நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்


உங்களுக்கு 70 களில் பதின்பருவத்திலிருந்த ஒரு தாய்மாமன் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தில் வருகிற பெரும்பாலான கதைகளையும் நிகழ்வுகளையும் கட்டாயமாய்க் கேட்டிருக்கக் கூடும். இந்த நாவலின் எழுத்தாளர் தமிழ்மகன் செய்திருப்பதும் அம்மாதிரியான ஒரு முயற்சியே.

மனித நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழின் தோற்றம்/வரலாறு, தமிழ் மன்னர்களின் கடல்பயணங்கள், கூடவே 60/70 களின் தமிழக அரசியல் சூழல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் மற்றும் ராஜீவ் கொலை பற்றிய தகவல்கள், விடுதலைப்,புலிகள் குறித்த தகவல்கள், தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள் ...

ஆரிய திராவிட சித்தாந்தங்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த விளாக்கங்கள், திரமிடா கீழூர் மேலூர் மாதுறை ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கங்கள், உலகெங்கிலுமுள்ள பிற நாடுகளின் ஊர்களின் தமிழ் பெயர்கள், தமிழ் வார்த்தைகளோட ஒத்துப் போகிற பிற உலக/இந்திய மொழிகள் குறித்த தகவல்கள் என ஆச்சரியமூட்டுகிற சுவாரசியமான விஷயனங்கள் நிறைய உண்டு. மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நல்ல தேடலுக்கான தொடக்கமாக இந்த நாவல் அமையலாம்.

இத்தனையையும் ஒரு futurology (இணையான தமிழ் வார்த்தை இல்லை) கதையில் புகுத்தி 90களில் பிறந்த தமிழ் young-adultsக்கு (தமிழ் இளையோர் ?!) கதை சொல்ல முயன்றிருக்கிறார். என்ன ஒன்று இந்த அதீதமான தகவல் திணிப்பின் காரணமாக அவ்வப்போது கதையின் போக்கே மறந்து போய் தகவல்களில் மூழ்கி விடுகிறோம் நாம். ‘மிளிர்கல்’ நாவலிலும் எனக்கு இதே பிரச்சனை இருந்தது. ஆனாலும் ஒரு 70s/80s refresher போல நிச்சயம் படிக்கலாம்.

எதிர்காலத்தில் நிகழ்கிற கதையில் வரும் கருவிகளும் சூழலும் நிறையவே சுஜாதாவை ஞாபகப்படுத்தின.
On a whole, this book is like தொ.ப meets சுஜாதா meets சுப.வீ :) :)
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க - இங்கே க்ளிக்கவும்

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...