதான் சொல்லவேண்டும்.வெங்கடச மாதவன் ரோலில் ஸ்ரீகாந்த், அதிகம் ஸ்கோப் இல்லாவிட்டாலும் தனக்கான காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக சிறப்பாகவே செய்திருக்கின்றார்.இலியானா கேடிக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.செம்ம கியூட்.. ;) J நம்ம ஊருக்கு பரிச்சயமில்லாத சைஸ் ஜீரோ..ஸ்லிம் பியூட்டியாக...அழகாய் இருக்கின்றார்... பாடல்களில் ஷகிரா ஸ்டைல் ஹிப் டான்ஸ் சூப்பர்... J  

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு பேர் சதுர் பாத்திரத்தில் ஸ்ரீவத்ஸனாக வரும் சத்யனும், பிரின்சிபால் விருமாண்டி சந்தானமாக கலக்கியிருக்கும் சத்யராஜும் தான்.கொஞ்சமே கொஞ்சம் நாடகத்தனமாய் இருந்தாலும் ரெண்டு பேருமே அவரவர்கள் பாத்திரங்களில் பட்டைய கிளப்பிருக்கின்றார்கள்..!!

பாடல்களிலும் சரி..பின்னணி இசையிலும் சரி... ஹாரிஸ் ஜெயராஜிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் ஷங்கர்.ஹாரிஸும் தனது வழக்கமான டெம்ப்ளேட் ட்யூன்களை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கின்றார். இவ்வளவு கலர்ஃபுல்லாகவும்..யூத்ஃபுல்லாகவும் இருக்கின்ற ஒரு கல்லூரி சார்ந்த கதைக்கு
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம்.சுஜாதா இல்லாத குறையை கார்க்கி தீர்த்துவைத்திருக்கின்றார்.அவ்வளவு அருமையான ஷார்ப்பான வசனங்கள்...

மொத்தத்தில் 2012ல் முதல் படமே விஜய்க்கு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமையுமென்பதில் சந்தேகமே இல்லை...!!!

நண்பன் – ஆல்ல்ல்ல்ல்ல் இஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்...!!!!

பின்குறிப்பு : வேட்டை விமர்சனம் அடுத்த பதிவில்...!!

புதன், 11 ஜனவரி, 2012

நீ நான் மற்றும் நம் நினைவுகள்...!!!


அழகான பூந்தோட்டங்களின் ஊடே

கை கோர்த்தபடி

மகிழ்ச்சியாக

சுற்றித் திரிகின்றோம் நாம்..



பூக்களை நுகர்ந்தபடி

சிரித்து சிரித்து

என்னவோ

பேசிக்கொண்டேயிருக்கின்றாய் நீ...

தலையசைத்தபடியே உன் முகத்தை

பார்த்துகொண்டு நடக்கின்றேன் நான்..



ஏதோவொரு பாடலை

முணுமுணுக்கிறாய் நீ..

உலகின் மிக

இனிமையான பாடலாக

அது இருந்திருக்கவேண்டும்

என்பதுபோல்

ரசிக்கத் தொடங்குகிறேன் நான்...



வசந்த காலத்தின் வாசம்

நம்மைச் சுற்றிலும்...

பின்பு கடற்கரை

மணல்வெளியில்

கால்தடம் பதிக்கத் தொடங்கிறோம்....

நம்மை பிடிக்க முயன்ற

அலைகளோடு விளையாடி நகர்கிறோம்..



திடீரென்று கையை உதறிவிட்டு..

முடிவில்லா கடலின் நடுவே

ஓட ஆரம்பித்தாய் நீ...



என்னென்னவோ

அழுது அரற்றியபடி

பின் தொடர்ந்து

ஓடிவருகின்றேன்  நான்...



ஓடி ஓடி..

சிறு புள்ளியாய்.. ஒளிக்கீற்றாய்..

தேய்ந்து மறைந்தாய் நீ..!!



அழுது சோர்ந்த

கண்களோடு..

அயர்ச்சியில்

விழித்தெழுகின்றேன் நான்...!!

கனவுகளின்

மிச்சமாய் எச்சமாய்

சிதறிக்கிடந்த உன் நினைவுகளை

அசைபோட்டபடி...

திங்கள், 9 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - Survival of the Fittest


முன்பே மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இது யுவகிருஷ்ணா அண்ணனின் முதல் புதினம் என்பதால் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன் 'அழிக்கப் பிறந்தவனு'க்காக.வலைப்பூவில் வெளியிட்டிருந்த அத்தியாயங்கள் வேறு ஏகத்துக்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டபடியால்... வெளியிட்ட அன்றே வாங்கியாயிற்று இந்த புத்தகத்தையும்... அன்றிரவே படித்தும் முடித்தாயிற்று.


ஒரு கொலை,ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட், இதனைத் தொடர்ந்து கோர்வையாக நடக்கும் விசாரணைகளும்,தொடர் கொலைகளும் விறுவிறுப்பை அதிகமாக்குகின்றன.பர்மா பஜார் பெருந்தலை காதர் பாய், அவரின் சிஷ்யன் மாரி, அவனுடைய நண்பன்...இப்படி வரிசையாக அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டரும் கதையை அடுத்தடுத்த  கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

தட தடவென எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் போல அப்படியொரு வேகமான நடை கதையிலே... கதாபத்திரங்களின் படைப்பு, அவர்களின் பின்னணி, அவர்கள் புழங்கும் இடங்கள்...அத்தனையிலும் அப்படி ஒரு டீட்டெய்லிங் ().பர்மா பஜார் வியாபாரம்,திருட்டு வி.சி.டி கும்பல், கடல் வழி கடத்தல்,சினிமா விநியோக உரிமை, என கொடுத்திருக்கும் ஒவ்வொரு டீட்டெய்லுக்கும் ரொம்பவே உழைத்திருப்பது தெரிகின்றது..

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.மாரியின் காதல் எபிசோடை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பது என் வருத்தம்.. :) :)

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டிருக்கின்றான் இந்த 'அழிக்கப் பிறந்தவன்'.
யுவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!
அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...!!

டிஸ்கி: 


நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... :) :)







ஞாயிறு, 8 ஜனவரி, 2012

’தெர்மக்கோல் தேவதைகள்’ - உணர்வுகளின் தொகுப்பு


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப்பின் இப்போது தான் இந்த பக்கம் வருகின்றேன்.
So... I'm back..!! :) :) :)


லெமன் ட்ரீ, கொத்து பரோட்டா, மீண்டும் ஒரு காதல் கதை... ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சமீபத்திய (4/01/2012) ரிலீஸ் தான் ‘உபதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதைத் தொகுப்பு.

கேபிள் அண்ணனின் நேரேஷன் ஸ்டைல்தான் எனக்கு அவரிடம் மிகப் பிடித்த விஷயம்.உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதில் வல்லவர்.
செவிட்டில் அறையும் நிதர்சனங்களையும், மெல்லிய உணர்வுகளையும் அவரது சிறுகதைகள் எப்போதும் பிரபலிக்கத் தவறியதில்லை.

அப்படி நெஞ்சைத்தொட்ட நிதர்சனக் கதைகளின் தொகுப்பு தான் இந்த் தெர்மக்கோல் தேவதைகள். ஜூஸ் கடைகளில் ஃபலூடா என்று ஒரு மிக்ஸ் உண்டு.ஜிகர்தண்டாவின் காஸ்ட்லி வெர்ஷன். தனித்தன்மையும், தனிச்சுவையும் கொண்ட பல லேயர்களை அடுக்கியிருப்பார்கள்.அவைகளை கலந்து ஒன்றாக சாப்பிடுவது ஒரு அலாதியான இன்பம்.
இந்த சிறுகதைத் தொகுப்பும் அந்த மாதிரி தான்.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன நமக்கு.

சில பாத்திரங்கள் உங்களுக்கு வாழ்க்கையை உணர்த்தலாம், சில பாத்திரங்கள் உங்களை காதலிக்கத் தூண்டலாம், சில உங்களை அழ வைக்கலாம்... இப்படி உணர்வுகளின் குவியலாகவே இருக்கின்றார்கள் கதை மாந்தர்கள்...

எனக்கு எப்போதுமே கேபிள் அண்ணன் கதைகளில் உலவும் பெண் பாத்திரங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு... 80 வயது சேச்சுப் பாட்டியாகட்டும், இருபதுகளில் உலவும் ஜெயா,ராஜியாகட்டும் அப்படி ஒரு கேரக்டரைசேஷன்... அழகுப் பெண்களைப் பற்றிய வர்ணனைகளில் சில க்ளிஷேக்கள் இருந்தாலும் (உ.தா இரானியச் சிவப்பு, செர்ரி உதடு) JJ
கேரக்டரைசேஷனிலும்,மெல் உணர்வுகளைச் சொல்வதிலும் கேபிள் அண்ணன் ஒரு குட்டி சேத்தன் பகத்.. J J

என்னுடைய ஃபேவரைட்ஸ்:
1.வன்மம்
2.பிரியாணி
3.ஜன்னல்
4..காளிதாஸ்
5.ராஜலட்சுமி
6.ஜெயா

கேபிள் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!


டிஸ்கி:

நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... J J J

டிஸ்கி 2:

தெர்மக்கோல் தேவதைகள் வாங்கிய அன்றே யுவகிருஷ்ணா அண்ணனின் ‘அழிக்கப் பிறந்தவனையும் வாங்கிவிட்டேன்... இரண்டு புத்தகங்களையும் விடிய விடிய அன்றே படித்தும் முடித்தாயிற்று. சோ அடுத்த பதிவில் ‘அழிக்கப் பிறந்தவனோடுசந்திக்கிறேன்.




Related Posts Plugin for WordPress, Blogger...