நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

6174 - க.சுதாகர் - கனிதம், லெமூரியா, க்ரிஸ்டல்லோக்ராஃபி மற்றும் பல

6174 is known as Kaprekar's constant after the Indian mathematician D. R. Kaprekar. This number is notable for the following property:
  1. Take any four-digit number, using at least two different digits. (Leading zeros are allowed.)
  2. Arrange the digits in descending and then in ascending order to get two four-digit numbers, adding leading zeros if necessary.
  3. Subtract the smaller number from the bigger number.
  4. Go back to step 2.
The above process, known as Kaprekar's routine, will always reach its fixed point, 6174, in at most 7 iterations. Once 6174 is reached, the process will continue yielding 7641 – 1467 = 6174
-Wikipedia

சாதாரணமான வாழ்வியல் அனுபவங்களை வைத்து எழுதப்படுகின்ற புதினங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வெவ்வேறு கதைக்களங்களில் எழுதப்படுகிற புனைவுகளில் எனக்கு எப்போதுமே தனி ஆர்வமுண்டு.அதுவும் அறிவியல் புனைவென்றால் அது ரொம்பவே ஸ்பெஷல்.அந்த வகையில் சென்ற புத்தகக் கண்காட்சியில் நிறைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சுதாகர் அவ்ரகளின் 6174 நாவலை வாங்கினேன்.

பொத்தாம் பொதுவாக Science fiction என்று சொல்லவிடமுடியாது. கனிதம், Geometry, Crystallography, Anthropology, கோலங்கள்,  அப்புறம் சங்கத் தமிழ் வெண்பாக்கள் அத்தனையும் உண்டு.
உள்ளடக்கத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரு விருந்து.

நிகழ்வு 1: கதை லெமூரியர்களின் காலத்தில் துவங்குகின்றது.அவர்களின் சக்தி பீடமாகிய ஒரு பிரமிட் (Transformers திரைப்படத்தில் காட்டப்படுகிற Tesseract மாதிரி ) பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் தோன்றப்போகும் மனிதர்களின் கைகளில் கிடைத்தால் உலகில் பேரழிவு நிகழுமென அதை அழித்துவிட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

நிகழ்வு 2: கொரிய, ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுபோகின்றன.இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்புகின்றது.நாடுகளுக்கிடையே போர்மூளும் அபாயத்தையும் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது.

நிகழ்வு 3: பூமியின் புவிவட்டப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு மிகப்பெரிய விண் கற்கள் பூமியை எந்நேரமும் தாக்கிவிடக்கூடிய ஆபத்தில் விண்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன.

நிகழ்வு 4: சர்வதேச தீவிரவாத கும்பல் ஒன்று உலகத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தேடலோடு வெவ்வேறு நாடுகளில் முனைப்போடு இயங்கத்தொடங்குகின்றனர்.

நிகழ்வு 5:இஸ்ரோவின் விஞ்ஞானியான சடகோபன் பல வருடங்களுக்கு முன்பு தன் மாணவர்களாக இருந்த ஜானகி, ஆனந்த் இருவரையும் ஒரு முக்கியமான விஷயமாக தொடர்பு கொண்டு வரவழைக்கின்றார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தொடங்குகின்ற இவர்களின் தேடல் பயணம் ஒடிஷா, மணிப்பூர், மியான்மர், தாய்லாந்து என நீள்கின்றது.

இந்த நிகழ்வுகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி ஒரு 400 பக்க நாவல் என யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.அதிலும் ஏகப்பட்ட தகவல்கள்.முன்பே சொன்னது போல வடிவக் கனிதத்தில் தொடங்கி...கோலங்கள் தொடர்பான தகவல்கள்.. சீலகந்த் மீன்..யமுனையாற்றின் டால்ஃபின்கள்.. பர்மாவின் பகோடா கோவில்கள்.. தமிழர்களின் வரலாறு... எண் கனித புதிர் வெண்பாக்கள் வரை அத்தனை தகவல்கள்.. அத்தனை hard work.

எனக்கு கணக்கே ஆகாது.நானே ஏகப்பட்ட கனிதப் புதிர்களையும் விநோத எண்களையும் கூகிள் பண்ண வேண்டியதாகிவிட்டது.அதுமட்டுமல்லாமல் கதையில் வருகிற தகவல்கள் வெவ்வேறு துறை சார்ந்த துணுக்குகள் எல்லாவற்றையும் கூகிளில் தேடி பின்னணியைத் தெரிந்து கொண்டேன்.புத்தகத்தின் முடிவில் சுதாகர் அவர்கள் தந்திருக்கின்ற referenceகளைப் பார்த்தாலே தகவல்களின் துல்லியத்தன்மை தெரிகின்றது

அவருக்கு சப்ஜெக்டின் மேல் இருக்கிற காதலாலோ என்னவோ தெரியவில்லை நாவல் முக்கியக்கட்டத்தை நெருங்க நெருங்க கதை சொல்லும் நடை ஒரு அறிவியல் விரிவுரையாளரை ஒத்ததாக மாறிவிடுகின்றது.இது என் போன்ற கனிதம் பிடிக்காத பார்ட்டிகளுக்கு கொஞ்சம் வேகத்தடை போட்டது போலாகலாம்.வடிவக் கனித விளக்கங்களை பல முறை படித்த பிறகே புரிந்து கொள்ள முடிந்தது.அவை கொஞ்சமே கொஞ்சம் எளிமையாகவும்..கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்காத வகையிலும் இருந்திருக்கலாமென்பதே என் ஒரே ஆதங்கம்.

மற்றபடி...

சொன்னால் கொஞ்சம் மிகையாகவோ க்ளிஷேவாகவோ இருக்கலாம்.ஆனாலும்... தமிழின் டான் ப்ரவுன் என்று சொல்லக்கூடிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கின்றார் சுதாகர் அவர்கள். My hearty congrats sir...!! Eagerly looking forward for your next novel..!!


கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...