நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சொல்லாததும் உண்மை - சுடும் உண்மைகள்





உண்மை...!!!
எத்தனை எத்தனை வார்த்தைகளையும் அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் இது...!!


எல்லாருக்குமே வாழ்க்கையில சில கோட்பாடுகள்..நெறிமுறைகள் இருக்கும்.. யாரையும் கஷ்டப்படுத்தகூடாது...பொய் பேசக்கூடாது...கடன் வாங்கக்கூடாது... சாகிற வரைக்கும் சொந்தக்கால்ல நிக்கணும்... யாரையும் நம்பி வாழக்கூடாது....இப்படி எத்தனையோ தனி மனித கொள்கைகள்.
இவற்றில் பெரும்பாலானவை இன்றைய வாழ்க்கைச் சூழலில் எட்டாக்கனியாக இருப்பினும்...இருப்பதிலேயே கடினமான கொள்கையாக நான் கருதுவது உண்மையாக இருத்தல் என்பதைத்தான்.எப்போதும் உண்மையாக இருப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றும் கூட.

இப்படியிருக்கையில் ஒரு மனிதன் தன வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை... கடந்து சென்ற பெண்களை.. உலுக்கிப்போட்ட மரணத்தை... வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களை.. செவிட்டிலறையும் உண்மைகளாகச் சொல்வது தான் இந்த 'சொல்லாததும் உண்மை'...!!வெகு சமீபத்தில் படித்து முடித்த புத்தகம்.  

அந்த மனிதர் 'பிரகாஷ்ராஜ்'...!!தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவரான பிரகாஷ்ராஜ் இத்தனை இத்தனை வாழ்வியல் அனுபவங்களையும்... கதைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பார் என இந்த புத்தகத்தை படிக்கத் தொடுங்குகையில் சத்தியமாக நான் எண்ணியிருக்கவில்லை. விகடனில் தொடராக வெளிவந்தபோது பெரிதாக என்ன இருந்து விடபோகிறதென இந்த அத்தியாயங்களை படிக்காமல் கடந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போது படிக்க நேர்கையில்  இந்த புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம்...நிச்சயமாக மிகவும் ஆழமானது.வாழ்க்கையை சற்றே கடுமையான படிக்கட்டுகளின் வழி கடந்தவர்களுக்கு/கடந்துகொண்டிருப்பகளுக்கு  இதே தாக்கம் ஏற்படுமென்பது உறுதி.நிச்சயமாக ஒரு தவற விடக்கூடாத புத்தகம் இது...!!!





புத்தகத்தில் என்னை கவர்ந்த/ரொம்பவும் பாதித்த/யோசிக்கவைத்த  வரிகள் சில:


"எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கனும்னு விரும்புவாங்க.நான் உண்மையின் பக்கம் இருக்கனும்னு யோசிச்சதால நிறைய இழப்புகள்.ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம்.சொன்ன உண்மைகளின் அளவு கையளவு மழை.சொல்லாத உண்மைகளின் அளவு ஆகாய நட்சத்திரங்கள்."

"நிகழ்காலத்துக்கான வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்க முடியும்.நாளைக்கான பயத்தின் அடிப்படையில் செய்கிற பாவங்கள் பெரும்பாலும் திருத்த முடியாதவை."

"நடிகனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற தருணம் இருக்கே...அது ரொம்ப துயரமானது.ஏன்னா, அது உண்மையான கண்ணீரான்னு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலேயும் ஒரு செகன்ட் எட்டிப்பாத்துட்டு போகும்."

"வாழ்க்கையில் நமக்கு அம்மாவோ,அப்பாவோ,காதலனோ,காதலியோ,நண்பர்களோ...யாரோ ஒருத்தர் எப்படி வாழறதுன்னு அவங்க வாழ்க்கை மூலமா சொல்லிக்கொடுக்கிறவங்களா இருந்துட்டா, அந்த வாழ்க்கை உண்மையிலேயே வரம் தான்."

"சில விஷயங்களை வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது, மரணம் மாதிரி.காதல், காமம் எல்லாமே வாழறதுக்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்கள்ல கிடைக்கிற எல்லா வலிகளுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவை தான்.அம்மாவுக்கு வலி கொடுத்துட்டு பிறக்கிறவன் தானே ஒவ்வொரு மனுஷனும்.அப்புறம் வன் மட்டும் பலியை எதிர்கொள்ள மாட்டேன்னு தற்கொலைக்குத் தயாராவது நியாயமா? வலி இல்லாம எப்படி வாழ்க்கை?"

"வெற்றிங்கிறது அரண்மனை.அங்கே பாதுகாப்பா இருக்கலாம்.ஆனா,எதையும் கத்துக்க முடியாது.அடர்ந்து விரிந்திருக்கிற காடுகளில்தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கு."

"ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல்,ஒருவரை ஒருவர் அடையணும்னு நினைக்கும்போதுதான் அசிங்கமாகிடுறோம்."

"உண்மை எப்பவுமே எளிமையாதான் இருக்கும்.ஆன, எளிமை தான் எல்லாவற்றையும்விட அழகு...!!"

"இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்கிற உறுதி இருந்தால்தான், மத்தவங்க நம்பிக்கை மேல் கைவைக்கணும்.இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்துட்டுப் போகட்டும்.அதனால லாபம் இல்லாம இருக்கலாம்.நிச்சயமா நஷ்டம் இருக்காது."

"காதல் என்பது பெறுவது இல்லை;தருவது இல்லை;அடைவதும் இல்லை.அது... நிகழ்வது...!!"

"நம்பிக்கை இல்லாம ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட,உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.. ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா..!!"

"வார்த்தையில் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் எண்ணிக்கை இருக்கே..அது வானத்து நட்சத்திரங்கள் மாதிரி எண்ணி முடிக்க முடியாததோ..!!"

"பிரச்சனையைப் பேசாமல்,தீர்வையே தேடாமல்..கோபத்தையும்,அது பெத்தெடுத்த குழந்தையான மௌனத்தையும் தோளில் சுமந்துட்டு வாழ்க்கையைத் தொலைக்கலாமா..?"

"எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் தேடுவதில்லை.ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் ஓர் உலகம் இருக்கும்.பெரும்பாலும் தேவைகள் வரும்போதுதான் நட்பு, காதல், உறவு, உணர்வு... எல்லாமே அர்த்தமுள்ளதா இருக்கும்."



------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: 'சொல்லாததும் உண்மை'
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் 
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ.115 
------------------------------------------------------------------------------------------------------------





2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

simply superb!!!

கோவை நேரம் சொன்னது…

"நடிகனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற தருணம் இருக்கே...அது ரொம்ப துயரமானது.ஏன்னா, அது உண்மையான கண்ணீரான்னு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலேயும் ஒரு செகன்ட் எட்டிப்பாத்துட்டு போகும்."////

செம வரிகள்....

Related Posts Plugin for WordPress, Blogger...