நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

’ரூஹ்’ - லஷ்மி சரவணகுமார்



லஷ்மி சரவணகுமாரின்ரூஹ்நாவல் குறித்து .

 அமேசான் நிறுவனம் நடத்தும் கிண்டில் #PenToPublish போட்டி குறித்தும், இம்முறை அதிகளவு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் வெளிவந்த படைப்புகளில் நான் முதலில் படித்தது லஷ்மியின்ரூஹ்’. ரூஹ் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள் சொல்கிறது இணையம்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.

 பாவ்லொ கொய்லோ (Paulo Coelho) எழுதியதி அல்கெமிஸ்ட்நாவல் போன்று, தமிழில் தத்துவமும் வாழ்வியலும் ஆன்மிகமும் சேர்ந்த புனைவுகள் வெகு சொற்பமே. சமகால எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த தத்துவம்/வாழ்வியல் சார்ந்து தீவிரத்தன்மையோடு அணுகியது சரவணன் சந்திரனின்சுபிட்சமுருகன்’. அதனைத் தொடர்ந்து தமிழில் தத்துவம் சார்ந்த, அன்பின் மகத்துவத்தை எளிமையாகப் பேசுகிற ஒரு படைப்புரூஹ்’.


எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.

 ஏர்வாடியில் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழாவில் தொடங்குகிற கதை, பதினெட்டாம் நூற்றாண்டில் அரபிக்கடலில் மராட்டிய கடற்படைத் தளபதி கனோஜி அங்க்ரேவால்  சிறைபிடிக்கப்படும் பாக்தாத் கப்பல்; அதன் தலைமை மாலுமி அஹமது; இவர்களில் துவங்கி , பேரையூரில் வாழும் தோல்பாவைக் கலைஞர் விட்டல்ராவ்; அவருடைய மகன் ஜோதி, அதே ஊரில் வாழ்கிற அன்வர், அன்வரின் மனைவி ராபியா என்னும் தேவதை; என அத்தனை பேருடைய கதைகளையும் அத்தனை இடங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிற அற்புதமான கதை சொல்லல்

சிறுவயதிலிருந்தே குடும்பமும் சுற்றமும் வெறுக்கிற, அவனுடைய உடல்மொழியின் பெண்மைக்காக சீண்டப்படுகிற கேலிக்குள்ளாகிற  ஜோதி என்கிற உணர்வுகளின் பாற்பட்ட வெற்று மனிதன்; அவனுடைய எண்ணவோட்டங்களும் மனவக்கிரங்களும் அவனைச் செலுத்துகிற பாதை; இறுதியில் அவன் கண்டடைகிற முடிவு. இந்த உருமாற்றமும் அதனூடான உரையாடல்களும் தத்துவார்த்தமான கேள்விகளுமே ஒரு cathartic process (இணையான தமிழ்சொல்லாம் துப்புறவாக்கத்தில் catharsisன் அழகு இல்லை).

அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம்,  சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது  யாதுமான பேருரு
 ராபியாவின் பாத்திரப் படைப்பு குறித்து நிச்சயமாய் பல உரையாடல்கள் நிகழும். தேய்வழக்கான சொல்லாடலில்கத்தி மேல் நடக்கிறமாதிரியான கதை சொல்லல்நிபந்தனையற்ற அன்பின்  மொத்த உருவானவளாய் திகழ்கிற ராபியாவும் அவள் அன்பால் நிகழ்த்துகிற அற்புதங்களுமாய்
நிறைந்திருக்கின்றது ‘ரூஹ்’. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாய் நிகழ்கிற பெரும் பயணங்களாலும் அதில் பங்குகொண்டு பயணிக்கிறவர்களின் கதைகளாலும் ஆனது ‘ரூஹ்’
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
லஷ்மி சரவணகுமாரின் முந்தைய படைப்பான கொமொரா முழுக்க முழுக்க வெறுப்பையும் அது சார்ந்த உணர்வுகளையும் பேசியதெனில், ‘ரூஹ்’ அதன் எதிர் துருவத்தில் நின்று முழுமையான அன்பையும் சரணடைதலையும் பேசுகின்றது. என்னளவில் இதுவரையிலான லஷ்மியின் படைப்புகளில் ‘ரூஹ்’ எப்போதுமே முதலிடத்தில் இருக்கும்.

தவறவிடக் கூடாத படைப்பு...! கட்டாயம் வாசித்துவிடவும்...!

மின் புத்தகம் வாங்க: இந்த இணைப்பை க்ளிக்கவும்

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...