நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாழ்மனம்

Courtesy: http://drawingschool.net
பாழ்மனம்
மனம் எந்த நொடியில் உடைந்துபோகுமோ
எனத் தெரியாத ஒரு கனத்தில் தான்
ஏதொவொரு பாடல்வரியோ
யாரோ ஒருத்தியின் புன்னைகையோ
எந்தப் பித்தனின் கவிதையோ
ஒரு பழைய புத்தகத்தின் தலைப்போ
காலில் மிதிபடுகிற பூவின் நிறமோ
வெகுதூரத்தில் தென்படும் மலைச்சிகரமோ, மொழிதெரியா ஊர்வழி செல்கிற சாலையோ
ஒரு பழைய மாநகரப் பேருந்தோ
கோவில் வாசலில் குவிந்து கிடக்கிற செருப்புகளில் ஒரு ஜோடி சிகப்பு செருப்புகளோ
ஓர் நிறம் மங்கிய கைக்குட்டையோ
சாலையோர மரத்தில் செதுக்கப்பட்ட ஏதோவொரு பெயரோ
நாடோடியொருவன் விற்றுச்செல்கிற மரவளையல்களோ
’பேரன்பின்’ எனத்தொடங்கி எழுதாமல் விட்ட கடிதம் தாங்கிய கசங்கிய தாளோ
நினைவுகளைச் சுண்டிவிடுகிற ஓர் நறுமணமோ
நுரைத்த காப்பியோடான ஓர் பீங்கான் கோப்பையோ
நிலவில்லாத முழுமையான ஓர் இரவோ
ஒழுங்கற்று கலைந்துகிடக்கிற பொருட்களோடான மேஜையோ
ஏதோவொன்று...
இவைகளில் ஏதோவொன்று

அல்லது புதிதாய் ஏதோவொன்று
நினைவெச்சங்களை சுமந்தபடி வந்து
முழுமையாய்க் கலைத்துப் போட்டு விடுகிறதென்னை...!

முழுதாய்த் தேர.. இன்னும் எத்தனை இரவுகள் தீருமோ..!

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...